Tuesday, October 11, 2016

மாதவா.....என்னமோ போடா ...

முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார், அப்பல்லோ அவரை மிக தீவிரமாக கவனித்துகொண்டிருக்கின்றது. அவர்கள் கொடுக்கும் அறிக்கைதான் இப்போதைக்கு ஆதாரம்,


முதல்வர் நிச்சயம் நலம்பெற்று வருவார்


அது ஒருபுறம் இருக்கட்டும்.




திருநாவுக்கரசர் தமிழக காங்கிரசில் நியமிக்கபட்டது, டெல்லி தீர்ப்பு நெருங்குவது, இப்பொழுது ராகுல் ஓடிவந்து அப்பல்லோவில் நிற்பது, காங்கிரசுடன் அதிமுக‌ கூட்டணி என மோடி வயிற்றிலும், அமித்ஷா தலையிலும் புளியினை கரைப்பது


(ராஜ்யசபாவில் அதிமுக தயவின்றி ஒன்றும் செய்யமுடியாது) என எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தால்


.........


கூடவே மோடி ஏன் மத்திய டாக்டர் குழுவினை அனுப்பினார் என திருமாவளவன் சம்பந்தமே இல்லாமல் கத்துவதனையும் சேர்த்துகொண்டால்


....


திடீரென சசிகலா புஷபா ஏதோ புது உண்மைகளை நள்ளிரவில் கண்டுகொண்டது போல குதிப்பதனையும் , கலைஞர் ஒரு அரசு தேவை என போதிப்பதையும் சேர்த்துகொண்டால்
..


எங்கோ இடிக்கின்றது, இரு பக்கமும் ஏதோ முயற்சி செய்கின்றார்கள், யார் முந்திகொள்ளபோகின்றார்களோ தெரியவில்லை :)


ஆக குழப்பமாக செய்திகளை பார்த்துவிட்டு, கொஞ்சம் புரிந்து,பழைய ஜனகராஜ் போலவே உதட்டை ஒதுக்கி, கண்ணை சுருக்கி "ஹிஹுஹிஹ்ஹ்ஹ்" என சிரிக்க‌ தோன்றுகிறது


"மாதவா.....என்னமோ போடா ..."



No comments:

Post a Comment