காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம்:பெ.மணியரசன்
அதாவது தமிழகம் மத்திய அரசினை எதிர்க்கவேண்டுமாம், மத்திய எம்பிக்கள் ராஜிமானாமா செய்யவேண்டுமாம், நிலக்கரி நிலையங்கள் செயல்பட கூடாதாம்,
கன்னட சினிமாவோடு தமிழகம் தொடர்புகொள்ள கூடாதாம், மத்திய அரசின் தமிழக நிறுவணங்களில் பணியாற்றுவோர் உள்ளே இருக்கவேண்டுமாம்,
கன்னடத்திலிருந்து எந்த பொருளும் இறக்குமதி செய்ய கூடாதாம், இது ஒத்துழையாமை போராட்டமாம்
மத்திய அரசுக்கு வரிகட்டுவது பற்றி பேச்சே இல்லை, எப்படி பெட்ரோல் டீசல் கையாள்வது என சத்தமே இல்லை
இப்படி இந்தியாவிலிருந்து துண்டித்தால் தமிழக உற்பத்திகளை எங்கே கொண்டு கொட்டுவார்? அது தேங்காதா?
தமிழக கோழியும், மீனும் இன்னும் பல பொருட்களும் எங்கு செல்லும்???
இன்னும் ஏராளமான காமெடி கருத்துக்களை சீரியசாக சொல்லி இருக்கின்றார்கள்
நெய்வேலி மின்சாரத்தை தமிழர்கள் தடுக்கவேண்டுமாம்? எப்படி என சொல்லவில்லை,
மின்கம்பியினை பிடித்து தொங்கியா?
ஆக கொஞ்சமேனும் வாய்ப்பே இல்லா விஷயங்களை சொல்லி போராடவேண்டும் என்கின்றார்
கன்னட சினிமாவோடு உறவு கொள்ளவே கூடாதாம்
நடக்குமா?
சரோஜா தேவியினையே இன்னும் மறக்காதவன் தமிழன், இப்பொழுது அனுஷ்கா காலம் வேறு, முடியுமா?
தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டுமாம், அப்படியா சரி, இந்த கோரிக்கையினை சசிகலா புஷ்பாவிடம் முதலில் சொல்லிபாருங்கள்.
No comments:
Post a Comment