Monday, September 26, 2016

தமிழக உள்ளாட்சி தேர்தல்....




உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு


கிராமங்களில் புகைந்துகொண்டிருக்கும் சாதி, சில வறட்டு கவுரவ பிரச்சினைகள், இன்னபிற விரோதங்கள் எல்லாம் வெளிப்படையாக வெடிக்கும் நேரத்திற்கான தேதி அறிவிக்கபட்டுவிட்டது


பஞ்சாயத்து தேர்தல்கள் தமிழகத்தில் அந்த நிலையினைத்தான் உருவாக்குகின்றன, சில இடங்களில் சொந்த குடும்பத்திற்குள்ளே கூட வெட்டிகொண்டு மாளுவார்கள்.





சில இடங்களில் அது ஜமீனின் வாரிசு போலவே தொடர்ந்துகொண்டு வர கடும்பாடு படுவார்கள்.

மொத்தத்தில் கிராமங்களில் கோஷ்டி சண்டை தொடங்க இருக்கும் நேரம், தீராத வன்மங்களின் தொடக்கமாகவும் இருக்கும், தொடர்ச்சியாகவும் இருக்கும்.

ஆனால் முடிவாக மட்டும் இருக்கவே செய்யாது.

மொத்தத்தில் இந்திய அளவில் சம்பாதிக்க ஒரு தேர்தல், மாநில அளவில் சுருட்ட ஒரு தேர்தல், மாவட்ட அளவுகளில் சுருட்ட ஒரு உள்ளாட்சி தேர்தல்

வாழ்க தேர்தல்கள், வளரட்டும் பதவிகள், பெருகட்டும் ஊழல்கள்

இந்த உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் ஒரு கொடுமை நிகழும், அங்கிள் சமைன் கோஷ்டி நிச்சயம் வார்டு கவுன்சிலர் பதவியிலாவது ஒன்றில் வெல்லும், காரணம் உள்ளாட்சி தேர்தல் கட்சி அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ அல்ல

மாறாக அதன் அடிப்படையே வித்தியாசமானது. சாதி மதம் இன்னபிற காரணங்கள்தான் வெற்றி தோல்வியினை நிர்ணயிப்வை. ஜெயித்தபின்பு கட்சி அடையாளம் பூசிகொள்வது வேறு.

அப்படி ஓரிரு கவுன்சிலர் இடங்களில் வென்றுவிட்டு தமிழகத்தை மீட்க தொடங்கிவிட்டோம் என கத்துவார்கள் பாருங்கள், அதனையும் நாம் சகித்துத்தான் ஆகவேண்டும்.






No comments:

Post a Comment