குஷ்பு - புதிய தலைமுறை : அக்னிப் பரிட்சை (29-10-2016) : காணொளி
தலாக் முறை பெண்களுக்கு எதிரானது : குஷ்பூ , இதனை தொடர்ந்து பல சர்ச்சைகள், குஷ்பூ மீது கடும் விமர்சனம்
குஷ்பூ பிறப்பால் ஒரு இஸ்லாமியர், அதன் சில பக்கங்களை விமர்சிக்க அவருக்கு தகுதி உண்டு, மனதில் பட்டதை சொல்கின்றார், உண்மையில் மூன்று தலாக் இடையே நீண்ட இடைவெளி கொடுக்கவேண்டும் என்ற மத கட்டுபாடு உண்டு, ஆனால் அது பின்பற்றபடவில்லை என்பார்கள்.
குஷ்பூ என்ற பிரபலம் சொன்னதற்காக குதிப்பவர்கள், அவர் பிறப்பால் ஒரு இஸ்லாமியர், ஆக இஸ்லாமிய பெண்ணே தலாக் முறை பற்றி விமர்சித்திருக்கின்றார் என்பதை மறந்துவிடுகின்றார்கள்.
குஷ்பூ சொன்னதில் தவறேது கண்டார்கள்?, எந்த மதமானால் என்ன? அதில் உள்ள சில குறைகளை சுட்டிகாட்ட கூடாதா?
இதில் சிலர் வந்து குஷ்பூவின் இந்த பேச்சு தமிழகத்தில் காங்கிரசை பாதிக்கும் என்கின்றார்கள், இதுதான் காமெடி
முதலில் காங்கிரஸ் எங்கிருக்கின்றது? அதனை பாதிக்க? இல்லாத காங்கிரசை எப்படி பாதிக்கமுடியும்?
குஷ்பூ இல்லாத நிலைதான் இனி காங்கிரசை பாதிக்கும் என்கின்றார் நண்பர் Venkatesh Mothilal
ஆக மதரீதியான சில வாத முடிவுகள் தலாக் முறைக்கு தேவை என பிரதமரே சொன்னபின், குஷ்பூ மட்டும் சொல்ல கூடாதாம்.
திடீரென மனைவியிடம் முத்தலாக் சொல்லிவிட்டு பிரித்துவிடுவது எம்மாதிரியான விஷயம்? இது பெண்களுக்கு எதிரானது என குஷ்பூ மட்டும்தான் சொல்வாரா?
தகுந்த உரிமை கொடுத்தால் பாதிக்கபட்ட இஸ்லாமிய பெண்களே கதறி அழுது சொல்வார்கள்.
தலாக் முறையினை ஒரு பூர்வீக இஸ்லாமிய குடும்பத்திலிருந்து வந்த இஸ்லாமியரான குஷ்பூ விமர்சிக்காமல் வேறு யார் விமர்சிக்க தகுதி இருக்கின்றது??
No comments:
Post a Comment