Saturday, September 17, 2016

எங்கள் பிரச்சினையினை நாங்கள் பார்த்துகொள்வோம்

அடேய் இலங்கையிலிருந்து தனிதமிழ்நாடு, காவேரி , இனமானம், தமிழன் மானம், வீரம், தற்கொடை, துரோகி இன்னபிற அழிச்சாட்டியம் எல்லாம் சொல்லி என்னையும் மிரட்டிகொண்டிருப்பவனே


அன்றொரு காலத்தில் எமது பெருமைக்குரிய ராணுவம் இலங்கையில் இருந்தபொழுது உன் மேதகு சொன்னான்


"நாங்களும் சிங்களரும் அண்ணன் தம்பிகள், இது சகோதர சண்டை, இந்திய நாய்களுக்கு இங்கு என்ன வேலை?"




அதையே உனக்கும் சொல்கிறேன்


கன்னடனுக்கும் எங்களுக்கும் நடப்பது பங்காளி தகறாறு, நாங்கள் பார்த்துகொள்கின்றோம்


நீ அங்கே இருந்து விக்னேஸ்வரன், டக்ளஸ், ராஜபக்சே, மைத்ரிபாலா என பேசிகொண்டிரு போதும்


கன்னட‌ மக்கள் இனவெறியர்கள் என்றால் என்றோ வாட்டாள் நாகராஜ் முதல்வராகி இருப்பான், அப்படி ஆகவில்லை காரணம் அவர்கள் எல்லோரும் இனவாதிகள் அல்ல‌


தமிழக மக்கள் எப்படிபட்டவர்கள் என்பதை சீமானின் தேர்தல் டெப்பாசிட்டே காட்டி கொடுத்தது.


இது இந்தியா, ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் தாண்டி எழும்பி நிற்கும் இந்தியா


இந்த சீமான், வாட்டாள் நாகராஜினை கொண்டு சீன் போடும் வேலை எல்லாம் இங்கு வேண்டாம்


எங்கள் பிரச்சினையினை நாங்கள் பார்த்துகொள்வோம்



No comments:

Post a Comment