Friday, September 30, 2016

எல்லாம் உள்ளாட்சி தேர்தல் படுத்தும்பாடு

நெல்லைமாவட்டம் கள்ளிகுளத்து ஆட்கள் யாராவது இருக்கின்றீர்களா?


அல்லது தெட்சன மாற நாடார் சங்கத்து பிரமுகர்களாவது ஆங்காங்கு முகநூலில் அலைகின்றீர்களா?


கள்ளிகுளம் நாடார்சங்க கல்லூரி கொண்டுவந்தது சாதித்தது ஒரு பஞ்சாயத்து தலைவர் என ஒருவன் சவுண்ட் மைக்கில் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றானாம்




அது கவுசானல் எனும் ஒரு பாதிரியால் தொடங்கபட்ட அந்த முயற்சி பின்னாளில் சங்கத்தால் நனவானது என்பதுதான் இதுவரை அறியபட்டது


இப்பொழுது இவன் ஏதேதோ சொல்ல ஆரம்பித்துவிட்டான்


சங்கத்து பிரமுகர்களே, உங்கள் கல்லூரி பற்றி கொஞ்சமாவது சமூகத்திற்கு சொல்லிவைத்துவிடுங்கள்


இல்லை என்றால் அன்றைய தாளாளர் சிவந்தி ஆதித்தன் முதல் இன்றைய வைகுண்டராஜன் வரை எல்லோரும் அந்த பஞ்சாயத்து தலைவரால் உருவாக்கபட்டவர் என கிளம்பிவிடுவான்.


சங்கத்தின் வரலாற்றையே மாற்றிவிடுவான்


கொஞ்சம் அவனிடம் எச்சரிக்கையாகவே இருங்கள்


இப்பொழுது அவன் 50 ஆண்டுகள் கடந்து நிற்கும் அந்த கள்ளிகுளம் பள்ளியினை, 150 ஆண்டுகள் கடந்து நிற்கும் கள்ளிகுளம் ஆலயத்தை அந்த பஞ்சாயத்து தலைவர்தான் கொண்டுவந்தார் என அடுத்த பதிவு போட்டுகொண்டிருப்பான்


அதனை அம்மக்கள் பார்த்துகொள்ளட்டும்,


சங்கத்தை நீங்கள் பார்த்துகொள்ளுங்கள்


ஜால்ரா கேள்விபட்டிருக்கின்றேன், மூடஜால்ரா இப்பொழுதுதான் பார்க்கின்றேன்,


நான் இந்த சாதி என ஒருநடிகரின் சாதியினையே பேனர் வைத்து பெருமை பாராட்டியவன், இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் அவர் தமிழர், நாங்கள் தமிழர்கள் என தொடங்கிவிட்டான்.


எல்லாம் உள்ளாட்சி தேர்தல் படுத்தும்பாடு.


இன்னும் என்னென்ன பேசுவானோ தெரியவில்லை,


ஆனால் எல்லாம் இன்னும் 7 மணி நேரத்த்தில் பல்டி அடிப்பான்.


எனினும் சங்கத்து ஆட்களே இவனிடம் கவனமாக இருங்கள்.


ராசா, கள்ளிகுளத்தில் அந்த மாதா பக்கத்தில் இருப்பதும் அவர் சிலைதானே?, நன்றாக பார்த்து சொல்லமுடியுமா?


வெள்ளிகிழமை ஆனால் இவன் தொல்லை தாங்க முடியவில்லை,



திருந்தவே மாட்டீங்களா???



Image may contain: one or more people


திருந்தமாட்டீர்களா...


மந்திரவாதி சர்வசக்தி பெற்றவன் என்றால் டிரம்ப் அமெரிக்க அதிபர் ஆக முடியும். டிரம்ப் என்ன அந்த மந்திரவாதியே அதிபர் ஆகலாம்


இவைகள் எல்லாம் உண்மை என்றால் புடீனை என்றோ சாய்த்திருக்கமாட்டார்களா?, ஹிட்லருக்கு வைத்திருக்க முடியாதா? அவளவு ஏன் ஜப்பானும், தென்கொரியாவும் வடகொரிய தலைவனுக்கு சூனியம் வைக்கமுடியாதா?





அவ்வளவு ஏன்? ராஜபக்சேக்கு சூனியம் வைத்து கொன்றிருகமாட்டார்களா?

இந்த சிகிச்சை எல்லாம் பலனழிக்கும் என்றால் அப்பல்லோ எதற்கு? அமெரிக்கா எதற்கு?

சரி அப்படி சூனியம்,செய்வினை இம்சை எல்லாம் தமிழகத்தில் இருப்பதாக கருதினால் ஒரே ஒரு சூனியம்தான் இருக்கமுடியும்..

அது இருவர் படத்தில் மணிரத்னம் சொன்ன வரிகள்

"ஒரு மொழியால மக்களை மயக்கி கட்டிபோடும் சக்தி உங்கட்ட இருக்கு, என் வாள்வீச்சும் உங்க தமிழும் கலந்தா ஜனங்க ஈசியா ஏமாந்திருவாங்க‌

என்னையும் ஒரு கதாநாயகனாக ஏற்றுகொள்வாங்க.."

இந்த சூனியம்தான் விவகாரமாகி அம்மாதிரி கதாநாயகன் பட்டத்திற்கு ஏங்கியவன் முதல்வராகி, வசனம் எழுதியவர் எதிர்க்டசியாகி, கதாநாயகி முதல்வராகி என ஏக
கொடுமைகள்

ஆக இந்த சூனியத்தை போக்க முதல் சிகிச்சை சொந்தமாக சிந்திப்பது, இந்த கண்கட்டினை நீக்குவது.

அது ஒன்றே தான் பலனழிக்கும்

இந்த கேரள நம்பூதிரிகள் அவ்வளவு சக்திவாய்ந்தவர்கள், அவர்கள் மாந்ரீகம் பெரியது என நினைப்பவர்கள் ஒன்றை நினைக்கலாம்

அந்த‌ கேரளமே வெள்ளையனிடம் அடிமையாகவில்லையா? கொஞ்சமாவது அவன் அஞ்சினானா? அந்த சக்திகள் அவனை என்ன செய்தன?

வாஸ்கோடமாகா வந்தபொழுதே அவை விரட்டியதா?

அல்லது கிளைவ் கைபற்றும்போதுதான் அவனை விரட்டியதா?

ஒன்றுமில்லை, 300 ஆண்டுகாலம் அவர்கள் ஆள அது அனுமதித்தகொண்டேதான் இருந்தது.

எந்த மலையாள மந்திரவாதியாவது வெள்ளை அதிகாரிகளை மிரட்டி கப்பம் வாங்கிய கதை உண்டா? அல்லது இந்த மந்திரத்தால் வெள்ளையன் கால் கை வீங்கி செத்தானா?

ஆக கடவுள் நினைத்தபடியே இயங்கும் உலகிது, அவ்வளவே

மற்றபடி இவைகள்தான் சக்திமிக்கவை என்றால், உலக அதிபர்கள் எல்லாம் மந்திரவாதிகளாகவே இருப்பார்கள்.

ஆப்ரிக்க மந்திரவாதிகள் இவர்களை விட சக்திமிக்கவர்கள் என்பார்கள், ஆனால் அந்நாடுகள் எப்படி இருக்கின்றன என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.












அங்கிள் சைமன் தமிழர் வழியில்தான் வாழ்வாராம்



Image may contain: 2 people


அங்கிள் சைமன் தமிழர் வழியில்தான் வாழ்வாராம், உணவு கூட தமிழர் மாதிரிதான் உண்பாராம்


அதாவது மண்பானை சமையலாம், வாழை இலையில்தான் சாப்பிடுவாராம்


படத்தினை கவனியுங்கள், இலையில் இருப்பது கர்நாடக பொன்னி அரிசி, மண்பானையில் இருப்பது சில்வர் கரண்டிகள். உணவுபாத்திரம் இருப்பது இறக்குமதி செய்யபட்ட வெளிநாட்டு கண்ணாடி மேஜை .





கையில் வாட்ச் ஏன்? உச்சி சூரியனை பார்த்து மணி சொல்லமுடியாவிட்டால் என்ன தமிழர் இவர்? இன்னும் மணியா? நாழிகை இல்லையா?

ஓலை குடிசையில், சாணிமொழுகிய தரையில், ஓலைபாயில் அமர்ந்து, விறகடுப்பில் சமைத்த பொருளை அன்னாருக்கு படைத்து கொட்டாங்குச்சியில் நீர் ஊற்றி கொடுத்து

அந்த அம்மையார் முதல்மரியாதை ராதா போல உடை உடுத்தி "நல்லா சாப்டுய்யா..." என சொல்லிகொண்டே மயில் இறகிலோ அல்லது ஓலை விசிரியாலோ வீச, இவர் உண்டால் அது தமிழர் பணபாடு, ஒரு அர்த்தம் இருக்கலாம்

வெளிச்சத்திற்கு மின் விளக்கிற்கு பதிலாக தீவெட்டி ஒன்று வைத்திருந்தால் இன்னும் அழுத்தமான தமிழர் பண்பாடாக இருந்திருக்கும்.

ஆக ஒரு மண்சட்டியிலும், வாழை இலையிலும் தமிழர் பண்பாட்டினை மீட்டுவிட்டாராம் இவர்,

இதனை செய்தி என வெளியிட சில ஊடகங்கள்

சீமான் மண்பானை சோறா இப்பொழுது முக்கியம்? அவ்வளவு நல்ல பத்திரிகையாளர்கள் என்றால் அப்பல்லோவில் அந்த வார்டில் என்ன உணவு கொடுக்கின்றார்கள் என பார்த்து எழுதலாம் அல்லவா?

இதனை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது








கொசுறு செய்திகள்


தமிழ்நாட்டு ஆளுநர் என்ன செய்துகொண்டிருக்கின்றார்?

இப்போது தமிழக ஆட்சிபற்றி அவரது கருத்து அல்லது நிலைப்பாடு என்ன?



இன்று வெள்ளிகிழமை


முன்பெல்லாம் வெள்ளி என்றாலே அடுத்த விடுமுறைகளை எண்ணி சந்தோஷமாக இருக்கும், ஆனால் சமீபகாலமாக வெள்ளி என்றாலே காலையிலே அந்த இம்சை நினைவுக்கு வருகின்றது


துபாய் லாலா இன்று என்ன செய்யபோகிறானோ? எவனை ஏவிவிட்டு என்ன பேசபோகின்றானோ




பார்க்கலாம் ஆனால் லாலா சாமி மாலை 3 மணிவாக்கில்தான் மலையேறுவார், என்ன "அருள் வாக்கு" அருள்கிறார் என அப்பொழுது தெரியும்


என்ன துபாய் கார்ப்பரேஷனோ, .. பிடிக்கும் வண்டிகூடவா இல்லாமல் கஷ்படுகின்றது?








பாரத தேசமென்று பெயர் சொல்லுவர், மிடிப் பயங்கொல்லுவார், துயர்ப் பகை வெல்லுவார்...



Image may contain: 1 person , beard, hat and close-up


ஒருவழியாக பாகிஸ்தான் தூக்கத்தை கெடுத்தேவிட்டது இந்தியா, தீவிரவாதிகளின் சொர்க்கமாக இருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள், இந்திரா காலத்திலே வராத இந்தியா இனி நம்மிடம் அணுகுண்டு இருக்கும்போது வராது என நம்பிகொண்டிருந்த பாகிஸ்தான் கனவில் மண் அள்ளிபோட்டுவிட்டது பாரதம்.


மிக கச்சிததமாக குறி வைத்து அடித்திருக்கின்றார்கள், சொல்லபோனால் தீவிரவாதிகளை ஒழிக்கும் மிகசிறந்த பிரிவு உருவாக்கபட்டிருக்கின்றது.


முன்பு பஞ்சாப் பொற்கோயில், ராஜிவ் கொலையாளி சிவராசன் முற்றுகை, மும்பை தாஜ்ஹோட்டல் தாக்குதல் என பல இடங்களில் இந்த கமாண்டோ படை தேவை பட்டவர்த்தனமாக தெரிந்தது, அந்த பாடங்களில் இருந்து கற்று இன்று உருவாக்கிவிட்டோம்.


முன்பே இப்படி ஒரு பிரிவு இருந்திருந்தது என்றால், ஈழத்து பிரபாகரன், சிவராசன், மும்பையினை தாக்கியவர்களை ஓசைபடாமல் தூக்கி இருக்கலாம்.


யாழ்பாணத்தில் பிரபாகரனை அன்றே தூக்கி இருக்கலாம், இப்படி சரியாக திட்டமிடாமல், அதே நேரம் புலிகளுக்கு வல்லரசுகள் கொடுத்த பெரும் வலையில் சிக்கி எமது ராணுவம் அன்று கண்ட அவமானம் பெரிது, இன்று எமது ராணுவமும் தன்னை மாற்றிகொண்டது, வாழ்த்துக்கள்


மிகசிறந்த குழுவினை உருவாக்கி இருக்கின்றார்கள்.


கிட்டதட்ட அமெரிக்க சீல் படையினை, இஸ்ரேலிய ஸ்பெஷல் படையினை போன்ற குழு இது. இப்பொழுதெல்லாம் யுத்த தந்திரம் மாறிவிட்ட காலம், எதற்காக முழுபடையெடுத்து எல்லாவற்றையும் அழித்து, அதன் பின் குறிவைத்தவனை கொல்லவேண்டு?


இலக்கினை அதுபோக்கில் விடு, அவன் சுதந்திரமாக சுற்றட்டும். அவனாகவே அவன் பாதுகாப்பினை அவனே தளர்த்துவான். அசந்த நேரம் கழுகுவேகத்தில் தூக்கு, அது போதும்.


முதன் முதலில் இதனை செய்துகாட்டியது இஸ்ரேல், அதன் பின் அமெரிக்கா, உச்சகட்டமாக பாகிஸ்தானில் பின்லேடனை அப்படித்தான் தூக்கியது. இன்று தென்கொரியா வடகொரிய அதிபரை அப்படி தூக்கபோவதாக பகிரங்கமாகவே மிரட்டுகின்றது.


இந்த முண்ணணிநாடுகளை போலவே பாரதமும் சொல்லாமல் அசத்தி இருக்கின்றது, உண்மையில் அசாத்தியமான திட்டம் இது


army


யூரி சம்பவத்திற்கு முன்பாகவே இலக்குகளை மிக துல்லியமாக கணித்த்திருக்கின்றார்கள், நாள் மட்டும் குறிக்கவில்லை. யூரி சம்பவம் நடந்தபின்னும், பெரும் ராணுவநடவடிக்கை போல தயார் செய்தார்கள், பாகிஸ்தானும் யுத்தம் எதிர்கொள்ளதயார் என கிளம்பிற்று, அவர்கள் போர் ஒத்திகையில் சில சீன விமானம் டமால் என விழுந்த அவமானங்களும் நடந்தன.


இந்தியாவோ முழு யுத்தம் என போக்கு காட்டிவிட்டு, கடந்த புதன் நள்ரவில் புகுந்து தீவிரவாத முகாம்களையும், அவர்களுக்கு பாதுகாகலாய் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தையும் போட்டு தாக்கிவிட்டது, பலிகணக்கு நூறினை தாண்டும் என்கின்றார்கள். பாகிஸ்தான் எம்ஜிஆர் போல இரண்டு என விரல்காட்டி கொண்டிருக்கின்றது


இது சிக்கல் நிறைந்த தாக்குதல், கண்காணிக்கும் பாகிஸ்தான் ராணுவம், அதனை மீறி வானில் சுற்றும் அமெரிக்க செயற்கைகோள்கள் என எல்லாவற்றையும் ஏமாற்றி புகுவது என்பது பெரும் சாகசம், போர் என்றால் புகுந்துவிடலாம். தந்திரமான ஆட்டம் என்றால் ஏமாற்றத்தான் வேண்டும்.


இந்திய உளவுஅமைப்பும், இந்திய செயற்கைகோள்களும் சாதித்திருக்கின்றன, உளவு அமைப்புகளுக்கு வாழ்த்துக்கள், பாகிஸ்தானில் உயிரிழந்த உளவாளிகளுக்கு வீரவணக்கம்.


எவனாவது கக்கூஸ் இல்லாத நாட்டிற்கு செயற்கைகோள் எதற்கு? ராக்கெட் எதற்கு என கேள்வி கேட்டால், அவனை இந்த வெற்றி செய்திகளால் அடிக்கவேண்டும். பார் மடையனே..விண்வெளி பலம் இன்றி இனி யுத்தவெற்றிகள் சாத்தியமே இல்லை, அதனைத்தான் நாங்கள் செய்கிறோம்,


ஒரு கக்கூஸ் கட்ட சொந்தமாக சம்பாதிக்க தெரியாத நீ நாட்டின் சுமை, உன்னை எல்லாம் ராக்கெட்டிலே வைத்து அனுப்பவேண்டும்


இவர்கள் அப்படித்தான், உணவிற்காவது சம்பாதிப்பார்களா? அல்லது அதனையும் அரசு ஊட்டவேண்டும் என்பார்களா என தெரியவில்லை, எல்லாம் அரசு என்றால் இவர்கள் நாட்டிற்கு எதற்கு?


பாகிஸ்தான் அலறி கிடக்கின்றது, ஊரெல்லாம் ஒப்பாரி வைத்து பார்க்கின்றது, எங்கள் இறையாண்மை(!)யில் இந்தியா கைவைத்ததாக கதறுகின்றது, பின்லேடன் கொல்லபட்டபோது அவர்கள் இறையாண்மைக்கு விடுமுறை அளிக்கபட்டிருந்தது குறிப்பிடதக்கது.


ஆனால் உலகநாடுகள் பாகிஸ்தானை "உன்னை பற்றி தெரியாதா?" எனும் நோக்கில் பார்க்கின்றன, இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. சீனா நாங்கள் சமரசம் பேசுகின்றோம் என கிளம்புகின்றது. பாகிஸ்தான் குப்புறபடுத்து அழுதுகொண்டிருக்கின்றது, அணுகுண்டு வீசுவோம் சத்தமெல்லாம் இல்லை.


இந்தியா சாமார்த்தியமாக சொல்கிறது, அவர்கள் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்து (வார்த்தைகள் மகா முக்கியம், முன்பு ஜே மைனாரிட்டி திமுக அரசு என்பார் அல்லவா) வரும் தீவிரவாதிகளை அவர்கள் அடக்கவில்லை, சோ நாங்கள் அவர்களை மட்டும் அழித்தோம், யுத்தம் எல்லாம் செய்யும் எண்ணமில்லை.


பாகிஸ்தான் பதறிகிடக்க, இந்த தேசம் மோடிக்கு ஆதரவினை வழங்கிகொண்டிருக்கின்றது, சோனியா முதல் எல்லோரும் ஆதரவினை கொடுக்கின்றார்கள், வாழ்த்துக்கள் என் தேசமே


இங்கே சிலர் கிளம்பி இருக்கின்றனர், சிங்களன் தமிழரை சுடாதபொழுது கிளம்பாத ராணுவம் பாகிஸ்தானில் புகுந்ததென்ன? ஏய்ய் ஹிந்தியமே என ஒரே அழிச்சாட்டியம்


உண்மையில் வங்கடலில் நடந்ததென்ன?


1970 வரை ஒரு சிக்கலுமில்லை, ஆனால் கடத்தல்கள் பெருக பெருக சிக்கல்கள் பெருகின, அக்கடற்பகுதி அப்படியானது. ஏதும் தொட்டால் தமிழனை கொல்கிறார்கள் என கிளம்புவார்கள், திராவிட அழிச்சாட்டிய ஆட்சிவேறு, அவர்களும் அடக்கியதாக தெரியவில்லை


இந்திரா தந்திரமாக கச்சதீவினை இலங்கை பக்கம் தள்ளி ஆட்டத்தை நீ ஆடு என சொல்லிவிட்டார், ஒரே கல்லில் பல மாங்காய்.


அதன்பின்னும் கடத்தல் ஓஹோ என நடந்தது, உச்சமாக கடத்தல்காரர்கள் தமிழ் போராளிகள் என வேடம் தரித்தபின் அது தீவிரமாயிற்று.


ஆயுதபோராட்ட தொடக்கவாதிகளான தங்கதுரை, குட்டிமணி எல்லாம் அவ்வகையறா, அவர்களிடம் எடுபிடிகளாக இருந்து பின்னாளில் பெரும் ரவுடிகளான சபா ரத்னம், பிரபாகரன் எல்லாம் அந்த கும்பலே.


இப்படியாக அந்த ஈழபோராட்டம் கடத்தல்காரர்களாலேயே தொடங்கபட்டு பின்னாளில் இலங்கை ராணுவத்துடனான கோஷ்டி மோதலாகவே முடிந்தும் விட்டது.


நாம் சொல்லவில்லை கோர்ட்டில் தங்க துரையே எம் தொழில் கடத்தல் என சொன்னது.


இப்படி கடத்தல்காரர்கள் போராளிகளான பின் தமிழகத்திலிருந்து நிறைய கடத்தபட்டன, அவற்றினை தடுக்கும்பொருட்டு சிங்கள கடற்படை ஆரம்பித்ததுதான் துப்பாக்கி சூடு.


இதனை எல்லாம் தடுக்கும்பொருட்டுதான் எமது ராணுவம் அமைதிபடை எனும் பெயரில் சிங்களத்தில் கால்பதித்தது


இன்று சிங்களன் துப்பாக்கி சூட்டை இந்தியா தடுக்காதது ஏன்?,, என முழ்டி தூக்கும் கூமுட்டைகளே, கவனியுங்கள். அன்று இதற்காகத்தான் இந்திய படையே இலங்கையில் குவிந்தது புரிகின்றதா....


அதன்பின் புலிகள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, எம் ராணுவம் 1500 பேரினையும் ஒரு தலைவனையும் கொன்றபின் இந்தியா ஒதுங்கிற்று


புலிகள் எல்லாவித கடத்தலிலும் ஈடுபட்டது உண்மை, ராஜிவ் கொலைவழக்கில் புலிகளின் கடத்தல்தங்கம் எப்படி விளையாடியது என்பது விளக்கபட்டுள்ளது, ஈழத்தில் தங்க சுரங்கம் இருப்பதாக தகவல் இல்லை, பின் எப்படி?


இறந்த கோடியக்கரை மிராசுதர் சன்முகம் புலிகளுக்காக கடத்த பதுக்கி இருந்த பொருட்களே சாட்சி.


இந்தியா ஈழபிரச்சினையில் இருந்து ஒதுங்கினாலும் புலிகளின் கடத்தல் தொடர்ந்தது, இலங்கை ராணுவம் சுட்டது


கவனியுங்கள், புலிகள் அழிந்தபின் அவை எல்லாம் குறைந்தன, இப்பொழுதெல்லாம் துப்பாக்கி சூடு எல்லாம் இல்லை.


அதன் பின் நடப்பது மீணவர் பிரச்சினை. நமது மீணவர்களின் பெரும் பலம் முன் ஈழமீணவன் பாதிக்கபட்டதால் வந்த சிக்கல், கைதுகள் என சர்ச்சைகள். சில இடங்களில் எல்லை தாண்டினோம் என நமது மீணவர்களே பகிரங்கமாக சொல்கின்றனர், அப்பொழுதுதான் மீன் கிடைக்குமாம்


அதற்கும் தீர்வுகள் எட்டபட்டுகொண்டே இருக்கின்றன,


ஆக சிங்கள கடற்படை அத்துமீறி வந்தால் எப்பொழுதோ நம் கடற்படை மண்டையினை பிளந்திருக்கும், இது வேறுமாதிரியான சிக்கல்,


ஆனால் முன்பு இந்தியா தன் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி அவர்களை மிரட்டத்தான் செய்தது


ஆனால் புலிகளோடு அவர்கள் மோதும்பொழுது ஏய் அட்டூழிய படையே திரும்பவா என சத்தமிட்டது தமிழர்களாகிய நாமே தான். நாம் தான் கத்தினோம்.


அன்று எவனுக்காவது ராமேஸ்வர மீணவன்,கடத்தல் இன்னபிற இம்சைகள் நினைவுக்கு வந்ததா? வராது, அது எப்படி வரும்?


போராட்டத்தில் இலங்கையில் சிலபேர் செத்தால், தமிழகத்தில் 4 பேர் செத்தால் என்ன? என்றளவுக்கு இருந்தது இவர்கள் மனநிலை


எல்லாம் முடிந்து 2009ல் இந்தியா தலையிடவேண்டும் என்று கத்தினால் எப்படி எமது ராணுவம் வரும்?


நீங்கள் நினைத்தால் அழைக்கவும், நீங்கள் நினைத்தால் விரட்டவும் அது உங்கள் மீசை மயிறா அல்லது பெருமை மிகு ராணுவமா?


அதன் பின் 2009ல் புலிகளின் சொட்டை முறிக்கபடும்பொழுது எமது ராணுவம் என்ன செய்யும்? இறந்த 1500 இந்திய வீரர்களுக்கு என்ன சொல்லும்? அவர்கள் தியாகம் என்ன வீணா? அதனால் இந்தியா அமைதி காத்தது, அட்டூழிய புலிகள் அழிந்தும் போயினர்


இன்று அதே போல 17 வீரர்களை இழந்ததும் எல்லை தாண்டி சாத்தியிருக்கின்றது.


எவனாவது இங்கே இந்தியகாஷ்மீரை தாண்டி பாகிஸ்தான் காஷ்மீரிலும் இந்தியா அட்டகாசம் செய்கிறது, ராணுவத்தை அனுப்பி மனித உரிமையினை நசுக்குகின்றது என சொல்வானானால்


நிச்சயமாக அவர்கள் மீது தேசதுரோக குற்றசாட்டை சுமத்தியே தீரவேண்டும்.


முன்பு எமது ராணுவம் இலங்கையில் நிலைபெற்றபொழுதே அப்படி கூக்குரலிட்ட இந்த திராவிட புலி சொறி வைகோ, அமைதிபடை வந்தே தீரவேண்டுமென அரசியல் செய்த கலைஞர், இன்னபிற அழிச்சாட்டிய இம்சைகளை எல்லாம் ராணுவத்தின் கட்டுபாட்டில் இந்நாடு விட்டிருந்தால் இந்த சில கூமுட்டைகளின் சத்தம் இன்று கேட்டிருக்காது


அன்று இவர்களை எல்லாம் விட்டு வைத்தது பெரும் தவறு, பின்னைய குழப்பங்களுக்கு எல்லாம் அதுதான் முதல்படி


இனியவாது இந்திய அரசு விழித்துகொள்ளவேண்டும்


ஒரு சில தமிழக‌ அல்லக்கைகளை, பைத்தியங்களை, மூளை இல்லா முண்டங்களை எண்ணி இந்திய அரசு யோசிக்கவேண்டாம்


பெரும்பான்மையான தமிழர்கள் இந்தியாவினையே நேசிக்கின்றனர், வோட்டு , அரசியல் வேறு நாட்டுபற்று வேறு.


எமக்கு பிந்ரன்வாலே, புர்கான், ஹபீப் சயித், மசூத், பிரபாகரன் என எல்லோரும் ஒரே வரிசையே


இதோ எல்லையில் நடந்த தாக்குதலை மொத்த தமிழகமும் வரவேற்கின்றது, எமது மாநில மக்கள் அந்த பெருமை மிகு ராணுவத்திற்கே பக்கபலமாய் இருக்கின்றனர்,எக்காலமும் இருப்பார்கள்.


ஈழபிரச்சினையில் மட்டும் போலி அரசியல்வாதிகளால் அவர்கள் குழப்பட்டனர், பின் உண்மை உணர்ந்து புலிகளை விரட்டியும் விட்டனர், ராஜிவ் கொலையில் கொலையாளிகளை கண்டுபிடிக்க எம்மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு பின்னாளில் பிரபாகரன் கொல்லபடும் வரை தொடர்ந்தது உண்மை.


இந்த தேசம் யுத்த தந்திரங்களில் புதிய பரிணாமத்தை எட்டியாயிற்று, இனி இந்திய அருகாமையில் இருந்து இந்தியாவினை எதிர்க்கமுடியாது என எதிரிகள் புரிந்தே கொண்டனர், தாவூத் இப்ராஹிம் இம்மாதிரி முறையில் கொல்லபட அதிக நேரம் ஆகாது.


ராணுவ உலகம் ஒருவித அச்சத்துடனே இந்தியாவினை நோக்க ஆரம்பித்திருக்கின்றது, வாழ்த்துகள் ராணுவமே



”பாரத தேசமென்று பெயர் சொல்லுவர் – மிடிப்
பயங்கொல்லுவார், துயர்ப் பகை வெல்லுவார்”


என்ற எங்கள் தேசகவிஞனின் வாக்கு மெய்யாகிவிட்ட காலம், அவன் வழியிலே நாங்களும் சொல்வோம்



"பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டு வோம்.



வந்தேமாதரம்!! ஜெய்ஹிந்த்!!!





Thursday, September 29, 2016

செய்திச் சிதறல்







ஒருநாள் மவுனவிரதம் ராமதாஸ் அறிவிப்பு

ஆயுளுக்கும் மவுனவிரதம் என அறிவித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் :)










இதோ மீடியக்களுக்கு மயிலாப்பூர் சாமுவேல் என ஒருவன் கிடைத்துவிட்டான், இனி திரில்லர் சினிமா ரேஞ்சிக்கு அவனை சித்தரிப்பார்கள் பாருங்கள்


ஒரு பொறுக்கி சிக்கி இருக்கின்றான், சம்பந்தபட்ட பெண்கள் அஞ்சி காவல்துறையினரிடம் கெஞ்சியிருக்கின்றனர், இனி இவனை பிடித்து ராம்குமார் இருந்த சிறையில் அடைக்கலாமா? என யோசிக்கவேண்டியது போலிசார் வேலை.


அதற்குள் இவர்கள் துப்பறிந்து எழுதுகின்றார்கள் பார்த்தீர்களா? இவர்கள் தொழில் அப்படி.





எப்படியோ முதல்வர் உடல்நிலை பற்றி எழுதினால் பெண்டு கழன்றுவிடும் என்று அஞ்சி, மயிலாப்பூர் சாமுவேல் எனும் ஜெகஜால கில்லாடியின் தொடரினை ஆரம்பித்துவிட்டன பத்திரிகைகள்

இனி முதல்வர் கொடநாடு செல்லும் வரை மயிலாப்பூர் சாமுலேல் சாகசம்தான்






எல்லை தாண்டி தாக்கியது இந்திய ராணுவம்

எல்லை தாண்டி தாக்கியது இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி : கடும் பதட்டத்தில் எல்லைபகுதி


இந்தியா தனது தாக்குதலை தொடங்கிவிட்டது என ராணுவ தளபதி அறிவித்திருக்கின்றார், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் ராணுவ சீருடையிலும், இந்திய காஷ்மீரில் தீவிரவாதிகளாகவும் அலையும் ஏராளமான பாகிஸ்தானியர் கொல்லபட்டிருக்கின்றனர்


அதிர்ச்சியில் இருக்கும் பாகிஸ்தான் 2 வீரர்கள் செத்ததாக ஒப்புகொண்டிருக்கின்றது. அதற்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை




ஒரு பலசாலி தன்னால் முடிந்தமட்டும் பார்த்துவிட்டே தன் பலமிக்க ஆயுதத்தை இறுதியாக எடுப்பான், இந்தியா அப்படித்தான் மோதுகின்றது


பலவீனமானவனோ எடுத்த எடுப்பிலே தன்னிடம் இருக்கும் ஒரே ஆயுதம் பின்னால் ஒழிந்துகொள்வான், அப்படித்தான் பாகிஸ்தான் அணுகுண்டினை வீசுவோம் என ஒப்பாரி வைக்கின்றது


வீச வேண்டும் என அது தயார்படுத்தினாலே, அடுத்த கணம் பாகிஸ்தானே இருக்காது.


எந்நேரமும் முழு யுத்தம் எல்லையில் வெடிக்கலாம், பார்க்கலாம்


நாமாக அவர்களை சீண்டவில்லை, அவர்கள் சீண்டியபின் விடுவதாகவும் இல்லை.


இன்றுமாலை நடக்கும் அனைத்துகட்சி கூட்டத்திற்கு பின் மோடி என்ன தெரிவிப்பார் என பார்ப்போம்.


யுத்தம் என வந்தபின் அனைத்துகட்சி கூட்டம் எல்லாம் எதற்கு?


எதாவது கட்சி யுத்தம் வைத்து அரசியல் செய்தால் அதனை அரசியல களத்திலிருந்து விரட்டி அந்தமானுக்கு அனுப்பினால் முடிந்தது பிரச்சினை.


நீங்கள் கலக்குங்கள் மோடி, பாரதம் உங்கள் பின்னால் இருக்கின்றது



ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி


ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியும் நடைபெறவில்லை நடந்தவரைக்கும் ஒரு அறிக்கையுமில்லை.


Stanley Rajan's photo.


கேட்டால் பதில் இருக்காது, கம்மென்று இருப்பார்கள்.


நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரில் கிடைக்கபெற்றது என சில பொருள்களை பார்த்த நினைவு உண்டு அவ்வளவுதான். சென்னை எழும்பூர் மியூசித்தில் சில பொருட்கள் உண்டு. அவ்வளவுதான் ஆதிச்சநல்லூர் ஆராய்சி.


பொருளாவது மிஞ்சி இருக்கின்றது.


பண்டைய மதுரை பற்றி ஏற்கனவே குறிப்புகள் உண்டு, இப்பொழுது இருப்பது பண்டைய மதுரை அல்ல, அது சற்று தள்ளி வேரொரு இடத்தில் இருந்தது, பின்னாளில் அது அழிந்து அருகில் இப்போது இருக்கும் மதுரை உருவானது என கருத்துக்கள் உண்டு.


அதற்கு வலுசேர்க்கும் வகையில்தான் கீழடியில் ஒரு தென்னந்தோப்பில் கிடைத்த சில அடையாளங்கள், ஒரு பெரும் ஆராய்ச்சிக்கு அடிகோலின, அது தொடர தொடர தமிழர் பழங்கால ஆவல் கொண்டோர் அதிரத்தான் செய்தனர்.


Stanley Rajan's photo.


மதுரை கீழடியில் அவ்வளவு பெரும் நாகரீகம் உறங்கி இருக்கின்றது, நிச்சயம் அது சிலப்பதிகார காலத்தோடு தொடர்புடையதாகவே இருக்கும், அல்லது அதற்கு முந்தைய காலமாகவும் இருக்கலாம்


சரி கிடைத்த பொருளை மதுரையிலே வைக்கவும் ஒரு ஏற்பாடும் செய்யபடவில்லை, எங்கோ கொண்டு செல்லபோகின்றார்களாம்


ராணி மங்கம்மாவின் மாளிகையினை காந்தி மியூசியம் என மாற்றி அழிச்சாட்டியம் செய்தார்கள். அந்த மாளிகை முழுக்க காந்தி பொருளா குவிந்திருக்கின்றது? அதன் ஓரத்தில் வைக்கலாம் அல்லவா?


நாயக்கர் மகாலில் ஒரு ஓரமாக கூட இந்த அருமையான பழம் பொருளை வைக்கலாம், மதுரையில் இடமா இல்லை?


எங்கோ கொண்டு சென்று என்னமோ செய்ய போகின்றார்கள்


தமிழர், தமிழ் என குரல்கொடுத்த திமுகவினை காணவில்லை, சரி அவர்களை அகற்றிவிட்டு தமிழர் ஆட்சி அமைப்போம் எனும் தமிழ் இன உணவாளர்களையும் காணவில்லை


சிங்களம், கன்னடம், ஆந்திரா என்றே அவர்களின் இனமானம் ஓடிகொண்டிருக்கின்றது


விசித்திரமாக இந்த பொருட்கள் எல்லாம் அங்கே கிடைத்தால் தமிழகத்திற்கு கொண்டுவரவேண்டும் என குரல்கொடுப்பார்கள். இங்கே கிடைத்தால் எங்கேயும் கொண்டுபோகட்டும் என அடங்கிவிடுவார்கள்


முதல்வர் மருத்துவமனையில் இருந்தாலும் ஆட்சி அவர் செய்வதாகவே சொல்லபடுகின்றது, என்ன செய்யபோகின்றாரோ தெரியவில்லை


அழிச்சாட்டியக்காரர் என்றாலும் இப்பிரச்சினையில் உருப்படியான கருத்தினை, அதாவது மதுரையிலே இப்பொருட்களை வைக்கவேண்டும் என சொன்னவர் டாக்டர்.ராமதாஸ் மட்டுமே


அவர் வழகமாக காமெடி கருத்துக்களை சொல்வதால், இந்த சீரியசான கருத்தினை யாரும் கண்டுகொள்ளவில்லை, மனிதர் உருப்படியாக பேச தொடங்கி இருக்கின்றார். தேர்தல் இம்சை இவரை மாற்றாமல் இருக்கட்டும்


இதுவும் இந்து கலாச்சாரம் தான், கீழடியில் கிடைக்கபெற்றவை இந்து சமய மக்களின் பொருளாக இருக்கலாம் என பிஜேபி மக்களிடம் சொல்லி, இவைகளை பாதுகாப்போம், ஒருவேளை சிவபெருமான் மதுரைக்கு மாப்பிள்ளையாக வந்து திருவிளையாடல் நடத்தியகாலமாக இருக்கலாம், காப்பாற்றுங்கள் என்றாலும் அவர்கள் போராட்டம், அறிக்கை என கடும் பிசி.


கடந்த சிலமாதங்களாகவே உலகமே இதனைபற்றி பேசதொடங்க, தமிழகம் அதே சினிமா, அரசியல், சாதி, சுவாதி, தியாகி ராம்குமார், சமூக சேவகி நடிகை ராதா போன்ற செய்திகளிலே மிக கவனமாக இருந்தது.


பெரும் பாரம்பரிய அடையாளத்தினை மீட்கும் முயற்சி நம் கண்முன்னே சறுக்கி இருக்கின்றது.


தமிழகம் எதனை எல்லாமோ இழந்தது, இதனையும் இழக்க இருக்கின்றது


நமது மனம் துடித்தலும், இது அரசுகள் முடிவெடுக்கவேண்டிய பிரச்சினை, காரணம் இவை தொல்பொருள் துறை கட்டுபாட்டில் வருபவை, தனி நபர்கள் ஒன்றும் செய்ய முடியாது


இல்லாவிட்டால் நாமே ஏதாவது செய்து நல்ல முறையில் பாதுகாக்க இறங்கிவிடலாம்


அதற்கும் சட்டம் வழி விடாது. அதாவது காக்கவும் செய்யாது, காப்பாற்றவும் விடாது.


செய்ய வேண்டிய அரசு தூங்குகின்றது, முதல்வர் இப்போழுது ஓய்வில் இருந்தாலும் அமைச்சர்கள் செய்யலாம் அல்லவா?


அவர்கள் மண்சோறு தின்னுதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் , கரகாட்டம் போன்ற விஷயங்களில் பிசி, யாரோ ஒருவர் மாமல்ல புரத்தில் பகீரதன் தவம் செய்யும் சிற்பம் போல அருகே அமர்ந்து அம்மா வந்து அழைத்தால்தான் எழுவேன் சிவனே அன அமர்ந்துவிட்டாராம்.


ஆகா அக்காலத்திலே சட்டை போட்ட சிற்பமா? என இனி வெள்ளைக்காரன் கடத்தாமல் இருந்தால் சரி.


டெல்லியில் குரலெழுப்ப வேண்டிய எம்.பிக்களோ உள்ளாட்சி தேர்தலில் மல்லுகட்டிகொண்டிருக்கின்றனர்


அப்படியே நாம் டெல்லியிடம் கேட்டாலும், வெளிநாட்டிலிருந்து மீட்கபட்ட பழங்கால தமிழக சிலைகள் இங்கு குவிந்திருக்கின்றது, ஆனால் தமிழக அரசுதான் மீட்டு சம்பந்தபட்ட ஆலயத்தில் மறுபடி நிறுவவில்லை தெரியுமா? இந்த லட்சணத்தில் அப்பொருளை அங்கே வைத்தால் என்ன் பாதுகாப்பு என திருப்பி கேட்பார்கள்.


சரி இவர்கள் ஏன் சிலையினை வாங்கவில்லை என்றால், எந்த கோவிலில் எந்த சிலை? அதன் அமைப்பு அடையாளம் என்ன என்ற இன்வெண்டரி லிஸ்ட் தமிழக அமைச்சரிடம் இருக்குமா என்பது தெரியவில்லை, இது காணாமல் போனதுதான் என நிரூபிக்க ஆதாரம் இல்லை


அப்படி ஆகிவிட்டது நிலை, ஆக்கிவிட்டார்கள்


இவை எல்லாம் பற்றி நினைக்க நினைக்க கடும் எரிச்சலே மேலோங்குகின்றது, பரமாரிப்பில்லா ஆலயத்திலிருந்து தங்களை பாதுகாக்க வெள்ளையனுக்கு இந்த சாமிகளே தூதுவிட்டிருக்குமோ என எண்ண தோன்றுகின்றது


எப்படியும் போகட்டும், யாருக்கும் பழம்பொருளை பாதுகாக்கும் ஆர்வம் இல்லை, நம் பழம் பெருமையினை நாகரிகத்தை அடையாளாத்தை போற்றிபாதுகாக்கும் ஆசை இல்லை, அப்பொருளின் அருமை தெரியவில்லை


இதோ மதுரை கீழடியில் கிடைக்கபெற்றவை பெரும் நாகரீகத்தை நிரூபிக்கும் சான்றான பொருட்கள் என்கின்றார்கள், ஒரு மண்ணாங்கட்டியும் நிரூபிக்கவேண்டாம், அதனை மதுரையில் பாதுகாப்பாக வையுங்கள் என்றாலும் கேட்பதாக இல்லை.


அந்த சுனாமி மொத்தமாய் அன்றே அழித்திருந்தால் என்ன?


மீட்புபணிக்கு வந்த வெள்ளையனாவது தமிழன் பிணத்தினை தோண்டும்போது, இதனையும் தோண்டி உலகிற்கு உண்மையினை பழந்தமிழரின் நாகரீகத்தை ஓங்கி உரைத்திருப்பாம்


என்ன செய்வது? இந்த கீழடியில் கிடைத்த பொருட்களை கூட பாதுகாக்கமுடியாத நாமா? பூம்புகார் கடலடியில் புகுந்து..., சீ சீ நடக்குமா?


மனதிற்குள்ளே அழுது, இந்த பாமாயில் மரங்களில் முட்டி மோதுவதை தவிர நாம் என்ன செய்துவிட முடியும்?


தன் பாரம்பரிய பொருளை, தன் முன்னோர் புழங்கிய பொருளை, யாராவது தூக்கி கொண்டு செல்வதை கண்ட ஒரு சிறைபட்ட ஊமையன் எப்படி அழுவானோ அப்படி அழுகின்றது மனம்


அதனை கத்தி சொல்லவும் முடியவில்லை, சிறை தாண்டி வரவும் முடியவில்லை


பெரும் சோகம் மனதினை நிரப்பிகொண்ட தருணம் இது.


ராமதாஸின் குரல் இன்னும் வேகமாக ஒலித்தால், இன்னும் பலரின் குரல் கூடி ஒலித்தால் நிச்சயம் பாதுகாக்கலாம்


இன்னும் கொஞ்சகாலம் இருக்கின்றது, அதற்குள் விழித்துகொள்ளும் தமிழகம் என நம்புவோம்.


(மறைமலை அடிகள், மபோசி, தேவநேய பாவணர் போன்ற பெரும் தமிழறிஞர்கள் இருந்தார்கள், அவர்களை ஒற்றிய அடுத்தடுத்த தலைமுறை உருவாகி வந்திருந்தால் இன்று பெரும் முயற்சி எடுத்து இந்த கீழடி நாகரீகம் வெளிகொணரபட்டிருக்கும்,


ஆதிச்சநல்லூர் உறங்கி இருக்காது


நாமோ அண்ணா, கலைஞர், புரட்சி தலைவன், தலைவி என இவர்களுக்கு வாரிசுகள் யாரென தேடி தேடியே எல்லாம் தொலைத்துவிட்டோம்)




எச்.ராஜா, தமிழிசை மீது பெட்ரோல் குண்டு வீச முற்பட்ட இளைஞர் கைது

எச்.ராஜா, தமிழிசை மீது பெட்ரோல் குண்டு வீச முற்பட்ட இளைஞர் கைது


அந்த பரிதாபத்துகுரிய நிலையிலிருக்கும் தலைவர்கள் மீதா பெட்ரோல் குண்டு எறிய சென்றான் இவன். அவர்களே ஏதாவது செய்து தாங்கள் இருப்பதை, இப்படி ஒரு கட்சி தமிழகத்தில் இருப்பதை நிரூபிக்க படாதபாடு படுகின்றார்கள்.




கட்சியில் இணைந்த சரத்குமாரையே 1 மணிநேரத்திற்கு மேல் தக்க வைக்க முடியாத கட்சி அது, முன்னாள் பிஜேபி காரரான திருநாவுக்கரசர் இப்பொழுது தமிழக காங்கிரஸ் தலைவர். அப்படி இருக்கின்றது அவர்கள் நிலை. தேர்தலில் இவர்களாக சென்று நின்றாலும் கூட்டணியில் சேர்க்க யாருமில்லை,


அந்தோ பரிதாபம்.


அவர்கள் மீது பெட்ரோல் வீசசென்ற இவன் எவ்வளவு பரிதாபத்துகுரியவன்?


அடேய் பெட்ரோலுக்கு பதிலாக 2 பாட்டில் குளுக்கோஸ் கொண்டு கொடுத்து, உங்கள் தமிழக பிரிவு கட்சிக்கும், உங்களுக்கும் இதுதான் தேவை என கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?


ஆயிரம் பெட்ரோல் குண்டுகள் அவர்கள் அடிமனதில் வெடித்திருக்காதா? கண்ணீர்விட்டு உன் முன்னே கதறி அழுதிருக்கமாட்டார்களா?


அதனை விட்டுவிட்டு அந்த பாவபட்ட பரிதாப ஜீவன்கள் மீதா குண்டு எறிய துணிந்தாய்?


நீ வேண்டுமானால் பார், விரைவில் சிறைக்கு வந்து என்னை மதித்து, எங்கள் போராட்டத்தையும் மதித்து எம்மீது குண்டு எறியும் அளவிற்கு வந்திருக்கும் உன்னை பாராட்டுகின்றேன் என அவர்கள் கண்ணீர் மல்க சிறைக்கு வந்து உனக்கு நன்றி தெரிவிப்பார்கள்.


காரணம் டெல்லி தலமை கூட கண்டுகொள்ளாத, தமிழகம் சுத்தமாக கண்டுகொள்ளாத அவர்களை, நீ இவ்வளவு தூரம் சீரிய்சாக சிந்தித்து, உயிரை பணயம் வைத்து குண்டு வீச சென்றது அவர்களை பொருத்தவரை எவ்வளவு பெரும் அங்கீகாரம் தெரியுமா?


அது அவர்களுக்கு மட்டும்தான் புரியும்.



பெங்களூர் மேயராக தமிழ்பெண் பத்மாவதி தேர்வு

may

பெங்களூர் மேயராக தமிழ்பெண் பத்மாவதி தேர்வு



அன்று தீகுளித்த விக்னேஷ் எவ்வளவு பெரும் மூளைசலவை செய்யபட்டிருக்கின்றான் என்பது புரியும் நேரமிது, வாட்டாள் நாகராஜின் இனவெறி எல்லாம் கன்னட மண்ணில் ஒரு மண்ணாங்கட்டியினையும் செய்ய முடியாது

அங்கிள் & கோ இப்பொழுது முகத்தை எங்கு வைக்கும் என தெரியாது, ஆனால் ஹிஹிஹிஹி அவர் கன்னடத்தில் பிறந்த தமிழ்பெண் என்பதால் கன்னடர் ஆகிவிட்டார் என சமாளித்துகொள்வார்கள்


(கன்னடத்தில் தமிழர் வாழட்டும், கன்னடர் ஆளட்டும் ஏய் பத்மாவதி போயேறி, ஒழுங்காக ராஜினாமா செய் என மிரட்டுவார்களோ.. :) )

ஒரு துளி விஷம் கலந்துவிட்டால் அது ஒரு குடம் பாலை கெடுத்துவிடும், ஈழத்தில் அதுதான் நடந்தது.

தமிழகத்தில் அது நடந்துவிடவே கூடாது.




இலக்கியத்தை காப்பாற்ற வந்தவர்கள் ....

இலக்கியத்தை காப்பாற்ற வந்தவர்கள் டால்டாய்ஸ், தத்வோஸ்கி, லத்தீன் அமெரிக்க இலக்கியம், சீன டிங் டாங் இலக்கியம், பெர்சிய இலக்கியம் என காதில் ரத்தம் வருமளவு இலக்கியம் பேசுபவர்கள் எல்லாம் ஏன் சிங்கப்பூருக்கே சென்று சர்ச்சை வளக்க வேண்டும்


இந்த பின் நவீனத்துவம், தொன்மம், படிமம் , ஆழ்மம், புரிதல், சொரிதல், சொல்லாடல், கல்லாடல் (கல் எறிவது), ஆத்மானுபவம், உள்ளோளி என இலக்கிய இம்சைகளை ஆப்கன், ஈரான்,சீனா, நைஜீரியா, மெக்ஸிகோ, போன்ற நாடுகளில் சென்று வளர்த்தால் என்ன?


சிங்கப்பூருக்கு சென்று மட்டும்தான் சென்று வளர்க்கவேண்டுமா? சிங்கப்பூர் எழுத்தாளரின் எழுத்தை மட்டும்தான் விமர்சிக்க வேண்டுமா?




இதனை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது,


பேசினால் உனக்கு இலக்கியத்தை பற்றி என்ன தெரியும் என்பார்கள்


மக்களை யோசிக்க வைக்காத, நாட்டுபற்றை வளர்க்காத, சமூகத்திற்கு நல்ல கருத்தினை சொல்லாத, வரலாற்றினை சொல்லாத‌ எதுவும், குறைந்தபட்சம் மொழி அழகு கூட இல்லாதது இலக்கியமே அல்ல,


அது குப்பையே


முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், நடு இடுப்பு தத்துவம், ஆத்மம், பிரக்ஞை, கவிதானுபவம் போன்ற இம்சைகளால் இந்த உலகிற்கும், மக்களுக்கும் கிடைக்கும் நன்மை என்ன? ஒரு மண்ணாங்கட்டியும் இருக்க முடியாது.


இன்றைய தமிழக இலக்கிய உலகம் அப்படிபட்ட மனபிறழ்ச்சி அடைந்த சிலரால் நிரம்பி இருக்கின்றது, அவர்கள்தான் இலக்கியவாதிகளாம், அவர்கள் சொல்வதுதான் விமர்சனமாம்.


அவர்கள் படைப்பதுதான் இலக்கியமாம், என்ன கொடுமையோ தெரியவில்லை,


இத்தலைமுறை வாங்கி இருக்கும் இலக்கிய சாபம் அப்படி.


இலக்கியவாதிகளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற தனி சட்டம் இயற்றும் அளவிற்கு இம்சைகள் வளர்ந்துகொண்டிருக்கின்றன.


சும்மா திண்ணையில் மல்லாக்க படுத்துகொண்டு எதனையாவது எழுதிவைத்துவிட்டு அதனை வைத்து பேசிகழுத்தறுப்பது என்பது இப்பொது இலக்கிய விமர்சனம் என்றாகிவிட்டது.


நாட்டிற்காக உழைத்துவிட்டு அதன் பின் 4 வரி எழுதட்டும் என ஒரு சட்டமியற்றட்டும், எவனாவது ஒருவன் எழுத வருவான்?



பிறந்த நாள் வாழ்த்துக்கள் குஷ்பூ

https://youtu.be/1N2Dewx_pXw


ஆயிரம் நடிகைகள் வருவார்கள் போவார்கள், ஆனால் ஒரு சிலருக்கே நீங்கா இடம் கிடைக்கும்


அஞ்சலி தேவி, சரோஜா தேவி வரிசையில் தமிழ்திரையுலகில் முத்திரை பதித்த நடிகைகளின் வரிசையில் ஒருவர் குஷ்பூ. சந்தேகமேயில்லை


ராமச்சந்திரனுக்கு பின் தமிழகத்தில் ஒருவருக்கு கோயில் எழுப்பும் அளவிற்கு ரசிகர்கள் அபிமானம் இருந்தது என்றால் அது அவருக்கே.


கோயில் என்ன? எல்லார் மனதிலும் அன்று அவர் கொடியே பறந்துகொண்டிருந்தது.


1990களின் திரையுலகம் அவரின் புயலில் ஆடிகொண்டிருந்தது. அதுவும் வருஷம் 16 வந்து அடுத்த 10 வருடங்கள் அவருக்கானது. இட்லி முதல் அமுல் டப்பா வரை அவர் பெயரே அடைமொழி ஆயிற்று.


இன்று அவருக்கு பிறந்த நாளாம்.


அரசியலில் வேறு இருக்கின்றார். மோடி அரசு செல்லும் போக்கிற்கு காங்கிரசினை பதவியில் அமர்த்தியே தீருவார்கள் போலிருக்கின்றது. அப்பொழுது வைஜெயந்தி மாலா போல அவர் எம்பி ஆகவும் அகலாம்.


இன்னும் சொல்வதென்றால் ஸ்ருமிதி ராணி போல அமைச்சராகவும் ஆகலாம். காரணம் எல்லா கட்சிகளுக்கும் துணிவான பெண்களின் முகங்கள் தேவை.


அது ஒரு அரசியல்.


துணிச்சலும், மனதில்பட்டதினை பேசிவிடுவதும் அவரின் பலம். அதற்காக வரும் பின்விளைவுகளை சந்ந்திக்கவும் அவர் தயங்கவில்லை.


அந்த தைரியமும், அந்த வசீகரமும் நிச்சயம் அவரை அரசியலில் உயர்த்தவே செய்யும்.


குஷ்பூ நடிகையாக இருக்கலாம், பிரச்சினை இல்லை ஆனால் கொஞ்சகாலம் முன்பு வரை புலிகளை கண்டிக்கும் துணிச்சல் ஜெயலலிதா,சோ தவிர யாருக்கும் தமிழகத்தில் இருந்ததில்லை. அதுவும் அரசியல்வாதிகள், திரையுலகினர் சுத்தமாக நோ...


ஆனால் புலிகள் தீவிரவாதிகள் என சொல்லி எதிர்ப்பினை சம்பாதித்தவர் குஷ்பு. கடுமையான எதிர்ப்பு, கல்லெறி, மிரட்டல் என ஏக இம்சைகள் செய்தனர் புலி ஆதரவு இந்தியர்கள். அதாவது தேச விரோதிகள்.


இந்திய அரசால் தடை செய்யபட்ட ஒரு இயக்கத்தை ஒரு இந்தியபெண் அப்படித்தான் சொல்லமுடியும், குஷ்பூ அதனைத்தான் சொன்னார்.


அதன் பின் இன்று முகநூல் வரை புலிகளை போட்டு கிழிக்கின்றார்கள், அவர்களின் பிம்பம் சுக்கு நூறாக நொறுங்கிகொண்டிருக்கின்றது


இந்த குரலை தொடங்கி வைத்ததற்காவே அவரை பாராட்டி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்


நாம் ஜெயபிரதாவின் ரசிகர்கள் என்பது இருக்கட்டும், மனக்கோயிலில் அவர் மூலவர் என்றால் இவர் உற்சவர். தேரில் ஊர்வலம் வரும் உற்சவர்.


ஜெயபிரதாவும் குஷ்பூவும் முன்னறி தேவதைகள்.


பிறந்த நாள் வாழ்த்துக்கள் குஷ்பூ




Wednesday, September 28, 2016

சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்க மாட்டார்




பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்க மாட்டார் : இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு


சொல்லிகொண்டே இருங்கள், ஒரு அறிவிப்பும் இன்றி, பாகிஸ்தானின் அழைப்பும் இன்றி திடீரென நவாஸ் ஷெரிப் முன் பாகிஸ்தானில் தரிசனமாகி அவருக்கு கேக் ஊட்டிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்த வரலாறு மோடிக்கு உண்டு.


அன்று வானிலிருந்து சடீரென்று குதித்தவர், இப்பொழுது உருளைகிழங்கு மூட்டையில் மறைந்தாவது செல்லும் சாத்தியம் இருக்கின்றது





அதனால் எதற்கும் மாநாடு முடிந்தபின் அறிக்கை விடுவது நல்லது. அது ஒருபுறம் இருக்கட்டும்

பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரின் அளவினை கட்டுபடுத்தி பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர மத்திய அரசு ஆலோசனை செய்கின்றதாம்

யார் அந்த குழுவில் இருக்கின்றார்கள் என தெரியவில்லை, இந்த வாட்டாள் நாகராஜ், தேவகவுடா, எடியூரப்பா வகையறாக்களுக்கு
ஆற்றுநீரை தடுப்பது எப்படி என்பது கைவந்த கலை. அவர்களை நிச்சயம் அந்த குழுவில் சேர்க்கவேண்டும்.

அதன்பின் பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் செல்வதை பார்த்துவிட முடியுமா?

பாகிஸ்தான் ஐ.நாவிலே முறையிட்டாலும் எப்படி சமாளிக்கவேண்டும் என்ற வித்தை அவர்களிடம் உண்டு, காவேரி விவகாரத்தில் அப்படித்தான் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆக பிரதமர் அலுவலகம் சிந்துநதி விவகாரத்தில் வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னடர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது,
காவேரி டெல்டா போல பாகிஸ்தானை சுடுகாடாக்கும் அற்புத திட்டம் அரை நிமிடத்தில் தயாராகிவிடும்

வேண்டுமானால் பிரதமர் தமிழக காவேரி பாசன பகுதியினை சுற்றிபார்க்கட்டும், அவருக்கே கன்னடர்களின் "திறமை" விளங்கும்.

இப்படிபட்ட அனுபவஸ்தர்களை விட்டுவிட்டு டெல்லியில் அப்படி என்ன சிந்து நதி தடுப்பு பற்றி விவாதிக்கின்றார்களோ தெரியவே இல்லை.

எப்படியோ விரைவில் சிந்துநதியினை தடுத்து தொலையுங்கள் மத்திய அரசே

காரணம் ஐ.நாவில் பாகிஸ்தான் வைக்கபோகும் நியாயங்களை வைத்துதான், அதே நியாயத்தை காவேரி விவகாரத்தில் நாங்களும் உங்களை நோக்கி உள்வீட்டில் கேட்கமுடியும்.

இனி பாகிஸ்தானுக்கு சிந்துநதியில் உலகம் சொல்லபோகும் நியாயத்த்தை காவேரியில் தமிழருக்கும் கொடுத்தே தீரவேண்டி இருக்கும்

ஆனாலும் மோடி பெரும் ராஜதந்திரி, கன்னடர்களை வழிக்கு கொண்டுவர எப்படி சிந்துநதி வைத்து விளையாட்டினை தொடங்கிவிட்டார் பார்த்தீர்களா?

ஒரே கல்லில் இரண்டு தாமரை, இல்லை மாங்காய் என தமிழக பாஜகவினர் கன்னத்தில் போட்டு மகிழலாம்

ஆதலால் வாட்டாள் நாகராஜ் சிந்துநதி ஒழுங்காக பாகிஸ்தானுக்கு போகும் வரைதான் உங்களுக்கு ஆட்டம். அங்கு ஏதும் உலக நாட்டாமை பஞ்சாயத்து என்றால் உங்களுக்கும் பொருந்தும், யோசியுங்கள்.

முடிவுக்கு வந்தாயிற்றா?

எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம்,

"ஏய் இந்திய அரசே ஒழுங்காக பாகிஸ்தானுக்கு சிந்துநதியினை கொடுத்துவிடு..., காவேரி எங்களுக்கே.. சிந்து பாகிஸ்தானிற்கே"

மத்திய அரசே காவேரி ஆணையத்தை விட அவசரமாக நீங்கள் செய்யவேண்டியது சிந்துநதி நிறுத்தம், அதனை விரைவாக செய்யுங்கள்

அதன் பின்னர்தான், உலக பஞ்சாயத்து முடிந்தபின்புதான், அது மண்டையில் கொட்டியபின்புதான் காவேரியில் தமிழன் வலி உங்களுக்கு புரியும்

ஆக முதலில் அதனை செய்யுங்கள், அது தேசத்திற்கு எப்படியோ?, தமிழனுக்கு மிக உதவியாக இருக்கும்.






தமிழ்நாட்டில் இலக்கியவாதிகள் தொந்தரவு தாங்கமுடியலடா சாமி

https://youtu.be/iy0xpl5NztA

The Writer Who Extended The Boundaries - எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்


ஜெயகாந்தனின் படைப்புகளில் கலைதன்மை இல்லை : ஜெயமோகன்


கலைஞர் எழுதியது வசனமே அல்ல, பெரியார் செய்தது புரட்சியே அல்ல, சிவாஜி நடித்தது நடிப்பே அல்ல , என முன்பு சொன்னவருக்கு ஜெயகாந்தனை சொல்ல எவ்வளவு நேரமாகும்.


கண்ணதாசன் எழுதியது கவிதையே அல்ல, கண்ணதாசனை விட என் தேவதேவன் பெருங்கவிஞன் என கொஞ்சமும் சிரிக்காமல் சொன்னார்


(யார் அந்த மகாகவி தேவதேவன் என நீங்களே தேடுங்கள்)


கொஞ்சநாளைக்கு முன்பு பாரதியார் மகாகவியா என இவரும் இவரின் அடிப்பொடிகளும் விவாதித்ததும், பின் அவர் கவிஞர்தான் ஓகே, ஆனால் மகா கவிஞன் அல்ல என இவர்களே முடிவு செய்து பஞ்சாயத்தினை கலைத்தார்கள்.


பாரதியாரை யார் தரம் பிரிக்கின்றார்கள் பார்த்தீர்களா? 4 காக்கைகள் சேர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்த கொடுமை அது.


ஜெயகாந்தனின் எழுத்துக்கள் ஆயுதம் போன்றவை, அதில் என்ன கலையும் அழகும் வேண்டியிருக்கின்றது?


இந்த மனிதர் சும்மாவே ஒருமாதிரியானவர், இப்பொழுது அவரின் வெண்முரசினை படித்தால் வியாசரே தற்கொலை செய்யலாம்


இப்பொழுது சிங்கப்பூர் சூர்யரத்னா இவரை போட்டு தாக்க, இவரோ ஜெயகாந்தனை இழுக்கின்றார்


அவர் மட்டும் இருந்திருந்தால் இப்பொழுது நடப்பதே வேறு....


நெல்லை வழக்கு மொழிகளுக்கு வசனம் எழுதுவதை விட ஜெயமோகன் என்ன கிழித்தார் என தெரியவில்லை. அவரினை மதித்து, கடல் படத்தில் அனுமதித்த மணிரத்னம் அதன்பின் கடலிலேதான் விழுந்துகிடந்தார்.


காவிய தலைவன் தயாரிப்பாளர் தலையினை வாங்கிற்று, இவ்வளவுதான் அன்னாரின் திறமை.


பாபநாசம் படத்தில் வசனம் என்றார்கள், அந்த வசனத்தை நடிகர் நெல்லை சிவா கூட அழகாக எழுதுவார்.


சுஜாதா இவரின் எழுத்தினை பற்றி புகழவில்லையாம், (அவர் சரியாகத்தான் கணித்திருக்கின்றார்) அன்னாருக்கு கோபம் பொத்துகொண்டு வந்தது, பல இடங்களில் அவரை சாடினார்


காரணம் விஷ்ணுபுரம் எனும் இவரின் நோபல் பரிசு பெற தவறிய கதைக்கு அவர் முன்னுரை எழுதவில்லையாம்.


அவர் சுஜாதாவா? அல்லது ஒரு டீக்கு ஜாமீன் கையெழுத்துபோடும் பிளாட்பாரவாசியா?


ஆனாலும் பழிவாங்கபோகின்றேன் என‌ சில இம்சை கதைகளை எழுதிவிட்டு, நான் தான் அடுத்த சுஜாதா என கிளம்பிய இவர் சினிமாவில் பட்ட அடியில் சில உண்மைகளை கண்டிருக்கலாம்,


அதாவது சுஜாதா வேறு, அவரின் திறமை தன்மை அறிவு வேறு,


அதனை இன்னும் வாய்விட்டு அன்னார் சொல்லவில்லையே தவிர உணர்ந்துகொண்டார்,


சுஜாதா எவ்வளவு பெரிய ஜாம்பவான் என்பது மணிரத்னம், ஷங்கள் படங்களின் அந்நாளைய வெற்றியில் தெரியும், அவர் தொடாத துறைகள் இல்லை


சுஜாதா இடத்தினை நிரப்புகின்றேன் என சென்று இவர் சாதித்தற்கு கடல் படமே சாட்சி.


அவ்வகையில் ஜெயமோகன் புலியினை பார்த்து சூடுபோட்ட பூனையாக இருக்கலாம்


என்னமோ விஷ்ணுபுரம் என ஒரு புத்தகம்
எழுதினாராம், அதுக்கொரு ரசிகர் மன்றமாம்,


அதில் ஆண்டுக்கொரு விருதும் கொடுப்பார்களாம்


இவர் கூட்டத்தில் சில கவிஞர்களும் உண்டு, மனுஷ் வகை. அதில் ஒரு அழுகை, அழகு என ஒரு உணர்ச்சியும் இருக்காது அழுகை தவிர‌


இவர்தான் ஜெயகாந்தனின் எழுத்துக்களை தரப்படுத்துகின்றாராம்


எல்லாம் காலகொடுமை, ஏதும் சொன்னால் உனக்கு இலக்கியம் பற்றி என்ன தெரியும் என சாடுவார்கள்.


40 பக்கம் கிறுக்கி வைத்துவிட்டு நான் இலக்கியவாதி என கிளம்புபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகின்றது, இதில் எவனாவது அங்கீகரிக்கபட்டவனா என்றால் இல்லை.


அதனால் அவர்களே ஒரு கும்பலாக கூடி ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அங்கீகரித்துகொண்டே இருக்கின்றார்கள்.


அதில் அடிக்கடி விருதுகளும் கொடுத்துகொண்டிருக்கின்றார்கள்.


விரைவில் நோபல் பரிசையே தங்களுக்கு தாங்களே மாற்றி மாற்றி கொடுத்து சந்தோஷம் அடைவார்கள் போல தெரிகின்றது, நிலமை அவ்வளவு மோசமாகிவிட்டது


அடடடா.........தமிழ்நாட்டில் இலக்கியவாதிகள் தொந்தரவு தாங்கமுடியலடா சாமி..

செய்தி சிதறல்கள்

நாட்டுகோழிக்குள் இருக்கின்றது நாலாயிரம் கோடி சுகம்....


சுவை உணர்ச்சி பொங்கிய மனம், உரிமை வேண்டி சொல்கின்றது,


"வெள்ளைகோழியே வெளியேறு"







நாட்டுகோழிக்குள் இருக்கின்றது நாலாயிரம் கோடி சுகம்....

சுவை உணர்ச்சி பொங்கிய மனம், உரிமை வேண்டி சொல்கின்றது,

"வெள்ளைகோழியே வெளியேறு"



தமிழகம் எங்கும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம்.


தமிழகம் எங்குமா? அவ்வளவு ஆட்கள் கட்சியில் இருக்கின்றார்களா?.


ஒருவேளை விருந்து ஆர்பாட்டகாரர்களை வெளிமாநிலத்தில் இருந்து இறக்கியிருப்பார்களோ? வெளிமாநிலம் என்றால் இப்போதைக்கு கன்னடம்தான், அவர்களும் வரமாட்டார்கள்





ஆக கட்சி அலுவலகத்தை பூட்டிபோடுவதற்கு மாநில அளவில் பந்த், ஆர்பாட்டம் என பெயரா?

என்ன ஆர்பாட்டமோ, ஆனாலும் மொபைல் கடைக்காரர்கள், கூடவே பிரியாணிகடைக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

ஆர்பாட்டம் ஒரு பாதிப்பினையும் ஏற்படுத்தாது, ஆனால் பொன்னரும் தமிழசையும் சம்பந்தமே இல்லாமல் பேசிகொண்டிருப்பார்கள் அல்லவா? அந்த கொடுமையினை எப்படி தாண்டிசெல்வது என்பது தான் தமிழகத்தின் சவால்







 குஜராத் கோவில் வளாகத்தில் பூசாரி கொலை



ஆக இந்தியா முழுக்க இந்துக்கள் குறிவைத்து கொலை செய்யபடுகின்றனர் என கிளம்புவார்கள் கிளம்பட்டும், இனி கடுமையாக கத்துவார்கள், கொடிபிடிப்பார்கள்.


ஆனால் முன்பே இந்நாட்டில் பல இடங்களில் என்கவுண்டரில் செத்த பிரபல ரவுடிகளும், கோஷ்டிமோதலில் செத்த ரவுடிகளும்,





காஞ்சி கோயிலில் செத்த சங்கரராமனும், திருச்செந்தூர் ஆலய சுப்பிரமணியம் பிள்ளையும் இன்னும் பலரும் இந்துக்கள் என்பது குறிப்பிடதக்கது.

அன்றெல்லாம் ஏன் இப்படி சத்தமில்லை என யாரும் கேட்ககூடாது.

அதாவது இந்துவினை இன்னொரு இந்து கொன்றால் பிரச்சினையே இல்லை, மாறாக சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு இந்து செத்தால் இவர்கள் விடவே மாட்டார்கள.





அப்பல்லோவில் அதிகாரிகளுடன் 1 மணி நேரம் ஜெயலலிதா ஆலோசனை


விரைவில் அப்பல்லோவில் தமிழக‌ சட்டமன்ற கூட்டம் நடந்தது என செய்தி வரலாம்.


அப்பொழுது அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்னை கோட்டைக்கு மாற்றபட்டுவிட்டது என நாமாக புரிந்துகொள்ளவேண்டும்.




இருக்கட்டும் ஒரு முதல்வருக்கு உடல்நலமில்லை என்றால் ஆளுநர் சென்று சந்தித்து செய்திகளை வெளியிடுவது மரபு.


தமிழக ஆளுநருக்கு ராஜ்பவனில் மான்களை கணக்கிடும் பெரும் பணி இருப்பதால் அப்பல்லோ எல்லாம் வரமாட்டார்.


தமிழகம் இந்தியாவின் சுயாட்சிபகுதி என்பதுபோல இருப்பதனால் விரைவில் பான் கின் மூன் அப்பல்லோ வராமல் மீடியாக்களுக்கு கிடைக்காது முதல்வரின் அப்பல்லோ சந்திப்புகள் தொடர்பான‌ படங்கள்.







 

கேத்ரீனா கைப்பிற்கு அன்பளிப்பாக வைர செருப்பினை வழங்கினார் உசேன் போல்ட்




பாலிவுட் நடிகை கேத்ரீனா கைப்பிற்கு அன்பளிப்பாக வைர செருப்பினை வழங்கினார் உசேன் போல்ட்







Stanley Rajan's photo.


பாலிவுட்டை கலக்கிகொண்டிருக்கின்றது வைரசெருப்பு விவகாரம். அதனை காணவே கூட்டம் கூட்டமாக வருகின்றார்களாம், இனி சினிமாவில் அதை அணியவும் அம்மணி கூடுதல் கட்டணம் கேட்கலாம் எனுமளவிற்கு பெரும் பிரபலமாகிவிட்டது செருப்பு


Stanley Rajan's photo.


அழகான கழுத்திற்கு வைர நெக்லஸ் வழங்காமல் காலிற்கு வைர செருப்பு வழங்கியிருக்கின்றார் பார்த்தீர்ககளா?








இதுதான் உசேன் போல்ட்டின் தொழில் பக்தி

காலால் ஓடி சம்பாதித்த காசு, தனக்கு பிடித்தமான நடிகையின் காலினைத்தான் பெருமைபடுத்தவேண்டும் என நினைத்திருக்கின்றார் மனிதர், எப்படிபட்ட சிந்தனை.

அவரை பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தோம், மனிதர் வில் அம்பு போஸ் கொடுத்து தன்னை மன்மதன் அம்பாகவே சிம்பாலிக்காக அறிவித்துகொண்டவர் என்று, அதனை அவர் நிரூபித்துகொண்டும் இருக்கின்றார்.

இந்திய நடிகைகள் எனக்கு பிடிக்கும், டேட்டிங் செல்ல தயார் என அறிவித்தவர்தான் உசேன் போல்ட், ஆனாலும் இவ்வளவு வேகமாக இருப்பார் என உலகம் நினைக்கவில்லை, விட்டால் மும்பைக்கு ஓடியே வந்துவிடுவார் என பயந்த கத்ரீனா ஜமைக்கா பறந்தாராம்.

அங்கு ஹூசைனோடு ஊர் சுற்றியவர் சும்மா இருக்கலாம் அல்லவா?, நான் சந்தித்த ஆண்களில் மிக சிறப்பானவர் என உசேனுக்கு சர்டிபிக்கேட் வேறு கொடுத்திருக்கின்றார்,

எங்கு புகை வருகின்றதோ இல்லையோ சல்மான்கான் காதில் நிச்சயம் வரும்

ஆனால் அவரால் கொலைவெறியில் உசேன்போல்டினை விரட்டினாலும் ஓடிபிடிக்கமுடியாது என்பது கேத்ரீனாவிற்கு தெரிந்திருக்கலாம்.

பாலிவுட் வரை உசேன் போல்ட் ஓடி வந்துவிட்டார் வந்துவிட்டார், கோலிவுட் வர எவ்வளவு நேரமாமாகும்?, வரலாம்.

அவர் வேறு மகா வேகமான ஓட்டக்காரர்

ஆனால் 1990கள் என்றால் குஷ்பூவிற்கு நிச்சயம் தங்க செருப்பு, தங்கத்தில் மிதியடி தயார் செய்ய சொல்லியிருக்கலாம், வைரம் பதித்த ஷூ ராக் செய்து கொடுத்திருக்கலாம்

அல்லது திருச்சியில் கட்டபட்ட கோயிலுக்கு நன்கொடை அள்ளி கொடுத்திருக்கலாம்

இனி வாய்ப்பில்லை.

(ஆனாலும் தங்க‌ சரிகை, பட்டு சாக்ஸை எல்லாம் கொடுக்கமாட்டார் என நம்புவோம்)

இது 2016..., யார் முண்ணணி என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

ம்ம்ம்ம்ம் எனவே நண்பர் Babu Rao அவர்களே, எதனையும் தாங்கும் இதயத்தை இறைவன் உங்களுக்கு அருளட்டும்















Tuesday, September 27, 2016

அரசல் புரசலாக....



நடிகையர் திலகம் சாவித்திரி சர்க்கரை நோய் முற்றி, இன்னும் சில பாதிப்புக்குள்ளாகி கோமாவிலே இறுதிவரை இருந்தாராம்.


சாவித்திரி நடித்த ஒரு பாடலை பார்க்கும்போது தோன்றியது, வேறொன்றுமில்லை











கோவையின் சமீபகால கலவரங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுகின்றது, இந்திய கலவரங்களை தூண்டுவதே அதன் நோக்கம் : பொன்னார்


ஆம் இருக்கலாம், அப்படியானால் ரதயாத்திரை வந்து பாபர்மசூதியினை இடித்து இந்தியாவினை கலவரகாடாக மாற்றியதிலும் பாகிஸ்தானியர் கரங்கள் இருக்கலாம் அல்லவா?





அப்படியானால் என்ன சொல்ல வருகின்றார்?

இந்து இயக்கங்கள் எல்லாம் பாகிஸ்தான் பினாமிகளா?

இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ், சங் பரிவார், பிஜேபி கூட பாகிஸ்தானின் ஏஜெண்ட் இயக்கமா?

அட ராமா................





எம்.ஜி.ஆர். போல் முதல்வர் ஜெயலலிதாவும் நக்சலைட்டுகளை வேரறுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்


இந்திரா போல மோடியும் பாகிஸ்தான் கொட்டத்தை அடக்கவேண்டும் என முதலில் பாராளுமன்றத்தில் பேசுங்கள்


பேசவேண்டிய இடத்தில் தூங்கவேண்டியது, தூங்க வேண்டிய இடத்தில் விழித்திருந்து அறிக்கைவிடுவது இவரின் ஸ்டைல்






இன்னும் நூறு வருடம் அம்மாவினை அசைக்கவே முடியாது, : கராத்தே ஹூசைனி


வந்துட்டார்யா, இனி அப்பல்லோ வாசலில் என்ன காமெடி எல்லாம் நிகழ்த்தபோகின்றாரோ, அம்மா வரும்வரை மார்ச்சுவாரியில் பிணமாக இருப்பேன் என போய் படுத்துகொண்டாலும் ஆச்சரியமிலை, இவர் செய்யகூடியவர்தன்.


ஹூசைனி சார் , அம்மாவை அசைக்க முடியாததா பிரச்சினை?




அம்மாவால் தன் கை கால்களை அசைக்க முடிகின்றதா? என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை.







 

போன பிறவியில் நான் எழுத்தாளனா?

ஹஹஹஹஹா...

அப்பொழுது நான் எழுத்தாளனா?

அதனால் கொன்றே விட்டார்களா?

என்ன இது?.

சரி எவ்வளவு சம்பாதித்தேன் என்பதையாவது சொல்ல கூடாதா?

இப்பொழுதும் எதனையோ கிறுக்கிகொண்டே தான் இருக்கின்றேன், இது விட்ட குறை தொட்ட குறையாக இருக்கலாம் ...

ஆனால் இப்பிறவியிலும் கொல்ல தேடலாம்,

யாராக இருக்கும்? சொல்லித்தான் தெரியவேண்டுமா?

நிச்சயம் அங்கிள் பாய்ஸாகத்தான் இருக்கமுடியும் அல்லது பங்காளிகளாக கூட இருக்கலாம் ..

எனினும் ஹானஸ்ட், இன்னோசென்ட் எல்லாம் நமக்கு இப்பிறவியில் சரிவராதவை. பெரும் அயோக்கியனில் ஒருவன் நான் என்பது எனக்கே தெரியும்.

அதனால் இதனை முழுவதும் நம்ப முடியவில்லை

மீறி பொய் சொன்னால், பாகம்பிரியாளே சாட்சி.

Screenshot_2016-09-27-10-51-35-673.jpeg

ரித்திகா சிங்...



Image may contain: 1 person


"ஏய் மனமே...ஜெயப்பிரதாவின் இடத்தினை ரித்திகா சிங் பிடித்துவிடாமல் இருக்கும்படி பார்த்துகொள்வாயாக‌


ஏற்கனவே வருஷம் 16, சின்னதம்பி போன்ற படங்களின் பின் குஷ்பூ அந்த இடத்தினை பிடிக்க மல்லுகட்டியதும், அது இன்றளவும் இன்னொரு சவாலாக இருப்பதும் இன்னொரு பக்கம்.


அது அப்படியே இருக்கட்டும், வருஷம் 16 குஷ்பூ அவ்வளவு எளிதில் மறக்க கூடிய முகம் அல்ல.




ஆனால் ரித்திகா சிங் 90களின் குஷ்பூ போல இல்லாவிட்டாலும், கொஞ்சம் சவால் போலவே தெரிகின்றது,


இறுதிசுற்றினையே அவருக்கு பயந்து ஒரு சுற்றுக்கு மேல் பார்க்க முடியவில்லை, பலமுறை மனதில் சுற்றிகொண்டே இருந்தார்.


ஆக இனி ஜெயபிரதா நினைவுகளை அல்லது வருஷம் 16 குஷ்பூவினை காப்பாற்ற ரித்திகா சிங் படங்களை பார்பதில்லை என முடிவாயிற்று.


மீறி பார்த்து தொலைத்துவிட்டால் சிம்மாசனம் போட்டு மனதில் அமர்ந்திருக்கும் ஜெயப்பிரதா கிளம்பிவிடும் ஆபத்து உண்டு அல்லது வருஷம் 16 குஷ்பூவின் அந்த பேதை முகமும் கலைந்துவிடும் அபாயம் உண்டு


மனமே விடவே கூடாது., "














நாகேஷ் : நகைச்சுவை சிகரம்

https://youtu.be/NrCBuyyVk-k


ஒரு நகைச்சுவை நடிகனாக நாகேஷ் சாதித்ததை நாகேஷ் முன்னர் வந்தவர்களும் சரி , பின்னர் வந்தவர்களும் சரி மிஞ்ச முடியாது


மின்னல்வேக முக பாவனை, உடல்மொழிமாற்றத்தில் அவர் என்றுமே தனித்து நின்றார்


சீரியசான குணசித்திரம், பரிதாப பாத்திரம், நகைச்சுவை கலந்த வில்லத்தனம் என எல்லா வேடங்களிலும் பின்னி எடுத்தவர் நாகேஷ்


காமெடி அவரது ஒவ்வொரு அசைவிலும், வார்த்தையிலும் பிறப்பிலே கலந்திருந்தது


அழகும் தோற்றபொலிவும் முக்கியமே அல்ல மாறாக உள்ளத்தில் இருந்து வரும் உணர்ச்சியான நடிப்பே பிரதானம் என நிருபித்து காட்டியவர்.


அவரின் வடுக்கள் பதிந்த முகம் அழகற்று இருக்கலாம், அவர் தேகம் நோஞ்சானாக இருக்கலாம், ஆனால் அவர் கொட்டிய நடிப்பு உணர்ச்சிகளே அவரை சினிமாவில் நிறுத்திற்று.


அழகினை விட நடிப்பே மகா முக்கியம் என காட்டியவர், ஆனால் ஒரு இடத்தில் மன்ம் விட்டு சொன்னார்


"நான் கொஞ்சம் அழகாக, வாட்டசாட்டமாக இருந்தால் இந்த ஹீரோக்கள் அருகில் என்னை தோழனாக காட்டியிருப்பார்கள் என நினைக்கின்றீர்களா? இல்லை


நான் நோஞ்சான் போல அசிங்கமாக இருப்பதால் அவர்கள் அழகு இன்னும் கூடுவதாக நினைத்தே என்னை அந்த வேடங்களுக்கு அனுமதித்தார்கள்,


அதை பற்றி எல்லாம் நான் கவலைபட்டதே இல்லை, என்னால் முடிந்ததை சினிமாவில் செய்தேன். மக்கள் ரசித்தார்கள் அவ்வளவுதான்"


அழகான முகம் முக்கியமே இல்லை என சினிமாவில் அடித்து நிரூபித்தவர் நாகேஷ், அப்படி பின்னாளில் திறமையினை நம்பி வந்தவர்கள் பலர் ஜெயித்தும் இருக்கின்றார்கள்.


இன்னும் ஜெயிக்க இருப்பவர்களுக்கும் அவரே வழிகாட்டி


மறக்கமுடியாத தமிழ்சினிமா அடையாளம் அவர், அவரை ரசிக்காமல் தமிழக சினிமாவினை கடந்துபோக முடியாது


இன்று நாகேஷின் பிறந்தநாள்.


அந்த காலத்தில் சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் ,நாகையா போன்ற நடிகர்கள் பத்ம ஸ்ரீ விருது வாங்கினார்கள் .


ம.கோ.ராமசந்திரன் ரிக்க்ஷாகாரன் படத்திற்கு " ஓதம் ஓதம் "நடிப்பிற்கு (அப்படி நாம் நம்பிகொள்ள வேண்டும்)பாரத் விருது வாங்கினார் .


ஆனால் எம் ஆர் ராதா, எஸ் வி ரங்காராவ், பாலையா, நாகேஷ் போன்ற உன்னத கலைஞர்கள் அரசு விருதுகள் கௌரவமின்றி தான் மறைந்தார்கள். நாகேஷும் அவ்வகையே


அரசு விருது யாருக்கு வேண்டும்? மக்கள் மனதில் நிற்பவன் அல்லவா மாபெரும் கலைஞன்.


பிடித்த நட்சத்திரங்களை வானில் யாரும் காட்டி தந்தா ரசிக்கின்றோம்? நாமாகவே ரசிக்கவில்லையா?


அப்படி பாலையா, எம்.ஆர் ராதா, ரங்கராவ் வரிசையில் என்றென்றும் நிலைத்து நிற்பார் நாகேஷ்

நாம் அகண்ட தமிழகம் அமைப்போம்...

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது, 50 இலட்சம் மதிப்புள்ள 33 செம்மரங்கள் பறிமுதல்.


இதற்கு அங்கிள் சைமன் மற்றும் அடிப்பொடிகளின் முழக்கம் இப்படி இருக்கலாம்


"இதற்குத்தான் திருப்பதியினை மீட்டு தமிழகத்தோடு இணைக்கவேண்டும், அகண்ட தமிழகம் வேண்டும் அதற்கு தமிழன் முதல்வராக வேண்டும் என இன உணர்வாளர்கள் உயிரை பிடித்து கொண்டு போராடுகின்றோம், எல்லைசாமி வீரப்பன், இனச்சாமி பிரபாகரன் படம்பிடித்து போராடுகின்றோம்.


அதன்பின் தமிழக‌ பகுதியில் தமிழன் 50 லட்சம் திருடினால் எப்படி செய்தி வெளிவரும்? தமிழன் தமிழக செம்மரத்தை திருடாமல் அடுத்தநாட்டிலா திருடுவான் என சொல்லி சமாளித்துவிடலாம்


ஆக திருப்பதிபகுதியினை தமிழகத்தோடு இணைத்து தெலுங்கனை விரட்டினால் தமிழன் உரிமத்தோடு திருடிவிட்டு போகிறான் தமிழினமே....


குடகு வரை தமிழகமாக இருந்திருந்தால் எல்லைச்சாமி வீரப்பன் எவ்வளவு சந்தணம் வெட்டியிருப்பான், அது கன்னடம் என்பதால்தானே பிரச்சினை கூடிற்று


ஆக திருப்பதியினை மீட்காத, குடகினை மீட்காத, மைசூரை இழந்த திராவிட கட்சிகளின் கொடுமையே இம்மாதிரி மரம்வெட்டும் சம்பவங்கள்


என் அருமை தமிழகமே, நாம் அகண்ட தமிழகம் அமைப்போம், எல்லைகளை மீட்போம், அதன் பின் அவை தமிழக மரங்களாகும், எவனும் வெட்டட்டும், எவனும் சம்பாதிக்கட்டும், கொள்ளையடிப்பவன் தமிழனாக மட்டும் இருக்கட்டும்.."

Monday, September 26, 2016

வெங்கடேச பண்ணையாரின் நினைவிடத்தில் சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தினார்



வெங்கடேச பண்ணையாரின் நினைவிடத்தில் சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தினார்.


அடுத்த அஞ்சலி கராத்தே செல்வின் சமாதியா?


டெல்லியில் துறைவாரியாக ஒவ்வொருவரையும் சந்தித்து தமிழக உரிமைகளுக்காக குரல்கொடுக்கவேண்டியவர் இங்கே சமாதி சமாதியாக சாதிவாரியாக அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றார்.


வெங்கடேச பண்ணையார் என்பவர் அப்படி இந்த‌ நாட்டிற்கு ஏதும் என்னதான் செய்தாரோ தெரியவில்லை? அப்படி ஒரு தேசாபிமானி இருந்ததாகவோ ராணுவத்திலோ அல்லது அரசியல் பதவிகள் வகித்ததாகவோ இதுவரை தகவலே இல்லை.


பசுபதிபாண்டியன் எனும் பாகிஸ்தான் ராணுவதளபதி படையெடுத்து தூத்துகுடி வரை வந்தது போலவும், அதனை 10 பேர் கொண்ட படையுடன் வெங்கடேசபண்ணையார் ஓட விரட்டியது போலவும் அப்படி ஒரு பில்டப்


அதே தூத்துகுடியில்தான் மாவீரன் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வெள்ளையனுக்கு எதிராக கலகம் செய்த ராஜகோபால் என ஏராள தேசபக்தர்களின் நினைவிடம் நிறைந்த தூத்துகுடியில் அவர்களுக்கு எல்லாம் அஞ்சலி செலுத்த யாருமில்லை


இந்த வெங்கடேசன், பசுபதி பாண்டியன் போன்றவர்களுக்காக குழுமும் சாதிவெறிபிடித்த இளையசமுதாயத்தைத்தான் அடுத்து உருவாக்கி இருக்கின்றோம் என்றால், இது எவ்வளவு ஆபத்தானது


எல்லாம் சாதி வாக்கு கொடுமை.


அது என்னமோ தெரியவில்லை தமிழகத்தில் போலிஸ் சுடுபட்டு இறந்தவர்களுக்கு எல்லாம் வீரவணக்கம் செலுத்திகொண்டிருக்கின்றார்கள், கீழத்தூவல் கிராமம், வீரப்பன், வெங்கடேச பணையார் என வரிசை பெரிது.


மலையூர் மம்பெட்டியான், கரிமேடு கரிவாயன், சீவலபேரிபாண்டி போன்ற சமீபகால இதிகாச நாயகர்களை எப்படி மறந்தார்கள் என் தெரியவில்லை, நினைவுபடுத்தியாயிற்று இனி அவர்கள் பார்த்துகொள்ளட்டும்


ஆனால் கன்னியாகுமரி லிங்கம் எப்படி மறக்கப‌ட்டார்?


லிங்கம் அவ்வகையில் பரிதாபம், வீரவணக்கம் அழிச்சாட்டியம் எல்லாம் அவருக்கு செய்ய யாருமே இல்லை. ஏன் என்று தெரியவில்லை


ஆனால் செல்வின், வெஙகடேசனை எல்லாம் விட மாபெரும் "வீரன்" அவர்தான்


வெங்கடேசன், செல்வின் போன்றோர் சில இலக்குகளை குறிவைத்து தாக்கியதாக கருதபட்டவர்கள். ஆனால் மாவீரன் அலெக்ஸாண்டர் போல கண்ணில்பட்டதெல்லாம் எனது இலக்கே என முரசரைந்து மொத்த கன்னியாகுமரி மாவட்டத்தையும் அலற வைத்த மாவீரன் அவர்.


சசிகலா புஷ்பாவின் புரட்சியிலாவது அவருக்கும் "வீரவணக்கம்" நடக்கும் என கன்னியாகுமரி மக்கள் எதிர்பார்க்கலாம்






வீடு திரும்பும் அம்மாவும்... வேட்பாளர் பட்டியலும்..

 

உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


இனி கடைசி நொடி வரை வேட்பாளர்களை மாற்றி மாற்றி விளையாடுவார்கள், இனி அம்மா ரிட்டர்ன் வந்துவிட்டால் அடியோடு மாற்றபடலாம்


சீட் கிடைத்தவர்களுக்கும் நிம்மதி இருக்காது, கிடைக்காதவர்களுக்கும் பரபரப்பு தீராது, இப்படி ஒரு அபூர்வ காட்சி அக்கட்சியில் மட்டுமே சாத்தியம்




கடந்த சட்டமன்ற தேர்தலில் தூங்காமால் இருந்து வேட்பாளர்களை மாற்றிகொண்டே இருந்த அனுபவம்தான் உள்ளாட்சி தேர்தல் என்றவுடன் தலைவியாரை அப்பல்லோவில் படுக்க வைத்துவிட்டதோ?


சொல்லமுடியாது அப்படி இருந்தாலும் இருக்கலாம்







விரைவில் வீடு திரும்புகின்றார் ஜெயலலிதா


சும்மா வந்தாலே பேனர் வைத்து இவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் தாளாது, இம்முறை எப்படி எல்லாம் வரவேற்பு என இறங்கபோகின்றார்களோ


சென்னை மக்களை சென்னைவாழ் தெய்வங்கள் காப்பாற்றட்டும்




இனி அம்மா குணமடைந்ததால் நேர்ச்சை செலுத்துகின்றோம் என ஒரு கும்பல் கிளம்புமே அதனை நினைத்தால்தான் பகீர் என்கின்றது


இந்த ஹீசைனி என்பவரை காணவில்லை, மகா அமைதியாக இருப்பதனை கண்டால் ஏதோ பெரிதாக செய்யபோகின்றார் என பொருள்


தீ, சிலுவை எல்லாம் கடந்துவிட்டார்? அடுத்து தன் மீது கல்லெறிய சொல்லி காமெடி செய்தாலும் செய்யலாம்


வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாதீர்கள்.



டாக்டர் மன்மோகன் சிங்


Image may contain: 1 person , beard and hat


உலகம் கொண்டாடும் ஒரு பொருளாதார மேதை,


உலகம் தடுமாறிய மந்தநிலை காலங்களில் இந்திய பொருளாதாரத்தை காத்து நின்ற பெரும் அறிவாளி


இன்று இந்தியா காட்டும் பொருளாதார பாய்ச்சலுக்கு அன்றே அஸ்திவாரமிட்ட பெரும் சிந்தனையாளன்


மாற்றுகட்சி ஆயினும் அவர்களும் வந்து ஆலோசனை கேட்கும்பொழுதும் நாட்டுமுன்னேற்றத்திற்காய் நல்ல ஆலோசனைகளை வழங்கும் பெருமகன்


அவர் பதவிவகித்த காலங்களில் அவரை தேடிவந்து பாராட்டியவர்களே அதிகம் தவிர, அவர் தேடிசென்ற நாடுகள் குறைவு. காரணம் நல்ல அறிவும் சிந்தனையும் எங்கிருந்தாலும் தேடி வரும் உலகமிது, அப்படித்தான் வந்தது


இந்நாட்டிற்காய் உழைத்த சீக்கிய மக்களின் மொத்த நாட்டுபற்றும் ஒன்றாய் சேர்ந்த உருவம் அது. ஒரு வார்த்தை அதிர்ந்து பேசாமல் நாட்டை அமைதியாய் வழிநடத்திய கோமான் அவர்.


எமக்கு வருத்தமெல்லாம் ஒன்றே ஒன்றுதான்


இன்று மோடிக்கு கிடைத்திருக்கும் பெரும் பலம்போல அவருக்கும் கிடைத்திருந்தால் இன்னும் பெரு வெற்றிகளை அவர் குவித்திருப்பார், நாடு இன்னும் வளம் பெற்றிருக்கும்


ஆனால் கூட்டணி குழப்பத்தில் கல்மாடி, அழகிரி, தயாநிதி என ஏக இம்சைகளுக்கு மத்தியில்தான் அவரால் ஆளமுடிந்தது.


அதாவது ஏக சங்கிலிகட்டுகளுடன் தான் அந்த சிங்கம் நடந்தது


பெரும் அதிகாரம் கொண்டு நாட்டை நடத்துவது சிக்கல் இல்லை, ஆனால் ஒவ்வொரு திசையில் நடக்கும் 4 குழப்பவாதிகளை கால கொடுமையால் கொண்டும் வெற்றிபயணம் செய்ததுதான் திறமை.


அப்படி இந்த கூட்டணி இம்சைகளை கொண்டும் இந்த நாட்டினை நடத்தினார் என்பதில்தான் அவர் வெற்றி இருக்கின்றது, மனிதரை அப்படி பாடாய் படுத்தினார்கள்.


கூட்டணி என்ற பெயரில் அவர் காத்த அமைதி முள் இருக்கையின் மீது ரத்தம் கசிய அமர்ந்திருக்கும் வலிக்கு சமம், அப்படித்தான் அவருக்கு நெருக்கடிகள் இருந்தன. அந்த சிங்கம் சில இடங்களில் ஓநாய்கள், நரிகள், கூவைகள் சொல்லுக்கும் கட்டுபடும் காலம் இருந்தது என்ன செய்ய?


மக்களாட்சி, அரசுக்கு ஆதரவு, வெளியிருந்து ஆதரவு, நாற்காலிக்கு கீழ் இருந்து ஆதரவு, மாடியிலிருந்து ஆதரவு என பல இம்சைகளுக்கு மத்தியில்தான் அவர் நிர்வாக தேர் ஓட்டினார்.


ஆனாலும் சலித்துகொண்டு விட்டு ஓடியவர் அல்ல‌,


முடிந்தவரை நாட்டினை பாதுகாத்து நின்றார், ஊழல்வாதிகள் பிடிபடும்போது அவர் காட்டிய கனத்த மவுனமே அவரின் கைகள் அன்று கட்டபட்டிருந்ததை அழகாக காட்டின‌


இப்படிபட்ட மாமேதைகளையும், கலாம் போன்ற பெரும் தியாகிகளையும் திகைக்க வைக்கும் ஒரு கேடு கெட்ட அரசியல் நடக்கும் நாடு இது, நாட்டின் கட்சிகள் அப்படி, குறிப்பாக மாநில கட்சிகளின் அட்டகாசம் அப்படி, கண்ணார பார்த்தோம்


விடுங்கள் எரிச்சல்தான் மிஞ்சும், மன்மோகனும் அப்படித்தான் சிக்கி இருந்தார், இருந்தாலும் அவரின் நிர்வாகத்திற்கு ஒற்றை சாதனை போதும்


அவர் காலத்தில் 120 டாலருக்கு கச்சா எண்ணெய் விலை இருந்தது, அவரோ 63 ரூபாய்க்கு மக்களுக்கு கொடுத்துகொண்டிருந்தார், அது திறமை


இன்றோ 40 டாலருக்கு வாங்கியும் அதே விலையில்தான் கொடுத்துகொண்டிருக்கின்றார்கள் இதுவும் திறமை


இன்றைய ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கு முன்னோடி திட்டமிட்டவரும் அவரே.


வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட அந்த பெருமகனுக்கு டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


ஆச்சரியமான மனிதர் அவர், 10 வருடம் பிரதமராக இருந்தும் தனக்கொரு கோஷ்டியோ, 4 அல்லக்கைகளோ கொண்டிராமல் மகா அமைதியாக தனியாக‌ இருப்பவர், பாராட்டவேண்டிய ஒன்று.


எல்லோருக்கும் அது சாத்தியமில்லை, வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்தவனே அதனை எளிதில் விடமாட்டான், பதவியின் சுகம் அப்படி, போதை அப்படி


ஆனால் பாரத பிரதமராக இருந்தும் கட்சிக்குள் அவர் காட்டும் அமைதிக்கும் பெரும் பண்புக்கும் ஒரு சிகரமாகவே நோக்கபடவேண்டியவர் அவர்.


காங்கிரசில் மன்மோகன் சிங் கோஷ்டி என ஏதாவது உண்டா? அதுதான் பெருந்தன்மை,


தன் பணியினை நாட்டிற்கு கொடுத்துவிட்டு அமைதியாக ஒதுங்கி நிற்கும் பெரிய மனம்,


பதவிக்கும், பகட்டிற்க்கும், 4 வாழ்க கோஷங்களுக்கும் ஒதுங்கி நிற்கும் பெரிய மனம்


அந்த ஒன்றிற்காகவே அவரை வாழ்த்தலாம். நிச்சயம் கலாம் போல பெரிய மனதிற்கு சொந்தக்காரர் அவர்.


தமிழக காங்கிரசார் இவரிடமிருந்து படிக்கவேண்டிய பெரும் பாடம் அது, ஆனால் நிச்சயம் படிக்க மாட்டார்கள்.


இவர்கள் அப்படித்தான்.


தமிழக காங்கிரசாரே அம்மாமனிதனிடமிருந்து கொஞ்சமாகவது கற்றுகொள்ளுங்கள்.


அவரும் காங்கிரஸ்காரர்தான், நீங்களும் காங்கிரசார் என சொல்லிகொள்கின்றீர்கள்.


இதில் எது கட்சி அபிமானம் எனும் கேள்வியினை நீங்களே கேட்டுகொள்ளுங்கள், சத்யமூர்த்திபவனில் இம்மானிதனின் படத்தினையும் வையுங்கள், அவரை மனதினில் வையுங்கள்


உங்கள் கட்சி நிச்சயம் புத்துயிர் பெறும். ஏராளமான முன் உதாரணங்கள் உங்கள் கட்சியிலே இருக்கின்றன.












வேறு வகை சிகிச்சை நிச்சயம் தேவை..



jk


காய்ச்சலையே கண்டிக்க துணியும் பெரும் சீற்றம் அந்த கூட்டத்தினை தவிர யாருக்கு சாத்தியம்?


தேவர் பெருமகன் வேறுமாதிரியானவர், ஆனால் வோட்டு ஆசிகளை நிச்சயம் அளிப்பார். அதற்காக அவரை கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்டீஸ், தமிழக அகத்தியர், சித்தர்கள் வரிசைக்கு கொண்டு செல்வதெல்லாம் பெரும் அபத்தம்


இன்னும் யாரையெல்லாம் கண்டிக்கபோகின்றார்களோ தெரியவில்லை, அடுத்த கண்டிப்பு இன்னும் குணமாக்காத மருந்து மீது திரும்பலாம்.





எதற்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பெயரை அப்பல்லோ நிர்வாகம் ரகசியமாக வைத்திருப்பது நல்லது.

இன்னொரு கும்பல் அம்மா ஆணையிடாமல் ஆஸ்பத்திரியில் தூங்கும்போது இந்த சூரியன் எப்படி தானாக உதிக்கலாம், இந்த மழை எப்படி பெய்யலாம், காற்று எப்படி வீசலாம் இதெல்லாம் அம்மாவினை அவமதிக்கும் செயல் அல்லவா? என பேனர் அடித்துகொண்டிருக்கும்

நிச்சயம் கண்டிக்கும், அம்மா ஆணையிடாமல் உதிக்கும் சூரியனனே உம்மை கண்டிக்கின்றேன், ஏ நிலவே உன்னை விடபோவதில்லை என பலர் கிளம்பலாம்.

முதல்வருக்கு ஒரு வகை சிகிச்சை என்றால், இம்மாதிரியானவர்களுக்கும் வேறு வகை சிகிச்சை நிச்சயம் தேவை.







 முணு முணுப்பு






காவல் துறை நிர்வாகம் சீர்கெட்டிருப்பதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம்: கலைஞர்

இவரது இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்சியில்தான் அந்நியநாட்டு புலி தீவிரவாதிகள் சென்னை வந்து பத்மநாபா படுகொலையினை செய்தனர், அந்த குற்றவாளிகளை இவர் காலத்து காவல்துறை ஓட ஓட விரட்டி சுட்டு கொன்றது அல்லவா?

எவ்வளவு பெரும் நடவடிக்கை எல்லாம் எடுத்து தமிழகத்தை அமைதி பூங்காவாக்கினார்?

அதன்பின் மனம் பொறுக்காத‌ ராஜிவ்காந்தி அவராக சென்னை வந்து செத்தார்.








திலீபன் சாவுக்கு யார் காரணம்? என் உறவே...



அது இந்திய அமைதிபடை இலங்கையில் கால்பதித்த நேரம், சிங்கள தாக்குதலிலிருந்து தம்மை காக்க இந்தியா வந்ததை ஈழதமிழர்கள் கொண்டாடிகொண்டிருந்த நேரம்


ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம்


புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட மாதாந்திர 50 லட்சத்தை வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் என எதிர்பார்த்த நேரம்.


ஆனால் ஜெயவர்த்தனேவோ அனுபவஸ்தர், இந்தியாவினை எதிர்க்கும் அளவிற்கெல்லாம் செல்லவே இல்லை. சீரழிந்த வடக்கு மாகாணத்தை சீர் படுத்ததொடங்கினார்


புலிகள் பொறுமை இழந்து மக்களை தூண்டிவிட ஆரம்பித்தனர், இந்திய முகாம்கள் முன்னால் ஈழமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர், பிண்ணணியில் புலிகள்


Stanley Rajan's photo.


கொஞ்சம் கொஞ்சமாக இது அதிகரித்தது, இந்திய ராணுவம் முதலில் குழம்பினாலும் பின்னால் சுதாரித்தது, ஏதோ அவர்களுக்கு புரிந்தது. அன்று வரவேற்ற மக்களுக்கு இன்று என்ன ஆனது? ஏதோ துர்போதனை, நடக்கட்டும்


இந்திய இலங்கை ஒப்பந்தபடி வடக்கே சீரழிந்திருந்த நிர்வகத்தை ஜெயவர்த்தனே நடத்த தொடங்கினார். அதுவரை காவல் நிலையங்கள் இல்லை, அவர் திறக்கதொடங்கினார்


புலிகளுக்கு அழிவுக்கண் திறந்தது, காரணம் காவல்நிலையம் திறப்பது மக்களுக்கு சௌகர்யமோ இல்லையோ, தங்களுக்கு ஆபத்து என கருதினர். அவர்களை பொறுத்தவரை நீதி, காவல் எல்லாம் அவர்கள்தான், ஒரே நோக்கம் வசூல்


அந்நேரம் ஆங்காங்கே மக்கள் இந்தியாவினை எதிர்த்தாலும் பெரும் எதிர்ப்பு இல்லை. இந்தியாவினை மொத்த மக்களும் எதிர்க்க புலிகளுக்கு ஒரு காரணம் தேவைபட்டது, சில காரணங்களை உள்ளடக்கி திலிபன எனும் ராசையா பார்த்தீபனை உண்ணாவிரதம் என களமிறக்கினர்


காரணங்கள் இவைதான், புதிய காவல் நிலையம் திறக்க கூடாது, ஊர்க்காவல் படை கூடாது, எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துகொள்வோம், குறிப்பாக வடக்கு கிழக்கில் சிங்களன் வரவே கூடாது, இதனை ஏற்காதவரையில் உண்ணாவிரதம் தொடங்கும் என்றனர்.


இது சிக்கலான விஷயம், இந்தியபடை அமைதிகாக்க சென்றது, ஒருங்கிணைந்த ஈழ மாகாணத்து தேர்தலை அமைதியாக நடத்த சென்றது, அங்கே நீதிமன்றம் கூடாது, காவல்நிலையம் கூடாது என்பது ஏற்றுகொள்ளகூடியது அல்ல, சட்டம் ஒழுங்கு வேண்டாமா?


கொழும்பில் ஏராளமான தமிழர்கள் வாழும்போது வடக்கே சிங்களர் நுழைய கூடாது என்பது எப்படி சாத்தியம்? அதுவும் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என ஜெயவர்த்தனேவினை ஒப்புகொள்ளசெய்தபின் ஏன் தயக்கம் என ஏகபட்ட கருத்துக்கள் இந்தியாவிற்கு.


முதலில் உண்ணாவிரதித்தினை இந்தியா கண்டுகொள்ளவில்லை, காரணம் அப்படி தன்னை மிரட்டி தான் பணிந்தால் எடுத்தற்கெல்லாம் உண்ணாவிரதம் என கிளம்பிவிடுவார்கள் என்பது இந்தியாவிற்கு தெரியாததல்ல‌


இந்தியாவினை தன் விருப்பத்திற்கு மட்டும் ஆட்டுவிக்கும் விபரீத ஆயுதமாக புலிகள் திலீபனை பயன்படுத்துவதை இந்தியா உணர்ந்தது அமைதி காத்தது


ஆனால் புலிகள் ஈழமெங்கும் மக்களை அழைத்து திலீபனை காண செய்து கொடுங்கோல் இந்தியா எப்படி நம்மை சாகவிடுகின்றது பாரீர் என ஒப்பாரி வைத்தனர்.


மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்தார், ஆனால் சுதந்திரம் கிடைக்கும்வரை இருந்து சாவேன் என அவர் இருக்கவில்லை. ஆனால் சில உரிமைகளை அவ்வப்போது பெற்றுகொடுக்கவும் தவறவில்லை


அந்த உயரிய தியாகத்திற்கும் வீண் பிடிவாததத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணரா நாடல்ல இந்தியா, அது அப்படியே இருந்தது.


புலிகளும் திலீபன் செத்தே தீரவேண்டும் என முடிவோடே இருந்தனர், இல்லை என்றால் சாகப்போகும் அவன் தன்னை காப்பாற்றவேண்டாம் என எழுதிகொடுத்ததாக சொன்ன கடிதத்தை காட்டியே அவனுக்கு ஒரு சொட்டு நீர் கொடுக்காமல் வதைத்தனர்.


புலிகள் நினைத்திருந்தால் அவனை காப்பாற்றி இருக்கலாம், புலிதலைவர் சொன்னால் சயனைடு கடிக்கும் புலிகள், அவர் கட்டளை இட்டால் நீர் குடிக்கமாட்டார்களா?


அவர் காட்டிய பிடிவாதமே திலீபனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது, ஈழ மக்களிடையே இந்திய எதிர்ப்பு அதிகரித்தது.


இறுதியில் அவன் செத்துவிடுவான் என உறுதிசெய்யபட்ட நிலையில் இந்திய தரப்பு அணுகுமுறைகள் அவனை பாதுகாக்க வண்ணம் புலிகளும் ஆடினர், அதாவது தாமதபடுத்தினர். வெளியில் துடித்தனர், உள்ளுக்குள் கடும் திட்டம்


ஏற்றுகொள்ளமுடியாத கோரிக்கைகளுக்கு எப்படி செவிகொடுக்க முடியும் என இந்தியா யோசிக்க, வதைக்கபட்டு செத்தான் திலீபன்


அவன் செத்ததும் மொத்த ஈழதமிழரையும் இந்தியா கைவிட்டுவிட்டதாக ஒப்பாரி வைத்து, அவன் உடலை பெரும் பேரணியாக்கி ஒருவித பதற்ற நிலையினை உண்டாக்கினர் புலிகள்


அந்த நாள்தான் இதே செப்டம்பர் 26.


அதாவது மக்கள் போரினை மறந்து அமைதிவழிக்கு திரும்பிகொண்டிருந்தபொழுது, நிம்மதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து மகிழ்ந்தபொழுது, இனி போராளி குழுக்கள் வேண்டாம், இந்திய ராணுவம் எம்மை காக்கும் என் கொஞ்சம் கொஞ்சமாக புலிகளை மறக்க நினைத்தபொழுது


பெரும் சர்ச்சையாக திலீபனை சாகடித்து இந்திய ராணுவத்திற்கு எதிராக மக்களை திருப்பினர் புலிகள்.


ஆக எப்படியும் புலிகள் இந்தியாவுடன் மோதுவர், நாம் ஏன் அவசரபடவேண்டும் என்ற அனுபவஸ்த ஜெயவர்த்தனேவின் நிதானைம் வெற்றிபெற்ற வேளை அது.


அதன் பின் நடக்க கூடாதது எல்லாம் நடந்து, இன்று ஈழமக்களுக்கு ஒருங்கிணணைந்த மாநிலம் கூட இன்றி சிங்கள ராணுவ முற்றுகைக்குள்ளே வாழும்படி செய்தாகிவிட்டு அவர்களும் பரலோகம் சென்றாயிற்று


திலீபனும் புலிகள் அமைப்பின் உறுப்பினராக ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல, போராளிகுழுக்கள் ஒழிப்பில் அவர் காட்டிய வெறியும், இன்னபிற அழிச்சாட்டிய கொடுமைகளும் பல இடங்களில் காண கிடக்கின்றன‌


புலிகளின் இரண்டாம் உண்ணாவிரதம் இது, முதல் உண்ணாவிரதம் சென்னையில் ராமசந்திரன் காலத்தில் நடந்தது. சார்க் மாநாட்டையொட்டி ஜெயவர்த்தனே இந்தியா வரும்பொழுது சென்னையில் இருந்த பிரபாகரனை நிராயுதபாணியாக்கி வீட்டு சிறையில் தள்ளினார் ராமச்சந்திரன்


அதாவது மத்திய அரசு சொல்லி, செயலில் இறங்கினார் அவர். செய்தது அந்நாளைய கமிஷனர் மோகன் தாஸ், பழி சுமந்ததும் அவரே


ஒன்றுமறியாத கன்னிபோல கவலையாய் விழித்துகொண்டிருந்தார் ராமசந்திரன், காரணம் அவரின் ஈழ இமேஜை காப்பாற்றும் நாடகம் அப்படி. அன்றெல்லாம் நெடுமாறன், வைகோ எல்லாம் ஏய் துரோகி ராஜினாமா செய் என்றெல்லாம் சொல்லவே இல்லை


மாநாடு முடிந்ததும் எச்சரிக்கையுடன் கருவிகளை பிரபாகரனிடம் கொடுத்தார் மோகன் தாஸ். ஒரே நாளில் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு அடித்து புரண்டு இலங்கை ஓடிய பிரபாகரன அதன்பின் தமிழக பக்கம்வரவே இல்லை.


(பின்னாளில் பத்மநாபா, ராஜிவ் என எல்லா கொலைகளையும் தமிழகத்தில் செய்து தமிழகத்தை ஒரு கலவர பூமியாக்க புலிகள் எடுத்த முயற்சிக்கெல்லாம் உட்கோபம் அதுவேதான்.


ராமச்சந்திரன் அருமையாக நடித்த அரசியல் காட்சிகளில் இதுவும் ஒன்று.)


காரணம் உண்ணாவிரதம் என ஆரம்பித்து சென்னையில் ஒரு பதற்றத்தை அவர் தொடங்கினார், வீரமணி கும்பலின் ஜால்ரா ஒருபக்கம், புலிகளை பற்றிஅறியா தமிழக மக்களின் அப்பாவித்தனம் ஒருபக்கம் என மாநிலம் தடுமாறுவதை மோகன் தாஸ் விரும்பவில்லை


இன்னொன்று இலங்கை தீவிரவாதிகளுக்கு இடமளித்துவிட்டு பஞ்சாப், காஷ்மீர் என பாகிஸ்தானை எப்படி கண்டிக்கமுடியும் என்ற மோகன் தாஸின் பேட்டி பாராட்டதக்கது.


இதெல்லாம் ராமச்சந்திரனுக்கு தெரிந்துதான் நடந்தது, ஆனாலும் இன்றுவரை அவரை ஒருவார்த்தை யாரும் பேசமுடியாது ஜாதகம் அப்படி.


ஆக அன்று எப்படியும் தன்னை தமிழக மக்கள் காப்பாற்றுவார்கள் என உண்ணாவிரதம் தொடங்கிய பிரபாகரன், பின் நிச்சயம் இம்மும்றை சாகத்தான் வேண்டும் என்ற நிலையில் திலீபனை களம் இறக்கினார்.


ஏன் சாகவேண்டிய அந்த உண்ணாவிரதத்தை பிரபாகரன் இருந்தால் என்ன?


முன்பு சிங்கள பலகலைகழகத்திற்கெதிராக மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தபொழுது, இது எல்லாம் வேலைக்கு ஆகாது, வன்முறை ஒன்றே வழி என அம்மாணவியரை புலிகள் கடத்தினர். அவர்களில் ஒருவரை பிரபாகரன் திருமணமும் செய்தார்


அவர்தான் மதிவதனி,


அவருக்கு அன்று கொடுக்கபட்ட போதனை உண்ணாவிரதம் எல்லாம் சும்மா, தலைவர் பிரபாகரனை நம்பு


பின்பு திலீபனுக்கு கொடுக்கபட்ட கட்டளை, ஆயுத பலத்தால் இப்போது மக்களை திரட்டமுடியாது, உண்ணாவிரதம் இருந்து செத்துபோ, உணர்ச்சிகளை வைத்து பின் நாங்கள் பார்த்துகொள்கின்றோம்


அதாவது மதிவதனி இருந்தால் காப்பாற்றுவார்கள், திலீபன் இருந்தால் சாகும் வரை கிட்டே இருந்து கொல்வார்கள்.


அதன்பின் ஈழபிரச்சினை வேறுகோணத்தில் சென்று எல்லாம் நாசமாகிவிட்டது, எனினும் தங்களை மக்களிடம் மறுபடியும் கொண்டு சேர்ததற்காக யாழ்பாணத்தில் அவனுக்கொரு நினைவு தூண் புலிகளால் கட்டபட்டது


Stanley Rajan's photo.


இன்று அது சிதைக்கபட்டு அழிந்து கிடக்கின்றது, கண்டுகொள்ள யாருமில்லை.


தியாக தீபம் எனும் அடையாளம் காசி ஆனந்தனால் கொடுக்கபட்டது, பின் திலீபன் பெரும் அடையாளம் ஆனார்


ஏராளமான பேரினை கொன்றவர்கள் புலிகள், ஒருவனை உலகின் கண்முன் வதைத்து கொன்றனர் என்றால் அது திலீபனை மட்டுமே.


அவன் கடைசிவார்த்தை வரை பிரபாகரன் பின்னால் திரளுங்கள், ஈழத்தில் நமது கொடி நமது ராணுவம் என சொல்லியே செத்தான் என்றால் அவன் யாரால் தூண்டபட்டு, எதற்காக செத்தான் என்பது எளிதில் முடிவுக்கு வரகூடியது,


ஒரே காரணம் இந்திய ராணுவம் வெளியேற மக்கள் சண்டைக்கு வரவேண்டும்


அதன் பின்னும் ஈழமக்கள் அமைதிகாக்க, குமாரப்பா போன்றோர் இந்திய கைதுசெய்யபட்டனர், ஆனால் சயனைடு இல்லை. பின்னர் இலங்கை இந்திய அரசு பேசிகொண்டிருக்கும்பொழுது கைதிகளை சந்திக்க வந்த புலிகள் சயனைடை கொடுத்து சாக சொல்ல மறுபடி பற்றி எரிந்தது ஈழம்,


2009 வரை எரிந்தது.


எல்லாம் மிக நன்றாக நடந்துகொண்டிருந்த பொழுது திலீபனின் வதை சாவு எல்லாவாற்றையும் நாசமாக்கி மக்கள் உணர்ச்சிகள் மீண்டும் புலிகளால் அநியாயமாக தூண்டபட்டு எல்லாம் மண்ணாய் போக மிக முக்கிய காரணமாய் அமைந்துவிட்டது.


அனுபவஸ்த ஜெயவர்த்தனே நிதானமாக தன் எதிரிகளை மோதவிட்டு ரசிக்க தொடங்கினார், வரலாற்றின் பெரும் வில்லன் அவர்.


ஆனால் நிதானமிழந்த புலிகள் உதவவந்த இந்தியா மீதே பாய இன்று எல்லாம் சர்வநாசம்.


இன்றும் ஆங்காங்கே தீயாக தீபம், திலீபன், இந்திய கோரமுகம் என சிலர் தமிழகத்திலும் வீரவணக்கம் என இறங்கலாம், புரிந்தவர்களுக்கு புரியும் திலீபன் ஏன் சாகடிக்கபட்டான் என்பது


இந்தியாவிற்கு எதிராக அன்று ஏவபட்ட ஒரு தற்கொலை படை அவன்.


போகட்டும்


திலீபன் உண்ணாவிரதம் தொடங்கும்பொழுது பிரபாகரன் சொன்னாராம் "திலீபா நீ முன்னால் போ..நான் பின்னால் வருகிறேன்"


சொன்னபடி உடனே வந்தாரா? இல்லை. அவன் செத்ததும் அவனை வைத்து சீன் போட்டு என்னமோ செய்தார்


22 ஆண்டுகள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு தீலிபனுக்கு சொன்னபடி முள்ளிவாய்க்காலில் அவன் இருக்குமிடம் சென்றார்.


அவர் சென்றது பிரச்சினை இல்லை, மாறாக எத்தனை லட்சம் தமிழ்மக்களை கூட்டிகொண்டு சென்றுவிட்டார்.



Stanley Rajan's photo.


அதுதான் மகா பரிதாபம், இந்த நூற்றாண்டின் பெரும் கொடுமைகளில் ஒன்று.


இப்படி எல்லோரையும் அனுப்பிவிட்டு இறுதியாக இவர் சென்றார், சரி இவருக்கு பின் போராட யாரை விட்டு சென்றார்? எதனை மிச்சம் வைத்துவிட்டு சென்றார்?


இதனைபற்றி எல்லாம் நாம் பேசகூடாது, இன்று தமிழகத்தில் அங்கிள் கோஷ்டியினர் இப்படியும் தொடங்கலாம்


"திலீபன் சாவுக்கு யார் காரணம் என் உறவே..?"


ராஜிவ்,கலைஞர், சோனியா, மன்மோகன்சிங் மற்றும் இந்தியா என சிலர் முழங்கிகொண்டிருப்பர்,


ஆனால் அமைதிபடை அனுப்பிய இந்திய தளபதி சுந்தர்ஜி (சுந்தர்.சி அல்ல) ஒரு தமிழர் என்பதை பற்றி யாரும் பேசமாட்டார்கள், இதுவும் ஓர் விந்தை. அவரை இனதுரோகி என யாராவது சொல்லி கேள்விபட்டிருக்கின்றீர்களா? கிடையவே கிடையாது.


ஆக இதனை தாண்டி யோசியுங்கள் திலீபனை சாக விட்டது யார் என தெரியும், யாரின் தலமைக்கு பணிந்து அவன் செத்தான் என்பதும் தெரியும், யாருக்கு லாபம் என்பதும் புரியும்


காஷ்மீரிய எல்லையில் செத்த எம் தேசவீரர்களை மறந்துவிட்டு, இப்படி எவன் சொல்லி எங்கோ அந்நிய நாட்டில் செத்தவனுக்காக இங்கு எவனாவது கொடிபிடித்தால் அவர்கள் எப்படிபட்டவர்கள் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
















தமிழக உள்ளாட்சி தேர்தல்....




உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு


கிராமங்களில் புகைந்துகொண்டிருக்கும் சாதி, சில வறட்டு கவுரவ பிரச்சினைகள், இன்னபிற விரோதங்கள் எல்லாம் வெளிப்படையாக வெடிக்கும் நேரத்திற்கான தேதி அறிவிக்கபட்டுவிட்டது


பஞ்சாயத்து தேர்தல்கள் தமிழகத்தில் அந்த நிலையினைத்தான் உருவாக்குகின்றன, சில இடங்களில் சொந்த குடும்பத்திற்குள்ளே கூட வெட்டிகொண்டு மாளுவார்கள்.





சில இடங்களில் அது ஜமீனின் வாரிசு போலவே தொடர்ந்துகொண்டு வர கடும்பாடு படுவார்கள்.

மொத்தத்தில் கிராமங்களில் கோஷ்டி சண்டை தொடங்க இருக்கும் நேரம், தீராத வன்மங்களின் தொடக்கமாகவும் இருக்கும், தொடர்ச்சியாகவும் இருக்கும்.

ஆனால் முடிவாக மட்டும் இருக்கவே செய்யாது.

மொத்தத்தில் இந்திய அளவில் சம்பாதிக்க ஒரு தேர்தல், மாநில அளவில் சுருட்ட ஒரு தேர்தல், மாவட்ட அளவுகளில் சுருட்ட ஒரு உள்ளாட்சி தேர்தல்

வாழ்க தேர்தல்கள், வளரட்டும் பதவிகள், பெருகட்டும் ஊழல்கள்

இந்த உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் ஒரு கொடுமை நிகழும், அங்கிள் சமைன் கோஷ்டி நிச்சயம் வார்டு கவுன்சிலர் பதவியிலாவது ஒன்றில் வெல்லும், காரணம் உள்ளாட்சி தேர்தல் கட்சி அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ அல்ல

மாறாக அதன் அடிப்படையே வித்தியாசமானது. சாதி மதம் இன்னபிற காரணங்கள்தான் வெற்றி தோல்வியினை நிர்ணயிப்வை. ஜெயித்தபின்பு கட்சி அடையாளம் பூசிகொள்வது வேறு.

அப்படி ஓரிரு கவுன்சிலர் இடங்களில் வென்றுவிட்டு தமிழகத்தை மீட்க தொடங்கிவிட்டோம் என கத்துவார்கள் பாருங்கள், அதனையும் நாம் சகித்துத்தான் ஆகவேண்டும்.






Sunday, September 25, 2016

இங்கும் அங்கும்....

முதல்வர் நலம்பெறும் வரை தமிழகத்தை ஆளப்போவது யார்?, மேய்ப்பன் இல்லா ஆடுகளை போல தமிழகம் ஆகிவிடாதா?

நமக்கு வரும் சந்தேகம் ஒன்றே ஒன்றுதான், அக்கட்சியின் தலைவி 24மணி நேரம் கண்காணித்தும் அமைச்சர் பெருமக்கள் மற்றும் கட்சிக்காரர்களின் "சுருட்டல்" உலகறிந்தது.

நத்தம் விஸ்வநாதனின் சொத்துபட்டியலே டெல்லிவரை அதிரவைத்திருக்கின்றது, அதுவும் அவர்களின் அம்மா கண்ணாளித்த காலங்களில்...

இப்பொழுது அவர் செயல்படமுடியாமல் இருக்கு இந்நேரத்தில் நரகாசுரன் பூமியினை சுருட்டி கக்கத்தில் வைத்ததுபோல தமிழகத்தை சுருட்டிவிடும் சாத்தியம் நிறையவே இருக்கின்றது

"காற்றுள்ள போதே தூற்றிகொள், அம்மா அப்பல்லோவில் இருக்கும்போதே சுருட்டிவிடு"




பாகிஸ்தானை இந்த உலகில் இருந்து தனிமைப்படுத்தாமல் விடமாட்டோம்: மோடி பேச்சு

இந்த உலகில் இருந்து பாகிஸ்தானை தனிமைபடுத்துவது இருக்கட்டும், இது இந்து உலகம் என இந்தியாவினை உலகம் தனிமைபடுத்திவிடும் அபாயம் இருக்கின்றது.

மசூதி இடிப்பு, யோகா, சமஸ்கிருதம், மாட்டுகறி என இந்தியாவினை உலகம் அப்படி ஒரு கோணத்தில் நோக்கிகொண்டே இருக்கின்றது

-

 

 

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு உணவு விதிவிலக்கு

மேற்காசியர்களுக்கு பன்றிக்கறி ஆகாது, இந்தியருக்கு மாட்டுகறி ஆகாது, சில இனங்கள் தாவர பட்சிகள்.


ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு உணவு விதிவிலக்கு.


ஆனால் ஊர்வனவற்றில் ரயில், பறப்பவனவற்றில் விமானம், நீந்துவதில் கப்பல் தவிர எல்லாவற்றையும் உண்ணும் பெரும் சமத்துவ உணவுக்காரர்கள் கிழக்காசியர்கள்.


சும்மா சொல்லகூடாது, பிய்த்து வயிற்றுக்குள் எறிகின்றார்கள்.


கலைஞர் கண்ட சமத்துவபுரம் போல, உணவு சமத்துவம் அவர்கள் உணவில் கொட்டி கிடக்கின்றது


அமீபாவும் கிளாமிடமோனசும் கிடைத்தாலும் சூப் வைக்க அவர்கள் தயார்.


மாட்டுகறி, பன்றிகறி சமையல் கற்றால் அது அரசியலாகிவிடும் வேண்டாம், பாய்ந்து வந்து அடிப்பார்கள், இந்தியாவுக்குள் வரமுடியாது.


ஆனால் ஆக்டோபஸ் சமையலாவது அவர்களிடம் கற்றுகொள்ளவேண்டும் என முடிவாயிற்று


சுத்தம் செய்யபட்ட ஆக்டோபஸ் ஆட்டுகுடல் போலவே வந்துவிடுகின்றது, குடல் வறுவல் சமைப்பது போல சமைத்தால் அப்படியே ஆட்டுகுடல் கொடுக்கும் சுவையினை கொடுக்கின்றது


ஆக்டோபஸில் ஆட்டுகுடல் ருசியினை ஒளித்து வைத்திருக்கும் எம்பெருமான், இன்னும் என்னென்ன கடல்வாழ் உயிரில் என்னென்ன ஒளித்து வைத்திருக்கின்றானோ?


ஒவ்வொன்றாக ஆராய்ச்சி செய்யவேண்டும்.

Saturday, September 24, 2016

உலகின் முதல் அரசியல்வாதி அவனே...

முதலில் மனிதன் அறிவுபெறுவதே கடவுளுக்கு பிடிக்கவில்லை, பாம்பின் உதவியால் அவன் அறிவு பெற்றதும் கடவுள் அவனை ஓட ஓட விரட்டினார்.


பின் மனிதன் ஒரே மொழி பேசி ஒரே இனமாக இருந்தது கடவுளுக்கு பிடிக்கவில்லை, மொழிகுழப்பம் கொடுத்தார்


மொழிப்பிரச்சினை உண்டாயிற்று




ஒரே ஒருவனை மட்டும் அழைத்து உன் சந்ததி என் இனம் என சொல்ல ஆரம்பித்ததில் இனப்பிரச்சினை உண்டாயிற்று.


அதுவும் இது உன்நாடு, நீங்கள் எனமக்கள் மற்றவர்கள் எல்லோரும் நாசமாய் போகட்டும் என்பதில்தான் வரலாற்றின் முதல் இனவெறி தொடங்கிற்று


இந்த சம்பவங்களை எல்லாம் பைபிளும் குரானும் அழுத்தமாக சொல்கின்றன.


பாலஸ்தீன தீரா அழுகைக்கும், நொடிக்குநொடி வெடிக்கும் அரேபிய வெடிகுண்டுகளுக்கும் இதுதான் முதல் மூலப்பிரச்சினை.


நால்வகை சாதிபிரிவினை நானே உருவாக்கினேன் என இந்துக்களின் கடவுள் சொல்கிறது


இந்தியாவின் ஏழ்மைக்கும், கண்ணீருக்கும் இதுதான் அடிப்படை பிரச்சினை.


ஆக இந்த மொழி,இனம்,சாதி எல்லாமே கடவுள் ஆரம்பித்து வைத்த பிரச்சினைகளே, மனிதன் எப்படி முடித்துவைக்க முடியும்?


இவ்வுலகில் மனிதன் பிரிந்துகிடந்து அடித்து சாகட்டும் என அவரே தொடங்கிவைத்தபின் புத்தனும்,மார்க்ஸும், பெரியாரும் என்ன செய்துவிட முடியும்?


எங்கெங்கோ சுற்றி இப்போது கோயமுத்தூரும் நிம்மதி இழக்கும் நேரம்.


கடவுள்களுக்கு மனுக்குலத்தின் மீது அப்படி என்ன பயம் அல்லது வெறுப்பு??


பதில் கேட்டாலும் கிடைக்காது,


ஆனால் இப்பூமியில் மனுக்குலம் ஒற்றுமையாக வாழ கடவுளுக்கு பிடிக்கவில்லை என்பது மட்டும் தெரிகின்றது.


உலகின் முதல் அரசியல்வாதி அவனே, நிச்சயம் அவனே.


ஆனால் அதில் அவனுக்கென்ன லாபம் என்பதுதான் புரியவே இல்லை.










சொர்க்கம் என்பது மீன் குழம்பு ஊற்றி பிசைந்த சம்பா அரிசி சோற்றில் இருக்கின்றது.





Friday, September 23, 2016

ஹலோ துபாயா...நான் மார்க்வா தம்பி ஸ்டீவ் பேசுறேன் ...

கொஞ்ச நேரத்திற்கு முன்பு துபாய் போன் வந்தது, பேசிகொண்டே இருந்தவர் திடீரென மிரட்ட தொடங்கினார்


முதலில் ஒன்றுமே புரியவில்லை, ஆனால் சொன்னதையே சொல்லிகொண்டிருந்தார்


"நீ பிரபலமாகணுமா..சொல்லு பிரபலம் ஆகணுமா...அதுக்கு என் வாழ்க்கையினை ஏன் கெடுக்கின்றாய்..." என கடும் சத்தம்




என் வாழ்வினை ஏன் கெடுத்தாய் என என் காதில் கேட்கும் ஒரே குரல் என் பாகம்பிரியாளோடது, அவளோ அருகிலே இருக்கின்றாள். துபாய் எல்லாம் செல்லவில்லை


அதையும் மீறி அப்படி நம்மிடம் சொல்ல உரிமை உள்ளவர் அங்கிள் சைமன், அல்லது சில உளவு அமைப்பு அதிகாரிகள் அதுவுமில்லாது வேறு யார் என்றால் ஒருவருமில்லை


ஆண் குரல் என்பதால் அது ஜெயப்பிரதா இல்லை, துபாய் என்பதால் தமிழக காங்கிரசும் இல்லை, கழக‌ இம்சைகளும் இல்லை, அம்மா கட்சியினர் கடும் சோகத்தில் இருக்கின்றனர், மதிமுக சத்தமே இல்லை பின்னர் யார்?


ஒருவேளை சில்க் சுமிதாவின் தாடிகார காதலனோ என்றாலும் துபாய் ஏன்?


பிரபலம்..துபாய்..வெள்ளிகிழமை..போதை தள்ளாடிய குரல்..அவரே தான். அந்த நபரே தான்


வெள்ளிகிழமை துபாய் லாலா.


அவர் குடிக்கும் ஒரு கிளாசை அவரின் இன்னொரு அடிமைக்கு கொடுத்திருகின்றார் அது கத்திற்று, ஆள் வைத்து அடிப்பதை கேள்விபட்டிருக்கலாம், ஆனால் ஆள் வைத்து பேசி அறுத்த சம்பவத்தை முதன் முதலாக இன்றுதான் கேட்க முடிந்தது


டேய் துபாய் அடிமை, உன் அம்மாவிற்கு காய்ச்சல் என்றால் நீ ஏன்
துபாயிலிருது மலேசியாவிற்கு போன் செய்து உளறிகொண்டிருக்கின்றாய்


துபாய் நண்பர்கள் அப்படி அங்கு எவனாவது அழுதுகொண்டோ, மண்ணெண்ணெய் கேனுடனோ அலைந்தால் பிடித்து காப்பாற்றுங்கள்


உலகெல்லாம் சொல்லி கதறிகொண்டிருக்கின்றான் ஒரு அடிமை லாலா


அடேய் ஏண்டா இப்படி..


பிரபலம ஆகும் ஆசை என நான் உன்னிடம் சொன்னேனா? ..அல்லது நீ உலகெங்கும் சொல்லிகொண்டே இருக்கின்றாயா?


வெள்ளிகிழமை லாலா தொந்தரவு எனக்கும் தொடங்கிவிட்டது....


மண்டைய மறைத்தாலும் கொண்டைய மறைக்காத மண்டையா..இப்படி பகிரங்கமாக துபாயிலிருந்து பேசியா மாட்டிகொள்வாய்


ஒரு மொட்டை போன் செய்யவாவது பக்கத்து நாட்டிற்கு செல்ல கூடாதா?


என்னமோ போடா.. நீனும் பிரபலம் ஆவேன் ஆவேன் என சொல்லி கல்பனா அக்கா ரேஞ்சிக்கு சென்றுகொண்டே இருக்கின்றாய்


பிரபலமாகும் ஆசையில் லாலா இனி திடீரென ஆடையின்றி துபாய் சாலையில் ஓடினாலும் ஆச்சரியமில்லை.


இப்படியும் சில பிரபலமாகும் ஆசை வெறியர்கள்.


எனக்கு இது இண்டர்நேஷனல் கால், பர்ஸ் தாங்காது. துபாய் நண்பர்களுக்கு போரடித்தால் இந்த நம்பருக்கு அழையுங்கள்


971-503253-743


"ஹலோ துபாயா...நான் மார்க்வா தம்பி ஸ்டீவ் பேசுறேன் ....." :)