
இந்த வன்கொடுமை, சிறார்கொடுமை சட்டம் எல்லாம் இவர்கள் மேல் பாயாதா?
குழந்தை தொழிலாளர் நடவடிக்கையாவது யாரேனும் எடுக்க கூடாதா?
இன்னும் முதல்வர் உடல்நலம் குறித்து எம்.ஜி.ராமசந்திரன் குரல் மட்டும்தான் வாட்சப்பில் வரவில்லை, விரைவில் அவரும் அறிக்கை விட்டாலும் விடலாம்
அவர்கள் சிந்தனைக்கு அளவே இல்லை, இனி ஆஸ்திரேலிய ஹைடனை பேசவைத்து இதுதான் டாக்டர் ரிச்சர்டின் ஸ்டேட்மென்ட் என அடுத்தால் கிளம்பினாலும் கிளம்பலாம்.
மிமிக்ரி ஆர்டிஸ்டுகள் சம்பாதிக்கும் நேரமிது.

அதானே?, அது என்ன பாபர் மசூதி இடிப்பு சம்பவமா? அல்லது மத ரீதியான ஊர்வலமா?
அல்லது சாமியார்கள் மாநாட்டிலோ அல்லது அந்நிய தேசத்திலோ மோடி நிற்கும் படமா?
அப்படி ஒன்று என்றால் வெளியிட்டு மகிழலாம். இது எப்படி?
குஜராத் கலவர காட்சிகளையே படமாக சரியாக காட்டாதவர்கள் அவர்கள், அவர்கள் காதில் இம்மாதிரி கோரிக்கைகள் விழுந்தால் சும்மா இருப்பார்களா?
அத்வானி மோடி முறைத்ததை படமெடுத்தார்களா? அல்லது மாட்டுகறி சர்ச்சையில் வாஜ்பாய் அறிவுரை சொன்னதை படமெடுத்தார்களா? நெவர்
அட கோபத்தில் இருந்த அத்வானியினை ஒருமுறை படமெடுத்திருப்பார்கள்? அவ்வளவு ஏன் ஓரங்கட்டபட்ட ஸ்ருமிதி ராணியின் ஒரு செல்பி இப்போது காணமுடியுமா?
முன்பு பிரமோத் மகாஜன் சுடபட்டு மருத்துவமனையில் இருந்தபொழுது ஒரு படம் வெளிவந்திருக்கும்?
ஆனால் சுவாதி கொலைபடம் வராத பத்திரிகை உண்டா? அது பொறுப்ப்பு
அவர்கள் அவ்வளவு பொறுப்பாக நடந்துகொள்ளும் போது, இந்த கலைஞர் கோரிக்கைக்கும் அப்படிபட்ட பொறுப்பான பதில்தான் கிடைக்கும்
No comments:
Post a Comment