Wednesday, October 12, 2016

5300 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மனிதன் பேசிய மொழி தமிழ்!

















 Image may contain: food



























 

5300 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மனிதனின் சடலம் அழியாமல் ஆல்ப்ஸ் மலையில் கிடைத்திருக்கின்றதாம்.


இதுவரை கிடைத்த மம்மிக்களில் , (இது வேற்ய், வேறு எதனையும் நினைத்து, வதந்தியில் சிக்கிகொள்ளாதீர்கள்) இதுதான் அழியாமல் லட்டு மாதிரி கிடைத்திருக்கின்றதாம், காரணம் பனி, பீரிசரில் வைத்திருக்கும் மட்டன் போல, லட்டாக கிட்டியிருக்கின்றது.


இதுவரை கிடைத்தவைகளில் இதுதான் ஆக பழையது என்றும் சொல்கின்றார்கள்





இப்பொழுது உள்ள விஞ்ஞானம் பொளந்து கட்டுமல்லவா?, அதற்கு பெயர் சூட்டி, அவன் வயது என்ன? எப்படி இறந்திருக்கலாம்? இறுதியாக என்ன உண்டான்? எத்தனை இடங்களில் மச்சம் இருந்தது? சாகும்போது அவன் மனநிலை என்ன என்று புட்டு புட்டு வைத்துவிட்டார்கள்

அவர்கள் தமிழக டாக்டர்கள் இல்லை என்பதால், ஆராய்ச்சி முடிவு சரியாக இருப்பதாக உலகம் ஒப்புகொண்டிருக்கின்றது

அதன் பின்னும் அவர்கள் ஆராய்ச்சி ஓயவில்லை, அவன் கழுத்து குரல்நாணை சோதித்து, அதன் அமைப்பில் எப்படிபட்ட மொழியினை அவன் பேசியிருக்க கூடும் என்றளவிற்கு இறங்கிவிட்டார்கள்.

அவர்கள் சொன்ன பதில் உலகினை ஆட்டி வைத்திருக்கின்றது

அவன் பேசிய மொழி தமிழாக இருக்கலாம் என்கின்றார்கள், அவர் குரல்நாண் அமைப்பு அப்படித்தான் இருக்கின்றதாம், தமிழ்பேசிய அமைப்பு தெரிகின்றதாம்.

(சீன ஜப்பானிய சடலம் என்றால் அதன் மூக்கினைத்தான் நோண்டியருக்கவேண்டும், அவர்கள் அதில்தான் பேசுகின்றார்கள்)

ஆக 53000 ஆண்டுக்கு முன் தமிழ் இருந்ததை, ஒரு சடலம் மூலம் ஒப்புகொள்ள வருகின்றார்கள், வரட்டும்

எமக்கு சந்தேகம் ஒன்றே ஒன்றுதான், அதவது இப்படி சடலத்தோடு மல்லுகட்டியவர்கள் கிறிஸ்தவர்கள்.

அவர்கள் பைபிள் சொல்கிறது, மண்ணினால் உண்டாக்கபட்டவன் என்பதால் , அவன் மண்ணை குறிப்பதால் அவன் மனிதன் எனப்படுவான் என்கிறது.

அந்த மனிதனை "மனு" என்கிறது சமஸ்கிருதம்.

மனிதன் முதலில் தோன்றியதாக நம்பபடும் ஆப்ரிக்காவிலும் மனிதனின் பெயர் மண் எனும் பொருளில்தான் வருகின்றது

ஆக மானிடன், மானுடம், மனு எல்லாம் அந்த மண்ணிலிருந்து வந்த வார்த்தைகளே.

ஆங்கிலமும் மனிதனை "மண்" என்றே பொருள்படும் என்றே குறிபடுகின்றது,

இப்படி மொழிவாரியாக ஆராய்ச்சி செய்தாலே முதல் மனிதன் பேசிய மொழி தமிழ், அந்த கடவுள் பெயரிட்ட மொழி தமிழ் என ஆராய்ச்சியினை முடித்துவிடலாம்

இதற்கு சடலத்தினை வெட்டி, கழுத்தினை பார்த்து , குரல்நாண் அமைப்பினை பார்த்து முடிவுக்கு வந்தார்களாம்.

சரி இதோ ஆதாரம் கிடைத்துவிட்டதல்லவா? இனி ஒப்புகொள்வார்களா? நிச்சயமாக பிரிட்டிஷ்காரன் செய்யமாட்டான், அவனுக்கு அவனே பெருமைபாராட்டும் ரகம்

மற்ற வெளிநாட்டுக்காரன் ஏதும் அறிவிப்பினை செய்யலாம், பார்ப்போம்.

கல்தோன்றி மண்தோன்றி.. என சும்மாவே கத்துவார்கள்,

இனி பனிதோன்றி, நீர்தோன்றும் முன்னமே தோன்றிய மூத்தகுடி என கத்துவார்கள் பாருங்கள், காதை பொத்திகொள்ளவேண்டும்..











அப்போலோ அப்டேட்





 

அப்பல்லோவில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பெரியண்ணன் அரசுவும் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆக அப்பல்லோ அனைத்துகட்சி கூட்டம் நடக்கும் இடமமாக மாறிகொண்டிருக்கின்றது.

இனி இவர்களை பார்க்கசெல்வது போல முதல்வரையும் நலம் விசாரித்து வர கலைஞர் விரைவில் கிளம்புவார் :)












No comments:

Post a Comment