கலைஞருக்கு என்ன ஆனது?
மாத்திரை மாறிவிட்டது என்கிறார்கள், அலர்ஜி என்கின்றார்கள் , உடலெங்கும் கொப்புளம் என்கின்றார்கள்
விரைவில் குணமடைந்து வரட்டும்
அவரைபற்றி வதந்திகள் பரவுவது புதிதல்ல, அடிக்கடி நடந்துகொண்டே இருக்கும்.
அது அவரின் புரட்சி நாடக காலம் முதல், தொடக்க அரசியல் காலம் வரை பல இடங்களில் தொடர்ந்தது
அவரை அடித்து தெருவோரம் வீசிவிட்டு சென்றபொழுது, ரத்த காயங்களில் அவரை நொறுக்கி வீசியபொழுது என பல இடங்களில் அப்படி செய்திகள் வந்தன.
அதனை எல்லாம் தாண்டித்தான் கலைஞர் வளர்ந்தார்
சமீபத்தில் லியோனிக்கு வரும் சோதனை அது, அடிக்கடி அவர் இல்லாமல் போய்விட்டதாக தகவல்கள் பரவும், பல முறை நடந்தது, எல்லோரும் இது அப்படி, இம்மாதிரி வார்த்தைகளை பரவ விட கூடாது , வழக்கு தொடருங்கள் என நலம் விரும்பிகள் கடும் ஆட்சேபம்
லியோனி கலைஞரிடம் இதுபற்றி சொன்னபொழுது கலைஞர் சொன்னார்
"அதை விடுய்யா, நான் கூட பல முறை இப்படி இறந்திருக்கின்றேன்"
No comments:
Post a Comment