அங்கிள் சைமன் தமிழர் வழியில்தான் வாழ்வாராம், உணவு கூட தமிழர் மாதிரிதான் உண்பாராம்
அதாவது மண்பானை சமையலாம், வாழை இலையில்தான் சாப்பிடுவாராம்
படத்தினை கவனியுங்கள், இலையில் இருப்பது கர்நாடக பொன்னி அரிசி, மண்பானையில் இருப்பது சில்வர் கரண்டிகள். உணவுபாத்திரம் இருப்பது இறக்குமதி செய்யபட்ட வெளிநாட்டு கண்ணாடி மேஜை .
கையில் வாட்ச் ஏன்? உச்சி சூரியனை பார்த்து மணி சொல்லமுடியாவிட்டால் என்ன தமிழர் இவர்? இன்னும் மணியா? நாழிகை இல்லையா?
ஓலை குடிசையில், சாணிமொழுகிய தரையில், ஓலைபாயில் அமர்ந்து, விறகடுப்பில் சமைத்த பொருளை அன்னாருக்கு படைத்து கொட்டாங்குச்சியில் நீர் ஊற்றி கொடுத்து
அந்த அம்மையார் முதல்மரியாதை ராதா போல உடை உடுத்தி "நல்லா சாப்டுய்யா..." என சொல்லிகொண்டே மயில் இறகிலோ அல்லது ஓலை விசிரியாலோ வீச, இவர் உண்டால் அது தமிழர் பணபாடு, ஒரு அர்த்தம் இருக்கலாம்
வெளிச்சத்திற்கு மின் விளக்கிற்கு பதிலாக தீவெட்டி ஒன்று வைத்திருந்தால் இன்னும் அழுத்தமான தமிழர் பண்பாடாக இருந்திருக்கும்.
ஆக ஒரு மண்சட்டியிலும், வாழை இலையிலும் தமிழர் பண்பாட்டினை மீட்டுவிட்டாராம் இவர்,
இதனை செய்தி என வெளியிட சில ஊடகங்கள்
சீமான் மண்பானை சோறா இப்பொழுது முக்கியம்? அவ்வளவு நல்ல பத்திரிகையாளர்கள் என்றால் அப்பல்லோவில் அந்த வார்டில் என்ன உணவு கொடுக்கின்றார்கள் என பார்த்து எழுதலாம் அல்லவா?
இதனை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது
கொசுறு செய்திகள்
தமிழ்நாட்டு ஆளுநர் என்ன செய்துகொண்டிருக்கின்றார்?
இப்போது தமிழக ஆட்சிபற்றி அவரது கருத்து அல்லது நிலைப்பாடு என்ன?
இன்று வெள்ளிகிழமை
முன்பெல்லாம் வெள்ளி என்றாலே அடுத்த விடுமுறைகளை எண்ணி சந்தோஷமாக இருக்கும், ஆனால் சமீபகாலமாக வெள்ளி என்றாலே காலையிலே அந்த இம்சை நினைவுக்கு வருகின்றது
துபாய் லாலா இன்று என்ன செய்யபோகிறானோ? எவனை ஏவிவிட்டு என்ன பேசபோகின்றானோ
பார்க்கலாம் ஆனால் லாலா சாமி மாலை 3 மணிவாக்கில்தான் மலையேறுவார், என்ன "அருள் வாக்கு" அருள்கிறார் என அப்பொழுது தெரியும்
என்ன துபாய் கார்ப்பரேஷனோ, .. பிடிக்கும் வண்டிகூடவா இல்லாமல் கஷ்படுகின்றது?
No comments:
Post a Comment