முதலில் நான் தமிழின துரோகி, பின் புலிகளை எதிர்த்த ஒட்டுகுழு, பின் திமுக எதிராளி, அதன் பின் மோடி எதிர்ப்பாளி, கபாலி படம் வந்த பொழுது தலித்தினை எதிர்க்கும் ஆண்ட பரம்பரை என கடும் வசவுகள்.
கஜினி முகமது பற்றி எழுதி அப்பட்டமான இஸ்லாமிய விரோதி என சிக்கிய கட்டமும் உண்டு.
இன்பாக்ஸில் வந்து தேவனாகிய கர்த்தர் உன்னை மனந்திரும்ப வைக்கட்டும் என ஜெபிக்கும் பிரிவினை கிறிஸ்தவர்களுக்கு நான் கிறிஸ்துவ எதிரி
போலி திராவிடத்தினை பற்றி சொல்லி நான் திராவிட எதிரியும் ஆகிவிட்டேன், ஆரிய அடிவருடி பட்டமும் கிடைத்தாகிற்று
இன்று தேவர் சாதி விரோதி என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றனர்
இன்னும் என்னென்ன விரோதி பட்டியில் இடம்பெற போகின்றனொ தெரியவில்லை.
ஆளாளுக்கு ஒரு கொள்கை, அவனவனுக்கு ஒரு தெய்வம்
அதனை ஏற்றுகொள்ளாவிட்டால் உடனே நான் விரோதியாக்கபடுகின்றேன்
ஆக உலகில் இருக்கும் எல்லா மானிட பிரிவுகளுக்கும் நான் பொதுவான எதிரியாக மாறிகொண்டே இருக்கின்றேன்..
ஆனால் குஷ்பூவின் எதிரியாக மாறாத வரத்தினை மட்டும் இறைவன் அருளட்டும்
ஜெ., சிகிச்சை பெறும் அப்பல்லோ அருகே இளைஞர் தூக்குப் போட முயற்சி :போலீஸ் விசாரணை
விட்டு தொலைக்கலாம், எல்லோரும் சென்று சேரட்டும், ஒரு பயலும் இருக்கவேண்டாம்
தமிழகம் சுத்தமாகும் வாய்ப்பு பிரகாசமாகும்.
No comments:
Post a Comment