Sunday, September 18, 2016

பிரபாகரன் கலைஞருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் வைகோ



28 வருடம் கழித்து பிரபாகரன் கலைஞருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் வைகோ. பிரபாகரன் அடையாளம் காட்டிய ஒரே தலைவன் நான் என பேட்டியளித்தார்


அதாகபட்டது அன்று மொத்த ஈழகாணிக்கையும் அன்னாருக்கு வந்தது, பழநெடுமாறனுக்கு கொஞ்சம் பங்கு அவ்வளவுதான் போட்டி யாருமே இல்லை, அதுவும் ராஜிவ் கொலைக்கு பின் கலைஞர் ஒதுங்கி கொள்ள தனியாக கட்சி நடத்தும் அளவிற்கு வைகோவிற்கு ஏக வருமானம்


அதனால் அந்த கடிதங்களை எல்லாம் வெளியில் சொல்ல அவசியமில்லா காலம்.


இன்றோ சீமான் எதிர்கடை விரித்தாயிற்று, ஒரு படத்தினை வைத்து ஒரே ஒருமுறை பிரபாகரனை கண்ட காட்சியினை வைத்து அவர் காட்டும் பிரமாண்ட படத்தில் வசூல் குவிகின்றது


தானும் பிரபாகரனால் அடையாளம் காட்டபட்டவர் என சொல்லவேண்டிய நிலைக்கு வந்துவிட்டார் வைகோ


இந்திய ராணுவம் யுத்தம் புரிந்த சமயத்தில் இந்த தேசத்து எம்பி விசா இன்றி கள்ளதனமாக அந்நிய நாட்டிற்கு சென்றிருக்கின்றார், தீவிரவாதிகளை சந்தித்திருக்கின்றார்.


இதோ அவன் என்னை பாராட்டிய கடிதம் என ஒன்றை அந்நாளைய முதல்வரிடம் காட்டி இருக்கின்றார், முதல்வரும் நடவடிக்கை எடுக்கவில்லை.


அதன் தொடர்ச்சி ராஜிவ் கொலையில் முடிந்தது.


என்ன கொடுமையான விஷயம் இது.


காஷ்மீர் தலைவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதி மசூத்துடன் போட்டோ எடுத்தால் தலைவிரித்துபோட்டு இத்தேசம் ஆடுகின்றது


ஆனால் இங்கு ஒருவர் பகிரங்கமாக பாராட்டு பத்திரம் வாங்கினேன் என ஒப்புதல் வாக்குமூலம் சொல்லிகொண்டிருக்கின்றார். தேசம் அமைதிகாக்கின்றது


என்ன தேசமோ? என்ன பாதுகாப்பு நடவடிக்கையோ ஒன்றும் புரியவில்லை


ஆனால் ஒன்று புரிகின்றது


இத்தேசத்தின் குதர்க்கவாதிகள் எல்லாம் அமெரிக்க விருதும், அமெரிக்க அதிபரின் அருகாமையும் பெற்றுவிட்டால் கை வைப்பது
சிக்கல்


அண்ணா, வைகோ, சுப்பிரமணியன் சாமி எல்லாம் இவ்வகை


அமெரிக்கா அறவே பாராட்டாத இந்திரா, ராஜிவ் எல்லாம் இன்னொரு வகை.


இரண்டாம் வகையினர் நீண்ட நாள் உயிரோடு இருப்பதில்லை


முதலாம் வகையினருக்கு இந்த தேசத்தில் அப்படி ஒரு ரகசிய பாதுகாப்பு பின் என்ன?


அதனால் பிரபாகரன் கொடுத்த குப்பி, அவர் கொடுத்த கடிதம் என கிளம்பிவிட்டார், இன்னும் காட்சிகள் மாறவில்லை என்றால் என்ன செய்வார்?


30 வருடமாக பேச பிரபாகரன் கொடுத்த செட்டிலைட் போன், பாதுகாப்பிற்கு கொடுத்த ஏகே 47, சமயம் ஏற்பட்டால் தற்கொலையாளியாக மாற மனிதவெடிகுண்டு அங்கி என ஒவ்வொன்றாக எடுத்துவிடுவாரோ


விட்டாலும் விடுவார் மனிதரின் நிலை அப்படி.


சரி இனி சீமான் எப்படி பதிலடி கொடுப்பார்?


எங்கள் அண்ணண் என்னிடம் ஒப்படைத்த‌ 20000 பேர் கொண்ட சிறப்பு படை ரகசிய இடத்தில் என் உத்தரவிற்காக காத்திருக்கின்றது என கிளம்புவாரோ?


இவர்கள் இப்படி ஒவ்வொன்றாக சொல்லிமோதிகொள்ள ஈழதமிழர்கள் என்ன சொல்வார்கள்", அதே வடிவேல் வசனம்தான்


"சரி சரி சண்டை போடாம இரண்டு பிச்சக்காரங்களும் ஒரே பக்கமா வாங்கப்பா...."






No comments:

Post a Comment