Tuesday, September 27, 2016

அரசல் புரசலாக....



நடிகையர் திலகம் சாவித்திரி சர்க்கரை நோய் முற்றி, இன்னும் சில பாதிப்புக்குள்ளாகி கோமாவிலே இறுதிவரை இருந்தாராம்.


சாவித்திரி நடித்த ஒரு பாடலை பார்க்கும்போது தோன்றியது, வேறொன்றுமில்லை











கோவையின் சமீபகால கலவரங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுகின்றது, இந்திய கலவரங்களை தூண்டுவதே அதன் நோக்கம் : பொன்னார்


ஆம் இருக்கலாம், அப்படியானால் ரதயாத்திரை வந்து பாபர்மசூதியினை இடித்து இந்தியாவினை கலவரகாடாக மாற்றியதிலும் பாகிஸ்தானியர் கரங்கள் இருக்கலாம் அல்லவா?





அப்படியானால் என்ன சொல்ல வருகின்றார்?

இந்து இயக்கங்கள் எல்லாம் பாகிஸ்தான் பினாமிகளா?

இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ், சங் பரிவார், பிஜேபி கூட பாகிஸ்தானின் ஏஜெண்ட் இயக்கமா?

அட ராமா................





எம்.ஜி.ஆர். போல் முதல்வர் ஜெயலலிதாவும் நக்சலைட்டுகளை வேரறுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்


இந்திரா போல மோடியும் பாகிஸ்தான் கொட்டத்தை அடக்கவேண்டும் என முதலில் பாராளுமன்றத்தில் பேசுங்கள்


பேசவேண்டிய இடத்தில் தூங்கவேண்டியது, தூங்க வேண்டிய இடத்தில் விழித்திருந்து அறிக்கைவிடுவது இவரின் ஸ்டைல்






இன்னும் நூறு வருடம் அம்மாவினை அசைக்கவே முடியாது, : கராத்தே ஹூசைனி


வந்துட்டார்யா, இனி அப்பல்லோ வாசலில் என்ன காமெடி எல்லாம் நிகழ்த்தபோகின்றாரோ, அம்மா வரும்வரை மார்ச்சுவாரியில் பிணமாக இருப்பேன் என போய் படுத்துகொண்டாலும் ஆச்சரியமிலை, இவர் செய்யகூடியவர்தன்.


ஹூசைனி சார் , அம்மாவை அசைக்க முடியாததா பிரச்சினை?




அம்மாவால் தன் கை கால்களை அசைக்க முடிகின்றதா? என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை.







 

No comments:

Post a Comment