Wednesday, September 7, 2016

மலேசியாவின் இலங்கை தூதரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் – ரணில் தகவல்

மலேசியாவின் இலங்கை தூதரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் – ரணில் தகவல்


அன்றே அங்கிள் சைமன் சொல்லி தொலைத்திருக்கின்றார், "உலகில் ராஜபக்சே எந்த மூலைக்கு சென்றாலும் விட மாட்டோம், லட்சகணக்கான தமிழ் பிள்ளைகள் என் பின்னால் உலகெங்கும் இருக்கின்றார்கள்.


தமிழனை அடித்தவனை நான் திருப்பி அடிப்பேன்"




ஆக ரணிலின் கருத்தும், முன்பே அங்கிள் சைமன் சொன்ன ஒப்புதல் வாக்குமூலமும் மிக சரியாக பொருந்துகின்றன.


சரி வழக்கமாக சீறும் அங்கிள், தொண்டை கிழிய கத்தும் சைமன். இப்பொழுது "ஆம் பிரபாகரனின் தமிழ்பிள்ளைகள் சீறினார்கள், நாங்கள் வீர தமிழினம் தாக்கினோம்" என ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் அல்லவா?


சிங்கப்பூர் அடித்துவிரட்டிய பொழுதும் சத்தமில்லை, இப்பொழுது ரணிலின் கருத்துக்கும் சத்தமில்லை


இவர்தான் இந்தியாவினை எதிர்த்து உடைத்து, இலங்கையினை கதறடித்து அகண்ட தமிழகம் அமைப்பாராம்


மிஸ்டர் பாண்டே, ஒரு பேட்டிக்கு அழைத்து இதனை எல்லாம் சீமானிடம் கேட்க கூடாதா?


இனி எங்கு எந்த சிங்களன் உலகில் தாக்கபட்டாலும் , கொல்லபட்டாலும் பழி அன்னார் மீதே திரும்பும், காரணம் அவரின் சீற்றமிக்க , மிரட்டல் மிக்க வீடியோக்கள் உலகமெங்கும் கிடக்கின்றன.


மொத்தத்தில் புரட்சி செய்கிறேன், முழங்குகிறேன் எனும் பெயரில் தற்கொலை அழைப்பு விடுத்திருக்கின்றார் அங்கிள்.


பாம்பிற்கு இருக்குமிடம் சொல்லும் நுணலினை போல‌


இனி அங்கிள் சைமனின் சிந்தனை எப்படி இருக்கும், எப்படியாவது சிங்களன் வேறு எங்கும் அடிவாங்கமால் அவனை அவசரமாக காப்பாற்றி ஆக வேண்டும், காப்பாற்றியே தீரவேண்டும்


ஆக அங்கிள் சிங்களனை காப்பாற்ற தயாராகும் நேரம் இது.



No comments:

Post a Comment