Wednesday, September 21, 2016

இங்கும்.. அங்கும்...







மர்ம மரணம் அடைந்த இராம்குமார் உடலை சீமான் நேரில் பார்வையிடுகிறார்

அங்கிள் அமெரிக்காவில் உடல்கூறியலில் பல டாக்டர் பட்டம் வாங்கிய மாமேதை, பார்வையாலே பிரேத பரிசோதனை செய்து காரணத்தை சொல்லிவிடுவார் என அண்ணனின் விழுதுகள் நம்பிகொண்டிருக்கின்றன‌

அவருக்கு தெரிந்ததே தற்கொலை சயனைடு சாவுகளும், குண்டுகட்டி செத்த சாவுகளும். அதில் இதுவும் இனத்துக்கான தற்கொடை என ஏதும் சொல்லி தொலைக்காமல் இருக்கும் வரை நல்லது.


இவர் பார்த்து என்ன கிழிக்கபோகின்றாராம்? எல்லாம் உள்ளாட்சி தேர்தல் படுத்தும்பாடு

அங்கிள் அரசியல் ஜாதகம் பிண அரசியல் என எம்பெருமான் எழுதி வைத்திருக்கலாம்





பெங்களூர் கலவரத்திற்கு காரணம் கன்னட பிரகாஷ், விசாரணையில் தகவல்

கன்னட பிரகாஷ் எனும் பெயரினை கேட்டதும் கன்னட பிரசாத்தின் நினைவு வந்து தொலைக்கின்றது, இந்த ஊடகங்கள் அன்று செய்திருக்கும் அழிச்சாட்டியம் அப்படி.

கன்னட பிரசாத், குண்டு நடிகை, கண் நடிகை, ஒல்லி நடிகை அந்த நடிகை என இவர்கள் ஆடிய ஆட்டம் அப்படி, அதுவும் கன்னடபிரசாத்தின் காதலி குசும் என்பவருக்கு கொடுக்கபட்ட பில்டப் அடேயப்பா..அப்படி ஒரு ஊடக அட்டகாசம்.


ஒலிம்பிக் மெடல் வென்றவளுக்கு கூட அவ்வளவு பிரபலத்தை நமது ஊடகம் வழங்கி இருக்காது.

கன்னட பிரகாஷ் எனும் பெயரினை ஏதும் தமிழ் ஊடகம் கன்னட பிரசாத் என மட்டும் தவறாக பிரசுரித்துவிட்டால் அவ்வளவுதான்,

கோடம்பாக்க சினிமா ஏரி உடைந்து அவ்வளவு செய்தி வெள்ளம் வரும்





திருமுருகன் காந்தி எனும் தேசதுரோகி பிடித்திருக்கும் பேனரை பாருங்கள், அடுத்த நாட்டு தீவிரவாதி மண்ணாம் இது

Image may contain: 2 people , beard

இதில் இருந்து ஆர்எஸ்எஸ் வெளியேறவேண்டுமாம்.

ஆர்எஸ்எஸ் எப்படிபட்ட இயக்கமாகவும் இருந்து தொலையட்டும், ஆனால் இது புலிகளின் மண் என சொல்ல இவனுக்கு உரிமை கொடுத்தது யார்?





இவராக சிந்தித்துவிட்டார் போல,

ஆர்எஸ்எஸ் எப்படி இருந்தாலும் இந்திய தேசியத்தை காக்கும் இயக்கம் என்பதில் மாற்று கருத்தில்லை.

இதில் அன்னிய நாட்டு தீவிரவாதி அதுவும் இந்தியாவினை எதிர்த்த கொலைகார தீவிரவாதி மண் என சொல்ல என்ன உரிமை இருக்கின்றது,

இஸ்லாமிய இந்திய‌ தீவிரவாதி பாகிஸ்தான் தீவிரவாதி படத்தையோ, பின்லேடன் படத்தையோ, ஐ.எஸ் இயக்க படத்தையோ பிடிக்க அனுமதிக்கா அரசு, இந்த அன்னிய நாட்டு தீவிரவாதியின் படத்தை பிடித்து, அதுவும் இது புலிகளின் மண் என சொல்வதை எப்படி அனுமதிக்கின்றது?

இஸ்லாமியனுக்கு ஒரு நியாயம், இவனுக்கொரு நியாயமா?

ஆர்எஸ்எஸ் உறுப்பினராக அல்ல, இந்தியனாக சொல்கிறோம் முதலில் அந்த புலிபடத்தை பிடித்துகொண்டு போ, ஈழம் போ, அங்கே சென்று கத்து.

நாங்கள் சொல்லுகின்றோம்..

This is India .. Get Out LTTE

வந்தே மாதரம்...

(பெரியார் படத்தருகே ஒரு கொடூரனின் படத்தை வைத்ததால் இவன் மனநோயாளியாகவும் இருக்கலாம், ஆனால் அதனை ஒரு மருத்துவர் உறுதிபடுத்தவேண்டும் அல்லவா?)


















குட்டையாக குண்டாக‌ இருப்பதாக கூறி 18 வயதில் மாடலிங் செய்யவிடாமல் தடுத்தனர்: சன்னி லியோன்


பயவுள்ள அந்த கோபத்தில்தான் இந்த சமூகத்தை "கண்ட மேனி"க்கு பின்னாளில் பழிவாங்கி இருக்கின்றது






மறுபடியும் பெண் சர்ச்சையில் சிக்கினார் உசேன் போல்ட் : செய்தி


Image may contain: 1 person , outdoor

வில் பிடித்து அம்பு எறிவது போல ஸ்பெஷல் ஸ்டைல் காட்டும்போதே மனிதர் ஏதோ சிம்பாலிக்காக சொல்ல வந்திருக்கின்றார் என்பது இப்பொழுதுதான் தெரிகின்றது

மன்மதனின் கரும்பு வில்லைத்தான் தன் பிரத்யோக ஸ்டைலாக வைத்திருப்பாரோ?


எப்படியோ மன்மதன் அம்பாக வீசி தள்ளுகின்றார்















No comments:

Post a Comment