Tuesday, May 31, 2016

சீமானைப பற்றி ஈழப்பெரியவர்

ஒரு ஈழபெரியவர் சொன்னார், "அய்யா உங்கள் தமிழகத்தில் சீமான் என்பவரின் வீடியோ பார்த்தேன், பகிரங்கமாக பொய்சொல்லிகொண்டிருந்தார், அதாவது ஒரு சிங்களன் சடலத்தை ஒரு புலி உதைத்தாகவும், பிரபாகரன் ஓடிவந்து அவனை அடித்து அந்த சிங்களனுக்கு வீரவணக்கம் சொல்ல சொன்னதாகவும் பொய் சொல்லிகொண்டிருந்தார்

அவர்கள் புலிகள் யாரையும் மதித்தவர்கள் இல்லை, நீங்கள் சொன்னது போலவே இந்திய அமைதிபடை வீரர்கள் உடலை அம்மணமாக்கி அவமரியாதை செய்தவர்கள், அதிலும் கிட்டு என்று ஒருவன் இருந்தான், ஒரு கன்னிவெடியில் சிங்களன் கால் இழக்க, அந்த துண்டிக்கபட்ட காலை யாழ்பாணமெங்கும் கோவில்கள் முன் காட்சிக்கு வைத்தான் அவன், மக்களுக்கு அது பெரும் தவறு என தெரிந்து சொன்னாலும் அவன் கேட்கவில்லை


கோவில் வாசலெல்லாம் வைத்து கண்காட்சி நடத்தினான்.

அடுத்த 6ம் நாள் உட்கட்சி பூசலில் அவன் காலை புலிகளே குண்டுவீசி துண்டித்தனர், அப்படி தெய்வத்திற்கே பொறுக்காத அட்டகாச அவமரியாதைகளை செய்தவர்கள் புலிகள், இந்த சீமான் சொல்வதெல்லாம் படுபயங்கர பொய் அய்யா, புலிகளின் பெரும் பலம் பொய்களை அவிழ்த்துவிடுவது, உங்கள் நாட்டில் சீமானும் அதனைத்தான் செய்கிறார்"

No comments:

Post a Comment