அரபிக் கடலில் ரூ.3,600 கோடி செலவில் வீர சிவாஜிக்கு நினைவு சின்னம்
வெள்ளையன் கட்டி வைத்த ரயில் நிலையத்திற்கு சிம்பிளாக சிவாஜி பெயரினை சூட்டியாகிவிட்டது, இதனையாவது சொந்தமாக செய்யட்டும்
சிவாஜி முகலாய மன்னர்களை எதிர்த்தவர் சிலை வைத்தாகிவிட்டது, அடுத்து யார்?
தென்னகத்தில் இஸ்லாமிய அரசுகளை தடுத்த நாயக்க மன்னர்களுக்கா? அதுதான் அடுத்த திட்டமாக இருக்கலாம்
அப்படியானால் எங்கே வைப்பது? சிவாஜிக்கு அரபுகடல் என்றால் நாயக்க மன்னனுக்கு நிச்சயம் இந்திய பெருங்கடல்தான், அதாவது கன்னியாகுமரி கடலில்
அங்கிள் சைமன் மானஸ்தன், அப்படி ஒரு நிலை வந்தால் கயிற்றினை தூக்கிகொண்டு கிளம்பிவிடுவார்
நம் பங்கிற்கு கொஞ்சம் ஆலோசனைகளை அள்ளிகொடுப்போம், இனி இவர்கள் அடங்கமாட்டார்கள், சிலை வைத்துகொண்டே இருப்பார்கள்
இஸ்லாமியரை எதிர்த்து இந்துமதத்தினை காத்த சிவாஜிக்கு சிலை, சரி
அன்று புத்தமத நாடாக இருந்த இந்தியாவினை மறுபடியும் இந்துநாடாக மாற்ற அரும்பாடுபட்ட ஆதிசங்கரருக்கும், சமண மத ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் இந்துமதத்தினை நிறுத்திய திருஞானசம்பந்தருக்கும் எப்போ சிலை வைக்க போறேள்....
வைக்க மாட்டேள், ஏன்னா அப்படி வச்சா பாகிஸ்தானுக்கும், இந்திய இஸ்லாமியருக்கும் கோபம் வராது பாத்தேளா..
வைக்க மாட்டேள்...வைக்கவே மாட்டேள்
இஸ்லாமியரை எதித்தவா மட்டும்தான் உங்களுக்கு இந்தியனா தெரியுராள்
No comments:
Post a Comment