திருந்தமாட்டீர்களா...
மந்திரவாதி சர்வசக்தி பெற்றவன் என்றால் டிரம்ப் அமெரிக்க அதிபர் ஆக முடியும். டிரம்ப் என்ன அந்த மந்திரவாதியே அதிபர் ஆகலாம்
இவைகள் எல்லாம் உண்மை என்றால் புடீனை என்றோ சாய்த்திருக்கமாட்டார்களா?, ஹிட்லருக்கு வைத்திருக்க முடியாதா? அவளவு ஏன் ஜப்பானும், தென்கொரியாவும் வடகொரிய தலைவனுக்கு சூனியம் வைக்கமுடியாதா?
அவ்வளவு ஏன்? ராஜபக்சேக்கு சூனியம் வைத்து கொன்றிருகமாட்டார்களா?
இந்த சிகிச்சை எல்லாம் பலனழிக்கும் என்றால் அப்பல்லோ எதற்கு? அமெரிக்கா எதற்கு?
சரி அப்படி சூனியம்,செய்வினை இம்சை எல்லாம் தமிழகத்தில் இருப்பதாக கருதினால் ஒரே ஒரு சூனியம்தான் இருக்கமுடியும்..
அது இருவர் படத்தில் மணிரத்னம் சொன்ன வரிகள்
"ஒரு மொழியால மக்களை மயக்கி கட்டிபோடும் சக்தி உங்கட்ட இருக்கு, என் வாள்வீச்சும் உங்க தமிழும் கலந்தா ஜனங்க ஈசியா ஏமாந்திருவாங்க
என்னையும் ஒரு கதாநாயகனாக ஏற்றுகொள்வாங்க.."
இந்த சூனியம்தான் விவகாரமாகி அம்மாதிரி கதாநாயகன் பட்டத்திற்கு ஏங்கியவன் முதல்வராகி, வசனம் எழுதியவர் எதிர்க்டசியாகி, கதாநாயகி முதல்வராகி என ஏக
கொடுமைகள்
ஆக இந்த சூனியத்தை போக்க முதல் சிகிச்சை சொந்தமாக சிந்திப்பது, இந்த கண்கட்டினை நீக்குவது.
அது ஒன்றே தான் பலனழிக்கும்
இந்த கேரள நம்பூதிரிகள் அவ்வளவு சக்திவாய்ந்தவர்கள், அவர்கள் மாந்ரீகம் பெரியது என நினைப்பவர்கள் ஒன்றை நினைக்கலாம்
அந்த கேரளமே வெள்ளையனிடம் அடிமையாகவில்லையா? கொஞ்சமாவது அவன் அஞ்சினானா? அந்த சக்திகள் அவனை என்ன செய்தன?
வாஸ்கோடமாகா வந்தபொழுதே அவை விரட்டியதா?
அல்லது கிளைவ் கைபற்றும்போதுதான் அவனை விரட்டியதா?
ஒன்றுமில்லை, 300 ஆண்டுகாலம் அவர்கள் ஆள அது அனுமதித்தகொண்டேதான் இருந்தது.
எந்த மலையாள மந்திரவாதியாவது வெள்ளை அதிகாரிகளை மிரட்டி கப்பம் வாங்கிய கதை உண்டா? அல்லது இந்த மந்திரத்தால் வெள்ளையன் கால் கை வீங்கி செத்தானா?
ஆக கடவுள் நினைத்தபடியே இயங்கும் உலகிது, அவ்வளவே
மற்றபடி இவைகள்தான் சக்திமிக்கவை என்றால், உலக அதிபர்கள் எல்லாம் மந்திரவாதிகளாகவே இருப்பார்கள்.
ஆப்ரிக்க மந்திரவாதிகள் இவர்களை விட சக்திமிக்கவர்கள் என்பார்கள், ஆனால் அந்நாடுகள் எப்படி இருக்கின்றன என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
No comments:
Post a Comment