Tuesday, May 31, 2016

சீமானைப பற்றி ஈழப்பெரியவர்

ஒரு ஈழபெரியவர் சொன்னார், "அய்யா உங்கள் தமிழகத்தில் சீமான் என்பவரின் வீடியோ பார்த்தேன், பகிரங்கமாக பொய்சொல்லிகொண்டிருந்தார், அதாவது ஒரு சிங்களன் சடலத்தை ஒரு புலி உதைத்தாகவும், பிரபாகரன் ஓடிவந்து அவனை அடித்து அந்த சிங்களனுக்கு வீரவணக்கம் சொல்ல சொன்னதாகவும் பொய் சொல்லிகொண்டிருந்தார்

அவர்கள் புலிகள் யாரையும் மதித்தவர்கள் இல்லை, நீங்கள் சொன்னது போலவே இந்திய அமைதிபடை வீரர்கள் உடலை அம்மணமாக்கி அவமரியாதை செய்தவர்கள், அதிலும் கிட்டு என்று ஒருவன் இருந்தான், ஒரு கன்னிவெடியில் சிங்களன் கால் இழக்க, அந்த துண்டிக்கபட்ட காலை யாழ்பாணமெங்கும் கோவில்கள் முன் காட்சிக்கு வைத்தான் அவன், மக்களுக்கு அது பெரும் தவறு என தெரிந்து சொன்னாலும் அவன் கேட்கவில்லை


கோவில் வாசலெல்லாம் வைத்து கண்காட்சி நடத்தினான்.

அடுத்த 6ம் நாள் உட்கட்சி பூசலில் அவன் காலை புலிகளே குண்டுவீசி துண்டித்தனர், அப்படி தெய்வத்திற்கே பொறுக்காத அட்டகாச அவமரியாதைகளை செய்தவர்கள் புலிகள், இந்த சீமான் சொல்வதெல்லாம் படுபயங்கர பொய் அய்யா, புலிகளின் பெரும் பலம் பொய்களை அவிழ்த்துவிடுவது, உங்கள் நாட்டில் சீமானும் அதனைத்தான் செய்கிறார்"

யாழ்பாணத்தில் அந்த நூலகம்

 




35 ஆண்டுகளுக்கு முன்பாக இந்நேரம் யாழ்பாணத்தில் அந்த நூலகம் எரிய ஆரம்பித்தது, தரப்படுத்துதல் எனும் இடஒதுக்கீட்டினை எதிர்த்து ஈழமாணவர்கள் போராடிகொண்டிருந்த நேரம் அது,

தனிஈழம் மட்டுமே தீர்வு என சொல்லி அரசியல்வாதிகளும் தூண்டிவிட்ட காலம் அது, தேர்தல் கால பிரச்சார கூட்டத்தில் சில போலிசார் கொல்லபட அது கலவரமாக வெடித்தது.

ஆசியாவின் குறிப்பிடதக்க நூலகமாக விளங்கிய யாழ்பாண நூலகம், யாழ்பாண தமிழர்களின் அறிவின் அடையாளமாக விளங்கியதால், இந்த கல்விக்காக தானே போராடுகின்றீர்கள் என்றுதான் சிங்களன் அதனை கொளுத்தினான், அது அன்று யாழ்பாண தமிழரின் அறிவிற்கு சான்றாக விளங்கியது.


கிட்டதட்ட 1 லட்சம் நூல்களும், அரிய சுவடிகளும் சாம்பலாயின. அவற்றில் பல நூறு நூல்கள் இன்று உலகிலே இல்லை, இனி கிடைக்கவும் கிடைக்காத பொக்கிஷங்கள்.

Stanley Rajan's photo.

Stanley Rajan's photo.

 

ஆயிரகணக்கான மாணவர்கள் அதன் பின் போராட கிளம்பினர், இந்த சம்பவமும் அதன் பின் நடந்த கொழும்பு கலவரமே எல்லா போராளிகுழுக்களிலும் மக்கள் எழுச்சியுடன் இணைய வழிவகுத்தது.

அதன் பின் அவர்களுக்குள் மோதியதும், புலிகள் ஏதேச்சதிகாரமாக தான் மட்டும் போராட்டத்தை கையிலெடுத்ததும் பின் மொத்தமாக போராட்டத்தை அழித்தது இன்னொருபக்கம்.

1995ல் புலிகளை யாழ்பாணத்திலிருந்து விரட்டிய சந்திரிகா , அந்நாளைய தவறுக்கு பிராயசித்தமாக பின் 2001ல் அந்த நூலகத்தை அமைத்தார். 1985 முதல் 1995 வரை அந்த நூலகம் சிதலமடைந்து புத்தகம் இல்லாமல் புலிகள் கட்டுபாட்டில்தான் இருந்தது,புத்தகம் இல்லா நூலகம், தெய்வம் இல்லா ஆலயம்

புலிகளுக்கு நூலகம் எல்லாம் பிடிக்காது, யாழ்பாண கல்லூரியினையே ஆயுத சாலையாக வைத்திருந்தவர்கள் அவர்கள்.

இயேசு, காந்தி, லிங்கன், மார்ட்டில் லுத்தர் கிங் போன்றோரின் படுகொலை வரிசையில் வரலாறு கண்ட பெரும் கொடுமைதான் இந்நூலக எரிப்பு.

உலகில் எந்த நாடும், இம்மாதிரியான சகிக்க முடியாத கொடுமைகளை, இம்மாதிரியான அட்டூழியங்களை கண்டிக்கவில்லை, யாரும் இலங்கையினை சீண்ட கூட இல்லை, இந்தியா மட்டுமே ஈழ மக்களுக்காக‌ களம் இறங்கியது, அவர்கள் வாழ்வில் அமைதி ஏற்பட முடிந்த அளவு போராடி பார்த்தது, தன் 1500 வீரர்களை இழந்தும் பார்த்தது.

ஆனால் விதி இந்தியாவினை வலுகட்டாயமாக புலி வடிவில் வெளியே தள்ளிற்று

அதன் பின் நடந்ததவை எல்லாம் பெரும் அழிவுகள் மட்டுமே, அதில் இறுதியாக நடந்ததுதான் முள்ளிவாய்க்கால்,நிச்சயம் அதன் மூலகாரணம் இந்தியா அல்ல‌






ஒரு நாடும் ஏன் உங்களுக்காக வரவில்லை?





ஏய் இந்திய தமிழர்களே, பார்த்தீர்களா பாகிஸ்தான் உங்களை மிரட்டுகின்றான், எங்கள் தலைவன் பிரபாகரனின் அம்மண சாபம் உங்களை சும்மா விடாது, நாங்கள் போர்சூழலில் பழக்கபட்டவர்கள், நீங்கள் அப்படி அல்ல, யுத்தம் என்றால் சும்மாவா? சாவுங்கள், எல்லோரும் சாவுங்கள் என சாவை தவிர ஒன்றும் தெரியா, பிரபாகரனின் சாவுகுருவிகள் கத்துகின்றன‌

# அட பதரே, 1971ல் பாகிஸ்தானுக்கு பகிரங்க அழைப்பு விடுத்து தென்னிந்தியாவினை தாக்க சொன்னவன் சிங்களன், அதனை தடுக்கும் முகமாகவும், அப்படியே உங்களுக்கு ஒரு பாதுகாப்பு தரவும்தான் எம் தேசம் உள்ளே வந்தது, ஆனால் சகலத்தையும் பகைத்து அழிந்தது நீங்கள்.


# அமைதிபடையோடு நீங்கள் மோதாவிட்டால் இந்த போர்சூழல் உங்களுக்கு ஏது? கிட்டதட்ட 100 வருடம் பின்சென்றுவிட்டு பேச்சு வேறா? ராஸ்கல்ஸ். ரயிலையே 2012ல்தான் கண்டீர்களாம், ஆப்ரிக்காவினை விட பின்னால் சென்றபின்னும் பெருமை வேறு (?), மின்சாரமே பல இடங்களுக்கு இப்பொழுதுதான் வருகின்றதாம், இதில் உங்களுக்கு இவ்வளவு எகத்தாளமா?

# உங்களை காப்போம் என சொல்லிவிட்டு உங்கள் பின்னால் ஒளிந்து உங்களை சாககொடுத்து சரணடைந்து செத்த ஈன் ராணுவம் அல்ல எமது. எல்லையில் நின்று போராடி மக்களை காப்பாற்றுவது.புரிகின்றதா?

# உங்கள் நாட்டின் திரிகோணமலை இன்றும் எமது மறைமுககட்டுபாட்டில் தான் உண்டு, இந்த தெற்காசியாவின் பெரும் வல்லரசு நாங்கள், சீனாவின் பீஜிங் வரை எம்மால் தாக்கமுடியும்.

# அந்த‬ பைத்தியக்கார பாகிஸ்தானுக்கு அவன் அணுகுண்டை தாலிபன் களவெடுப்பானா? அல்லது அல்கைதா கைபற்றுமா என்பதே பெருங்கவலை, 4 முறை அவனை அடித்து விரட்டி எங்களுக்கே போரடித்துவிட்டது, இனி இதில்‬ அவன் சும்மா ஏதாவது சொல்ல உங்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியா?

# 2009ல் நீங்கள் ஏன் அனாதையாக அடிபட்டீர்கள்?, ஒரு நாடும் ஏன் உங்களுக்காக வரவில்லை? இப்படித்தான் உலகில் எல்லா நாடுகளையும் பகைத்தீர்களா?







காங்கிரசை தமிழகத்திலிருந்து அழிப்பேன் - சீமான்




2009ல் அங்கிள் ஒப்பாரி தொடங்கினார், காங்கிரசை தமிழகத்திலிருந்து அழிப்பேன் என்றார்( அது தமிழகத்தில் அழிந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது இவருக்கு தெரியாது), கடும் பிரச்சாரம், தமிழகத்தில் வழக்கம்போல காங்கிரஸ் பல இடங்களில் தோற்றது, இது தன்னால்தான் என சீமான் சொல்லிகொண்டார்.

ஆனால் காங்கிரஸ்தான் மத்தியில் அமர்ந்தது என்பது வேறு விஷயம்.

அதன்பின் 2011 சட்டமன்ற தேர்தலில் மிக கடுமையாக கலைஞரை சாடினார், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார், ஜெயலலிதா முதல்வரார், இது உங்களால்தான் நடந்தது என அடிப்பொடிகள் போதிக்க, அங்கிள் உற்சாகமானார்.


Stanley Rajan's photo.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மிக கடுமையாக காங்கிரசை, கலைஞரை விமர்சித்தார். ஆனால் மோடி பிரதமரானார். தமிழகத்தில் கலைஞரை, காங்கிரஐ விரட்டியது நானே என சொல்லிகொண்டார். அவரின் அடிப்பொடிகளும் நம்பின,

ஆனால் மொத்த இந்தியாவிலும் காங்கிரசை தோற்கடித்தது சீமானா என அவர்கள் யோசிக்கவில்லை, அதற்கெல்லாம் மூளை வேண்டும். சிலர் இன்னும் யோசித்து இலங்கையில் ராஜபக்சேவினை தோற்கடித்ததிலும் அங்கிள் பங்கு இருக்கலாம் என அவரை கொண்டாடினர்.

இந்த இடத்தில் அங்கிளுக்கு யோசனை வந்தது, ஜெயலலிதாவினை முதல்வராக்கியது நான், மோடியினை பிரதமராக்கியதும் நான், மைத்ரிபாலா கூட என்னால்தான் அதிபரனார், இனி நானே நின்றுவெற்றிபெற்றால் என்ன? 2016ல் அங்கிள் களம் கண்டார்.

அதிமுக, திமுக நானே மாற்று என்றார், கம்யூனிஸ்டுகளுக்கு சவால் விட்டார், புலி யாருடனும் கூட்டணி வைக்காது என்றார்? யார் தமிழர்? என உலகிற்கே சொன்னார். மார்க்ஸ்,மாவோ,லெனினுக்கு வராத பொருளாதார சிந்தனைகள் எல்லாம் அங்கிளுக்கு வந்தன, பலர் ஆடுமாடுகளோடு அரசு வேலைக்கு காத்திருந்தனர். சிலர் பனந்தோப்புக்களை கூட வாங்கினார்கள்.

உலகதமிழர்களின் ஒரே நம்பிக்கை நான் என்றார், தமிழ் முதல்வரின் பதவிஏற்பு விழாவிற்காக லண்டனில் மேடை தயாரானது, ஈழம் விடியும் நாள் அறிவிக்கபட்டது, பிரபாகரனால் முடியாததை நான் செய்வேன் என்றார், அங்கிளுக்கு கடும் உற்சாகம்.

தேர்தல் முடிவு வந்தது, ஜெயலலிதா முதல்வர், கலைஞர் வலுவான எதிர்கட்சி என வீற்றிருக்கின்றனர், அங்கிள் கட்சி கணக்கிலே இல்லை.

அதாவது அங்கிளின் காட்டுகத்தலுக்கு எல்லாம் மக்கள் சிரித்திருக்கின்றார்களே ஒழிய, ஒருவரும் இவரை கணக்கில் எடுக்கவே இல்லை. ஆனால் அங்கிளோ ஒவ்வொரு சிரிப்பும் தனது பேச்சின் வெற்றி என நம்பி இருக்கின்றார் அய்யோ பாவம்.

தான் கூவா விட்டால் பொழுது விடியாது என நம்புமாம் சேவல்

அப்படியானால் 2009,2011 ஆட்சிமாற்றத்திற்கு என் பேச்சும், முழக்கமும் காரணமில்லையா? என நம்பமுடியாத சோகத்தோடு அலைகின்றார் அங்கிள். 2021, 2026..என அவர் காலண்டரில் 5 வருடங்களின் வரிசையினை குறித்துகொண்டே இருக்கின்றார்.













முகநூல் அறிவாளிகள்

சில பெரும் அறிவாளிகள் முகநூலெங்கும் பல வேடங்களில் அலைகின்றார்கள், திடீரென வந்து ஆலோசனை சொல்கின்றார்கள் பாருங்கள், அப்படியே தூக்கி வாரி போடும்.

பழிசுமந்தது புலிகள் இயக்கம், அக்கொலை பழியால் அழிந்தது ஈழபோராட்டம்.

ராஜிவ்கொலை வழக்கில் பல சக்திகள் உண்டு, மர்மங்கள் உண்டு என்பது யாருக்கும் தெரியாதது அல்ல, ஆனால் பகிரங்கமாக செய்தது புலிகள் என்பதில் சந்தேகமே இல்லை. விசாரணையும், தமிழகத்தில் தற்கொலை செய்த 24 புலிகளின் மரணமும் அதனைத்தான் சொன்னது


புலிகள் வாய்திறந்து சிலவிஷயங்களை சொல்லி இருந்தால் சில காட்சிகள் மாறி இருக்கும், பேரரிவாளன் நிச்சயம் விடுதலையாகி இருப்பான், பலருக்கு தண்டனையோடு விடுதலை கிடைத்திருக்கும், ஈழபோராட்டம் இப்படி நசுங்கி இருக்காது, சில திருப்பங்கள் நிகழ்ந்திருக்கலாம்.

அதனைத்தான் நாம் குறிப்பிட்டு சொன்னது, ராஜிவ் கொலையில் புலிகளின் கனத்த மவுனமும், பின் துன்பியல் சம்பவம் எனும் பரிகாசமும், அது இந்தியாவிடமிருந்து ஈழமக்களை பிரித்துகொண்டே சென்றதே ஒழிய வேறொன்றும் செய்யவில்லை.

இதில் நமது அறிவாளிகள் என்னிடம் வந்து, உனக்கு தெரிகிறதல்லவா? வா பொதுநல வழக்குபோடு, தூண்டிவிட்ட கொலைகுற்றவாளிகளை விசாரிக்க சொல்லி இந்திய அரசின் கழுத்தை நெறி என்கின்றார்கள்

அறிவு சூரியன்களே, ராஜிவ் கொலை எனும் பழியினை துடைத்து போராட்டத்தை தொடர்ந்திருக்கவேண்டியது நானா? அவர்களா?

கொலைகுற்றவாளி அமைதியாக இருப்பனாம், ஆனால் நான் சென்று நீதிபதியிடம் "இவன் அப்பாவி விட்டுவிடுங்கள், நாம் வேறு வகையில் மூலத்தை கண்டுபிடிக்கலாம்" என சொல்லவேண்டுமாம்.

எம்மீது இதனால்தானே தடை, இதோ உண்மை என சொல்லி இருக்கவேண்டியது நானா? அவர்களா?

இந்தியாவில் நடந்த பத்மநாபா கொலைக்காக எம்மை தண்டிக்காமல் விட்டதற்கு நன்றி என சொல்லவேண்டியது யார்? நானா?

ராஜிவ் கொலை நடந்தபின் 1995ல் சந்திரிகா யாழ்பாணத்தை விட்டு புலிகளை விரட்டி அடித்தபொழுது, இந்தியா துணை சென்று புலிகளை அழிக்கவில்லை அல்லவா? அதற்கு நன்றி சொல்லவேண்டியது நானா? புலிகளா?

வாய் திறந்து பேசவேண்டியவர்கள் மவுனமாக இருந்து, எல்லாவற்றையும் அழித்து செத்தும் போவார்களாம், நான் சென்று இந்திய அரசினை ஏன் ஒழுங்காக விசாரிக்கவில்லை என கேட்கவேண்டுமாம்

என்ன நியாயம் இது? சுய அறிவோடுதான் பேசுகின்றீர்களா?

2 லட்சம் மக்களின் உயிரையும், 10 லட்சம் மக்களுக்கான நாட்டை விடுவிக்கும் பொறுப்பு எனக்கா? அவர்களுக்கா?

ராஜிவ் கொல்லபடும் 10 நாட்களுக்கு முன் அவரை டெல்லியில் சந்தித்து பசப்பு வார்த்தை பேசியவன் கிட்டு, அதன் பின் கொலை நடந்தவுடன் தனக்கு தெரிந்த உளவுதுறை அதிகாரிகளிடம் கொலைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்றான், பிரபாகரன் தொடக்கத்தில் இதனை சொன்னார்

ஆனால் விசாரணை நடந்து அதன் முடிவு புலிகளை கைகாட்ட, கிட்டுவும் பிரபாகரனும் கனத்த மவுனம் ஏன்?

சரி ஒரு வாதத்திற்கு இந்திய அரசிடம் அப்படி ஒரு கோரிக்கை நான் வைத்தாலும், , அப்படியே சென்று இலங்கை அரசிடம் ஆல்பர்ட் துரையப்பா, பிரேமதசா, நீலன் திருச்செல்வம், அமிர்தலிங்கம் ராஜினி, சபாரத்தினம்.............(கை வலிக்கின்றது) என பெரும் கொலைபட்டியலின் காரணம் யார்? என சிங்கள அரசிடம் கேட்க என்னுடன் வருவீர்களா? தயாரா?

இந்தியாவில் பிரபாகரன்



ஒருவர் வந்தார், புலிகள் எப்படி தெரியுமா? எம்ஜிஆரே அவர்களை ஆதரித்தார், வளர்த்தார். அந்த பொன்மன செம்மலுக்கு தெரியாததெல்லாம் உனக்கு தெரியுமா? எம்ஜிஆர் வாழ்க என சொல்லிவிட்டு ஓடிவிட்டார் சிலர் இப்படியும் கிளம்பி இருக்கின்றார்கள்.

பெரும் கதை இது, சுருக்கமாக எம்ஜிஆர் பக்கம் பற்றி மட்டும் பார்க்கலாம், ஆரம்பத்தில் இருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கினார், அதன் தலையீடு அவருக்கு எரிச்சலை தந்தது, இன்னொன்று யாரையும் நம்பாதவர் அவர், எல்லா குழுக்களும் இந்தியாவில் பயிற்சி பெற அவர் ஒதுங்கிதான் நின்றார், 1980களின் உலக நிலைப்படி நாங்கள் தேவை என்றால் இந்தியா எங்களிடம் வரட்டும், நாங்களாக செல்லமாட்டோம் என்பது அவரின் கொள்கை, அது அநாளைய சூழலில் சரியாக இருந்தது.

Stanley Rajan's photo.

ஆனால் 2009லும் நாங்கள் தேவை என்றால் இந்தியா எங்களிடம் தானாக வரட்டும் என்ற அவரின் பிடிவாதாம் நகைக்குப்குரியது, சரி நாம் 1983 க்கு வருவோம்.

பிரபாகரன் வர மறுத்தபொழுதுதான், அப்பொழுதுதான் இந்திரா ஆட்சியில் எம்ஜிஆர் பிரபாகரனை அழைத்து உறுதிமொழி கொடுத்தார், புலிகளும் பயிற்சிக்கு வந்தனர்.

எம்ஜிஆர் பணம் கொடுத்தார் உண்மை, ஆனால் மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில அரசு 5 பைசா அடுத்தநாட்டு தீவிரவாத இயக்கத்திற்கு கொடுக்கமுடியுமா? அப்படியானால் காஷ்மீர் அரசு பாலஸ்தீனத்திற்கு வழங்காதா? பீகார் அரசு நேபாளிய இயக்கங்களுக்கு வழங்காதா?, இதனை எல்லாம் இவர்கள் சிந்திக்கமாட்டார்கள்.

இப்படி இந்தியாவின் கட்டுபாட்டில் பிரபாகரனை கொண்டுவர இயக்கபட்டவர்தான் எம்ஜிஆர், அது பின்னாளில் விளங்கிற்று. அப்படி சென்னை பாண்டிபஜாரில் பிரபாகரன் கைது செய்யபட்டபொழுது இந்திராதான் எம்ஜிஆர் மூலம் பிரபாகரனை காத்தார்,

இந்திரா சென்றவுடன் காட்சி மாறிற்று, ஈழம் அமைக்க இந்தியாவிற்கு ஒரு நொடி ஆகியிருக்காது, ஆனால் ஆள்வது யார்? அங்கே சும்மாவே 30 போராளிகுழு, அப்படி ஈழம் அன்று அமைந்திருந்தாலும் அது இன்றைய ஆப்கன் நிலைக்கு சென்றிருக்கும், இந்திரா இதனைத்தான் யோசித்தார்.

அப்படியே அவர் காலம் முடிய, ராஜிவ் ஆட்சிக்கு வந்தார். காட்சி மாறிற்று.

சார்க் மாநாட்டுக்கு ஜெயவர்த்தனே வந்தபொழுது, மத்திய அரசு உத்தரவுபடி சென்னையில் இருந்த பிரபாகரனின் ஆயுதம் களைந்து அவரை வீட்டுகாவலில் வைத்தார் எம்ஜிஆர், ஆயுதம் இல்லாமல் ஒருநொடி இருக்கவிரும்பாத பிரபாகரன் அன்றே சந்தேகபட்டார், உண்ணாவிரதம் எல்லாம் இருந்தார்.

அதன் பின் மதுரையிலிருந்து சொல்லிக்காமல் ஈழம் ஓடிய பிரபாகரன் அதன்பின் தமிழகம் வர மிகவும் யோசித்தார், ராஜிவினை சந்திக்கும்பொழுது மட்டும் வந்தார், அதுவும் எம்ஜிஆர் மீது திருப்தி இல்லாமல்தான் டெல்லி சென்றார்.

 

டெல்லி அசோகோ ஹோட்டல் விவகாரத்தில் பிரபாகரன் கோபபட்டு எம்ஜிஆரிடம் உதவி கேட்க, எம்ஜிஆரின் நிலை இந்த விவகாரத்தில் என்னை விட்டுவிடுங்கள் என்றே இருந்தது.

அமைதிபடையுடன் முறுகல் ஏற்பட்ட காலத்தில், ராஜிவிற்கு புலிகள் கடிதம் எழுதிய காலத்தில், மத்தியஸ்தம் செய்ய எம்ஜிஆருக்கு விடபட்ட கோரிக்கைகளையும், அவர் ஒதுங்கிய விஷயம் பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள்.

அமைதிபடை காலத்தில் எம்ஜிஆர் ராஜிவுடனான உறவைத்தான் விரும்பினார், புலிகள் அங்கே மோதிகொண்டிருக்கும் பொழுது இவர் ராஜிவுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். ராஜினாமா, எதிர்ப்பு, ஈழதமிழர் நலம் என அவர் பொங்கவுமில்லை, அவரை "துரோகி" , "இனபடுகொலைக்கு துணைபோன கயவன்"என ஒருவரும் சொல்லவுமில்லை.

இப்படித்தான் எம்ஜிஆரின் புலிகள் ஆதரவு இந்திய அரசின் எல்லைக்குள்தான் இருந்தது, மத்திய அரசினை மீறி அவர் ஒரு துரும்பினை கூட மிஞ்சியதில்லை, அதுவும் 1991க்கு மேலும் அவர் உயிரோடு இருந்திருந்தால் காட்சிகள் கடுமையாக மாறி இருக்கும்

ஆக ஈழ பிரச்சினையில் எம்ஜிஆரின் நிலைப்பாட்டை விட, டெசோ என அகில இந்திய அளவில் கலைஞர் எடுத்த நிலைப்பாடு பெரும் ராஜதந்திரமிக்கது, பாராட்டதக்கது, அது புலிகளை விட ஈழமக்களின் நலனையே காத்து நின்றது,

அந்த சபாரத்தினம் படுகொலையோடு அதுவும் போயிற்று, எம்ஜிஆர் அதனை பற்றி கண்டிக்கவே இல்லை என்பதும் வினோதம், அதாவது ஈழவிவாகரத்தில் அவருக்கு டெல்லியால் கொடுக்கபட்ட அசைன்மெண்ட் புலிகளை கவனித்துகொள்வது, அதனை மட்டும் சரியாக செய்தவர் எம்ஜிஆர்,

ஈழத்தில் மக்களிடம் புலிகளின் பிரச்சார பிம்பத்தில் அவர் பெரிய ஈழபோராளியாக காட்டபட்டார், அவ்வளவுதான் விஷயம்.

அதன்பின் தமிழகத்தில் எம்ஜிஆர் ஆதரித்த இயக்கம் நாங்கள் என புலிகள் அனுதாபம் தேட, ஒரு ஆதரவு எழும்ப‌, அதனை எம்ஜிஆர் காலத்திற்கு பின், திமுக வோட்டாக மாற்றி தருகிறேன் என கிளம்பி, இன்று அரசியல் பிளாட்பாரத்தில் பாய்விரித்து படுத்திருப்பவர் வைகோ.

மொத்தத்தில் மத்திய அரசிற்காக தலையிட்டு, அது ஒதுங்க சொன்னவுடன் ஒதுங்கியவர்தான் எம்ஜிஆர், அவரின் செயல்பாடுகள் அதனைத்தான் சொன்னது,

ஆனால் இதனை சொன்னால் நானும் துரோகி, கலைஞர் ஆதரவாளன், திராவிட வெறியன், வடுக வந்தேறி.










Monday, May 30, 2016

பெரும் எழுச்சி நிச்சயம்வெற்றியாக முடிந்திருக்கும்

டேய் விவரமில்லா பதரே, இந்திய அரசின் கை கூலியே, இன உணர்வு இல்லாதவனே, ராஜிவ் கொலை நடந்த இடத்தில் சிங்களன் ஜெயவர்த்தனேவின் உறவினரும் இருந்தார்களாம், அது சிங்களன் தொடர்பும் உண்டு, புலிகள் நல்லவர்கள், அவர்கள் தியாகிகள்,போராளிகள் என ஒருவர் அட்டகாசம் செய்கின்றார்.

டேய் அறிவு சுடரே சிங்களன் அப்படித்தான், தான் செய்ய நினைத்ததை எல்லாம் புலிகள் மூலம் தந்திரமாக செய்தான். ஈழமக்களின் பெரும் எழுச்சி நிச்சயம்வெற்றியாக முடிந்திருக்கும்,

ஆனால் சிங்களனுக்கு மற்ற போராளிகளை ஒழிக்கும் வேலையினை மிச்சமாக்கி ஒரு பெரும் போராட்ட பின்னடைவினை புலிகள்தான் செய்து கொடுத்தனர் எல்லா குழுக்களையும் அழித்து சிங்களனுக்கு முதலில் உதவினர்.


ஈழவிவகாரங்களில் இந்தியா தலையிடுவதை சிங்களம் கடுமையான அவமானமாக கருதிற்று, அதனால்தான் ராஜிவினை அடித்து கொல்லவும் அது துணிந்தது, ராஜிவ் இருந்தால் நிச்சயம் தலையிட்டு ஈழமக்களுக்காக சிங்களனை எதிர்ப்பார் என்பது அதன் கணக்கு

கொழும்பில் பின்மண்டையில் அடித்து கொல்ல ராஜிவினை கொல்ல சிங்களம் நினைத்திருக்கலாம், அவர் தப்பினார். அதன்பின் அமைதிபடை எனும் இலங்கை ஆபத்தினை, புலிகளை வைத்தே விரட்டினான் சிங்களன், இது புலிகள் செய்த இரண்டாம் உதவி

அடுத்து இனி பதவிக்கு வந்தால் இலங்கையில் தலையிடுவாரோ ராஜிவ் என சிங்களம் அச்சப்பட்ட சமயத்தில் தான் , சிங்களன் மண்டையில் அடித்தும் தப்பிய அவரை கொன்று சிங்களனை மகிழ்ச்சியில் திளைக்கவிட்டனர் புலிகள்.

ஆக புலிகளுக்கும் சிங்களனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே இருந்த புரிதல் அப்படி. புலிகளின் எல்லா நடவடிக்கைகளும் இன்னொரு நாடு ஈழபிரச்சினையில் தலையிடுவதை தடுக்கும் வகையில்தான் இருக்கும், கூர்ந்து கவனித்தால் தெரியும், இது நிச்சயம் சிங்களனுக்கு பெரும் லாபம்.

சுருக்கமாக சொன்னால் பெரும் மக்கள் எழுச்சியினை தன்பக்கம் திருப்பி, தான் சொன்னதை எல்லாம் மக்களை செய்யவைத்து, அதனை சிங்களனுக்கு சாதகமாக்கி இன்று ஈழமக்களுக்கு பெரும் துரோகம் செய்தது புலிகள் மட்டுமே

சிங்களன் செய்யவேண்டியதை எல்லாம் செய்து, இந்தியாவிற்கும் ஈழமக்களுக்கும் பெரும் பகையினை உண்டாக்கியதும் புலிகளே, தந்திரமான சிங்களம் புலிகள் கையாலே எல்லாம் செய்துவிட்டு பின் புலிகளையும் அழித்துவிட்டது, எப்படிபட்ட தந்திரோபாயம் இது? புலிகளுக்கு கொஞ்சமேனும் அறிவிருந்தால் இப்படி சிங்கள வலையில் விழுவார்களா?

எந்தநாட்டு மக்கள் இப்படி சாவர்கள்? அவர்கள் செத்தார்கள், சாக தயாரானர்கள், உலகம் அவர்களை பரிதாபமாக பார்த்தது, ஒரு அனுதாபமும் வந்தது. ஆனால் அதனை நல்ல வழியில் வென்றெடுக்க முடியாத தலமையாக புலிகள்தான் இருந்தனர், எல்லாம் வீண் ஆனது.

என்னிடம் கேள்வி கேட்ட அந்த அறிவுசுடருக்கு விளங்கவேண்டியது அதுதான். இன்று ராஜிவ் கொலைபழி புலிகள் மீதுமட்டும்தான் உண்டு, அந்த சிங்கள தொடர்பு பற்றி சொல்லி இருக்கவேண்டியது நீங்கள் அல்ல அறிவே, பிரபாகரன், அவர்தான் சொல்லி இருக்கவேண்டும்

மாண்ட கடாபி மீண்டார்




கடாபி 2009ல் மிக கடுமையான யுத்தத்தில் செத்துவிட்டதாக அறிவித்து வீரவணக்கம் செலுத்தினர் புலிகள், ஆனால் அதே கடாபிதான் கடந்தவாரம் கொழும்பில் கைது செய்யபட்டிருக்கின்றார், எப்படி? கொஞ்சம் ஆழநோக்கினால் தலை சுற்றுகின்றது.

13301289_1642552109402487_4311719005340924149_o

அதாவது 2009ல் கடைசிமுயற்சியாக ஆனந்தபுரம் எனும் இடத்தில் மோதியபுலிகளுக்கு ஒன்றும் வெற்றியில்லை, அவ்வளவுதான் இவர்கள் கடாபி உட்பட‌ எல்லோரும் பலியானார்கள் என பிரபாகரன், பொட்டு அம்மான் இல்லாத‌ பெரிய பட்டியலை வாசித்துவிட்டு சிங்களனிடம் சரணடைய கிளம்பிவிட்டார்கள்,

சரணடைய வருவோர் என புலிகள் அனுப்பிய பட்டியலை ஐ.நாவே வெளியிட்டிருக்கின்றது

அப்படி சயனைடு கடிக்காமல், தற்கொலை வெடிக்காமல் கிளம்பி சென்றிருக்கின்றார்கள், மேல்மட்ட புலிகள் எல்லாம் அப்படி சரணடைந்திருக்கின்றன, இதில் குறிப்பிட்டவர்களை செய்ய வேண்டியதை செய்துவிட்டு மற்றவர்களுக்கு புணர்வாழ்வு அளித்து விடுதலை செய்திருக்கின்றது சிங்களம்.

புலிகள் இயக்கத்தவருக்கு ஒரு நாளைக்கு ஒரு பெயர் வைக்கபடும், அப்படி ஆதவன் என்ற அய்யாதுரை மோகன் தாஸ் என இயற்பெயர் கொண்ட கடாபியும் கைது செய்யபட்டு விடுவிக்கபட்டிருக்கின்றார், காரணம் இவர் புலிகளில் அவ்வளவு பிரபலமில்லை, புலிகள் அழிந்ததால் ராணுவமும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை

இந்த கடாபிதான் குறி தவறாமல் "டப் டப்" என்று சுட்டவர், கைதுப்பாக்கியால் விமானத்தை சுட்டவர், என்னை பாராட்டி தழுவியவர் என அங்கிள் சைமனால் தமிழகம் எங்கும் சொல்லபட்டவர். பெரும் வீரர், துப்பாக்கி இவரை கண்டால் தானாக சுட்டுகொள்ளும் என்றெல்லாம் கதை கட்டபட்டவர்.

அவர்தான் கொழும்பு விமான நிலையத்தில் இந்தியாவிற்கு தப்பும்பொழுது பிடிபட்டிருக்கின்றார், இவர் இந்தியா சென்றால் யாருக்கு நஷ்டம் என தெரியவில்லை, பிடித்துகொடுத்துவிட்டார்கள். இப்பொழுது சிக்கல் என்னவென்றால் அன்னார் பிடிபட்ட விஷயம் புலி அபிமானிகளிடம் பெரும் அதிர்ச்சி உண்டாக்கி இருக்கின்றது

இந்த உயிரோடு உள்ள கடாபிக்குத்தான் கடந்த 6 வருடமாக மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்தியிருக்கின்றது சீமான் கோஷ்டி. ஹிஹீஹிஹ்

அவ்வளவுதான் ஆரம்பித்துவிட்டார்கள், இவந்தான் தலைவரை காட்டி கொடுத்திருப்பான்,துரோகி, ஈனபிறவி என்றெல்லாம் அர்ச்சனை தொடங்கிவிட்டது, அதாவது இவர் பிரபாகரனோடு சரணடைய சென்றவர் என்பதால், எப்படியும் பிரபாகரனின் இமேஜுக்கு கடும் அடி விழும்.

மொத்தத்தில் அப்பாவி புலிகள் சாக பெரும் மட்டபுலிகள் ராணுவத்திடம் சரண்டைந்திருக்கின்றன, அவன் மண்டையிலே போட்டு கொன்றிருக்கின்றான், சில தப்பி இருக்கின்றன அதிலொன்று ஆதவன் என்ற இந்த கடாபி. இதுதான் புலிகளின் மண்டியிடாத மானம், விழுந்துவிடாத வீரம். புலிகளின் இந்த ஏமாற்றுவேலை பற்றி உலகமே காரி துப்புகின்றது. மற்றவர்கள் என்றால் சாக வேண்டும், மூத்த புலி எல்லாம் வாழவேண்டும். இது புலிகொள்கை, கேட்டால் போராட்டம் என்பார்கள்.

எப்படி சிங்களன் உயிரோடு விடுவான் என நம்பினார்கள் என தெரியவில்லை, சென்றார்கள். சிக்கினார்கள்

சரி இந்தியா வருவதற்கு இந்த ஆதவன் என்ற கடாபி ஏன் திட்டமிட்டார், இந்திய தமிழகத்தில் அவரின் வீரதீரங்களை தமிழகத்து மூலை முடுக்கெல்லாம் முழங்கியவர் அங்கிள் சைமன், ஒரு வேளை அவரை பார்க்க வந்திருப்பாரோ?, ஆச்சரியமாக சைமன் கடாபி பற்றி புகழ்ந்த வீடியோக்களை எல்லாம் காணாவில்லை, இனி பாருங்கள், அங்கிள் கூட கடாபியினை துரோகி என்பார்.

ஜெயலலிதாவினை அங்கிள் அவசரமாக வாழ்த்தியதில்ம் மர்மம் இருக்கலாம் :)

கடந்த உலகளாவிய போட்டியில் சரண்டைந்த சில புலிகளை (புலிகளின் செய்திகளை நம்பி) துப்பாக்கி சுடும் போட்டிக்காக சிங்களம் வெளிநாட்டிற்கு இலங்கை சார்பில் அனுப்பியது, அதன்பின்புதான் தெரிந்தது புலிகளின் பயிற்சி இவ்வளவுதானா? என்று. அதன் பின் சிங்களம் அந்த முன்னாள் போராளிகளை துப்பாக்கி துடைக்கமட்டும் பணி அமர்த்தியது ,

இந்த ஆதவன் மட்டும் அன்றே சிக்கி இருந்தால் அவரையும் எங்காவது போட்டிக்கு அனுப்பி, அவர் சொதப்புவதை சீமானுக்கு வீடியோ அனுப்பி இருப்பார்கள். எல்லாம் சும்மா அளவிற்கு மீறிய கட்டுகதைகள்.

இனி இவர் கெஞ்சினாலும் சீமான் போன்ற ஐரோப்பிய‌ புலிகள், நாகேஷ் ஸ்டைலில் சொல்வார்கள், "நீ செத்துவிட்டதாக அஞ்சலி எல்லாம் செலுத்தி சங்கத்திலிருந்து நீக்கிவிட்டோம், இனி சேர்க்கமுடியாது , அதனால் நீ செத்து போ"

ஆக செத்த புலிகள் எல்லாம் வருகின்றன, இவர்கள் இனி "ஆவி வணக்கம்" செய்வார்கள், செய்யட்டும். ஒருவேளை பிரபாகரனோ அல்லது பொட்டுவோ சரணடைந்து சிங்கள ரகசிய சிறையில் உயிரோடு இருந்தால் இப்படித்தான் சொல்லிகொண்டிருப்பார்.

"ஒற்றே ஒரு முறை, என்னை வெளிக்கால விடுங்கோ, யுவன் சைமன்னு ஒருத்தன் தமிழ்நாட்டில திரியுரான். அவன மட்டும் மண்டையில போட்டுட்டு வந்துரவன், என்ன நம்புங்கோவன், அவனால என்னட பேரும், இயக்க பேரும் மோசமா சீரழியுது.."




இது நம்ம ஆளு




டி.ராஜேந்தரின் குடும்ப படமான "இது நம்ம ஆளு" என்றொரு படம் வந்திருக்கின்றது, "பீப்" பாடலுக்கு அடுத்து வந்திருக்கும் படமென்பதால் சிம்பு நிறைய அடக்கி நடித்திருக்கலாம், ஆனாலும் ஆங்காங்கே பலபேரை சீண்டுகிறார், சில இடங்களில் தன்னைதானே விமர்சிக்கின்றார், தமிழ் திரையுலகம் உள்ள காலம் வரை அவர் திருந்தமாட்டார்.

Stanley Rajan's photo.அதிலும் பல காதல்களை கண்ட சிம்புவும், ஏராளமான காதல்களை உசேன் போல்ட் வேகத்தில் அசால்ட்டாக தாண்டிவந்த நயனும் இந்த கதையில் கடந்த கால காதல்கதைகளை பற்றி பேசும்பொழுது எரிச்சல்தான் வருகின்றது, இவர்களை பற்றி யாருக்கு தெரியாது?,


பாரதிராஜா படங்களில் வரும் ராஜா போல எல்லா படங்களிலும் அதே ஒரு தலை அல்லது அறுந்த தலை பாத்திரம் ஆண்டிரியாவிற்கு, பல படங்களில் வந்த அதே ரோல், ஆனாலும் கவுவர வேடம் ஜெய்க்கு பதிலாக அனிருத் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம். :)

நாயகி நயனுக்கும் பட குழுவினருக்கும் பல இடங்களில் சம்பள மோதல், இன்னபிற சிம்பு மோதல் நடந்திருக்கலாம் என்பதை படம் சொல்லுகின்றது, அதனால் நயன் நாயகனுடன் படம் முழுக்க போனில் பேசும்படியே காட்சி அமைத்திருக்கின்றார் இயக்குனர், அவரின் Risk Management யுக்தியினை நிச்சயம் பாராட்டலாம், படம் தொடங்கபட்ட பின் எப்படிபட்ட ரிஸ்க், எப்படிபட்ட சமாளிப்பு..:)

ஆனால் நம்மால் தாங்க முடியவில்லை, படம் பார்த்தபின் நமது போனில் மீதே வெறுப்பு வருகின்றது.

மற்றபடி "பார்த்தீர்களா இவ்வளவு நாள் தொடர்ந்து பேசியும் பில் குறைவாகத்தான் வந்திருக்கின்றது.." என பிரபல செல்போன் கம்பெனியும், "சார்ஜ் போடாமலே எங்கள் போனில் 6 மாதம் பேசமுடியும் .."என கொரியன் கம்பெனியும் விளம்பரம் செய்து முடித்திருக்க‌ வேண்டிய படம் இது.













மே 18 லண்டனில்

ஐரோப்பிய ஈழ அமைப்புகளிடையே கடந்த 18ம் தேதி லண்டனில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது, பெரும் குழப்பமும் அவமானமும் நிறைந்த இந்த சம்பவம் புலி ஆதரவாளர்களால் திட்டமிட்டு மறைக்கபட்டுள்ளது : பரபரப்பு செய்தி

# இதெல்லாம் விஷயமா? வைகோவின் ஈழ சுருதி குறைய ஆரம்பித்து, சீமானின் தொண்டை உச்சத்திற்க்கு செல்லும் போதே எமக்கெல்லாம் விளங்கிற்று, நெடுமாறன் சீமான் உறவு முறிவும், இன்னும் பல விஷயங்களும் அப்பொழுதே சண்டையினை அறிகுறிகளாய் சொன்னது,

# அதாவது பல ஐரோப்பிய புலி ஆதரவு ஈழகுழுக்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒருவரை தமிழகத்தில் இயக்குகின்றன, எந்தநபர் அதிகம் கத்துகின்றாரோ அவருக்கு வருமானம் அதிகம், யார் சத்தமில்லையோ அவருக்கு குழுக்கள் ஒன்றும் அனுப்பவில்லை என அறிக.


# அங்கிளின் கடும் தோல்வியினை தொடர்ந்து இனி அங்கிளை லண்டனுக்கு அழைத்து அவர்கள் போட்டு சாத்தலாம், அங்கிள் லேசுபட்டவரா? ஏதாவது பிரபாகரன் படத்தோடு போராட்டம் செய்து ஜெயிலில் சென்று பிரியாணி சமைக்க ஆரம்பித்துவிடுவார், இதனால் லண்டனுக்கு செல்ல முடியாது என காரணமும் அழகாக சொல்லிவிடுவார்.

Sunday, May 29, 2016

ஓமந்தூரார் தோட்ட சட்ட மன்ற கட்டிடம்




நேற்று ஒரு மலாய் நண்பர்சொன்னார், இது 10 ஆண்டுகளுக்கு முன்பாக பெரும் காடு என்றார், அவர் காட்டிய இடத்தில் வானுயர் கட்டடமும் பளிங்கு சாலைகளும் இருந்தன.

Stanley Rajan's photo.

தமிழக நிலையினை நோக்கினால்தமிழகத்திலோ 10 வருடம் முன் அமைக்கபட்ட மிக நவீன சட்டமன்ற கட்டிடம் தூர ஒதுக்கபட்டு அப்படியே கிடக்கின்றது, விரைவில் அது அழிக்கபட்டு பழையபடி ஓமந்தூரார் தோட்டத்தின் ஒரு பகுதி ஆனாலும் கேள்விகேட்க யாருமில்லை.

அதனை கட்டியவர் யார்? என்பதனை விட, யாருக்காக கட்டபட்டது என்பதுதான் முக்கியம், அவர் காலத்திற்குள் அவர் ஒரு எம்எல்ஏ என்ற முறையிலாவது அதில் கலந்துகொள்ளட்டும், அந்த நிம்மதியிலாவது அவர் முதுமை மகிழட்டும்,


வாழ்த்து தெரிவிப்பதும், இவர் தெரியாமல் அவர் பின் வரிசைகு சென்றார் என்பதும், இவர் அவர்தான் மூத்த சகோதரி என்பதெல்லாமும் தாண்டி, அந்த கட்டதத்திற்கு சட்டசபையினை மாற்றினால் என்ன நடந்துவிடும்? வங்க கடல் உள்புகுந்துவிடுமா?

‪#‎ தமிழகத்தில்‬ மன்னர்கள் கட்டிய ஆலயங்களில் வாழ்வது யார்? , மக்கள் சென்று வணங்குவதும் அம்மன்னர்களையா? அல்லது தெய்வங்களையா?

# இத்திட்டம் செயலானால் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி? ஒருவருக்குமல்ல, ஆனால் அரசு காரியங்களுக்கு நலம். நாம் சொல்லி ஆகபோவது ஒன்றுமில்லை, ஆனால் இப்படி நடந்தால் அதுதான் உச்சகட்ட அரசியல் நாகரீகம்.நாகரீகம் என்பதையும் தாண்டி மகா அதியவாசியம்.













இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் வாழ்த்து

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் வாழ்த்து கடிதத்திற்கு பதில் எழுதினார் ஜெயலலிதா, காலம் வரும்பொழுது சந்திப்பதாகவும் , ஈழதமிழர் நலன் காக்க இந்திய அரசின் மூலம் எல்லா நடவடிக்கையும் எடுப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர்.

download

கவனியுங்கள் வெவ்வேறு நாட்டு மாகாணங்களின் முதல்வர்கள் எழுதியுள்ள கடிதபரிமாற்றம் இது, இதில் தனி ஈழம் பெற்று தாருங்கள் என விக்னேஸ்வரன் சொல்லவே இல்லை, 7 தமிழர் விடுதலை பற்றி மூச்சே இல்லை. 13ம் சட்டதிருத்தம் தொடர்பாக இந்தியாவின் மத்திய அரசை வலியுறுத்தம் விக்னேஸ்வரன் அதற்கு ஜெயலலிதாவின் ஆதரவினை முன்பாக கோரி இருந்தார்.

மொத்தத்தில் தனி ஈழம் என்ற பேச்செல்லாம் இல்லை, ஜெயா அழுத்தமாக மத்திய அரசோடு இணைந்து ஈழபிரச்சினை அண்குவேன் என சொல்லியும் விட்டார், விரைவில் விக்னேஸ்வரனை அவர் சந்திக்கவும் செய்யலாம்.

# அங்கிள் & மங்கிஸ், நீங்கள் சொல்லிகொள்வதுபோல‌ நல்ல தமிழ் தகப்பனுக்கும் தாய்க்கும் பிறந்தவன் என்றால், சுத்தமான வீர தமிழ்ரத்தம் ஓடுவதாக இருந்தால் இந்த கடித்தத்திற்காக ஜெயலலிதாவினை கண்டித்து போராட தயாரா? விக்னேஸ்வரனும் ஜெயலலிதாவும் மறந்துவிட்ட ஈழத்தை மீட்க சென்னை கோட்டைமுன் கொடிபிடித்து கத்த தயரா?

# தனி ஈழத்தை கைவிட்ட துரோகி ஜெயலலிதா, 7 தமிழரை பற்றி மறந்துவிட்ட ஜெயலலிதாம், மத்திய அரசோடு நம் ஈழ‌கனவறுத்த களை ஜெயலலிதா என தொண்டை கிழிய மேடைபோட்டு கோட்டைமுன் கத்துங்கள் பார்க்கலாம், அப்படி செய்யுங்கள், நான் உங்களை விமர்சித்து எழுதுவதை நிறுத்தியேவிடுகிறேன்,

செய்யுங்கள் பார்க்கலாம். மானமும், சொரணையும் உள்ளவர்கள் என்றால் செய்யுங்கள்.

ஈழவடக்கு மாகாண முதல்வரே தனிஈழத்தை விட்டுவிட்டாராம், அங்கிளும் அவர் அடிப்பொடிகளும் வாங்கியே தீருமாம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Friday, May 27, 2016

எனக்கு தோல்வி அல்ல, இது தொடக்கமே.. சீமான்

நான் ஈழ விடுதலைக்காகவே அரசியலுக்கு வந்தேன், இல்லாவிட்டால் வர என்ன அவசியம் இருக்கின்றது, எனக்காக ஐரோப்பா முழுக்க ஈழதமிழர் பிரச்சாரம் செய்தனர் : சீமான்

# அங்கிள் வாக்குமூலம் தெரிகின்றதா? இவர் தமிழகத்திற்காக கட்சி நடத்தவே இல்லையாம். எல்லாம் ஈழவிடுதலையாம், இவர் ஈழ விடுதலை வாங்க இந்திய தமிழன் எல்லாம் இவரை முதல்வராக்கி நாட்டை சுடுகாடாக்க வேண்டுமாம். ஒரு தமிழக முதலமைச்சர் வேட்பாளரின் அறிவிப்பு இப்படியா இருக்கும்?

# தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஐரோப்பாவில் ஈழதமிழர் என்ன பிரச்சாரம் செய்தனர்? அது என்ன பைத்தியகார தனம், உலகம் சிரிக்காதா? ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா?


# இதில் மானமுள்ள தமிழன் இல்லை என ஒப்பாரி வேறு, வாக்கு பணம்கொடுத்து வாங்கபட்டது என அழுகை வேறு, அப்படியே பாதுகாப்பிற்காக ஜெயலலிதாவிற்கு வாழ்த்து வேறு, இதுதான் சீமானிசம்

# இவர் திருந்தும் காலம் நெப்டியூன் கிரகத்திற்கு அப்பாலும் இல்லை, எப்படியோ அடுத்த வைகோ ரெடி. நமக்கு காமெடியனுக்கு பஞ்சமில்லை

# அங்கிள் சொன்னதில் ஒன்று மட்டும் உண்மை, இது "எனக்கு தோல்வி அல்ல, இது தொடக்கமே.." என்றார், அதே தான் அங்கிள் இனி எல்லாம் அப்படித்தான்.

ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் குப்பைக்குத்தான் செல்கின்றன: சுப்பிரமணியன் சுவாமி





பிரதமருக்கு ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் குப்பைக்குத்தான் செல்கின்றன: சுப்பிரமணியன் சுவாமி

# தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட கூடாது என அக்கட்சியினரே இப்படி உழைக்கின்றார்கள் என்பதை விட என்ன சொல்லமுடியும்?,

# தமிழக முதலமைச்சரின் கடிதமே குப்பைக்கு போகிறதென்று ஒரு தேசிய கட்சியின் எம்பி சொல்வாரென்றால் இம்மாநில மக்கள் அக்கட்சியினை எப்படி மதிப்பார்கள்? பின் மோடி தமிழக கூட்டத்திற்கு வெற்றுநாற்காலி வராமல் என்ன வரும்?


# ஆச்சரியமாக பிரதமர் இந்த பொறுப்பற்றபேச்சினை கொஞ்சமும் கண்டிக்கவில்லை, ஒருவேளை தமிழக முதல்வரின் கடிதங்களை இவரிடம் மோடி கொடுத்திருப்பாரோ? அந்த குப்பை தொட்டி இவர்தானோ







அரசியல் உலகினை கவனித்து பாருங்கள்...

அரசியல் உலகினை கவனித்து பாருங்கள், கொள்கை என்பது அறவே இல்லாதவர்கள் மக்களாட்சியினை பிடிக்க‌ ஒரு தந்திரம் வைத்திருப்பார்கள்.

அதாவது சிறுபான்மை இனம் என ஒன்று இருக்கும், அதனை குறி வைத்து அடிப்பார்கள், இவர்கள்தான் பிரச்சினைக்கு மூலம் என்பார்கள், இவர்களால் நாடு பாழாயிற்று என்பார்கள், இவர்கள் அழிந்தால் எல்லாம் சரி என்பார்கள், அதன் பின் ஆட்சிக்கு வந்து முன்னை விட நாட்டை கடுமையாக சீரழிப்பார்கள்.

இந்த நுட்பத்தை முதலில் சொல்லிகொடுத்தவன் அனாரிக தர்மபால, தமிழர்களையும், இஸ்லாமியரையும் கைகாட்டி அவன் கொடுத்த சிங்கள எழுச்சிதான் அத்தீவு இன்று நாசகாம இரண்டாம் காரணம், முதற்காரணம் யாழ்பாணத்தான்.


ஐரோப்பாவில் இப்படி யூத சிறுபான்மையினரை காட்டியே ஆட்சிபிடித்து ஐரோப்பிய மற்றும் உலக அபாயமாக மாறி அழிந்தான் ஹிட்லர். பர்மாவில் தமிழரை காட்டியே ஆட்சிகு வந்து அந்தநாட்டை நாசமாக்கியது அந்த இனவாதம்.

தமிழகத்தில் இப்படி பிராமணரை கைகாட்டியே வளர்ந்தது திராவிட இயக்கம், இன்று தமிழ்நாடு சீரழிந்தது அப்படித்தான்,

இப்படி மொத்த அழிவு சரித்திரங்களையும் பார்த்தால் சிறுபான்மை இனங்களை குறைசொல்லி, குற்றம்சாட்டி ஆட்சியினை பிடித்தவர்களுக்கு ஒரு கொள்கையும் இருக்காது, நாடும் சுடுகாடாகத்தான் ஆகி இருக்கும், உலக வரலாறு அதனைத்தான் சொல்கின்றது.

எல்லாவற்றையும் நெடுநாள் கழித்தே புரிந்துகொள்ளும் டியூப்லைட்டான சீமானுக்கு இந்த ஞானம் 50 வயதில் வந்திருக்கின்றது, ஹிட்லர் படத்தை வைத்துவிட்டு அவர் கள்ள சிரிப்பு சிரித்ததெல்லாம் இப்படித்தான், ஹிட்லரை போலவே அவர் மேடைகளில் உறுதிமொழி எடுப்பதும், ஹிட்லரை போலவே பேசுவதும் அதனைத்தான் சொல்கின்றன.

ஹிட்லருக்கு யூதர்கள் என்றால் இவருக்கு தமிழக தெலுங்கு மக்கள் அதனை குறிவைத்தே ஆட்சிபிடிக்கலாம் என இவருக்கு இருக்கும் 5 அறிவு சொல்லிகொண்டிருக்கலாம் எனினும் தமிழக மக்கள் இவரிடம் விழிப்பாய் இருக்கவேண்டியது அவசியம்.

இந்தியா எனும் பெரும் தேசம் இருக்கும் வரை இவரால் ஆபத்து எல்லாம் இல்லை, அப்படி இவர் ஹிட்லராக தன்னை கருதி ஏதும் செய்ய நினைப்பாரா என்பது தெரியவில்லை, எப்படியும் போகட்டும்.

ஹிட்லருக்கு கால் எலும்புகள் மட்டும் மிஞ்சின என்பது சரித்திரம், சோவியத் ராணுவ குறிப்பு .

ஆம் ஹிட்லருக்கு கால் எலும்புகளாவது மிஞ்சின

ஈழத்திலிருந்து ஒரு புலி முணங்கியது





ஈழத்திலிருந்து ஒரு புலி முணங்கியது, கீபோர்டு உடைய எழுதும் நீ, 2009ல் எம் இனம் அழியும்போது எங்கிருந்தாய், இதனை எல்லாம் பேச உனக்கு என்ன தகுதி என முணங்கியது.

# 1983ல் வந்து காத்த இந்தியநாட்டின் குடிமகன் என்ற முறையிலும், ஓரளவேனும் உரிமை பெற்றுதரவந்து 1500 வீரர்களை இழந்த, ஒரு தலைவனை இழந்த நாட்டின் குடிமகன் என்றமுறையிலும், இன்று வரை ஐரோப்பா செல்லமுடியாத ஏழை ஈழத்தவரை அகதிகளாக பாதுகாக்கும் நாடு எனும் முறையிலும் சொல்ல எனக்கு உரிமை உண்டு.

# அதே நேரம் 1957ல் மலையக தமிழக வம்சாவழி தமிழரை, குடியுரிமை பறித்து, நாடற்றவர்கள் என ஆக்கி, அதாவது இவர்கள் எங்கள் குடிமக்களே அல்ல என அபாண்டமாக சொல்லி, கதற கதற, அன்றைய வளமான இலங்கையினை விட்டு இப்பின் தங்கிய தமிழகத்திற்கு சிங்களன் அனுப்பும்போது, ஒரு யாழ்பாணத்தான் அல்லது ஈழதமிழன் கண்டித்திருப்பானா? அல்லது தொப்புள்கொடி உறவுகளை ஏன் வெட்டுகின்றீர்கள் என சிங்களனை கேட்டானா?


# ஒரு சத்தம், ஒரு எதிர்ப்பு கூட இல்லையே? ஏன்? அன்றெல்லாம் யாழ்பாணத்தார் எங்கிருந்தீர்கள்? கொலையினை விட கொடுமையான விஷயம் அந்த சம்பவம் என்பது உங்கள் மனதில் இருக்குமோ இல்லையோ? எமது மனதில் என்றும் இருக்கும்.

#"அமைதிபடை காலத்தில் இந்திய நாய்களுக்கு இங்கு என்ன வேலை.." என ஈழத்தவர் என கேட்ட கேள்வியினை எப்படி இந்தியனால் மறக்க முடியும்?







அரசியல் உலகை விட்டுப் போகிறேன்':தமிழருவி மணியன் உருக்கம்!




# மூதறிஞர் ராஜாஜி, ஈவிகே சம்பத், காமராஜர் போன்ற பெரும் யானைகளையே ஓடவிட்ட தமிழகம் இது, தமிழருவி மணியன் எல்லாம் எம்மாத்திரம், மனிதர் ஆட்சிமாற்றம் வேண்டும் என சொன்னது தவறல்ல, ஆனால் செய்த முயற்சிதான் தவறு.

# நல்ல தலமை இல்லாத கட்சி எப்படி சீரழியும் என்பதற்கு தமிழக காங்கிரஸ் பெரும் உதாரணம், பண்பாளர்களுக்கு குறைவில்லா கட்சி அது. ஒரு நல்ல தலமையோ, அல்லது அதிமுக போல கோஷ்டி பூசலுக்கு அறவே வாய்ப்புகொடுக்காத தலமையாக இருந்திருந்தால் அதுவே மாற்றாக வந்திருக்கும் வாய்ப்பு உண்டு.


Stanley Rajan's photo.

# அந்த முயற்சியினை எடுக்காமல், குமரி அனந்தன், நெடுமாறன், வாசன் என எல்லாம் கண்டுகொண்ட பின்னும் இவர் தனி இயக்கம் தொடங்கியதுதா விசித்திரம். வெளிவந்து வைகோ, விஜயகாந்த், திருமா, கம்யூனிஸ்ட் என இணைக்காமல் கட்சிக்குள்ளே இளங்கோவன், தங்கபாலு,சிதம்பரம், விஜயதாரணி என இருக்கும் முப்பது முக்கோடி கோஷ்டிகளை இணைத்திருந்தாலே மாற்றம் வந்திருக்கும், ஒருவேளை அது மகா சிரமம் என உணர்ந்திருக்கலாம்.

# மாற்றத்தை வைகோவுடன் சேர்ந்து செய்ததுதான் தவறு. மக்களின் அபிமானத்தை முற்றிலும் இழந்துவிட்ட வைகோவினை கூட சேர்த்ததுதான் இவறின் துறவறத்திற்கு காரணம். ஒரு துளி விஷம் ஒரு குடம் பாலினை வீணாக்கி விடும் அல்லவா? அப்படி

# தமிழன் பொதுவாக வாசிக்கமாட்டான், ஆனால் பேச்சாளர்களை ரசிப்பான், நம்புவான். அதுவும் பேச்சாளர்கள் காலத்திற்கு ஏற்றமாதிரி பேசினால்தான் தமிழனை கவரமுடியும், அதனை விட்டுவிட்டு கிரேக்க கதையும். ஆபிரகாம் லிங்கன் கதையும், ஈழ அழுகையும் சொன்னால் அவன் எழுந்து சென்றுவிடுவான், தமிழருவி மணியன் போன்ற அற்புதமான பேச்சாளர்கள் இந்த வகைதான், தமிழருவி என்பது மிக பொருத்தமான பெயர், சும்மா சொல்லகூடாது கேட்பதற்கு அழகான பேச்சு அது, ஆனால் தந்திரம் இல்லையே

# இந்த தந்திரத்தில் கை தேர்ந்தவர்கள் கலைஞரும், ஜெயலலிதாவும், ஜெயா அரசியல் வேறு, ஆனால் கலைஞர் விசித்திரமானவர், இந்த 70 வருடமாக அவர் தனித்து நிற்கின்றார் என்றால், மக்களின் நாடிதுடிப்பு அவருக்கு தெரியும், மிக சரியாக மக்களோடு பயணிப்பார். அதனால்தான் இன்றளவும் அரசியலில் அவரால் முடிகின்றது

# ஆனாலும் வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற புரட்டர்களெல்லாம் அரசியலில் இருக்க, நீங்கள் ஏன் செல்லவேண்டும் அய்யா? ஒருவேளை வைகோவுடனான அனுபவம் உங்களுக்கு அப்படி ஒரு மறக்கமுடியா அனுபவம் கொடுத்திருக்கலாம். அதனை சொல்லிவிட்டு சென்றால் மற்ற மநகூ தலைவர்கள் நிச்சயம் வைகோவை கயிறால் கட்டியாவது வெளியே அனுப்பிவிடுவார்கள்













Thursday, May 26, 2016

இலங்கை தமிழர் சாதீயம்...




ஈழ போராட்டத்தினை மிக சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், தமிழகத்தில் இருக்கும் எல்லா சாதி முறையும் அங்கும் இருந்தது.

போராளி குழுக்கள் தோன்றும்பொழுது கூட அது சாதி வாரியான இயக்கங்களாகத்தான் அறியபட்டன, இதில் மலையக தமிழர்கள் எனப்படும் இந்திய வம்சாவளி தமிழர் பற்றி யாருக்கும் கவலை இல்லை, கொஞ்சமேனும் கவலைபட்டவர் பத்மநாபா மட்டுமே.

போராளி குழுக்களுக்குள்ளான மோதல் இதில்தான் முதலில் தொடங்கியது, பின் அது இளைஞர்களை பங்கிட்டு சேர்த்துகொள்ளுதல், வரி வசூலித்தல் என பல பிரச்சினைகளில் சிக்கி மொத்தமாக புலிகளால் எல்லா இயக்கமும் தடை செய்யபட்டும் அழிக்கவும் பட்டன.

இதில் யாழ்ப்பாண உயர்சாதி வர்க்கம் கொஞ்சம் பணபலம் வாய்ந்ந்தது, அதன் ஆசீர்வாதம் புலிகளுக்கு இருந்தது, கண்ட சாதிகளுக்கும் எதற்கு இயக்கம் என்றே அவர்கள் தூண்டலும் இருந்தது.

13307274_10206425056920354_590005679561788817_n

தந்தை பெரியாருடன் திரு செல்வரத்தினம்


இந்த தூண்டல் டெலோ சபாரத்தினம் கொலையில் மிக பகிரங்கமாக தெரிந்தது, சுமார் 2000 போராளிகளை புலிகள் கொன்று நடுரோட்டில் போட்டு எரித்தபொழுது,  புலிகளுக்கு உயர்சாதி மக்கள் சோடா கொடுத்து, டீ கொடுத்து உற்சாகபடுத்திய நிகழ்வுகள் எல்லாம் நடந்தது.

பின்னாளில் கம்யூனிசம் பேசி சாதி ஒழிக்க கிளம்பிய பத்மநாபாவிற்கும் அதுதான் நடந்தது.

தாழ்த்தபட்ட மக்கள் கொஞ்சம் அறிவுபூர்வமாக பேசினாலோ அல்லது சிந்தித்தாலோ அவர்கள் கொடூரமாக கொல்லபட்டதற்கு சாதிய அமைப்பும் காரணம், புலிகள் நிலைத்து நிற்க சாதிய கூறுகளும் காரணம்.

இந்திய அமைதிபடைக்கு எல்லோரும் சமமாக தெரிந்தாலும், உயர் வர்க்கம் தனக்கு தனி இடம் எதிர்பார்த்தது, தனக்கு நிகராக தாழ்த்தபட்ட மக்களை போராளிகள் என பார்பது அவர்களுக்கு அவமானமாக பட்டது, இப்படி ஆயிரம் காரணம் உண்டு.

புலிகள் சாதியினை ஒழித்ததாக சொன்னாலும், யாழ்பாண இளைஞர்கள் லண்டன் கனடா என பறந்தனர், கிழக்கு மாகாண அடிதட்டு இளைஞர்கள் பலிகடா ஆயினர், இதனை கண்டித்துதான் கருணா பின்னாளில் வெளிவந்தார்.

அந்த மேல்சாதியின் அடியாட்களாக மறைமுகமாக செயல்பட்ட புலிகளும் பின்னாளில் அழிந்துபோயினர், மொத்தத்தில் சொல்லபோனால் சாதிக்காக அந்த இனம் நாடு அடையும் வாய்பினையே பறிகொடுத்தது.

இனபிரச்சினைக்கு முன்பே இலங்கையினை சுற்றிபார்த்தவர் பெரியார், தமிழக மக்களின் வம்சமான மலையக தமிழரின் புறக்கணிப்பு பற்றி, அவர்களை கீழ்நிலையல் ஈழமக்கள் அடிமைபோல வைத்திருப்பதை அறிந்தவர், அதனைத்தான் தன்னிடம் ஆதரவு கேட்டு வந்த செல்வரத்தினத்திடம் நயமாக சொன்னார்.

"ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியுமா", அதாவது மலையக தமிழர்களை குறித்துத்தான் அப்படி சொன்னார், ஈழத்தில் சாதி ஒழிக்காமல் விடுதலை இல்லை என்பது அதன் கருத்து, ஈழத்தின் எல்லா சாதிய கூறுகளும் அறிந்தவர் அவர்

ஈழ விடுதலை கேட்கின்றீர்களே? மலையக தாழ்த்தபட்ட ம்க்களின் நிலை என்ன? எதிர்காலம் என்ன? நிச்சயம் ஈழத்தில் சேர்க்கமாட்டீர்கள் அல்லவா?, 1957ல் 5 லட்சம் தமிழக மக்களை பண்டார நாயக அரசு அனுப்பும்போது தமிழனாக நீங்கள் தடுக்காதது ஏன்? என்ற பெரியார் கேள்விக்கும் செல்வாவிடம் பதில் இல்லை

காரணம் அந்த தாழ்த்தபட்ட மக்கள் ஈழத்தில் பெருகுவதை யாழ்பாண தமிழரும் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

இதனலிருந்துதான் யாழ்பாண தமிழருக்கு தந்தை பெரியாரை பிடிக்காமல் போனது, இன்று அவர்களிடம் காசு வாங்கி கொண்டு பெரியார் தமிழருக்கான தலைவர் அல்ல என அங்கிள் சைமன் சொல்லும் ரகசியமும் இதுதான், இது சைமனுக்கு தெரியும்

இன்று விஷ வித்தாக பெரியாரை பற்றி கிளம்பி இருக்கும் கருத்துக்களின் மூலம் இதுதான், நிச்சயமாக இது இங்கிருந்து வந்ததல்ல, கடல் கடந்து அங்கிள் சைமன் கும்பலுக்குள் ஊடுருவியிருப்பது.

பாவம் அவரின் அடிப்பொடிகளுக்கு தெரியாது, அவரை தெலுங்கர், வந்தேறி என தூற்றிகொண்டிருக்கின்றனர். இதில் தலித் மக்கள் உரிமை பேசும் இளைஞர்களும் பெரியாரை தூற்றுவதுதான் சோகம்

சாதிவெறியர்களை தவிர பெரியாரை யாரால் தூற்றமுடியும்? நீங்களே சொல்லுங்கள்.

ஒரு வேளை ஈழம் அமைந்திருந்தாலும் நிச்சயம் அது இரண்டாக உடைய இன்னொரு யுத்தம் உள்நாட்டில் தொடங்கி இருக்கும், அல்லது நிச்சயம் பெரியார், அம்பேத்கர் படங்களோடு பலர் கிளம்பி இருப்பார்கள்.

ஈழ சாதிநிலையும் அதன் கொடுமையும் இவர்களுக்கு தெரியவருமானால் அன்று பெரியாரை நிச்சயம் நன்றியோடு நினைப்பார்கள். சாதி அவ்வளவு கொடுமையானது, நமது ஊரிலாவது கவுரவ கொலை, ஈழத்திலோ கவுரவ இனஅழிப்பு.












அந்நிய முதலீட்டை தடுத்து ...

கியூபாவில் தனியார் வர்த்தகத்திற்கு அனுமதி, அந்நிய முதலீடுகளை வரவேற்பதாக அறிவிப்பு, ஓபாமாவின் பயணத்தால் வியட்நாமிலும் அந்நிய முதலீடு குவிகின்றது, சீனாவில் இன்னும் அதிக முதலீட்டுகளை கவர திட்டம்

# எவண்டா அது, அந்நிய முதலீட்டை தடுத்து ஆடுமேய்த்து தமிழகத்தை வல்லரசாக்குவேன் என உளறிகொண்டிருந்தது?, மாவோவின் சீனத்திற்கும், காஸ்ட்ரோவின் கியூபாவிற்கும், ஹோ வின் வியட்நாமிற்கும் தெரியாத விஷயமெல்லாம் இந்த கோடம்பாக்க இயக்குநருக்குத்தான் தெரியும் என சொன்னது?

# ஆனானபட்ட பொதுவுடமை தேசங்களே திணறி, அந்நிய முதலீட்டுக்கு அழைப்பு விடுக்க‌, இந்த கழுதைபுலி கிழித்துவிடுமாம், என்னா டூப்புடா டேய்.


# கியூபா உலகிற்கே சர்க்கரை ஏற்றுமதி செய்யும் அளவு வளம் கொண்டது விவசாய நாடு,வியட்நாம் அரிசிஏற்றுமதி செய்யும் பெரும் விவசாய நாடு, தாய்லாந்து உலகின் அரிசி ஏற்றுமதியில் பெரும் இடம் பிடித்திருக்கும் நாடு

# பின்னர் ஏன் அந்நியமுதலீட்டை கேட்கின்றார்கள்? இதெற்கெல்லாம் சைமனிடமோ அவன் அடிபொடிகளிடமோ பதில் இருக்காது., இந்த அபத்தத்தை தேர்தல் அறிக்கையாக்கி அதில் பிரச்சாரம் வேறு

# அவனுக்குத்தான் அறிவில்லை, இவன் சொன்னதை எல்லாம் வெளியிட்ட தமிழக டிவிக்களுக்குமா அறிவில்லை?

தமிழக அரசியல் மாற்றம் 1952-67




கூட்டம் சேர்ந்தது, ஆனால் வோட்டு விழவில்லை, ஆகவே இது நியாயமான தேர்தல் அல்ல என அங்கிளின் அடிமைகள் ஒப்பாரி வைக்கின்றன. அப்படி என்ன கூட்டம் சேர்ந்தது என்றும் நமக்கும் தெரியவில்லை, 5 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட பிரபாகரனின் இயக்கம் பெரும் உலக வல்லரசு ராணுவம் என சொல்பவர்களுக்கு இது பெரும் கூட்டமாக தெரிந்திருக்கலாம்.

இவர்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியவில்லை, வோட்டு எப்படி விழும் என தெரியவில்லை, கூட்டத்திற்கும் வோட்டிற்கும் தமிழகத்தில் சம்பந்தமே இருக்காது என்பதும் தெரியவில்லை, இவர்கள் எல்லாம் கட்சி நடத்துகின்றார்களாம், பரிதாபம்.

ஒரு காலமும் புரிந்துகொள்ள முடியாதது தமிழகம், எதுவுமே கணிக்கமுடியாது. பணம், கள்ளவோட்டு, முறைகேடுகள் என ஆயிரம் சொன்னாலும் அதனை தாண்டி நிற்பது மக்கள் அபிமானம், அதனை புரிந்துகொள்வது மகா சிரமம்.

திமுக கட்சி தொடங்கிய போது அது ஆட்சி பிடிக்கும் என அண்ணாவே நம்பவில்லை, திராவிட நாடு அவர்களின் முழக்கம், நடக்காது என தெரிந்தும் மக்களை மயக்கிபார்த்தார்கள், தமிழகம் கண்டுகொள்ளவே இல்லை.

நேரு தும்மினாலும் கொடிபிடித்தார்கள், ராஜாஜியினை எதிர்பார்கள், தண்டவாளத்தில் படுத்தார்கள், ஒன்றும் வோட்டாக வில்லை, 1956ல் அதுபெற்ற இடம் வெறும் 15.
அதன் பின் சிந்தித்தார்கள்.

தனியாக நின்று ஒன்றும் ஆகபோவதில்லை கூட்டணி அமைக்கலாம் என்று, பார்பணிய ராஜாஜி, இஸ்லாமியர் என சகலைரையும் இணைத்து திராவிடநாடு பேசிபார்த்தார்கள் அப்பொழுதும் 1962ல் 50 இடம்தான் வந்தது, பிரிவினை வாத தடைசட்டம் வந்தது, அதனை வணங்கி திராவிடநாட்டை கை கழுவினார்கள்.அதன் பின் மொழிப்போர் தொடங்கினார்கள், அதுவும் பெரும் வாக்குவங்கி கொடுக்கவில்லை

தமிழகம் இப்படித்தான் அதனை மாற்ற பிரிவினை சக்திகளால் ஒருபோதும் முடியாது என்பது அவர்களுக்கு புரிந்தது

அதன்பின் எம்ஜிஆர் இறக்கபட்டார், தமிழ்தேசிய தலைவர் மேதகு எம்.ஆர் ராதா அவர்களால் அவர் சுடபட்ட பிரச்சினைதான் திமுகவினை அரியணையில் அமர்த்திற்று, அதன் பின் எம்ஜிஆர் தமிழக அரசர் ஆனார், அதன் பின் ஜெயலலிதா அரசி ஆகி இருக்கின்றார், அரசி ஓய்வெடுத்த கொஞ்ச காலம் ராஜகுரு கலைஞர் ஆண்டார்

இப்படியாக அண்ணாவோ, கலைஞரோ, சில சமயங்களில் அரசர் எம்ஜிஆர் கூட கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்காதபொழுது, உங்களை நினைத்தால் சிரிப்புதான் வரும். அவர்களிட்ம் இல்லாத பேச்சாளர்களா? திறமைசாலிகளா உங்களிடம் உண்டு, ஹிஹிஹிஹிஹ்

சிவாஜி கணேசனுக்கு வராத கூட்டமா சீமானுக்கு வந்தது, ஹிஹிஹீஹ், அவருக்கு திரண்ட கூட்டம் யாருக்கு வரும்? ஆனால் வோட்டு?

அந்த மாபெரும் நடிகனை, மக்கள் விரும்பி கொண்டாடிய ஒரு கலைஞனையே, வளர்ப்புமகன் திருமணத்தில் ஒரு மூலையில் பரிதாபமாக நிறுத்திய கொடுமையானது தமிழக அரசியல், உங்களை விடுமா?

ராஜிவிற்கும், இந்திரா காந்திக்கும் திரளாத கூட்டமா? ஆனால் காங்கிரஸ் 30 சீட்டினை தாண்டமுடியவில்லை.

கூட்டம் சேர்பது என்றால் சீமானால் அல்ல, அதிகமான கூட்டாத்தை கூட்ட நயந்தாராவால் கூட முடியும், ஐஸ்வர்யா ராயால் முடியும் அவ்வளவு ஏன் ஷகீலாவால் கூட முடியும். நித்தி ரஞ்சிதா ஜோடி நெல்லை வருகிறது என சொல்லுங்கள், 3 நாள் அந்நகரம் நிரம்பி வழியும். அட சன்னி லியோன் மெரினாவில் ஒரு கூட்டம் நடத்தட்டும், கடலே நிரம்பிவிடும்.

Stanley Rajan's photo.

ஆனால் அதெல்லாம் தமிழகத்தில் வோட்டாக முடியுமா? மாறாது. காரணம் பாட்டாளி வர்க்கத்தின் வாக்குதான் அவர்களுக்கு அடிப்படை.

திமுக என்றொரு இயக்கம் இல்லை என்றால் அதனை கம்யூனிஸ்டுதான் கேரளாபோல பிடித்திருக்கும், இதற்காக வளர அனுமதிக்கபட்ட இயக்கம்தான் திமுக அது பின்பு சினிமா சாயலில் தன்னை இறுத்திகொண்டது. முதலில் தன்னையும் வாழவைக்கும் கட்சி அது என ஏழைபாழைகள் எல்லாம் நம்பினர், லெனினின் பொதுவுடமை நாடு போல தமிழகத்தை ஆக்குவோம், இங்கர்சாலின் கொள்கைகளை பரப்புவோம் என்றுதான் மக்களை மயக்கினார்கள்.

அதற்கு சான்றாக காங்கிரசிலிருந்த பெரும் பணக்காரர்களை சாடியே வளர்ந்த கட்சி திமுக, அப்படித்தான் உழைப்பாளிகளை பணக்கார காங்கிரசாருக்கு எதிராக திரட்டி காங்கிரசை விரட்டியது திமுக, அதுவன்றி திராவிடத்தாலோ, தமிழாலோ, ஈழ படுகொலையாலோ அல்ல.

அப்படி நல்ல சோவியத் யூனியனின் உலகத்தை உதாரணம் காட்டிய திமுகவிற்கும், படுபயங்கர கொலைகார இயக்கமான புலிகளை நீங்கள் காட்டுவதற்கும் எவ்வளவு வித்தியாசம்? அறிவுள்ளவன் இதனை செய்வானா?

காலம் கடந்தாலும் ராஜிவ்கொலை ஒன்றுபோதாதா? மக்கள் ஓடிவிடமாட்டார்களா? அதுவும் எல்லோரையும் சயனைடு கடிக்க சொன்ன, சிங்களனிடம் சாக சொன்ன எந்த புலிதலைவானாவது இறுதியில் சயனைடு கடித்தானா? சொல்லுங்கள், பிரபாகரனின் சயனைடை வைகோ வாங்கி வந்துவிட்டார், அதனால் அவரும் கடிக்கவில்லை

திராவிட இயக்கங்களை வீழ்த்தவேண்டுமானால் இன்னும் பல அடிப்படை மக்கள் போராட்டம் தீவிரமாக‌ நடத்தவேண்டுமே தவிர, பிரபாகரன், வீரப்பன், இன விடுதலை , வந்தேறி, தமிழராட்சி எல்லாம் வெத்துவேலை, அப்படி தமிழகம் பிரிவினை சக்திக்கு ஆதரவளிக்கும் மாநிலம் என்றால் அண்ணா என்றோ முதல்வராகி திராவிடநாடு வாங்கி இருப்பார்.

இது உங்களுக்கு புரியாது, புரிந்தாலும் கல்தோன்றி கபாடபுரம் தோன்றி, ஆரியன் தோன்றி என தான் தோன்றிகதைகளைத்தான் சொல்லிகொண்டிருப்பீர்கள், அப்படியே செட் ஆகிவிட்டீர்கள் பாவம்.

பிரபாகரன் படத்தையும், புலிகொடியினையும், வந்தேறி எனும் கடும் வார்த்தையும் சொல்லிகொண்டிருக்கும் வரை நிலை இப்படி டெப்பாசிட் இழந்துதான் இருக்கும், உள்ளாட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் ஆகிவேண்டுமானால் தமிழர் வார்டு அமைக்கலாம்.

அதுவும் விளையும் பயிர் முளையிலே தெரியும், திமுக முதல் தேர்தலிலே 15 இடம் பெற்றது, எம்ஜிஆர் முதல் தேர்தலிலே எம்பி சீட் பெற்றார். விஜயகாந்த் முதல் தேர்தலிலே 10% வாக்கு பெற்றார் இன்று அவரையும் காணவில்லை.

வைகோ முதல் தனித்து நின்ற தேர்தலிலே தேராது என முடிவு செய்யபட்டவர், அது இன்று உண்மையும் ஆகிவிட்டது, அடுத்து நிச்சயம் நீங்கள்தான்.

காரணம் தமிழகம் என்றும் பிரிவினைவாதமும், தீவிரவாதமும், இனதூய்மை வாதமும் பேசும் மாநிலம் அல்லவே அல்ல. பிரபாகரன் படம் பிடித்தால் விரைவில் உங்களுக்கு மக்களின் அடி ஓங்கி உங்கள் முதுகில் விழப்போவது நிச்சயம்,

அப்பொழுது டெப்பாசிட் மட்டும் போகாது, கூடவே அபராதமும் விதிக்கபடும்.























தமிழர் இனப்பெருக்க சூத்திரம்....




உலகில் பலவகையான போராட்ட தத்துவம் உண்டு, அஹிம்சை, ஆயுதம், அதிதீவிரவாதம், பொதுவுடமை , மதபுரட்சி என பலவகையான போராட்டங்களை உலகம் கண்டிருக்கின்றது, இப்படி ஒரு போராட்டத்தை எங்காவது உலகம் கண்டதுணா?

நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் விரைவில் திருமணம் செய்யவேண்டுமாம், ஒருவேளை கட்சி அனுதாபிக்கு திருமணம் ஆகியிருந்தால் என்ன செய்ய? அன்று கூட 65 வயது பிராமண பாட்டி சீமானை உச்சி முகர்ந்தது (பெரியாரை திட்ட யார் வந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி), அந்த பாட்டி இப்படி எல்லாம் கிளம்ப முடியுமா? நாடு தாங்குமா?


இளைஞர்கள் ஒரு திருமணம் மூலம் 50 பேரை உணர்வாளராக்க முடியுமாம், அப்படியானால் 10 திருமணம் செய்தால் 500 பேரை உணர்வாளராக்கலாம் அல்லவா? எப்படி திட்டம் இது.

Stanley Rajan's photo.

முதலில் தமிழக பெண்களை மணந்து உணர்வூட்டி தமிழக ஆட்சி பிடிக்கலாம், அதன் பின் இந்தியாவெங்கும் பெண்களை மணந்து உணர்வூட்டி இந்திய ஆட்சியினை பிடித்து தமிழனை பிரதமராக்கலாம், மொத்த இந்தியாவும் தமிழ்நாடாக்கலாம்.

அப்படியே உலகம் முழுக்க திருமணமாக செய்து, எல்லா நாட்டு பெண்களையும் திருமணம் செய்து சர்வதேச ஆதரவினை தமிழன் திரட்டலாம், அமெரிக்க பெண்களுக்கு உணர்வூட்டி தமிழர் அமெரிக்கா ஆளலாம், ஐநா சபை ஆளலாம், ரஷ்யாவும் சீனாவும் தகராறுக்கு வந்தால் அந்த பெண்களையும் விட கூடாது,

உலகமே தமிழர் ஆகலாம்.உலகம் முழுக்க மாமன் மச்சான் என எவ்வளவு உறவு வரும்? எப்படியான போராட்டம் இது? இதனைத்தான் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றான் முப்பாட்டன்

பிரபாகரனுக்கு இந்த யோசனை எல்லாம் இல்லை, மொத்த சிங்கள பெண்களுக்கும் இப்படி உணர்வூட்டி இருந்தால் மொத்த இலங்கையும் ஈழம் ஆகியிருக்குமே?. இந்த அறிவு இல்லையே அவருக்கு, ஒழியட்டும்.

நைஜீரியாவில் பொக்கோ ஹராம் என்றொரு தீவிரவாத இயக்கம் உண்டு, இஸ்லாமிய இயக்கம். அது பெரிதாக எல்லாம் தாக்காது, எங்காவது பெண்கள் பள்ளி,கல்லூரி இருந்தால் அதனை வளைத்து எல்லா பெண்களையும் தூக்கி சென்று தன் இயக்கத்தாருக்கு திருமணம் செய்துவைத்துவிடும்,

அதாவது வீணாக போராடி இஸ்லாமை வளர்பதை விட, திருமணம் செய்துவைத்து பிள்ளைகளை வளர்த்தால் நாட்டில் இஸ்லாம் தானாக வளருமாம், அதனால் போக்கோ ஹராம் குழுவில் இணைய இளைஞர்களுக்கு ஏகபட்ட போட்டியாம், பின் திருமணம் செய்துகொண்டே இருக்கலாம் என்றால் யார் வரமாட்டார்கள்?, இதுதான் அந்த இயக்கத்தின் போராட்ட தத்துவம் கொள்கை.

உலகம் சிரிப்பாய் சிரிக்கும் இந்த போராட்டத்தை இந்த கட்சியினரும் ஆரம்பித்துவிட்டனர், உலகில் உள்ள அபத்தங்களின் மொத்த கூடாராமாக ஆகபோகின்றது இந்த கட்சி

விரைவில் 1க்கு மேற்பட்ட திருமணம் செய்து பெண்களுக்கு தமிழ் உணர்ச்சியினை ஊட்டியர் மாவீரர் எனப்படுவார், அது கர்ணல், பிரிகேடியர், மேதகு என திருமண எண்ணிக்கை பொறுத்து அமையலாம், திருமணத்தன்று இவர்கள் "வீர திருமண வாழ்த்து" தெரிவிப்பார்கள்.

இப்படி இவர்கள் பெரும் காமெடியர்கள் என்பது முன்பே தெரியும், ஆனால் படுபயங்கர காமெடிவாதிகள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிகொண்டிருக்கின்றது, தலைவன் அப்படி













இலங்கை வட கிழக்கு மாகாணங்கள் - அன்றும் இன்றும்...



அங்கு வசிக்கும் ஒரு ஈழதமிழர் சொல்கிறார், வட கிழக்கில் ராணுவ ஆட்சி, இந்துகோயில் இடிப்பு, என ஏராளமான புலி அபிமானிகள் சொல்லிகொண்டிருக்கின்றனர், ஆனால் அப்படி எல்லாம் ஒரு சிக்கலும் இங்கு இல்லை.

நல்லூர் கந்தசாமி திருவிழாவில் ராணுவ ஹெலிகாப்டர் மலர் தூவுகின்றது, வற்றாபளை கண்ணகி ஆலயம், முறிகண்டி விநாயகர் ஆலயம் போன்ற பிரதான ஆலயங்களுக்கு எல்லாம் சிங்கள அரசதந்திரிகள் வருகின்றார்கள், கலந்துகொள்கின்றார்கள்.

[gallery ids="579,580" type="circle" columns="2"]

எமக்கு சில உரிமைகள் சிக்கலாயிருந்தது, இந்தியா தலையிட்டு அதுவும் ராஜிவ்காலத்தில் விமானங்கள் உணவுபொட்டலம் எல்லாம் வீசி களத்தில் இறங்கியதும், சிங்களம் பயந்து பல உரிமைகளுக்கு ஒப்புகொள்ள இறங்கி வந்தது, அதனால் பல போராளிகுழுக்களும் இந்திய படையோடு இணைந்து பணிசெய்தன.

இந்தியா நிலைப்பாட்டில் அப்படித்தான் உதவமுடியும், இந்நாட்டில் கலவரம் வரும்பொழுதெல்லாம் அவர்கள் தான் தமிழர் உயிரை காப்பாற்றினர், 1983 கலவரம், ராஜிவ் உணவு வீசிய வடமராட்சி முற்றுகை என அன்று அதுதான் தமிழரை காத்தது, அப்படித்தான் அமைதிபடை அனுப்பி எம்மை காக்க வந்தது

ஆனால் புலிகள் மட்டும் முரண்டு பிடித்தன, திடீரென சிங்களனோடு இணைந்ததை எங்களாலே நம்ப முடியவில்லை, அவர்களாக எல்லா குழுக்களையும் துரோகி என்றனர், ஒழித்தனர், நாங்கள்தான் தமிழர் ஒரே பிரதிநிதி என்றனர். யார் இவர்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்தது என இன்றுவரை தெரியவில்லை,

இந்தியா ஒரே கட்டத்தில் ஒதுங்கி நின்றதென்றால் அது 2009ல் மட்டுமே, ஒரே காரணம் புலிகள், ஈழத்தில் அன்றாடம் அவர்கள் யாரையாவது கொல்வார்கள், ராஜிவின் கொலையினையும் அந்த கணக்கில்தான் வைத்தார்கள்.

ஆனால் இந்திய யதார்த்தபடி அது ஏற்றுகொள்ளமுடியாத விஷயம் என்பது பின்புதான் புலிகளுக்கு விளங்கிற்று.

அன்று பல அந்நிய சக்திகளின் உதவியால் புலிகளிடம் 1980களிலே நவீன ஆயுதங்கள் இருந்தன, அதனால்தான் பல இடங்களில் அவர்கள் வெற்றிபெற்றார்கள், சிங்கள ராணுவம் அப்பொழுதெல்லாம் நல்ல துப்பாக்கி கூட பார்த்ததில்லை, சீருடை கூட நன்றாக இருக்காது, ஆனால் அப்பொழுது அவர்களிடம் ஒரு மனிததன்மை இருந்தது, கொஞ்சம் சிந்திப்பார்கள்

ஆனால் புலிகளுக்காக தங்களை சிங்களர் பலபடுத்திகொண்டார்கள், வெளிநாட்டு தொடர்போடு மிக வலுவான ராணுவமாக உருவானார்கள், இஸ்ரேலிய ஆலோசனை படி அதாவது சந்தேகம் என வந்துவிட்டால் ஒருவனை கொல்லவேண்டிய இடத்தில் 1000 பேரை கொல்லும் படி அவர்கள் உருவாக்கபட்டார்கள்.

இந்திய அமைதிபடையோ 100 தோட்டா சுடவேண்டிய இடத்தில் 1 தான் சுடும், ஆனால் இஸ்ரேலிய சிங்களமோ 1 தோட்டா பாயவேண்டிய இடத்தில் 1000 பாய்ச்சியது.

இப்படி புலிகளின் போராட்டமுடிவு வலுவான சிங்கள ராணுவத்தை , இரக்கமில்லா சிங்களராணுவத்தை உருவாக்கியதே தவிர , தமிழருக்கு ஒன்றுமில்லை. இந்தியா தர வந்த அந்த உரிமைகள் கூட இன்று இல்லை. உரிமை கேட்க போய், உணவுக்கு கையேந்த எம்மை விட்டுவிட்டு புலிகள் சென்றாகிவிட்டது.

அவர்கள் காலத்தில் மின்சாரம் இல்லை, சாலை இல்லை, ஏன் ரயில் கூட யாழ்பாணத்திற்கு இல்லை (ரயிலில் ராணுவத்தார் வருவர் என தண்டவாளத்தை புலிகள் பெயர்த்தானர்), வரி கொடுமை உச்சத்தில் இருந்தது, நாங்கள் உலகின் மோசமான வாழ்க்கை நிலையில் இருந்தோம்

சிங்கள பகுதிக்கு வந்தபொழுது ஒரு குழந்தை தாயிடம் கேட்டது, அது எனம்ம்மா?, அது காட்டியபொருள் மின்விசிறி, புலிகள் கட்டுப்பாடு பகுதியில் அதனை அது பார்த்ததே இல்லை, இதுதான் புலி ஆட்சி

உங்கள் தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினை உண்டு, ஊழல் முதல் மொழி,அணுவுலை என மத்திய அரசோடு எத்தனையோ முரண்பாடு உண்டு, அதற்காக தனிநாடு கேட்போர்களா? மாட்டீர்கள்

காரணம் அப்படி கேட்டால் இந்த சிக்கல்கள் இன்னும் மிக பெரிதாக உருவாகும் என்று சிந்திக்கின்றீர்கள், அழிவி வரும் என சிந்திக்கின்றீர்கள், உலகில் யாரும் உங்களுக்காக வரமாட்டார்கள் என உங்களுக்கு தெரிகின்றது,

அமைதியாக வாழ்கின்றீர்கள்.

நாங்களும் அந்த முடிவில்தான் இருக்கின்றோம், 1970 வரை பெரும் சிக்கல் இல்லை, வோட்டிற்காக ஈழ அரசியல்வாதிகள் ஆயிரம் பேசினார்கள், இளைஞர் கூட்டம் பின் சென்றது, புலிகள் அதனை அழிவாக மாற்றிவிட்டார்கள்.

இப்பொழுது இலங்கை வளர்கின்றது, கொஞ்சநாளில் அது வளர்ச்சிபெறும், அதன் இயற்கை வளமும், கேந்திர முக்கியத்துவமும் அதற்கு உதவி செய்யும், 1900களின் நிலையினை அது எட்டும்

எல்லா ஈழ அகதிகளும் நிச்சயம் வருவார்கள், ஆனால் நாட்டை விட்டு கடத்திகொண்டுபோன தமிழீழம் மட்டும் வரவே வேண்டாம், அது வெளிநாட்டிலே இருக்கட்டும்.

பிரபாகரன் பிறந்து வளர்ந்தபின்புதான் இங்கு வேட்டு சத்தம், வெடிசத்தம் கேட்டது, அவர் இறந்தபின்பு பட்டாசு சத்தம் கூட இல்லை, இப்படியே அமைதியான வாழ்க்கை இருந்துவிட்டுபோகட்டும்

முள்ளிவாய்க்காலில் பிரபாகரனின் உடலை ஆராய்சி செய்த மருத்துவர் சொன்னார், தலை கொத்தபட்டிருந்தது மூளை காணவில்லை என்று. உயிரோடு இருக்கும்போது மட்டும் பிரபாகரன் தலையில் அது இருக்கவா செய்தது?"


Wednesday, May 25, 2016

மெழுகுவர்த்தி கலாசாரம்...





அதேதான் அந்த சந்தேகம் தான், மெழுகுவர்த்தி தமிழக கலாச்சாரமே இல்லையே, வெள்ளையன் அடையாளம் அல்லவா அது, அதனை ஜெபவழிபாட்டின் பொழுது சர்ச்சில் தானே இன்றுவரை கொளுத்துவார்கள்.

தமிழன் அடையாளம் குத்துவிளக்கு, அகல் விளக்கு அல்லவா? அதனை ஏன் தமிழர் வரலாற்றை 10 ஆயிரம் அடி ஆழத்தில் தோண்டி எடுக்கும் அங்கிள் கோஷ்டி சிந்திக்கவில்லை?

Stanley Rajan's photo.

# அதுவும் இரட்டை மெழுகு என்பது, கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலியின் பொழுது ஏற்றபடுவது,


( அன்றே ஒருவன் உளறிகொண்டிருந்தான், ஈழத்தில் இந்துமக்கள் என்பதால் மேற்குலகம் கண்டுகொள்ளவில்லை, அதுவே கிறிஸ்தவ ஈழம் என்றால் ஐரோப்பா கொதித்திருக்கும், இனி ஈழம் பெற ஒரே வழி கிறிஸ்தவ ஈழம் காண்பது என்று, அதற்கும் இந்த கத்தோலிக்க இரட்டை மெழுகுவர்த்திக்கும் தொடர்பில்லாமல் இருக்கும் வரை நல்லது :

முப்பாட்டன் எல்லாம் கொஞ்சகாலம்தான் போலும், இயேசு சேலத்தில் பிறந்தார் என வேறு குழப்பதொடங்கினார்கள்)

அங்கிளின் கிறிஸ்தவ அடையாளம் சின்னத்திலும் எதிரொலிக்கின்றதோ (?) , ஆனாலும் இதற்கும் அங்கிளின் அடிப்பொடிகள் அபார விளக்கம் வைத்திருக்கும், இப்பொழுது பின்னூட்டத்தில் இடுவார்கள் பாருங்கள்

கூட்டி கழித்து பார்த்ததில், ஏதோ கொஞ்சம் புரிகின்றது, கச்சதீவினை ஜெபமாலையால் மீட்கலாம், ஈழத்தை பைபிளால் அடையலாம்.

# நாம் ஈழகிறிஸ்தவர்கள்
















மோடி 11 மணிக்கு வாழ்த்து தெரிவித்த மர்மம் என்ன?





தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்தன 11 மணி நிலவரப்படி ஜே முதலிடத்தில் இருந்தார், வாழ்த்து சொல்லிவிட்டு தன் அலுவல்களை தொடர்ந்தார் மோடி, இதில் என்ன இருக்கின்றது? நாள் முழுவதும் டிவிபார்த்து மாலை 6 மணிக்கு வாழ்த்து சொல்ல அவர் என்ன அதிமுக வட்ட செயலாளரா?

திருடா திருடா படத்தில் மணிரத்னம் காட்டிய கண்டெய்னரிலே ஆயிரம் கோடி இருந்தது, மூன்று கண்டெய்னரின் 3 ஆயிரம் கோடி இருந்திருக்கலாம், கடுமையாக கண்டிக்கின்றார்கள், மர்மம் என்கின்றார்கள், விளக்கவேண்டும் என்கின்றார்கள்

சரி இதில் எந்த தலைவராவது ஒரு வழக்கு தொடர்ந்திருக்கின்றாரா? அப்படி தொடர்ந்து எஸ்பிஐ வங்கி அதிகாரியினை கோர்ட்டுக்கு அழைத்து ஆதாரம் காட்ட சொன்னால் தீர்ந்தது சந்தேகம், செய்வார்களா? நிச்சயம் மாட்டார்கள், காரணம் மடியில் கனம் அப்படி. ஆனால் பேசிகொண்டே இருப்பார்கள்.


இதனை எல்லாம் செய்யாமல் மோடி 11 மணிக்கு வாழ்த்து தெரிவித்த மர்ம்மம் என்ன? மோசடி தேர்தலா? என கடும் விமர்சனம்

ஆனானபட்ட காமராஜரே தோற்போம் என எதிர்பார்க்கவில்லை, அப்படியானால் அன்று நடந்தது கள்ள தேர்தலா? அப்படியும் அம்மனிதன் ஒரு வார்த்தை இப்படி எல்லாம் பேசவில்லை, அவனுக்கு தெரிந்த அரசியல் அப்படி.

இவர்களுக்கு தெரிந்ததெல்லாம், இவர்கள் வென்றால் மக்கள் தீர்ப்பு, இவர்கள் தோற்றால் ஏதோ ஆரிய சதி, தீரா மர்மம் இன்ன பிற அழிச்சாட்டியம்.







பாராளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி : சீமான்





பாராளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி : சீமான்

இந்திய தேசியம் வேண்டாமாம், இந்தியா எதிரியான யாசின் மாலிக்குடன் உறவாம், இந்திய எதிரியான பிரபாகரன் அண்ணனாம். இந்தியா தமிழரின் எதிரியாம்.

தமிழ்தேசியம் பேசுவார்களாம், தமிழர் இன விடுதலை மகா முக்கியமாம், ஆனால் பாரளுமன்ற தேர்தலில் தனித்துபோட்டி இடுவார்களாம், இந்தியா வேண்டாமென்றால் எதற்கு பாராளுமன்றம் செல்லவேண்டும்? எதற்கு எம்பி தேர்தலில் போட்டி இடவேண்டும்?


ஏதாவது புரிகின்றதா? ஒன்றும் புரியாது. அதுதான் சீமானிசம்.

இயேசுவினை திட்டவேண்டும், சிவலிங்கத்தை திட்டவேண்டும், ராமர் கோயில் இடிப்பேன் என சொல்லவேண்டும், நேரத்திற்கொரு வேடம் வேண்டும்.

தமிழக பிரச்சினைகளை விட்டு விட்டு ஈழகொடி பிடிக்கவேண்டும், வீரப்பன் போன்ற கொள்ளையர்களை பாராட்டவேண்டும், ஆனால் சுட்டுகொன்ற போலீசாரை பற்றி, ஜெயலலிதா அரசை பற்றி ஒன்றும் சொல்ல கூடாது.

பெரியாரை திட்டவேண்டும், வந்தேறிகள் என பலரை வெறுக்கவேண்டும், இப்படி எல்லா அட்டகாசங்களையும் மேடையில் செய்துவிட்டு, நான் தமிழன் எனக்கு வோட்டு போடுங்கள் என கெஞ்ச வேண்டும், பின் எங்கிருந்து வரும் வோட்டு, யாரை பகைக்காமல் இருந்தீர்கள்?

தோல்விக்கான காரணங்களை ஆராய்கின்றார்களாம், எதற்கு வீண் ஆராய்சி? பழைய சீமான் & அடிப்பொடிகளின் வீடியோக்களையும், பதிவுகளையுமே பாருங்கள், ஆதாரம் கொட்டி கிடக்கும்.

உலகத்தை பகைத்து, இந்தியாவின் பெரும் தலைவரை கொன்றுவிட்டு, உதவிக்கு யாருமே இல்லாமல் நாடு அடையலாம், எரித்த்யாவும் எத்தியோப்பியாவும் ஈழத்தை அங்கீகரிக்கும் அது போதும் என நம்பிய பிரபாகரனுக்கு ஆறாவது அறிவு உண்டோ இல்லையோ, உங்களுக்கு நிச்சயமாக அது இல்லை.







அமைதிப்படையும் இலங்கையர் சதியும்...




அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர்.

அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை.

ஈழ போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கிதான் வைத்தார், போராளிகளுக்கு பயிற்சிகள் தொடங்கிய காலத்திலும் வேண்டா வெறுப்பாக இறுதியில் வந்து சம்பிரதாயத்திற்குதான் கலந்து கொண்டனர் புலிகள். அவ்வப்போது இந்தியாவுடன் மோதும் சூழ்நிலை வரலாம் என்று எதிர்பார்த்தேதான் இருந்தார்.

அமைதிபடை சென்று இறங்கியதும் எல்லா குழுக்களும் ஆயுதம் ஒப்படைக்க, புலிகளும் சிலவற்றினை ஒப்படைத்து சுதுமலை மேடையில் "இந்தியாவினை நம்பி ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம்" என்றவுடன் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்பரித்தது, ஆனால் பிரபாகரனின் முகம் சிலநொடி சட்டென இருண்டது,

அமைதிபடை காலம் அமைதியாகத்தான் தொடங்கியது, 17 புலிகளை சிங்களன் கைது செய்யும்போது அவர்களிடம் சயனைடு இல்லை, ஆனால் புலிகள் சென்று பார்த்துவிட்டு வந்தபின் சயனைடு வந்தது, கொஞ்சநேரத்தில் அவர்கள் சாக பிரச்சினை வெடித்தது, பழி இந்தியா மேல்.

அதன்பின் புலிகளின் வரிவசூல் ஒப்பந்தத்தால் பாதிப்படைய, தீலிபனின் உண்ணாவிரதம் தொடங்கியது, அவனை காப்பாற்ற புலிகள் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை, அவன் செத்ததும் அவன் உடலோடு மக்கள் முன் சென்று ஒரு உணர்ச்சி எழுச்சி உண்டாக்கினர்.

அதன்பின் அது போராக வெடித்தது, இந்தியபடை சுற்றுலா செல்வது போல் சென்றிருந்தது, அந்த இடங்களின் வரைபடம் கூட அவர்களிடம் இல்லை, புலிகள் தங்களுடன் மோதுவார்கள் என கனவிலும் நினைக்கவில்லை, புரியாத புது இடத்தில் அது திணறியது. புலிகளின் தாக்குதல் அகோரமாக இருந்தது, இந்திய படைக்கு புலி எது? மக்கள் எது என தெரியவில்லை. தடுமாறியது.

உதாரணம் பனை உச்சியிலிருந்து ராணுவத்தை சுடுவார்கள், ஒரு வீட்டின் உள்ளிருந்து சுட்டுவிட்டு ஓடுவார்கள், ராணுவம் உள் செல்லும், விளக்கிற்காக சுவிட்சை போட்டால் குண்டு வெடிக்கும் இப்படி ஒரு வித்தியாசமான களம் அது.

மக்கள் யார், புலிகள் யார் என இந்தியபடைக்கு தெரியாது, மருத்துவமனையில் மக்களோடு நோயாளியாக படுத்திருக்கும் புலி, தெருவில் செல்லும் ராணுவம் மீது சுட்டுவிட்டு படுத்துகொள்ளும், ராணுவம் என்ன செய்யும்? ஒரே ஒரு முறை திருப்பி தாக்கியதில் மருத்துவமனை அழிந்தது, அதனை பெரும் செய்தியாக்கினர் புலிகள்.

மாலை மக்களை ஒன்றாக அமரவைத்து சில பாதுகாப்பு விஷயங்களை சொல்வார்கள் இந்திய ராணுவத்தார், நடு கூட்டத்திலிருந்து ஒரு புலி சுடும், திரும்ப மொத்த மக்களை கொல்லவா முடியும்? ராணுவம் திணறும்.

திண்ணையில் வெற்றிலை இடிக்கும் பாட்டி ராணுவம் வீட்டை கடந்ததும், முந்தானையில் இருக்கும் ரிமோட்டை அமுக்குவார், வாகனம் சிதறும். பள்ளி மாணவிகள் உள்ளாடைகளில் தோட்டா முதலான ஆயுதம் கடத்தபடும், எப்படி சோதிக்க? சில மாணவிகள் செக்போஸ்டை கடக்கும்போது அசால்டாக புத்தக பையினை எறிவார்கள் அது வெடிக்கும், சோதனை மற்ற மாணவிகள் மீது நடக்கும், அதற்கும் இந்திய ராணுவம் கற்பழிக்கின்றது என செய்தி பரவும்.

ஒரு கட்டத்தில் தவறான தகவலை பரப்பவிட்டு 300 ராணுவத்தினரை மொத்தமாக கொன்று, அவர்கள் உடலை அம்மணமாக ஒப்படைத்தனர் புலிகள், சர்வதேச சட்டபடி அது ஒரு தேச அவமானம், இந்திய ராணுவ உச்சம் அவமானத்தால் தலைகுனிந்த நேரம் அது. அப்படி செய்திருக்க கூடாது.

எந்த நாடும் தன் நாட்டில் அந்நிய ராணுவம் இருக்க அனுமதிக்க்காது, உண்மையில் மோதி இருக்கவேண்டியது சிங்கள படை, ஆனால் தமிழ் மக்களும், இந்திய ராணுவமும் பாதுகாப்பில்லாமல் இருக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது சிங்கள இனம் மட்டுமே, புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து மகிழ்ந்தார் பிரேமதாச.

இதுதான் உலகின் 4ம் பெரும் ராணுவமான இந்திய ராணுவத்தை புலிகள் விரட்டிய வரலாறு, நேருக்கு நேர் எல்லாம் மோதவில்லை, இன்னொன்று இந்திய ராணுவம் அழிவுகளை குறித்து கவனமாக போராடிற்று, அப்படியும் பிரபாகரனை முடக்கிய சமயத்தில்தான் விபி சிங் படை மீட்டார்.

இதே தந்திரத்தை, அதாவது மக்களோடு மறைந்து தாக்கும் வித்தையினை 2009ல் சிங்களனிடம் காட்டிய புலிகள் மொத்தமாக வாங்கி கட்டி அழிந்தனர், யாரைபற்றியும் கவலைபடாத சிங்களம் மொத்தமாக அழித்தது.

பிரபாகரனின் உடல் கோவணத்துடன் கிடந்தது, அன்று 300 இந்திய ராணுவ வீரர் உடல்களை அம்மணமாக்கி கொடுத்த வினை, பின் அவருக்கே திரும்பியது. யுத்த களத்தில் ஒரு உச்சகட்ட அவமானம் அது. அதனால்தான் சிங்களன் அந்த படத்தினை திரும்ப திரும்ப காட்டினான்.

அந்த அமைதிபடையினை மட்டும் விரட்டியிருக்காவிட்டால், இன்று வடக்கு கிழக்கு இணைந்த ஈழ மாகாண முதல்வராக ஒரு தமிழன் இருப்பார், பின்புலத்தில் இந்தியா இருக்கும், இந்திய தளமும் அந்நாட்டில் தொடர்ந்து இருந்திருக்கும், ஈழ மக்கள் இவ்வளவு துன்பம் அடைந்திருக்கமாட்டார்கள், 25 வருட அழிவும், முள்ளிவாய்க்கால் கொடுமையும் நடந்திருக்காது.

இந்திய ராணுவம் அன்று பின் வாங்க ஒரே காரணம் புலிகளின் பிரச்சார ஊடகங்களும், சிங்கள அரசு புலிகளுக்கு கொடுத்த மகா ஒத்துழைப்புமே, இன்று வரை அது அப்படியே நிலைத்துவிட்டது, அமைதிபடை அழித்தது, கற்பழித்தது. புலிகளின் ஊடகபலம் அப்படி. இதோ ராஜிவ் கொலை குற்றவாளி 5 புலிகள், 2 தமிழகத்தார் என்பதை 7 தமிழர்கள் என லாவகமாக மறைத்தார்கள் அல்லவா? அப்படியே தான்.

Stanley Rajan's photo.

ஒவ்வொரு இந்தியனும் வீர வணக்கம் செலுத்த வேண்டிய  இடம்...


அமைதிபடை காலத்தில் 1500 இந்திய வீரர்கள் செத்தனர், பெரும்பாலும் சீக்கிய சகோதரர்கள், அவர்களுக்கு இலங்கையில் இன்றும் நினைவு மண்டபம் உண்டு, அவர்கள் பெயர் எல்லாம் பொறிக்கபட்டுள்ளன.

மக்களை முன்னிறுத்தி செய்யபடும் இடத்தில் எமது பெருமை மிக ராணுவம் தன் உயிரை இழக்குமே ஒழிய, அப்பாவிகளை கொல்லாது என்பதற்கு பெரும் அடையாளமாக அது உள்ளது, இலங்கை செல்லும் எல்லா இந்திய ராஜதந்திரிகளும் அதனை வணங்க தவறுவதே இல்லை.

நிச்சயம் கண்ணீரால் வணங்கவேண்டிய இடம் அது, இந்த புலிகளால் ஒரு நாளில் லட்சகணக்கான அப்பாவி மக்கள் சாவார்கள் என முன்னறிவித்த இடம் அது, அந்த , முள்ளிவாய்க்கால் காலத்தையும் அமைதிபடை காலத்தையும் ஒப்பிட்டு அமைதிபடை காலத்தில் இருந்த ஈழத்தவரிடம் கேட்டால் சொல்வார்கள்

சிங்கள ராணுவம் என்பது எவ்வளவு இரக்கமில்லாத அமைப்பு என்பது எங்களுக்கு பின்னாளில்தான் விளங்கிற்று, அப்படி பார்க்கும்பொழுது இந்திய ராணுவம் ஓரளவு பொறுமையுடந்தான் போராடிற்று, முடிந்த அளவு பொறுமை காத்தது, அழிவுகளையும் அவமானங்களையும் பொறுத்துகொண்டது.

மக்கள் அழிவுகளை பற்றி கவலை இன்றி அடித்து நொறுக்கி இருக்குமானால் புலிகளை வீழ்த்த அதற்கு 1 நாள் கூட ஆகியிருக்காது.

ஆயிரம் அர்த்தம் நிறைந்த வார்த்தை அது,

உதவ வந்த அந்த படையினை விரட்டிவிட்டு, மொத்த வன்னிமக்களையும் முள்ளிவாய்க்காலில் சிங்களனிடம் ஒப்படைத்துவிட்டு, இனபடுகொலை, வெள்ளைகொடி படுகொலை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் சொல்வதை 1500 வீரர்களையும் ஒரு தலைவனையும் இழந்து, பெரும் பழி சுமத்தபட்ட‌ இந்த பெரும் தேசம் எப்படி எடுத்துகொள்ளும்?

ஈழத்தில் என்ன பிரச்சினை என்பதற்கு முன்பு ராஜிவ்காந்தி அருமையான பதில் சொன்னார்,

"ஒரு நபர் தன் ஆயுதத்தை கீழே வைத்தால் மறுநொடி கொல்லபடுவோம் என அஞ்சுகின்றார், ஆயுதம் இல்லாமல் அவரால் வாழமுடியாது. தன் ஆளுகைகுட்பட்ட நாட்டில், காலம் வரை ஆயுத துணையோடு வாழும் முடிவில் அவர் இருக்கின்றார், அதுதான் பெரும் பிரச்சினை" ,

பின்னாளைய வரலாறு அதனை உண்மை என காட்டிற்று.













Tuesday, May 24, 2016

மறக்க முடியா மாமனிதர் பத்மநாபா, ஈழத்து சேகுவேரா..




பத்மநாபாவினை பற்றி ஏன் சொல்கிறாய், அப்படி என்ன அவன் கிழித்துவிட்டான் என்றெல்லாம் கேட்கின்றார்கள்

அன்றே உலகம் சுற்றியவன் அவன், லெபானன் வரை சென்று போராளிகளின் உலகில் பாடம் கற்றவன் அவன், சொந்தமாக அவன் செய்யாத ஆயுதமில்லை, அவனால் ஒரு தமிழன் கொல்லபட்டதுமில்லை, சிங்கள அரசின் பாதுகாப்பு இலக்கினை மட்டும் தாக்கியவன் அவன், பலமுறை சிங்கள ராணுவத்தை முடக்கிய சாதனை அவனுடையது.

உலகநிலையினை விரல்நுனியினில் வைத்திருந்தான், அவன் கணித்த அந்த கணிப்புமட்டுமே அவனது அறிவாற்றலுக்கு சான்று

"இந்தியா ஏகாதிபத்திய எதிர்ப்புநாடாக இருக்கும் வரை ஈழபோராட்டத்தை அங்கீகரிக்கும்",

அதாவது அன்று இந்தியா சோவியத் யூனியன் முகாமிலிருந்தது, ராஜிவ்காந்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்தினை கடுமையாக எதிர்த்தவர், பின்னாளில் அதற்காகவே புலிகள் எனும் கூலிபடை மூலம் கொல்லவும் பட்டார், 2009ல் புலிகளை அழிக்க கங்கணம் கட்டிய நாடுகளில் முதலிடம் ஏகாதிபத்திய நாடுகளுக்குத்தான், அதாவது எல்லா குழுக்களையும் புலிகள் ஒழிக்க, புலிகளை ஏகாதிபத்தியமே வீழ்த்திற்று.

இப்படி உலகை துல்லியமாக கணித்த பெரும் அறிவாளி அவன், அதனை விட பாராட்டதக்கது அவனது கல்வி ஆர்வம், இந்தியாவில் அவர் பாதுகாப்பாக வட இந்தியாவில்தான் இருந்தார், எப்பொழுதாவது சென்னை வருவார், புலிகளால் அனுப்பபட்ட உளவாளி ஒன்று அவர்முன் அழுதது, படிக்க வையுங்கள் என கதறியது, அவரும் படிக்கவைத்து, செலவுகளையும் தாங்கினார்.

ஆனால் புலிகளுக்கு ஏது மனசாட்சி?, சென்னை வரும்போது அந்த புலி அவரை காட்டிகொடுத்தது, சிவராசன் சுட்டுகொன்றான். அப்புலிதான் இன்று ராஜிவ் கொலைவழக்கில் தூக்கு கயிறு முன் நிற்கும் சின்ன சாந்தன். இப்படி துரோகம் ஒன்றிலே வளர்ந்த இயக்கம் புலிகள்.

படித்தவன் எவனும் புலிகளுடனோ அல்லது எதிர்முகாமிலோ இருக்க கூடாது என்பது புலிகொள்கை, உடனே கொன்றுவிடுவார்கள், புலிதலைவர் 8ம் வகுப்பு படித்தவர் என்பதால் அப்படி இருக்கலாம், பாலசிங்கம், கேபி போன்ற சிலர் மட்டும் பிரபாகரனை தலைவர் என்றதால் தப்பினர்.

ஆயுத தொழிற்சாலை நடத்திய புலிகள் ஏதும் கல்வி நிலையம் நடத்தினார்களா? இல்லை, அல்லது சிறுவர்களையாவது படிக்கவிட்டார்களா? அதுவும் இல்லை, படிப்பு அவர்களுக்கு ஆகாது. இவ்வளவுதான் புலிகள்

ஈழத்தில் இருந்தபொழுதே பத்மநாபா மீதான தற்கொலை தாக்குதலுக்கு ஆளனுப்பினர் புலிகள், நபர் அகபட்டுகொண்டார், அவரை மன்னித்து உயிரோடு திருப்பி அனுப்பினார் பத்மநாபா, இதே இடத்தில் பிரபாகரன் என்ன செய்தார் தெரியுமா? தன்னை கொல்ல சதிசெய்தான் என மாத்தையாவினை 800 புலிகளோடு கொன்றார்.

சொல்லுங்கள், யாருக்கு இருந்தது மானிட நேயம், யாருக்கு இருந்தது தலமைக்கான தகுதி?

அமைதிபடை தேர்தலில் நாபாதான் வென்றார், ஆனால் பதவியினை வரதனுக்கு விட்டுகொடுத்த பெரும் மனதுக்காரர் அவர், அப்பதவியில் இருந்துகொண்டு பிரபாகரனின் கதை முடிக்க கொஞ்ச நாழிகை ஆகியிருக்காது

ஈழபோராட்டத்தின் பெரும் தவறு ராஜிவ் கொலை மட்டும் அல்ல, அதன் பின் போராட ஒருவரும் இல்லாமல் புலிகள் மொத்தமாய் அழித்து தானும் அழிந்தது, பத்மநாபா கொலை புலிகளின் பெரும் தவறு.

ஈழவரலாற்றில் பங்கரில் பதுங்காமல், வெட்டி அறிக்கை விடாமல், யார் கழுத்திலும் சயனைடு கட்டாமல், குண்டு சட்டை அணிவிக்காமல் ஒரு போராளி மக்களோடு மக்களாக வாழ்ந்தான் என்றால் அது பத்மநாபா மட்டுமே, அவனை புலிகள் அழிக்க ஒரே காரணம் அவனின் பொதுவுடமை கொள்கை, சொல்லிகொடுத்தது ஏகாதிபத்திய உளவுதுறை.

பத்மநாபா கொல்லபட்ட அன்றே ஈழப்போராட்டம் ஓய்ந்தது. மறக்க முடியா மாமனிதர் பத்மநாபா, ஈழத்து சேகுவேரா.

Stanley Rajan's photo.

இவரை பற்றி எல்லாம் தமிழகத்தில் எந்த அரசியல்வாதியும் பேசமாட்டான், காரணம் பேசுவதற்கு யார் பணம் கொடுப்பார்கள்?

ஈழத்தில் இப்படி எத்தனையோ மாவீரர்களும் சிந்தனையாளர்களும் இருந்தார்கள் அவர்களை பற்றியெல்லாம் , அவர்களை கொன்ற புலிகளை பற்றியெல்லாம் ஒருவருக்கும் தெரியாது,

தெரிந்ததெல்லாம் புலிகள் பிரபாகரன், ஈழம் அழித்தது கருணாநிதி, சோனியா அவ்வளவுதான்

இந்தியா மறக்காது: தனது இன்னுயிர் நண்பரை
இந்தியா மன்னிக்காது: எல்லா துரோகிகளையும்.

நான் - ஒரு இந்தியன் அதுவும் தமிழன். இந்தியத் தமிழன்

கோழையான புலிகள் வழக்கமான பாணியில் கொன்றிருந்தாலும், அக்கொலைக்கு தமிழக அரசும் ஒரு காரணம், அது பாதுகாப்பு வழங்காததும் காரணம், வைகோவின் திமுக செல்வாக்கும், அந்த புலி ஆதரவும் காரணம்,

இந்த பத்மநாபாவினை கொல்ல அனுமதித்த விளைவுதான் ராஜிவ் கொலையாக முடிந்தது, அன்றே கலைஞர் அரசு கடும் புலிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் எடுத்தால் ராஜிவ் கொலை நடந்திருக்காது,

அப்படி விடாமல் தடுத்தது வைகோ, அதன் பின்னும் புலிகளுக்கு ஆதரவளித்து, மறுபடி காலூன்ற போராடியவர் வைகோ, ஒரு தேசதுரோகி அவர்.

அந்த வைகோ, இந்த ஒரு தேசதுரோகி சீமான் போன்றவர்கள் தமிழக அரசியலில் இருந்தே அப்புறபடுத்தவேண்டிய தேசதுரோகி கள், தமிழகம் அதனைத்தான் செய்துகொண்டே இருக்கின்றது












Wednesday, May 11, 2016

அமைதிப்படை செய்ததுதான் என்ன?




(ஒரு பெரும் ஈழசிந்தனையாளர் தரிசனமான பொழுது)

அமைதிபடை பற்றி தெரியாமல் புலிகளை எப்படி விமர்சிக்கலாம் நீ

போராளிகுழுக்களின் கட்டுகடங்காத தாக்குதலால் , சிங்கள பதிலடியால் பொதுமக்கள் பலியாவதை தடுக்க இந்திய அமைதி ஒப்பந்தபடி போர் நிறுத்தம் செய்ய சென்ற படை அது

இல்லை, அது கற்பழிக்க என்றே அனுப்பபட்டது

யாருக்கெல்லம் சண்டை?

போராளி குழுக்களுக்கும், சிங்களனுக்கும்.

இதில் அடிபட்டது யார்?

ஈழ தமிழர்கள்

காப்பாற்ற சென்ற படை ஏன் கற்பழிக்கும்?

இல்லை இந்திய அரசு கற்பழிக்க சொன்னது, அவர்கள் செய்தார்கள், புலிகள் எதிர்த்தார்கள்

பெண்புலிகள் ஆயுதம் கொண்டு செல்வதை வேறு எப்படி இந்திய ராணுவம் சோதிக்கும், மூதாட்டிகள் கூட புலிகளால் மிரட்டி ஆயுதம் கடத்தவைத்தபொழுது ராணுவம் என்ன செய்யும்? கடந்து செல்லும் பெண்கள் கைகுண்டை வீசி விட்டு சென்றால் மற்ற பெண்களை ராணுவம் சந்தேகபடாதா?

மூடனே, பெண்புலி குண்டுவீசத்தான் செய்வாள், அதற்காக சோதித்தால் நாங்கள் அதனை கற்பழிப்பு என்றுதான் சொல்வோம், அப்படி உயிர்பயம் இருந்தால் இந்திய ராணுவம் தப்பி சென்று ராஜிவினை அடித்திருக்கவேண்டும், எமது மறகுல பெண்களிடம் சோதனை இட்டிருக்க கூடாது.

மொத்தம் எத்தனை போராளிகுழுக்கள் உண்டு?, அவர்கள் எல்லோரும் அமைதி ஒப்பந்தம் ஏற்றுகொள்ள புலிகளுக்கு ஏன் விருப்பமில்லை.

அவர்கள் கோழைகள் அடிவருடிகள், நாங்கள் மானமிக்கவர்கள் வீரமிக்கவர்கள் மோதினோம்,

அப்படி மானமிக்கவர்கள் சிங்கனிடமல்லவா ஆயுதம் வாங்கினீர்கள்?, ஒன்றாகிவிட்டீர்கள். உங்கள் சண்டைக்கு மத்தியஸ்தம் செய்யவந்த இந்தியா பையித்தியக்கார நாடா?

இல்லை, தனிநாடு உருவாக்கி புலிகளிடம் கொடுத்திருக்கவேண்டும் இந்தியா செய்த தவறு அது. புலிகள் அர்பணிப்பு மிக்க போராளிகள். , உதவிய இந்திராவின் மகனையும் கொன்றோம், ஆயுதம் தந்த பிரேமதாசாவினையும் கொன்றோம், இதெல்ல்லாம் புலிகளின் பதுங்கி பாயும் தந்திரம், உனக்கு புரியாது. ராஜபக்சேக்கு மட்டும் புரியும்

அப்படியானல் மற்றகுழுக்கள் எல்லாம் வீணானதா? எவ்வளவு பெரும் வீரர்களை புலிகள் கொன்றார்கள், அவர்கள் ஆள தகுதி இல்லாதவர்களா?

புலிகளை தவிர எந்த போராளி இருக்கமுடியும்?அதான் புலிகள் கொன்றுவிட்டார்கள் . பின் நாங்கள் புலிகள்தான் இருக்கின்றோம் அதனால் நாங்கள் மட்டும் தகுதியானவர்கள்.

அப்படி நாடு அறிவித்திருந்தாலும் யார் ஆள்வார், தேர்தல் நடத்தவேண்டும் அல்லவா? உலகம் அப்பொழுதுதானே அங்கீகரிக்கும்

அதெல்லாம் ஏன்? நாடு உருவாக்கி பிரபாகரனிடம் கொடுத்துவிடவேண்டும், அப்படி செய்யாத புலிகளை தவிர எந்த போராளி இருக்கமுடியும்?படையுடன் நாங்கள் மோதத்தான் செய்வோம், அவதூறுகளை பரப்புவோம். எமக்கும் சிங்களனுக்கும் சண்டை இடையில் நீங்கள் யார்?

மக்கள் சாவர்கள், அகதிகளாக அலைவார்கள், அகதிகளுக்கெல்லாம் யார் உணவளிப்பார்? அந்த குழந்தைகள் நிலை, எதிர்காலம்?

அவர்கள் சாகட்டும், போராடி சாகாவிட்டால் அகதிகளாக பட்டிணியாக சாகட்டும், அதனை பற்றி எல்லாம் கவலை இல்லை, ஆனால் இது மக்கள் விடுதலைபோராட்டம் என உலகம் நம்பவேண்டும்

சரி, இந்திய அமைதிபடை வராவிட்டால் ஐநா படையோ அல்லது பாகிஸ்தான் படையோ வரவாய்ப்பு இருந்தது அல்லவா?

யார் வந்தாலும் விரட்டி இருப்போம், எமது பலம் அப்படி.

பின்னர் ஏன் 2009ல் இந்தியாவினை அழைத்தீர்கள்,சோனியா கலைஞரை திட்டினீர்கள்

சிங்களனுடன் உலகமே சேர்ந்ததல்லவா? எங்களுக்கு யாருமில்லை, தமிழனுக்கு யாருமில்லை, தமிழனுக்கு நாடில்லை.

இப்படி ஒரு கட்டத்தில்தானே 1987ல் அமைதிபடை வந்தது, 1500 வீரர்களை கொன்றுதானே அவர்களை விரட்டினீர்கள், பின்னர் நீங்கள் அழைக்கும்போதெல்லாம் வர அது என்ன செல்ல நாய்குட்டியா?

இல்லை, உங்களுக்கு இரக்கமில்லை. அன்றே பிரபாகரனிடம் ஈழ ஆட்சியினை கொடுத்தால் இப்படி நடந்திருக்காது

அப்படியானால் அவர் ஆளத்தான் ஈழம் கேட்டாரா? அதுதான் போராட்டம் அப்பத்தானே?

அவர் மாவீரர், இந்த வீரநாட்டை அவர்தான் ஆளவேண்டும் அதுதான் புலிகள் விருப்பம். மக்களே புலிகள், புலிகளே மக்கள்

பார், சிங்களனுக்கும் தமிழருக்கும் சண்டை, கொல்லபட்டது தமிழர்கள், சண்டை நிறுத்த வந்தது இந்தியபடை, ஆனால் மோதிகொண்டது தமிழரும் இந்தியரும், வேடிக்கை பார்த்தது சிங்களம் இந்த நிலையினை உருவாக்கியது யார்?

பேசாதே 2009ல் நீங்கள் வரவில்லை, தடுக்கவில்லை

எமது ராணுவதளம் இங்கிருந்தால், புலிகள் அமைதியாக இருந்தால் சிங்களன் ஒரு தமிழனை தொட்டுபார்த்திருப்பானா?

இல்லை நீங்கள் இருந்திருந்தால் தனிஈழம் கிடைக்காது, அதான் விரட்டினோம்

இன்று மட்டும் தனிஈழத்திலா வாழ்கின்றீர்கள், ஆனால் அப்படிமோதியிருக்காவிட்டால் 8 லட்சம் மக்கள் அங்கு அமைதியான வாழக்கை வாழ்ந்துகொண்டிருப்பார்கள், 2 லட்சம் பேர் செத்திருக்கமாட்டார்கள், இவ்வளவு அழிவு நடந்திருக்காது அல்லவா?

இல்லை எமது வீரமிக்க போராட்டத்தை உலகம் அறிந்திருக்காது. முடிவு எப்படியும் போகட்டும்

பின்னர் ஏன் கலைஞர்,சோனியா,இந்தியா என ஒப்பாரி வைக்கின்றீர்கள்.

அதனை சொல்லாவிட்டால் எப்படி அரசியல் செய்வது? அதுவும் தேர்தல் நேரத்தில் எப்படி கட்சி வளர்ப்பது.

(புலிகளின் கொரில்லா தாக்குதலால் செத்துகிடக்கும் இந்திய வீரர்களும்,
அந்த 1500 வீரர்கள் நினைவாக‌
அமைக்கபட்டிருக்கும் நினைவு அடையாளமும்)







Stanley Rajan's photo.Stanley Rajan's photo.






சிதரல்கள்

1 பச்சமுத்து உள்ளிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை பாமக ஓயாது: ஏ.கே.மூர்த்தி அறிக்கை

# ஆமாம் ஓயமாட்டார்கள், மணல் முதல் கிராணைட் வரை எத்தனை குற்றவாளிகள் தண்டிக்க பாடுபட்ட கட்சி அது, எத்தனை சாதிய கொலைகுற்றவாளிகளை பிடித்தே கொடுத்திருக்கின்றது, இந்த பச்சமுத்துவினை எல்லாம் அது விடவே விடாது.

# இன்னும் 2 நாளில் சில உடன்படிக்கைகளுக்கு பின் இன்னொரு கச்சமுத்து அல்லது மிச்சமுத்துவினை தண்டிக்க கிளம்புவார்களே ஒழிய ஓய மாட்டார்கள்.

 

2 அடேய் மங்குனிகளா?, ஜெயலலிதாவினை விடுங்கள் அனுமதி மறுத்த கமிஷனரை ஏதாவது சொன்னீர்களா? "நீ எல்லாம் தமிழனா?, தமிழின துரோகி" என சொல்லி அவர் சட்டையினை எல்லாம் பிடிக்கவேண்டாம்,

மாறாக அவரின் தழிழின, தமிழன் இன உணர்வினையாவது சோதித்து பார்க்கவேண்டாமா?, அவரை விட்டுவிட்டு முகநூலில் முகம் தெரியாதவனிடம் எல்லாம் கேள்வி கேட்கின்றீர்களா?

உங்களில் ஒருவனாவது அந்த கமிஷணரிடம் உன் சாதியினை சொல், நீ வந்தேறியா? தமிழனா என நான் சொல்கிறேன் என கேட்டீர்களா?

Saturday, May 7, 2016

24




நடிகர் சூர்யாவின் 24 எனும் சொத்தை திரைகாவியத்தை காணும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளபட்டேன், கதை என்னவோ கால எந்திரம் எனும் டைம் மெஷின் பற்றியது, என்ன மெஷினோ? படம்பார்க்கும்பொழுது அப்படி ஒரு வாட்ச் கிடைத்திருந்தால் 2 மணிநேரம் முன்சென்று கொடுத்த காசை காப்பாற்றி இருக்கலாம்.

ஆனால் படம்பார்க்கும் பொழுது வந்த சிந்தனை இப்படியானது, இப்படி மட்டும் நமக்கு ஒரு வாட்ச் கிடைத்திருந்தால் 90 வருடத்திற்கு முன் திருகுவளைக்கு சென்று அந்த குழந்தையினை கடத்தி கட்டுமரத்திலோ அல்லது கப்பலிலோ நாடு கடத்தி இருக்கலாம், இன்னொரு நாடு அழிந்திருக்கும். காமராஜர் நிம்மதியாக கூட 10 வருடம் ஆண்டிருப்பார்.


Stanley Rajan's photo.

இல்லாவிட்டால் 67 வருடம் முன்பு சென்று மைசூரில் ஒரு பெண்குழந்தையினை கடத்தி அன்னை தெரசா ஆசிரமத்தில் விட்டிருந்தாலும் தமிழகம் நன்றாக இருந்திருக்கும்.

45 வருடம் முன் சென்று ராமநாதபுரம் அருகேய்யான‌ கிராமத்தில் ஒரு சிறுவனுக்கு பாட்டிகளின் குழாயடி சண்டை, கோழி களவு சண்டையினை பார்க்காதே, பின்னாளில் மேடைகளில் அதே பாணி தெரு சண்டையினை போடுவாய் அசிங்கமாக இருக்கும் என அறிவுரை சொல்லி இருக்கலாம்.

அட 10 வருடம் முன்பு சென்று கூட பிரபாகரனிடம் சொல்லி, நீரும் இருக்கமாட்டீர், ஒருவன் தமிழகத்தில் உமது பெயரை சுத்தமாக கெடுத்துவிடுவான், கடைசி கொலையாக அவனை மட்டும் தட்டிவிடும், அது தமிழீழம் அடைவதை விட மகா முக்கியமான பணி என கெஞ்சி இருக்கலாம்.

என்ன செய்ய கிடைக்காமல் போய்விட்டது.

>> நட்சத்திர கிரிக்கெட்டில் சூர்யா இருமுறை 0 ரன்னில் வரும்போதே தெரிந்தது அன்னாருக்கு நேரம் சரியில்லை என்று, அது எல்லாம் 24 மணி நேரத்தில் சரியாகும் விஷயமில்லை.