Monday, September 5, 2016

யார் இந்த தேவதை.. யார் இந்த தேவதை...???

இப்பொழுதெல்லாம் சிலபேர் முகநூலில் யார் அந்த ஜெயப்பிரதா? என கேட்க தொடங்கிவிட்டார்கள், அவரை அறியாத தமிழ் சினிமா ரசிகர்களை வன்மையாக கண்டிக்கின்றோம். இது இந்திய சினிமா துறைக்கே நேர்ந்த அவமானம்.


அவர் ஆணையிட்டால் தமிழகத்தில் பூகம்பம் வெடிக்கும் என சொல்லிகொள்கின்றோம் , நாங்கள் திரண்டால் தமிழகம் தாங்காது.


அவருக்கு இருக்கும் ரசிக கண்மணிகள் அப்படிபட்டவர்கள்.




அவருக்கு நெஞ்சத்தில் கோயில் மட்டுமல்ல அதில் கொடிமரம் தேர் என சகலமும் வைத்து அனுதினமும் திருவிழா கொண்டாடும் கூட்டமிது. எங்களை ஆத்திரபடுத்தி பார்க்கவேண்டாம்.


சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களை பார்த்துவிட்டு அதன் பின் அவர் யார் என‌ கேளுங்கள்.


பார்த்துவிட்டால் எப்படி கேட்பீர்கள்? மீண்டு வர முடியாத முகம் அது, அதன் பின் நீங்களே சங்கத்தில் இணைந்து கொள்வீர்கள்.



No comments:

Post a Comment