Wednesday, May 25, 2016

மோடி 11 மணிக்கு வாழ்த்து தெரிவித்த மர்மம் என்ன?





தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்தன 11 மணி நிலவரப்படி ஜே முதலிடத்தில் இருந்தார், வாழ்த்து சொல்லிவிட்டு தன் அலுவல்களை தொடர்ந்தார் மோடி, இதில் என்ன இருக்கின்றது? நாள் முழுவதும் டிவிபார்த்து மாலை 6 மணிக்கு வாழ்த்து சொல்ல அவர் என்ன அதிமுக வட்ட செயலாளரா?

திருடா திருடா படத்தில் மணிரத்னம் காட்டிய கண்டெய்னரிலே ஆயிரம் கோடி இருந்தது, மூன்று கண்டெய்னரின் 3 ஆயிரம் கோடி இருந்திருக்கலாம், கடுமையாக கண்டிக்கின்றார்கள், மர்மம் என்கின்றார்கள், விளக்கவேண்டும் என்கின்றார்கள்

சரி இதில் எந்த தலைவராவது ஒரு வழக்கு தொடர்ந்திருக்கின்றாரா? அப்படி தொடர்ந்து எஸ்பிஐ வங்கி அதிகாரியினை கோர்ட்டுக்கு அழைத்து ஆதாரம் காட்ட சொன்னால் தீர்ந்தது சந்தேகம், செய்வார்களா? நிச்சயம் மாட்டார்கள், காரணம் மடியில் கனம் அப்படி. ஆனால் பேசிகொண்டே இருப்பார்கள்.


இதனை எல்லாம் செய்யாமல் மோடி 11 மணிக்கு வாழ்த்து தெரிவித்த மர்ம்மம் என்ன? மோசடி தேர்தலா? என கடும் விமர்சனம்

ஆனானபட்ட காமராஜரே தோற்போம் என எதிர்பார்க்கவில்லை, அப்படியானால் அன்று நடந்தது கள்ள தேர்தலா? அப்படியும் அம்மனிதன் ஒரு வார்த்தை இப்படி எல்லாம் பேசவில்லை, அவனுக்கு தெரிந்த அரசியல் அப்படி.

இவர்களுக்கு தெரிந்ததெல்லாம், இவர்கள் வென்றால் மக்கள் தீர்ப்பு, இவர்கள் தோற்றால் ஏதோ ஆரிய சதி, தீரா மர்மம் இன்ன பிற அழிச்சாட்டியம்.







No comments:

Post a Comment