"ஏய் மனமே...ஜெயப்பிரதாவின் இடத்தினை ரித்திகா சிங் பிடித்துவிடாமல் இருக்கும்படி பார்த்துகொள்வாயாக
ஏற்கனவே வருஷம் 16, சின்னதம்பி போன்ற படங்களின் பின் குஷ்பூ அந்த இடத்தினை பிடிக்க மல்லுகட்டியதும், அது இன்றளவும் இன்னொரு சவாலாக இருப்பதும் இன்னொரு பக்கம்.
அது அப்படியே இருக்கட்டும், வருஷம் 16 குஷ்பூ அவ்வளவு எளிதில் மறக்க கூடிய முகம் அல்ல.
ஆனால் ரித்திகா சிங் 90களின் குஷ்பூ போல இல்லாவிட்டாலும், கொஞ்சம் சவால் போலவே தெரிகின்றது,
இறுதிசுற்றினையே அவருக்கு பயந்து ஒரு சுற்றுக்கு மேல் பார்க்க முடியவில்லை, பலமுறை மனதில் சுற்றிகொண்டே இருந்தார்.
ஆக இனி ஜெயபிரதா நினைவுகளை அல்லது வருஷம் 16 குஷ்பூவினை காப்பாற்ற ரித்திகா சிங் படங்களை பார்பதில்லை என முடிவாயிற்று.
மீறி பார்த்து தொலைத்துவிட்டால் சிம்மாசனம் போட்டு மனதில் அமர்ந்திருக்கும் ஜெயப்பிரதா கிளம்பிவிடும் ஆபத்து உண்டு அல்லது வருஷம் 16 குஷ்பூவின் அந்த பேதை முகமும் கலைந்துவிடும் அபாயம் உண்டு
மனமே விடவே கூடாது., "
No comments:
Post a Comment