ஐந்தாவது முறையாக அணுகுண்டு பரிசோதனை செய்து வடகொரியா
அது ஐந்தாயிரம் முறை பரிசோதனை செய்தாலும் யாரும் கவலைபடபோவதாக தெரியவில்லை , பரிசோதனை செய்து என்ன செய்துவிடுவார்கள்? யார் மீதும் வீசமுடியாது,
வீசினால் தொலைந்துவிடுவோம் என்பது அவர்களுக்கே தெரியும்
அதனால் வீதிக்கு வந்து கம்பு சுற்றிவிட்டு வீட்டுக்குள் முடங்க வேண்டியதுதான், உலகம் ஓ அவர்களா என சொல்லிவிட்டு அதன் வேலையினை பார்த்துகொண்டே இருக்கின்றது
அண்ணா பிறந்தநாளையொட்டி பெரும் எண்ணிக்கை கைதிகளை விடுவிக்க முடிவு
அனைத்து தமிழ் குற்றவாளிகளும், சம்பாதித்து வாழ்வாங்கு வாழ்வதற்காக அண்ணா பிறந்திருக்கின்றார் என நினைத்துகொள்ள வேண்டியதுதான்,
அவர் பெயரை சொல்லி சம்பாதித்தவர்கள் ஒரு கூட்டம், விடுதலை பெற்றவர்கள் ஒரு கூட்டம், இப்படிபட்ட அதிசய அற்புத விடுதலைகளை எந்த தெய்வமாவது கொடுக்குமா?
அதனால்தான் கடவுள் இல்லை என அவர்களால் சொல்ல முடிந்திருக்கின்றது,
கடவுள் விடுவிக்க முடியாத கைதி, அண்ணா பிறந்தநாளில் வெளிவருவான் என்றால், கடவுளை நம்புவதை விட தமிழகத்தில் அண்ணாவினை நம்பலாம் அல்லவா?,
பின் "கடவுளை நம்புகிறவன்" முட்டாள் தான்.
இனி வெளிவரும் கைதி எல்லாம் சொல்வான் , "அண்ணா நாமம் வாழ்க",
எல்லாம் ராசமச்சந்திரன் படங்களில் வரும் அதே வசனம்தான்
இதுதான் "அண்ணாயிசம்", அண்ணா மேஜிக்
No comments:
Post a Comment