Sunday, April 30, 2017

உலகம் முழுக்க மே தினம் கொண்டாடப்பட போகின்றது



Image may contain: 1 person, standing, sky, cloud and outdoor


உலகம் முழுக்க மே தினம் கொண்டாடப்பட போகின்றது


அது எப்படி உலக தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றது என்றால், இந்த தொழிலாளி மானிட வர்க்கம் தாண்டி வந்திருக்கும் கொடூர காலம் அப்படியானது.


ஆதிகாலத்தில் தொழிலாளியின் பெயர் அடிமை, ஒரு அடிமை என்பவன் வாய்பேசும் மாடு அல்லது ஒட்டகம். மற்றபடி அவனுக்கு எந்த உரிமையோ பாதுகாப்போ இல்லை.


இந்த அடிமை முறை பைபிள் எழுதபட்ட காலத்திலே இருந்தது என்றாலும், அது சர்ச்சையாக வெடித்தகாலம் தொழில்புரட்சி காலமும், வெள்ளையன் உலகெல்லாம் சென்று தோடங்கள் அமைத்த காலமும், சுரங்கங்கள் அதிவேகமாக தோண்டபட்ட காலமும்தான்.


அதில் ஆப்ரிக்க அடிமைகள் கடுமையாக பாதிக்கபட்டார்கள், ஆனால் குரலெழுப்ப முடியாது. மற்ற தொழிலாளர்கள் ஓரளவிற்கு குரலெழுப்பி 15 மணிநேர வேலையினை 8 மணிநேரமாக குறைக்க அமெரிக்காவிலும், இன்னபிற நாடுகளிலும் போராடிகொண்டிருந்தார்கள்.


லிங்கனின் அடிமைமுறை ஒழிப்பிற்கு பின் அமெரிக்க கருப்பர்களும் அவ்வுரிமையினை கேட்டு போராடினர், முதலாளி வர்க்கத்தின் கடும் கெடுபிடியினையும் தாண்டி அவர்கள் வெற்றிபெற்றனர், மார்க்ஸின் முழக்கமும், சோவியத் யூனியனின் அசுரபலமும் உலகில் தொழிலாளர் நலம் காத்தன.


8 மணிநேர வேலை, பணி பாதுகாப்பு, இன்னபிற சலுகைகள் என உலகம் பயனடைந்தது இப்படித்தான், இன்று தொழிற்சங்கங்கள், கொடிகள்,யூனியன் என தொழிலாளருக்கு ஒரு பாதுகாப்பு இருப்பதும் இப்படித்தான், எல்லாம் 1990வரை சரியாக இருந்தது.


அதன்பின் சோவியத் சிதறவும், உலகமயமாக்கல் கொடுமையும் இன்று நவீன அடிமை முறையினை அறிமுகபடுத்திவிட்டன, அன்று பாமர அடிமைகள் இன்று படித்த அடிமைகள்.


அன்று சுரங்கத்திலோ, கரும்பு தோட்டத்திலோ, தேயிலை தொட்டத்திலோ 15 மணிநேரம் பாமரர்கள் உழைத்ததை போல இன்றைய காலத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் குறிப்பாக ஐ.டி கம்பெனிகள்.


ஒரு ஐடி தொழிலாளி அப்படித்தான் உறிஞ்சபடுகின்றான் 16 மணிநேரம் அவனை பிழிந்துவிடுவார்கள், இன்னும் ஏராள இம்சைகள். உச்சமாக அவனுக்கு சங்கமோ அல்லது பணிபாதுகாப்போ சுத்தமாக கிடையாது.


அதுவும் அவன் ஒழுங்காக வந்து உழைக்கும்பொழுதும் அவனுக்கு அப்ரைசல் என ஒரு கொடுமையினை வைத்து, அம்மா கட்சி அமைச்சராகவோ அல்லது வேட்பாளராகவோ பதைபதைப்பில் வைத்திருப்பதில் அவர்களுக்கொரு ஆனந்தம்.


நான் நீங்கள் இட்ட பணியினை எல்லாம் செய்துதானே வருகிறேன், பின்னர் ஏன் ஆயிரம் கேள்விகள்? என எந்த ஐ.டி தொழிலாளியும் கேட்க முடியாது. திடீரென தூக்குவார்கள் அதற்கு ஆயிரம் காரணம் வேறு சொல்வார்கள்.


ஒரு ஆட்டோ டிரைவருக்கு ஒரு அவமானம் என்றால் தமிழகம் முழுக்க அது எதிரொலிக்கும், ஒரு கொத்தனாருக்கு பிரச்சினை என்றால் அது கட்டட பணியினை பாதிக்கும், இவ்வளவிற்கும் இவர்கள் அடிப்படை கல்வி மட்டும் பெற்றிருப்ப்பார்கள.


ஆனால் ஒரு ஐ.டி ஊழியன் பணி பறிக்கபடும்பொழுது, அவசர அவசரமாக சக ஊழியன் தனது நண்பர் அல்லது உறவினரின் பயோடேட்டாவினை அங்கு சமர்பித்துகொண்டிருப்பான், படித்தவர் உலகம் இப்படி சுயநலமானது.


ஆக பெரும் போராட்டம் போராடி தொழிலாளர் உலகம் பெற்ற உரிமைகளை, இன்றைய கார்பரேட் உலகம் காலில்போட்டு நசுக்குகின்றது. மறுபடியும் ஆதிகாலத்திற்கு கொண்டுபோயாயிற்று.


ஐடி என்று மட்டுமல்ல, எல்லா கார்பரேட் தொழிலும் 15 மணிநேரம் உழைக்காமல் வாழமுடியாது என்ற அளவிற்கு உலகினை மாற்றிவிட்டார்கள்.


8 மணிநேர வேலை என, 8 மணிநேர சமூக உறவுகள், 8 மணிநேர தூக்கம் என அக்கால வாழ்க்கைமுறையினை சுத்தமாக ஒழித்தும் விட்டனர், அக்கால கிராம வாழ்க்கை இப்படித்தான் இருந்தது,


எவ்வளவு சுகமான காலங்கள் அவை


இன்று இந்தியாவில், பிலிப்பைன்ஸில் ஐ.டி வளர்ச்சிபெற்றிருக்கிறது என சொன்னால் அதன் பின்னால் மறைந்திருப்பது இந்த கடுமையான தொழிலாளர் சுரண்டல், 3 வருடத்தில் முடிக்கவேண்டிய பணீகளை 3 மாதத்தில் முடிக்கசொல்லி அவர்கள் படுத்தும்பாடு அப்படி.


ஐரோப்பியர்களிடம் அதிகம் பேசமுடியாது, அவர்கள் உல்லாசம் அவர்களுக்கு முக்கியம், ஓய்வு முக்கியம் என ஏராள சிக்கல்கள், அதன்பின் என்ன செய்ய ஆசியன் தான் இளிச்சவாயன், அந்நாட்டு அரசுகள் ஒரு மண்ணாங்காடி தொழிலாளர் நலமும் பேணாது.


இன்னும் ஆபத்தான அணுவுலை பணிகளில் தொழிலாளர்களுக்கு செய்யபடும் மருத்துவசோதனை, பாதுகாப்பு என ஏராளம் உண்டு, இந்தியாவில் எப்படி என தெரியவில்லை, ஆனால் நன்றாக மட்டும் இருக்காது.


அன்று கரும்பு பண்ணை அடிமைக்கு ஒரு பெட்டி சோளமும், ஒரு பெட்டி கறியும், குளிருக்கு சுருட்டும், தீபெட்டியும் வழங்கபடுமாம்.


இன்று ஐ.டி காரனுக்கு என்ன? பர்கர், பீசா கூடவே எடிஎம் கார்டு, அவ்வளவுதான், ஒரு போன் அதுவும் எதற்கு தூங்காமல் உழைப்பதற்கு, நடுநசியிலும் அழைப்பதற்கு, காரொ வாகனமோ அல்லது வீடோ, எல்லாமே பொறிகள், சிக்க வைக்கும் பொறிகள்.


இதில் அவனுக்கான உரிமையோ, அவனுக்கான சொந்த சிந்தனையோ அவன் செய்துவிட முடியுமா? விடுவார்களா? அனாதையாக விட்டுவிடுவார்கள்.


இன்று உலகில் சங்கமே இல்லாதவர்கள் இரண்டு பேர், ஒன்று தெருவில் சுற்றும் மனநிலை பாதிக்கபட்டவர்கள், அவர்களுக்கான சங்கம் எப்படி சாத்தியமாகும்? இன்னொன்று கார்பரேட் தொழிலாளர்கும் ஐ.டி பொறியாளர்களும்.


பைத்தியங்கள் ஒன்றாய் சேர்ந்து கொடிபிடித்தாலும் நிச்சயம் இந்த ஐ.டி தொழிலாளி ஒருநாளும் சேரப்போவது இல்லை, இப்படி உரிமைகெட்டு நிற்காவிட்டால் அவன் எப்படி அவன் கனவு தேசமான அமெரிக்கா செல்வது?


ஆனால் தொழிலாளர் போராட்டம் தொடங்கியதே அமெரிக்காவில் என்பதும், அங்கிருக்கும் வெள்ளை மக்களுக்கான மட்டும் பாதுகாப்பும் அவனுக்கு தெரியவில்லை அய்யோ பாவம்.


இந்த மே தினத்தில் பரிதாபபட்டு பார்க்கவேண்டியது இம்மாதிரியான தொழிலாளர்களைதான், நாகரீகமான வேடத்தில் இருக்கும் இந்த அடிமைகளைத்தான்.


இன்னும் இந்தியாவில் தொழிலாளர் சுரண்டல் எவ்வளவோ உண்டு, அது அங்காடி தெரு கதையாகட்டும், இன்னபிற சம்பவங்களாகட்டும் ஏராளம் உண்டு


களை கூத்தாடிகளில் உள்ள சிறுவர் சிறுமியரை கணக்கில் எடுக்காமல், கடைகளில் தொழிற்சாலைகளில் மட்டும் கணக்கெடுக்கும் விசித்திரமான நாடு இது, இதோ ஒரு சிறுவனை வேலைக்கு வைத்தால் மிரட்டும் அதிகாரிகள், சினிமாவில் நடிக்கும் சிறுமிகளை மட்டும் கொஞ்சுவார்கள், அங்கு என்ன சட்டமோ தெரியவில்லை.


இப்படி மேதினம் பல சிந்தனைகளை கிளறிவிட்டாலும், பொல்லாத முதலாளிவர்கக்கம் தொழிலாளர் உரிமையினை கொஞ்ச கொஞ்சமாக ஒழித்துவிட்டு மறுபடியும் அடிமை முறையினை ஆசியாவில் கொண்டு வந்துவிடுமோ என பலகுரல்கள் எழும் வேளையில் தமிழன் நிலை என்ன தெரியுமா?


தல அஜித்தின் பிறந்த நாள், தமிழக திருவிழா.


எங்கு நிற்கின்றான் தமிழன், இதுதான் தமிழகம், மே தினம், மார்க்ஸ்,தொழிலாளர் வரலாறு எல்லாம் அவனுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை, மாறாக அஜித் எனும் அவதாரம் பிறந்துவிட்டார் போதாதா?


உலகம் முழுக்க மே தின கொண்டாட்டமும் செய்தியும் தெரிவிக்கபட்டுகொண்டிருக்க, தல பிறந்த நாளிலும் மேதினத்தை கொண்டாடுகின்றான்.


ஐடி இந்திய அடிமையோ அன்று 24 மணிநேர உழைப்பில் தீவிரமாக இறங்கி இருக்கின்றான்.


ஒன்று மட்டும் உண்மை, தொழில்நுட்பம் எவ்வளவும் வளரட்டும், அதன் கரங்கள் புளூட்டோ வரை கூட நீளட்டும். ஆனால் மனித உரிமைகளை காக்கும் பொறுப்பு தொழிலாளர் சங்கங்களுக்குத்தான் உண்டு.


அவ்வகையில் மேதினம் மகா மதிப்புகுரியது, போற்றுதலுக்குரியது





 


 

நீங்கள் அய்யாகண்ணு அல்ல, அம்மணகண்ணு

வறட்சியினால் விவசாயிகள் இறக்கவில்லை என தமிழக அரசு சொல்லிகொண்டிருக்கின்றது


மிஸ்டர் அய்யாகண்ணு, காதில் விழுந்ததா? இதற்கு உங்கள் பதில் என்ன?


டெல்லியில் கோவணம் அவிழ்த்த நீங்கள் நல்லவரென்றால் இப்படி எல்லாம் சொல்லிகொண்டிருக்கும் தமிழக அரசின் அமைச்சர்களின் வேட்டியினையாவது உருவ வேண்டாமா?




ஆக நீங்கள் நடத்தியதெல்லாம் நாடகம், அப்படித்தானே?


இனி நீங்கள் அய்யாகண்ணு அல்ல, அம்மணகண்ணு



ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள், இன்று ...



Image may contain: one or more people


72 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்கா பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசித்துகொண்டிருந்தது, ரஷ்ய படைகள் கொண்டாடிகொண்டிருந்தன, ஆனால் உலக தலைவர்களும் உளவுதுறைகளும் தலையினை பிய்த்து கொண்டிருந்தது


ஆம் ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள்


உண்மையில் அன்று ஜெர்மன் தோல்வி முகம் காட்டினாலும், ஜெர்மனிக்குள் நுழைய யாருக்கும் தைரியம் இல்லை, அவர் அப்படி குண்டு வைத்திருப்பார், அதி நவீன திட்டம் வைத்திருப்பார், அவரை தொட நினைத்தால் ஜெர்மனே அழியும் என ஆளாளுக்கு யோசித்துகொண்டிருந்தார்கள்


ஹிட்லர் மீது இருந்த பிம்பம் அப்படி..


ஆனால் ரஷ்யாவிலிருந்து நாஜிக்களை துரத்திய செம்படையினர் தீரமாக ஜெர்மனில் நுழைந்து ஹிட்லரை தேடின, இறுதியில் எரிந்த நிலையிலிருந்த இரு உடலை கைபற்றின, ஒன்று ஹிட்லர் எனவும் இன்னொன்று ஈவா பிரவுண் எனவும் சொன்னார்கள், கூடவே ஹிட்லரின் பிரியமான நாயின் சடலமும் கிடைத்தது


ஹிட்லர் தன்னை சுட்டு செத்தார், உடலை எரிக்க சொன்னார் என அவரின் காவலர்களில் ஒருவன் வாக்குமூலம் சொன்னான் , அவன் மட்டும்தான் சாட்சி, அவன் சொன்னதகவல்தான் உலகெல்லாம் சொல்லபடது


பின்பு அந்த மண்டையோட்டை ஆராய்ந்த ரஷ்யர்கள் திகைத்தார்கள், காரணம் அது ஹிட்லரின் மண்டையோடு அல்ல, அல்லவே அல்ல.


அப்படியானால் ஹிட்லர்?


இன்றுவரை தெரியாத மர்மம், ஜெகஜால கில்லாடியான ஹிட்லரின் இறுதிகாலம் இன்றுவரை மர்மமே, இதில் பலவகையான அரசியல் உண்டு


இந்த உலக அரசுகள் எல்லாம் மர்மமானவை, அவை ஏன் சில விஷயங்களை சொல்லாமல் இருக்கின்றன என்பதில் பெரும் அரசியல் உண்டு


உதாரணம் நேதாஜி என்ன ஆனார் என்பது, இன்றும் பிரபாகரனுக்கு சிங்கள அரசு மரணசான்றிதழ் கொடுக்க தயங்குவது, பின்லேடனை கொன்றதாக சொன்ன அமெரிக்கா கடைசிவரை அவர் முகத்தை காட்டாதது


ஆனால் சதாமினை தூக்கிலிட்டார்கள் ஏன்? அது அரபு உலகை ஆட்டி வைக்க, ஆனால் பின்லேடனை மர்மமாக புதைத்தார்கள்


இப்படிபட்ட மர்மங்களில் பெரும் மர்மம்தான் ஹிட்லரின் கடைசி காலம், அவனின் சாவு


ஹிட்லர் வாழ்ந்த நாட்களில் அவன் மீது நடத்தபட்ட கொலைமுயற்சி ஏராளம், அதனால் அப்பொழுதே அவன் தன்னை போல ஒருவனை நடமாட விட்டுவிட்டு அவர் பதுங்கிகொண்டார் என்பதும் ஒரு தியரி


அதனை உறுதிபடுத்தும் விதமாக அவருக்கு கொடுக்கபடும் உணவுகளை உண்டு சரிபார்த்து கொடுத்த பெண்ணின் சந்தேகமும் முக்கியமானது, அவள்தான் தினமும் ஹிட்லருக்கு முன்பு சாப்பிடுவாள், அவள் சாகவில்லை என உறுதிபடுத்தபட்டால்தான் ஹிட்லர் அந்த உணவினை உண்பார்


அப்பெண்ணும் கடைசி காலங்களில் ஹிட்லரை காணவில்லை என்றுதான் சொன்னாள்.


இன்னொன்று தோல்வி முகம் தெரிந்தவுடன் அவர் அர்ஜெண்டினாவிற்கு தப்பினார் எனும் தியரி உண்டு, அக்கால அரசியல் அப்படி


இத்தாலி, ஜப்பான், ஜெர்மன் என்றொரு கூட்டணிதான் நமக்கு தெரியும், தெரியாத கூட்டணி அர்ஜெண்டினா. அதற்கு கத்தோலிக்க மதம், பிரிட்டன் எதிர்ப்பு என ஏராளமான காரணங்கள்


ஐரோப்பாவில் ஹிட்லர் படைகள் தோற்க தோற்க அவர்கள் எல்லாம் அர்ஜெண்டினாவிற்குத்தான் தப்பினார்கள், ஹிட்லரின் தளபதி ஈச்மென் கூட இஸ்ரேலால் பின் கொண்டுவரபட்டது எல்லாம் வரலாறு


அப்படி ஹிட்லரும் அர்ஜெண்டினாவிற்கு தப்பினார் என ஏகபட்ட தியரிகள் உண்டு, ஆனால் அவர் சிக்கவில்லை


அக்காலத்தில் ஹிட்லரிடம் நவீன வாகனங்கள் இருந்தன, நீர்மூழ்கி கப்பல்கள் இருந்தன, பறக்கும் தட்டு போன்ற ஒரு அதிவேக விமானம் அவனிடம் இருந்தது என்பது உண்மை


அதிலொன்றில் அவர் தப்பியிருக்கலாம் என தேடினார்கள், அந்த ஜெகஜால கில்லாடி சிக்கவே இல்லை


ஆக ஹிட்லர் தப்பி அர்ஜெண்டினாவிற்கு சென்றான் என்பது உளவுதுறைகளின் முடிவு, அவன் அகப்படவில்லை, மண்டையோடும் அவனது இல்லையெனில் அவன் எங்கே?


ஹிட்லருக்கு பின் அமெரிக்காவும் ரஷ்யாவும் மோதலில் இறங்க, ஹிட்லரை தேடுவதை குறைத்தார்கள், அவன் வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது என்ற ஒரு நிலையும் காரணம்


இந்த உலகத்திற்கு புரியாத புதிர் ஹிட்லர், இன்றுவரை அவனை முழுக்க யாருக்கும் புரியவில்லை, ஆனால் மகா அசாத்தியமான மனிதன்


அவனின் மரணம் கூட மர்மம்தான், அவன் போர்கலை வித்தகன், அவனின் போர்வியூகங்கள் எல்லாம் அபாரமானவை


நார்மாண்டி முற்றுகை நடந்தால் கூட எப்படி முறியடிக்க வேண்டும் என வியூகம் எழுதிவைத்துதான் தூங்கிகொண்டிருந்தான், அவனை எழுப்பாமலே ஜெர்மன் படை அந்த வியூகத்தில் போரிட்டது


அப்படிபட்ட ஹிட்லர் தான் தோற்றால் என்ன செய்யவேண்டும் என நிச்சயம் யோசித்திருப்பான், அதனால்தான் அவன் தப்பியது 100% வாய்ப்புள்ள விஷயம் என உலகம் சொல்கின்றது


மற்றபடி அவனின் இறுதிநாட்கள் என சொல்லபடுவதெல்லாம் கட்டுகதைகள், அந்த மர்மான நாட்கள் ஹிட்லருக்கும் ஈவா பிரவுணும் மட்டுமே அறிந்த ரகசியங்கள்


எப்படியோ, உலகத்தை தன் கண் அசைவில் ஆட்டுவித்த ஒரு பெரும் சத்திவாய்ந்த தலைவனின் சகாப்தம் முடிந்த நாள் இன்று


உலகம் தன் கனவுகளை, தன் திட்டங்களை, தன் ஆராய்ச்சிகளை பயன்படுத்தி பல துறைகளில் முன்னேறிகொண்டிருப்பதை பார்த்துகொண்டே தென் அமெரிக்காவில் எங்கோ வாழ்ந்தபடி மறைத்திருக்கின்றான் ஹிட்லர்.


முக்கியமானவர்களின் மரணங்களில் மர்ம ஆட்டம் ஆடும் வல்லரசுகள், ஹிட்லர் தப்பிய மர்மத்தை சொல்லாமல் அதனை எப்படியோ வசனம் எழுதி மறைக்கபார்த்தன , முழுதும் மறைக்க முடியவில்லை


ஹிட்லர் கடைசியிலும் தன் எதிரிகள் முகத்தில் பூசிய கரி இன்றுவரை அப்படியே இருக்கின்றது













 


 

"ஜாதிமல்லி" கூட்டத்தின் நடுவில் ஒரு காஷ்மீர் ரோஜா..




Image may contain: 1 person, close-up


பாகுபலி இன்னொரு முறை பார்க்கபோகலாம் என கிளம்பினால் டிவியில் ஜாதிமல்லி படம் தொடங்கிற்று, இதனை விடவா பாகுபலி பெரிது, கொஞ்சம் கழித்து செல்லலாம் என டிவி முன் அமர்ந்தாயிற்று


கிளியோபாட்ராவின் மூக்கு கொஞ்சம் சிறியதாக இருந்திருந்தால் அவருக்காக உலகமே அழிந்திருக்குமாம், அப்படி குஷ்பூ இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்தால் நிச்சயம் உலக வரலாறே மாறி இருக்கும்..


ஆனாலும் தங்கசிலை என்ன உயரத்தில் இருந்தால் என்ன? மின்னத்தான் செய்யும்





"ஜாதிமல்லி" கூட்டத்தின் நடுவில் ஒரு காஷ்மீர் ரோஜா..













 


 

பாகுபலி : தொடரும் விமர்சனங்கள்...

பாகுபலி விமர்சனம் ஆளாளுக்கு சொல்லி கொண்டிருக்கின்றார்கள், ஒரு சிலர் முதல்பாகம் போல "பகடை" என்றொரு வார்த்தை சிக்குமா? என அலசி பார்த்துவிட்டு சென்று படுத்து உறங்கியாயிற்று, இன்னும் கொஞ்சம் பேர் கதை சரியில்லை, அரசரின் கிரீடம் சரியில்லை என பல விமர்சனங்கள்...


இதில் ஒரு சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று, அதெப்படி? ராணிக்கு உளவாளிகள் இல்லையா? அது என்ன ராணி? யார் போட்டு கொடுத்தாலும் நம்பிவிடுவாரா? செல்லாது செல்லாது, இது சரியில்லை என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


கதைபடி அது அக்காலம், அதுவும் மகனின் முகத்தில் ரத்தம் பார்த்துவிட்ட தாய் உணர்ச்சியில் முடிவெடுப்பது ஏற்றுகொள்ள கூடிய விஷயம்தான், அது இருக்கட்டும்




இந்த நவீன உலகத்தில் இந்திய மாநில முதல்வர், அதுவும் பிரதமராக வரகூட வாய்ப்பு இருப்பதாக சொல்லபட்ட ஒரு பெண்மணி எப்படி இறந்தார்? இறுதிகாலத்தில் அவருக்கு நிகழ்ந்தது என்ன? என தெரியாமலே போய்விட்டது


அந்த பெரும் இரும்புபெண்ணுக்கு இல்லாத அதிகாரமா? அவரிடம் இல்லாத அரசு உளவாளிகளா? ஆனால் அந்த இரும்பு பெண்ணால் தப்பிக்க முடிந்ததா?


இதுதான் அரசியல், பெரும் அதிகாரமுள்ள ஒருவரை ஒரு கும்பல் தனிமைபடுத்தி, சூழ்ந்துகொண்டு , அவரை மக்களிடம் இருந்து துண்டித்து, தன் வசபடுத்திகொண்டால் எளிதாக அதிகாரத்தை அடையலாம்


ஆச்சரியமாக அந்த பாகுபலி ராணியின் கதை, தமிழகத்தின் இரும்புபெண்ணின் கதையோடு பொருந்தித்தான் வருகின்றது,


அதற்காக பன்னீர் செல்வம் கட்டப்பா, தினகரன் ராணா , சசிகலா நாசர் என நீங்களாக கற்பனை செய்துகொள்ள கூடாது...


ராஜமவுலி திமுக எல்லாம் இல்லை, அவருக்கும் தமிழகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதால் சிக்கல் இல்லை


அரசகுடும்பத்தின் பொதுவான தன்மை உலகெல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றது என சொல்லிவிடலாம், அது உண்மையும் கூட‌


இதனை தமிழகத்தில் கண்முன்னே கண்டபின்பும், அது எப்படி சிவகாமிக்கு உளவாளிகள் இல்லை என சொல்லிகொண்டிருப்பவர்களை என்ன செய்வது?


படத்தில் கட்டப்பா எனும் விசுவாசி என்ன கொடூரம் நிகழ்ந்தது என சொல்லும்பொழுது அழுதுவிட்டு பாகுபலி எனும் மக்கள் அபிமான மன்னன் மர்மமாக இறந்த பின் மக்கள் பொங்கி எழுந்து அராஜக ஆட்சியினை வீழ்த்தியதாக காட்டும் பொழுது கைதட்டிவிட்டு வெளிவரும் தமிழன்


சொந்த மாநிலத்தில் என்ன நடக்கின்றது என தெரிந்தாலும் தெரியாதது போல் இருந்துவிட்டு, அதெப்படி சிவகாமிக்கு உளவாளி இல்லையா?? என கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றான்


அவன் அப்படித்தான்..



Saturday, April 29, 2017

பாகுபலி 2 : திரை விமர்சனம்

https://youtu.be/cVUiFEprn-M?autoplay=1

பாகுபலி 2 : பாடல்கள் (இசை  ஒலி வடிவம்)


பாடல்களை கேட்டுக்கொண்டே விமர்சனம் படியுங்கள் 













ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.. என கதை கேட்டு வளர்ந்த தலைமுறை நாம், ராஜா கதைகள் என்றால் ஆர்வம் வருவதொன்றும் ஆச்சரியமல்ல..

அப்படி பாகுபலி ராஜாவின் கதையினை இரண்டாம் பாகமாக சொல்லியிருப்பதை பார்த்தாகிவிட்டது, அழகாக என சொன்னால் தவறு, அற்புதமாக சொல்லியிருக்கின்றார்கள்

Image may contain: 4 people, textபடத்தின் பெரும் பலம் ரம்யா கிருஷ்ணன், மனுஷி போன பிறவியில் மங்கம்மாளாக இருந்திருக்கலாம், நடை முதல் முழி வரை அப்படியே "ராஜகளை" காட்டுகின்றார், பாசமா? கடமையா? என அவர் திணறும் இடத்தில் நம்மையும் அழவைக்கின்றார்.

நிச்சயம் அவர் நடிப்பு மகா ராணி, நாம் குஷ்பூ ரசிகன் தான், அதற்காக நல்ல நடிப்பினை குறிப்பிட்டு சொல்லாமல் இருக்க முடியாது,

குஷ்பூ கோபபட்டாலும் பரவாயில்லை

நாசரும், ராணாவும் வஞ்சக, பேராசையின் வடிவங்களாக வாழ்ந்திருக்கின்றனர், இருவர் நடிப்பும் அபாரம் என்பதற்கு 10 படி மேல்.

அனுஷ்கா அசத்தியிருக்கின்றார், இந்த பாகம் முழுக்க அவருக்கானது, அக்கால நாயக்க ராணிகள் சாயல் அவருக்கு அசால்ட்டாக பொருந்துகின்றது

பிரபாஸ் பற்றி சொல்லவேண்டியதில்லை, முன்பே அனுபவபட்டது, அதாவது ஒரு தெலுங்கு நண்பர் இருந்தார், ஏதோ ராமராவ் பற்றி சொல்லபோக மனிதர் டென்சனாகி சொன்னார, "ஆமா எங்க ஊர்ல ஹிட் நடிகர் ஆகணும்னா பாடி வெயிட், உயரம் எல்லாம் இருக்கணும், சிரஞ்சீவி இப்போ பிரபாஸ் எல்லாம் அப்படித்தான்

உங்க ஊர்ல இந்த தனுஷ், சிம்பு மாதிரி எல்ல்லாம் எங்கள் ஊரில் வரமுடியாது" உண்மையும் அதுதான், ஆஜானுபாகுவான பாத்திரத்திற்கு பிரபாஸ் அட்டகாசம்

சத்யராஜ் மகா நடிகன், இறுதிவரை நான் அரசனுக்கு அடிமை என போராடும் விசுவாசமான பாத்திரத்தில் உச்சம் தொடுகின்றார், வாட்டாள் நாகராஜ் கும்பல் கூட ரசிக்கும் நடிப்பு

படம் மிரட்டுகின்றது, ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு நுணுக்கமாக எடுக்கபட்டிருக்கின்றது, நுணுக்கமாக மட்டும் அல்ல, அழுத்தமாகவும், ரசனையாகவும் எடுத்திருக்கின்றார் ராஜமவுலி

எது கிராபிக்ஸ், எது இயற்கை என தெரியாத அளவு படத்தினை கொண்டு சென்றிருப்பதற்கு பெரும் வாழ்த்துக்களை சொல்லலாம்

இந்திய திரைப்பட வரலாற்றில் நிச்சயம் பாகுபலி ஒரு மைல்கல் அல்லது கோபுரம் என்பதில் இனி சந்தேகமில்லை, இனி நிச்சயம் இம்மாதிரியான படங்கள் நிறைய வரும் , ஆனால் பாகுபலிக்கு மேலா? கீழா? என்றுதான் அளக்கமுடியும்

கொஞ்சம் அல்ல, நிறையவே நீளமான படம், ஆனால் படம் பார்பதை மறந்து, அந்த காலத்திற்கே நம்மை ராஜமவுலி குழு அழைத்துசென்றிருப்பதால் ஒரு அலுப்புமில்லை, படம் முடிந்த பின்னாலும் நான் இங்கே இருக்கின்றேன் அடுத்த ஷோ போடுங்கள் என சொல்லும் ஆர்வம்தான் இருக்கின்றது

இரு பாகத்தையும் சேர்த்துபோட்டு 7 மணிநேரம் ஓடவிட்டால் கூட நன்றாக இருந்திருக்கும், இதுதான் படத்தின் வெற்றி

கொஞ்சம் யோசித்தால் இது அம்புலிமாமா கதைதான், அரச கீரிடம் எனும் மாயை எத்தனை உயிர்களை பழிவாங்கும், சொந்த ரத்ததை சிந்த வைக்கும், பல குடும்பங்களை அழிக்கும் எனும் ஒரு வரி கதைதான், ஆனால் தொழில்நுட்பம் , நல்ல நடிப்பு என மிகுந்த ஆச்சரியமான கண்கட்டி வித்தையாக டைரக்டர் காட்டிவிட்டார் அல்லவா? அதுதான் சிறப்பு

மலேசியாவில் இப்படி வரவேற்பு பெற்ற இந்தியபடத்தினை இப்பொழுதுதான் பார்க்கின்றேன், எல்லா திரையரங்கும் நிரம்பி வழிகின்றன, நள்ளிரவு காட்சிகளும் புல் என்கின்றார்கள், எங்கும் பாகுபலி எதிலும் பாகுபலி

ஆக நல்ல படத்திற்கு, மக்களை கட்டிபோட தெரிந்த படத்திற்கு மக்கள் வரவேற்பு இருக்கின்றது, எடுக்க வேண்டிய விதத்தில் எடுத்தால் சினிமா தியேட்டர்களை நிரப்பமுடியும் என தெளிவாக சொல்கின்றது பாகுபலி

நல்ல படத்திற்கு செலவழிக்க மக்கள் தயங்குவதில்லை , அவர்கள் நல்ல படத்தினை எதிர் பார்கின்றார்கள், அப்படி அமைந்துவிட்டால் கொண்டாடி தீர்க்கின்றார்கள் என்பது கண் கூடாக தெரிகின்றது.

திரைப்பட தொழில் நஷ்டம், எங்களுக்கு வரிவிலக்கு வேண்டும், இன்னும் பல சலுகை வேண்டும் என ஒப்பாரி வைக்கும் விஷால் போன்றவர்களை இந்த படத்திற்கு வரும் கூட்டத்தை காட்டி காட்டி அடிக்க வேண்டும்

உறுதியாக சொல்லலாம் இன்னும் குறைந்தது 20 வருடத்திற்கு இப்படி ஒரு படம் சாத்தியமே இல்லை, நிச்சயமாக இந்த பாணியில் வரும், ஆனால் பாகுபலி அளவிற்கு நுட்பமாக எடுக்கமுடியுமா? என்பது கேள்விகுறி

என்னிடம் மட்டும் ஒரு 100 கோடி இருந்தால், அந்த ராஜமவுலியினை அழைத்து வந்து ராஜராஜசோழன், நரசிம்ம பல்லவன், ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன் என எல்லா தமிழ் வரலாற்று நாயகர்களையும் படமாக எடுக்க சொல்லலாம்

தமிழகத்தில் இப்படி மிரட்ட யார் இருக்கின்றார்கள்? ராஜமவுலிதான் பக்கத்து மாநிலத்தில் இருக்கின்றார்

சினிமா ரசிகர்கள் தவறவிட கூடாத படம் இது, இனி அரசர் கதைகளை எடுத்தால் இப்படித்தான் எடுக்கவேண்டும் என வழிகாட்டிவிட்ட ராஜமவுலிக்கு பெரும் வாழ்த்துக்கள்

இப்பாணியில் கமலஹாசனும் மருதநாயகம் எடுக்கலாம்தான், ஆனால் மனிதர் வித்தியாசமானவர், சொல்லி கேட்கின்ற ரகம் இல்லை, ஆனால் இனி இந்த சாயலின்றி மருதநாயகம் வரமுடியாது

எப்படியோ காலத்திற்கேற்ற சிறந்த படம் வந்திருக்கின்றது, ராஜமவுலி தன் விஸ்வரூபத்தை காட்டியிருக்கின்றார், வணங்கலாம். நல்ல நடிகர்கள் நல்ல இயக்குநர் கதைகளில் எப்படி மின்னுவார்கள் என தெரிகின்றது, இதே ரம்யா கிருஷ்ணன் சத்யராஜினை "அசத்தல்" படத்தில் ஒரு மாதிரி அலைய வைத்தது தமிழ்சினிமா

ஆனால் நல்ல இயக்குநர் இருவரின் அபார நடிப்பையும் பிழிந்து கொடுத்திருக்கின்றார்,

மிக மிக அசத்தலான படம் கண்களை மூடினால் அம்புமழை பொழிகின்றது, அரசவையும் ரம்யா கிருஷ்ணனின் கெத்தான முகமுமே நினைவுக்கு மாறி மாறி வருகின்றன‌

நல்ல வேளையாக இம்மாதிரி படங்கள் இப்பொழுது வந்திருக்கின்றன, ஒரு 35 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் என்ன ஆயிருக்கும் தெரியுமா?

அந்த ராமசந்திரன் கோபத்தில் கிளம்பியிருப்பார், "என்ன? பாகுபலியா? நான் இருக்கும்பொழுதா?

கூப்பிடு அந்த லதாவினையும், ஜெயலலிதாவினையும், மஞ்சுளாவினையும். நான் ராமுபலி என்றொரு படம் 3 பாகமாக எடுத்து என்னை நிரூபிக்க போகின்றேன்"

யாராவது தாங்கமுடியுமா? ஆனால் அவர் செய்வார். வாழ்க்கையெல்லாம் அதனைத்தான் செய்திருக்கின்றார்

இப்பொழுது அவர் இல்லை, ஆனால் கமலஹாசனை இந்த படம் உறங்கவிடாது, விடவே விடாது என்பதை மட்டும் யூகிக்கலாம்

மருதநாயகம் படம் இப்பாணியில் வந்தால் நிச்சயம் கொண்டாடபடும், இன்னொரு பாகுபலியாய் அமையும்.

ஆனால் ராஜமவுலி, கமல் என இருவரும் இணையவேண்டும், அது சாத்தியமில்லை, ஒரு குகைக்குள் இரு சிங்கம் இருக்க முடியாது என்பது விதி, அதனால் கனவு மட்டும் கண்டுகொள்ளலாம்....

பாகுபலி எனும் மாயலோகத்தில் நம்மை இழுத்துசென்று அற்புதமான காட்சிகளை காட்டிவிட்டு மறுபடி தியேட்டர் இருக்கைக்கு அழைத்து வந்திருக்கின்றது பாகுபலி குழு

அவர்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும், வாழ்த்திகொண்டே இருக்கலாம்..

படம் முடிந்த பின் பேரமைதி மனதை ஆட்கொள்கின்றது, பெரும் கனவுலோகத்தை கடந்து வந்தது போல, சுனாமி கடந்து சென்றது போல மனம் ஏதோ ஒரு பெருமூச்சு வருகின்றது

Image may contain: 1 person, textஇப்பொழுது எழும் கேள்வி ஒன்றுதான், அது கமலஹாசனை நோக்கித்தான்

மிஸ்டர் கமலஹாசன், மருதநாயகம் எப்படி வரும்? இதே போல் வருமா? இல்லை இதற்கு மேலுமா?,

தமிழ் சினிமாவில் இம்மாதிரி படங்களை உங்களை தவிர யாரிடம் எதிர்பார்க்கமுடியும் மிஸ்டர் கமலஹாசன்?, தெலுங்கு படமொன்று உலகத்தை திரும்பி பார்க்க வைத்திருப்பதை போல , ஒரு தமிழ்படமும் உலகை திரும்பி பார்க்க வைத்தால் நன்றாகத்தான் இருக்கு..

ராஜமவுலி ஒரு தீக்குச்சியினை கொளுத்தியிருக்கின்றார், நீங்கள் ஒரு தீப்பந்தத்தினை எரியவிடுவீர்கள் என காத்திருக்கின்றோம் மிஸ்டர் கமலஹாசன்..











 

 


 

நாஞ்சில் சம்பத் : முழுக்க நனைந்த பின் "எல்லாம்" எதற்கு?

https://youtu.be/PtJAxgMZ0Iw?autoplay=1

முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு? என்பது பழமொழி, நாஞ்சில் சம்பத்தோ முழுக்க நனைந்த பின் "எல்லாம்" எதற்கு? எனும் அளவில் டெல்லியில் தமிழக விவசாயிகள் நின்ற கோலத்திற்கு சென்றுவிட்டார்


ஜெயா டிவியின் செய்தியினை அவருக்கு குத்தகைக்கு விட்டாயிற்று, மனிதர் உறுமிகொண்டே உளறிகொட்டுகின்றார்


"அரசியல் பெண்கள் உலாவும் சோலை அல்ல" என்கின்றார், ஜெயாவும் சசிகலாவும் பெண் இல்லையா என அருகிலிருப்பவர்களும் கேட்கவில்லை, சகித்துகொள்கின்றார்கள்




சிறை தினகரனை சந்தித்துவிட்டு ஏதோ மண்டேலாவினை பார்த்துவருபவரை போல முழங்குகின்றார், அதிலொரு வார்த்தை குறிப்பிடதக்கது


"தினகரனின் முகத்தை பார்த்ததில் நெஞ்சார மகிழ்கின்றேன்", அதாவது சிறையில் தினகரனை பார்த்ததில் மகிழ்ச்சியாம்.


வைகோவின் அரசியல் வளர்ப்பல்லவா? மனிதர் அச்சுபிசகாமல் அவர் பாணியிலே அரசியல் செய்கின்றார்


இவர் சீறும் சீற்றத்தை கண்டால் மனிதர் வைகோவின் சிலீப்பர் செல்லாக இருக்கலாம் என சந்தேகிக்க தோன்றுகின்றது



ஸ்டாலினிக்கு வாய்ப்பு இருக்கின்றது, ஆனால் அவர் ....





தமிழக அரசியல் களம் திறந்து கிடக்கின்றது, பெரும் ஆளுமை என யாரும் இல்லை, ஓங்கி அடித்தால் சிம்மாசனத்தை தூக்கிவிடலாம்


ஆனால் ஓங்கி அடிக்கத்தான் ஆளில்லை


காமராஜர் எனும் பெரும் மலையினை சாய்த்து ஆட்சி பிடித்தார் கலைஞர், இங்கோ பூப்பாதையிலும் நடக்க ஸ்டாலினுக்கு தெரியவில்லை





நியாயம், நீதி, நேர்மை என சொல்லிகொண்டிருக்கின்றார் என்கின்றார்கள், 1960ல் இப்படி கலைஞரும் சொல்லிகொண்டிருந்தார் என்றால் இன்று நல்லகண்ணு போலவோ அல்லது டிராபிக் ராமசாமி போலவோதான் கருணாநிதி இருந்திருப்பார், இப்படி அரசியல் சாணக்கியனாக ஜொலித்திருக்கமாட்டார்

இது அரசியல், பூனை எந்த நிறமாக இருந்தால் என்ன? எலியினை பிடித்தால் போதும் என்ற கொள்கைதான் இங்கு சாத்தியாகுமே தவிர, வேறு எதுவும் சரிவராது, கலைஞர் அதனைத்தான் செய்தார்

ஸ்டாலினிக்கு வாய்ப்பு இருக்கின்றது, ஆனால் அவர் , அவரது அரசியல் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் ஒவ்வொரு பொன்னான நொடியினையும் தவற விட்டு கொண்டிருக்கின்றார் என்றே தோன்றுகின்றது




 

 



 

கீழடி தேவைதான், ஆனால் ஆதிச்சநல்லூர் அவசியம் தேவை




Image may contain: 2 people


அகழ்வாராய்ச்சியில் ஏதும் செய்யவேண்டுமென்றால் நெல்லை மாவட்ட ஆதிச்சநல்லூரில் செய்யுங்கள்


பெரும் நாகரீகம் அங்குதான் உறங்கிகொண்டிருக்கின்றது, தமிழனின் ஆதி அங்குதான் புதைந்திருக்கின்றது, அதனை தோண்டுங்கள்


சிந்துவெளி, எகிப்து, மெசடோபியாவினை மிஞ்சும் தொன்மையான விஷயம் வெளிவரும், அதனை செய்யுங்கள்





கீழடி தேவைதான், ஆனால் ஆதிச்சநல்லூர் அவசியம் தேவை

அம்மா தமிழிசை, அதனை செய்வீர்களா? செய்து காட்டுவீர்களா?

திராவிட, காங்கிரஸ் ஆட்சிகள் செய்யாததை நீங்கள் செய்வீர்களா? நிச்சயம் உங்கள் பிஜேபி செய்யுமா?

அப்படி மட்டும் செய்துவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிஜேபி ஆட்சி தமிழகத்தில் நடக்கட்டும், தமிழறிந்த, தமிழர் நாகரீகமறிந்த யாரும் அந்த நன்றியினை மறக்கமட்டார்கள்

கீழிசையில் சண்டையிடும் தமிழிசையே, கொஞ்சம் தேற்கே வந்து ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் இறங்குங்கள்

அப்படி இறங்கிவிட்டால் நிச்சயம் தமிழர் ஆதரவு உங்களுக்குத்தான், உங்களுக்கு மட்டும்தான்..













 


 

தமிழக அரசியல் களம் திறந்து கிடக்கின்றது





தமிழக அரசியல் களம் திறந்து கிடக்கின்றது, பெரும் ஆளுமை என யாரும் இல்லை, ஓங்கி அடித்தால் சிம்மாசனத்தை தூக்கிவிடலாம்


ஆனால் ஓங்கி அடிக்கத்தான் ஆளில்லை


காமராஜர் எனும் பெரும் மலையினை சாய்த்து ஆட்சி பிடித்தார் கலைஞர், இங்கோ பூப்பாதையிலும் நடக்க ஸ்டாலினுக்கு தெரியவில்லை





நியாயம், நீதி, நேர்மை என சொல்லிகொண்டிருக்கின்றார் என்கின்றார்கள், 1960ல் இப்படி கலைஞரும் சொல்லிகொண்டிருந்தார் என்றால் இன்று நல்லகண்ணு போலவோ அல்லது டிராபிக் ராமசாமி போலவோதான் கருணாநிதி இருந்திருப்பார், இப்படி அரசியல் சாணக்கியனாக ஜொலித்திருக்கமாட்டார்

இது அரசியல், பூனை எந்த நிறமாக இருந்தால் என்ன? எலியினை பிடித்தால் போதும் என்ற கொள்கைதான் இங்கு சாத்தியாகுமே தவிர, வேறு எதுவும் சரிவராது, கலைஞர் அதனைத்தான் செய்தார்

ஸ்டாலினிக்கு வாய்ப்பு இருக்கின்றது, ஆனால் அவர் , அவரது அரசியல் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் ஒவ்வொரு பொன்னான நொடியினையும் தவற விட்டு கொண்டிருக்கின்றார் என்றே தோன்றுகின்றது







கொசுறு 


போர் வெடிக்கும் இறுக்கமான சூழலிலும் ஏவுகனை சோதனை செய்தது வடகொரியா

இந்த வடகொரிய வைகோ திருந்தபோவதில்லைபோர் வெடிக்கும் இறுக்கமான சூழலிலும் ஏவுகனை சோதனை செய்தது வடகொரியா

இந்த வடகொரிய வைகோ திருந்தபோவதில்லை, அடிபட்டு சாகட்டும், அடிபட்டு சாகட்டும்






 



Friday, April 28, 2017

முப்பாட்டன் உ.வே.சாமிநாதய்யர்




[caption id="" align="aligncenter" width="476"]Image may contain: 1 person Enter a caption[/caption]

முப்பாட்டன் உ.வே.சாமிநாதய்யர்.


பொதுவாக தமிழக ஓட்டுபொறுக்கும் அரசியல்வாதிகளால் ஒரு பலமான கருத்து பரப்பபடும், கடந்த 60 ஆண்டுகால அரசியலில் அது பெரும் கோஷம்.


எல்லோருக்கும் தெரிந்ததுதான், பிராமணர்கள் தமிழர்களின் எதிரிகள். பிராமணர்கள தமிழை அழிக்கநினைப்பார்கள். தமிழ் வாழ்க, பிராமணன் ஒழிக. தமிழ் என்ற வார்த்தை தமிழர்,திராவிடர் என்றெல்லாம் மாறி ஒலிக்கும்.


இப்படிஎல்லாம் கோஷம் எழுப்புபவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள் என நாம் கேட்க கூடாது, கேட்டால் கல்தோன்றி என தொடங்கி, பாவேந்தர் பாடலில் வந்து ஈழம் சென்று முஷ்டி உயர்த்தி நிற்பார்கள். இவர்களின் தமிழ்பற்று பிராமணனை விரட்டுவது, சிங்களனை விரட்டுவது, வடநாட்டு மக்களை, கன்னடனை, தெலுங்கனை, மலையாளியினை பகைவனாக சித்தரிப்பது இவைகள்தான் இவர்களின் தமிழ்பற்று.


பிராமணர்கள் தமிழக எதிரிகள் என்பார்கள், தமிழர்களை அடிமைபடுத்தினர் என்பார்கள், சரி, எந்த பிரமண அரசன் தமிழர்களை ஆண்டான் என கேட்டால் சொல்ல தெரியாது. காரணம் எந்த தமிழ் அரசனும் பிராமணன் இல்லை.


ஆனால் புலவர்களில் பலர் பிராமணர்களாயிருந்து தமிழ் வளர்த்திருக்கின்றனர் என்பதை அவர்களாலும் மறுக்கமுடியாது, இப்படி எல்லாம் கேள்விகேட்டு, பின் எப்படி பிராமணர் தமிழ் எதிரியாயினர் என்றால், ஹி ஹி ஹி என சென்றுவிடுவார்கள்.


தமிழை மிக தீவிரமாக வளர்த்தவர்கள் யாரென்றால் தொல்காப்பியர் அகத்தியர் முதற் சங்ககாலம் என அக்காலங்கள் கடந்தபின் தமிழினை வளர்த்து தீரா அடையாளம் கொடுத்தவர்கள் பவுத்த துறவிகள் அதன் பின் சமணதுறவிகள்.


சீவகசிந்தாமணி,சிந்தாமணி எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன. சமணர்கள் தமிழுக்கு ஆற்றியதொண்டும் மறக்கமுடியாதது.


அப்படியாக பிராமணர்களிலும் மிக உயர்ந்த தொண்டாற்றியவர்கள் உண்டு, சம்பந்தர் காலம் மாணிக்கவாசகர் காலம், பரிமேலழகர் காலம் என அக்காலங்களை விடுங்கள், அதன் பின் வந்த அருணகிரிநாதர், காளமேகபுலவர் என தமிழ்வளர்த்த பிராமணர்களின் வரிசை பெரிது.


தமிழ்சிறந்த பரிதிமாற் கலைஞரும், மகாகவி என உலகம் கொண்டாடும் பாரதியின் தமிழ்தொண்டு உலகறியும், இவர்கள் எல்லாம் அந்த பிராமணர்களே.


பள்ளிகளில்,கல்லூரிகளில் தமிழாசிரியராய் இருந்து அக்காலத்தில் தமிழ்வளர்த்தவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள் என்பதை மறுக்கமுடியுமா? அப்படியான காலத்தில் தமிழ் எப்படி உயர்ந்திருந்தது?


தமிழை காக்கவந்ததாக புறப்பட்ட கழகங்களில் ஆட்சியில் தமிழ் எப்படி சீரழிந்திருக்கின்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல‌.


உச்சமாக ஓலை சுவடிகளில் அலையும் நிலையிலிருந்த பண்டைய காப்பியங்கலையும், இலக்கியங்களையும் முதன் முதலில் அச்சுக்கு ஏற்றிய பெரும் தமிழ்தொண்டு செய்த உ.வே சாமிநாதய்யரும் பிராமணரே.


இவரின் உழைப்புதான், இவரின் தேடலும் அக்கறையும் தான் இன்று தமிழ்நூல்கள் அச்சுவடிவில் கிடைக்க முழுகாரணம். தொல்காப்பியம் முதல் திருக்குறள்வரை, ஐம்பெரும் காப்பியம் முதல் ஐங்குறுநூறுவரை அவர்தான் அச்சில் ஏற்றினார்.


அன்று இவை தேடுவாரற்று ஆதீனங்களில் ஓலைசுவடிகளாய் கிடந்தன, பாதி அழிந்தும்விட்டது, தமிழறிந்து அதன் முக்கியத்துவமறிந்து ஒவ்வொரு ஆதீனமாய் சென்று அதனை பெற்று பின் தாளில் எழுதி, அச்சுக்கு அனுப்பி ஒரு தனிமனிதனாய் இவர் செய்த சாதனை மிக பெரிது.


500 புத்தகங்களை அச்சுக்கு ஏற்றி, 3000 மேற்பட்ட தமிழ்புத்தகங்களை வெளியிடசெய்து ஒரு தன்னிகரற்ற சேவையினை தமிழ் உலகிற்கு வழங்கிய ஒரு பெரும் கொடையாளி.


தமிழ் உலகம் கொண்டாட வேண்டிய ஒப்பற்ற உழைப்பாளி.


இன்று அவரின் நினைவுநாள், பிராமணனாய் பிறந்துவிட்டதால் தமிழகத்திலிருந்து மறைக்கபட்ட பெரும் தமிழறிவு களஞ்சியத்தில் அவரும் ஒருவர்.


ஆனால் நன்றியுள்ள தமிழர்கள், தமிழினை நேசிப்பவர்கள் அவரை மறக்கமாட்டார்கள். அந்த தமிழனுக்கு, தமிழை நேசித்து இறுதிவரை தமிழுக்காய் வாழ்ந்த அந்த பெருமகனின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்வோம்.


சுற்றி இருக்கும் இனத்தை எல்லாம் பகைத்துகொள்வதோ, அந்நிய மொழிகளை விரட்டுவதோ மட்டும் தமிழ் உணர்வு ஆகாது. தமிழை நேசிக்க வேண்டும், தமிழுக்காய் உழைத்த தமிழர்களை நன்றியோடு நினைவு கூறவும் வேண்டும்.


அவ்வகையில் தமிழ்தாத்தா என்றழைக்கபடும் இந்த தமிழ் முப்பாட்டனார் நிச்சயம் மறக்கமுடியாதவர்.


அக்காலத்தில் அப்படி தனிமனிதனாக அவர் அந்த ஏட்டுசுவடிகளை காப்பாற்றாமல் விட்டிருந்தால் இன்று நமக்கு திருக்குறளுமில்லை, கம்பனுமில்லை, இளங்கோவுமில்லை, கணியன் பூங்குன்றனுமில்லை.


எல்லா அரும் காவியங்களும் கரையானுக்கு இரையாகி முடிந்திருக்கும். அப்படி தமிழ்கடவுளின் தூதனாக வந்து தமிழ் அறிவு அடையாளங்களை காப்பாற்றிய பெருமகனார் அவர்.


பிராமணீயத்தில் சில குறைகள் இருக்கலாம், ஆனால் பிராமணர்களில் இவரைபோன்ற மாமனிதர்களும் தமிழறிஞர்களும் நிச்சயம் உண்டு.


அந்த தமிழ்முப்பாட்டனுக்கு தமிழ் வணக்கம்..











 


 

வடகொரியா அணுகுண்டு வைத்திருப்பதால் ...

வடகொரியா அணுகுண்டு வைத்திருப்பதால் அதனை நொறுக்க அமெரிக்கா கிளம்பிவிட்டதாக பல ஊடகங்கள் சொல்லிகொண்டிருக்கின்றன‌


இன்றைய தேதியில் இந்தியா உட்பட ஏராளமான நாடுகளிடம் அணுகுண்டு உள்ளது, இஸ்ரேலிடம் உள்ளது, ஈரானிடம், பாகிஸ்தானிடம், உக்ரைனிடம் என எல்லோரிடமும் உள்ளது


அப்படி தடுப்பதாக இருந்தால் முன்பே தடுப்பார்கள், சதாமின் அணுவுலைகளை, சிரிய அணுவுலைகளை இஸ்ரேல் தகர்க்கவில்லையா? யார் கேட்டார்கள்?




அப்படி பாகிஸ்தான் அணுகுண்டினை ஏன் அமெரிக்கா தடுக்கவில்லை என கேள்வி எழலாம், அது அரசியல், பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருந்தால்தா இந்தியாவினை அடக்கி வைக்க முடியும் எனும் அரசியல்


இதில் வடகொரியா மட்டும் வைத்துகொள்ள கூடாது என்பது ஏன்?, விஷயம் அணுகுண்டு அல்ல‌


வடகொரியாவின் முக்கிய தொழில் ஆயுத ஏற்றுமதி, அந்த விஷயத்தில் அவர்கள் கொள்கை தாராளம், யார் கேட்டாலும் கொடுப்பார்கள், யார் என்றால்? அது தீவிரவாதியானாலும் சரி


முன்பு புலிகளுக்கு எல்லா ஆயுதங்களும் இவர்கள்தான் கொடுத்தார்கள், பாலஸ்தீன ஹமாசுக்கு, ஆப்ரிக்க போராளிகுழுக்களுக்கு என உலகெல்லாம் சப்ளை செய்வது இவர்கள்தான், இதுதான் முதல் பிரச்சினை


ஆனால் இவற்றிற்கு ஆதாரம் இல்லாததால் சபையில் பேசமுடியாது, ஆனால் கொடுப்பது இவர்கள்தான்


ஈரானுக்கு ஏவுகனை நுட்பமும், அணுசக்தியும் வடகொரியா கொடுத்தது என்பது உலகறிந்தது


இப்படி உலகெல்லாம் ஆயுதங்களை அள்ளிகொடுக்கும் வடகொரியாவினை தட்டி வைக்காவிட்டால் நாளை அணுகுண்டை கூட கொடுக்க துணியும் என்பது மேல்நாடுகளின் கணிப்பு


வடகொரியா ஏதோ ஒரு பெரும் தீவிரவாத இயக்கத்திற்கு பெருந்தொகை ஆயுதங்களை கொடுத்து சிக்கியிருக்கின்றது, அந்த கடுப்பில் அடிக்க கிளம்பியிருக்கின்றார்கள்


வடகொரியா "ஏய்..என்னை தொட்டால் கீச்சுறுவேன்.." என வழக்கமாக ரவுடி சீறுவது போல சீறிகொண்டிருக்கின்றது



எல்லா வஞ்சகர்களையும், முடிச்சவிக்கிகளையும் ஒன்றாய் வைக்கவே கூடாது

பெரும் பலசாலிகள் எல்லோரும் ஒரு சேரே இடத்தில் இருந்தால் அங்கு தோல்விதான் என்பதை முதலில் சொன்னது மகாபாரதம், கவுரவர் அணி அப்படித்தான் பலத்தோடு இருந்தது, பின் நாசமானது


காரணம் எல்லோரும் பெரும் வீரர்கள், ஈகோ முதல் "நான் யார் தெரியுமா?", ""என் ஒருவனுக்கு பதில் சொல்ல முடியுமா?" , "உன்னுடன் நானா? என் தகுதிக்கு தகுமா?" என்பது வரை ஏகபட்ட சிக்கல்கள் இருந்தன, கவுரவர் அணி தோற்றது


அப்படி இன்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஐபில் அணியும் பெரும் பலசாலிகள் நிறைய இருப்பதால் தோல்விமுகத்தில் இருக்கின்றது.




எல்லா பராக்கிரமசாலிகளையும் ஒரே இடத்தில் வைக்க கூடாது என்பதற்கு மகாபாரத கவுரவர் அணி போலவே இன்று பெங்களூர் அணி எடுத்துகாட்டு


அப்படியே எல்லா வஞ்சகர்களையும், முடிச்சவிக்கிகளையும் ஒன்றாய் வைக்கவே கூடாது என்பதற்கு அதிமுக கட்சி உதாரணம்..






கலைஞர் நிச்சயம் ராஜமவுலிக்கு வழிகாட்டி







Image may contain: 2 people, people smiling, people sitting, dog and indoor


இன்று தொழில்நுட்பம் பெரிதாக‌ வளர்ந்திருக்கின்றது, கேமரா முதல் கிராபிக்ஸ் வரையில் வித்தை காட்ட முடிகின்றது , எந்த புத்தகம் ஆனாலும், எந்த விஷயமானாலும் கணிபொறியின் முன் அமர்ந்துவிடுகின்றது


சினிமாவினை தொழில்நுட்பத்திலே முடித்துவிடலாம்..


ஆனால் அன்று அப்படி அல்ல, புத்தகங்கள் குறைவு, தொழில்நுட்பமும் இல்லை, காட்சி அமைப்பும் பிரமாதம் இல்லை, படம் என்பது வசனங்களிலே உணர்ச்சி ஊட்டபடவேண்டும் எனும் நிலை





எல்லா வித்தைகளையும் "வசனதமிழ்" என்றொரு ஒரு விஷயத்தில் அடக்கி அப்படங்களை வெற்றிபடங்களாக்கிய கலைஞரின் நினைவு இந்த பாகுபலி காலத்திலும் வரத்தான் செய்கின்றது

இன்று ராஜமவுலி, தொழில்நுட்பம், கிராபிக்ஸ் என எல்லோரும் சேர்ந்து செய்யும் வேலையினை அன்று கலைஞர் தமிழ் மூலம் தனியாக செய்திருக்கின்றார்..

அப்படி அன்றே மந்திரகுமாரி, மனோகரா, காஞ்சிதலைவன் என அக்கால சரித்திர படங்களை தன் வசனத்தின் மூலமே தாங்கி பிடித்த கலைஞர் நிச்சயம் ராஜமவுலிக்கு வழிகாட்டி

இதுதான் கலைஞர் காலத்தை வென்று நிற்பதன் முத்திரை..







தமிழிசையின் இன்றைய காமெடியினை காணவில்லை, அதனை போல பன்னீர்செல்வத்தின் இன்றைய பேட்டியும் மிஸ்ஸிங்

இந்த கோஷ்டிகள் எல்லாம் பாகுபலி பார்க்க சென்றிருக்கலாம், இனி பார்த்துவந்துவிட்டு மோடியினை பாகுபலி வடிவில் பார்க்கின்றோம்,


பன்னீர் செல்வத்தை கட்டப்பா வடிவில் பார்க்கின்றோம், தமிழிசையினை சிவகாமி தேவி வடிவில் பார்க்கின்றோம் என சொல்லாமல் இருந்தால் நல்லது








 


 

உலகெல்லாம் 'பாகுபலி 2' மழை பெய்ய தொடங்கிவிட்டது

https://youtu.be/94BzBOpv42g


உலகெல்லாம்' பாகுபலி 2 'மழை பெய்ய தொடங்கிவிட்டது, எல்லோரையும் போல நனைந்துவிட வேண்டும்


பாகுபலி எப்படி வென்றது?


அரசர் படங்கள் ஒன்றும் புதிதல்ல, பேசும் படங்கள் வந்த காலத்திலிருந்து வருபவைதான், ஆனால் பாகுபலி எப்படி பெரும் அடையாளமாயிற்று என்றால் அதில் டைரக்டரின் தேடலும், ஆர்வமும் தெரிந்தது, சந்தேகமின்றி சொல்லலாம் இன்றைய ஆசியாவின், ஆசியா என்ன? உலகின் மிக சிறந்த டைரக்கடர்களில் ராஜமவுலியும் ஒருவர்




[caption id="" align="alignleft" width="480"]Image may contain: 1 person, beard and close-up எஸ். எஸ். ராஜமௌலி[/caption]

எல்லோரும் அரசர் கதை எடுக்கலாம், மனோகரா, காஞ்சி தலைவன் என பல வரலாம் ஆனால் வரலாற்றினை 100% கூர்ந்து படிக்காமல் இப்படி ஒரு படம் எடுக்கமுடியாது,


அரசாங்கம், குடும்பம், துரோகம், விசுவாசம், பகை, வஞ்சகம், அரியணை ஆபத்து, உடனிருந்தே கொல்லும் பகை, வீரம், அச்சம், உளவாளிகள் என பலவற்றை தாண்டித்தான் ஆட்சி உண்டு, எக்காலமும் அப்படியே, அந்த விஷயங்களை அப்படியே கொண்டுவந்தார்


படத்தின் மிக முக்கியமான விஷயம் போர் கருவிகளையும், வியூகத்தையும் மிக அழகாக காட்டியது, அந்த கல் எறியும் கருவி பைபிளில் கூட சொல்லபட்டிருக்கின்றது, அம்பு வீசும் எந்திரங்கள் இருந்தன என பல நூல்கள் சொல்கின்றன, யாராவது திரையில் கண்டோமா? பாகுபலிதான் காட்டிற்று


வியூகம் இல்லா போர் வெல்லாது, மகாபாரதத்தில் சொல்லபடாத வியூகங்களா? மிக மிக அற்புதமான வியூகங்களை துரோணரும், பீஷ்மரும், திருஷ்டத்துய்மனும் சொல்லாத வியூகங்களா? ஆனால் களத்தில் எப்படி அமைத்தார்கள் என்பதை பாகுபலி கண்ணுக்குள் நிறுத்திற்று


கோட்டைகளை இடிக்க இப்படித்தான் கல் எறிவார்கள், அம்பினை மொத்தமாக இப்படித்தான் எறிவார்கள், இப்படித்தான் வியூகம் இருக்கும், வெற்றிகொடி எவ்வளவு முக்கியமான மனோதத்துவ போர் என ஒவ்வொரு விஷயத்தையும் அழகாக சொன்னது பாகுபலி


பல்வாள் தேவன் சங்கிலியினை சுற்றி அடிக்கும் அந்த ஆயுதம் கோட்டை கதவுகளை உடைக்க, யானையின் தலையில் அடித்து கொல்லும் கருவி, மிக அழகாக அப்படத்தில் காட்டினார்கள்.


தளபதியின் சைகைகளுக்கு ஏற்ப நகரும் படை, சங்கேத வார்த்தைகள் என போர்கள காட்சிகளை அப்படியே காட்டியிருந்ததுதான் பார்வையாளர்களை கட்டிபோட்டு படத்தை கொண்டாட வைத்தது,


முக்கியமாக உயிரோடு ஒருவனை பிடிக்க கால்களை சுற்றும் அந்த குண்டு சங்கிலி காட்சிகள் எல்லாம் வரலாற்றில் இருந்தவை, ஆனால் இந்த படத்தில்தான் கண்டோம்


யானை, குதிரை, ஒட்டகம் தவிர வேறு சில பலமிக்க‌ மிருகங்களையும் யுத்தத்தில் பழக்க அக்கால மன்னர்கள் முயற்சித்ததாக செய்தி உண்டு, பல்வாள் தேவன் காட்டெருமையினை அடக்கும் காட்சியும் அழகான வரலாற்று தகவல்..


செங்கிஸ்கானின் படை ஐரோப்பாவில் எப்படி புகுந்தது என வரலாற்று ஆசிரியர்கள் சொன்னார்களோ, அந்த காட்சியினை கானகேயர் காட்சியில் காண முடிந்தது, செங்கிஸ்கான் அப்படித்தான் ஒரு மாதிரி இருந்திருக்கின்றான், ஆனால் மஞ்சள் நிறம்


உச்சமாக ருத்ரதேவி, மங்கம்மாள் போன்ற ராணிகளின் சாயலில் ரம்யா கிருஷ்ணனை காட்டியிருந்தது அபாரம், அம்மணியும் பின்னி எடுத்திருந்தார், அதுவும் காலை மடக்கி ஆசனத்தில் அமர்ந்து போர் வியூகம் வகுத்த காட்சியில்...... அதனை விளக்க வார்த்தையில்லை,


இனி அப்படி ஒரு கம்பீரம் எந்த நடிகைக்கும் வாய்ப்பில்லை


அடிமை தளபதி எவ்வளவு விசுவாசமானவன் என மாலிக்காபூரை நினைவுபடுத்தியிருந்தார் சத்யராஜ் அபார நடிப்பு


இதனால்தான் சொல்லலாம், ராஜமவுலியினை கண்டு வியக்கவேண்டியிருக்கின்றது, மனிதர் போனபிறவியில் ஏதும் ராஜகுருவாக இருந்திருக்கலாம்..


ஆக பாகுபலிக்கு நட்சத்திரங்கள் கொடுக்க வேண்டுமென்றால் அந்த டைரக்டரின் தேடலுக்கும், நுண்ணிய கவனத்திற்கும் 2 நட்சத்திரம், ரம்யாகிருஷ்ணனுக்கு ஒரு நட்சத்திரத்தில் பாதி, மற்ற நடிகர்களுக்கு மீதி


தொழில்நுட்ப காட்சிகளுக்கு ஒன்று, மிக அபாரமாக செய்திருந்தார்கள்


நிச்சயமாக ஐந்து நட்சத்திரம் கொடுக்க கூடிய படம்தான், ஆனால் குஷ்பூ இல்லாததால் ஒரு நட்சத்திரம் பறிக்கபடுகின்றது,


அவரை மட்டும் ஒரு "ராஜமாதா" காட்சிக்கு வைத்திருந்தால், அல்லது அடுத்த நாட்டு "அரசி" வேடத்தில் வைத்திருந்தால், இந்த நூற்றாண்டின் சிறந்த திரைப்படம் என கொண்டாடி தீர்த்திருக்கலாம்.


மிக அதிகமுறை (குஷ்பூ படங்களுக்கு அடுத்து) நான் பார்த்தபடம் பாகுபலி, அதுவும் அந்த அரசவை மற்றும் யுத்த காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை..


இனி பாகுபலி II பார்த்துவிட்டு வரவேண்டும், நிச்சயமாக எதிர்பார்ப்பு மிக்க படம்தான், ஆனால்...


உலகின் எல்லா சிறந்த‌ வைரங்களையும் ஒரு மகுடத்தில் பதித்துவிட்டு, கோஹினூர் இல்லாவிட்டால் அது முழுமை அடையுமா? அடைந்ததாக சொல்ல முடியுமா?


குஷ்பூ இல்லா பாகுபலி அப்படித்தான்..


கொண்டாட படவேண்டிய எல்லா தகுதி எல்லாமும் ராஜமவுலியிடம் இருக்கின்றது, கொண்டாடலாம், ஆனால் இந்த‌ ஒரு விஷயத்தில் மட்டும் ரஜமவுலி மீது சிறு வருத்தம் ஏற்படத்தான் செய்கின்றது...


அதனால் முறைத்து கொண்டே வாழ்த்தலாம்..





 


 

விணுசக்கரவர்த்தி : நல்ல கலைஞனுக்கு மகத்தான அஞ்சலி..




Image may contain: 1 person


1980களின் மிக சிறந்த இயக்குநரும், கதாசிரியரும், அதன் பின் 2016 வரை எல்லா பாத்திரங்களிலும் நடிப்பில் ஜொலித்தவருமான விணுசக்கரவர்த்தி காலமாகிவிட்டார்


சட்டை இல்லா உடலில் சந்தணம் பூசிகொண்டு வரும் நாட்டாமை பாத்திரம் முதல், அட்டகாசமான மீசையோடு வந்த கமிஷணர் வேடம் வரை அவரை மறக்கமுடியாது


இன்னொருகோணத்தில் பார்த்தால் ரஜினிகாந்தோடு இணைந்து பயணித்த நடிகர், 1980களில் இருந்து அவரோடு நடித்தவர், ரஜினியின் சிவாஜி படத்திலும் அவர் இருந்தார், பின் தூக்கபட்டார்





ரஜினியின் பெரும் வெற்றிபடங்களில் இவரின் பங்களிப்பும் இருந்தது..

ரஜினி என்றல்ல ராமராஜன் முதல் எல்லா வசூல் சக்கரவர்த்திகளுடனும் நடித்து முத்திரை பதித்தவர்..

என்னதான் முகத்திற்கு மேக் அப் போட்டாலும், கண்களில் தெரிந்த அந்த கிராமத்து அப்பாவித்தனமும், பட்டதாரியாயினும் இறுதிவரை கிராமத்து மனிதராகவே பேசிவந்த அந்த குரலும் உண்மையானவை

நல்ல கலைஞனுக்கு மகத்தான அஞ்சலி..







Thursday, April 27, 2017

தியாராய செட்டி (எ) பிட்டி தியாகராயர்




Image may contain: 1 person, hat and close-up


தமிழகத்தில் திராவிட குரல்கள் முதலில் 1900களிலே கேட்க தொடங்கின, அது பிரமணர் அல்லாதோர் சங்கம் என்றே தொடங்கபட்டது, அதில் பல சிந்தனையாளர்கள் இருந்தனர், பின் அது நீதிகட்சி என பயணித்தது


அந்த நீதிகட்சியினை அக்காலத்தில் தொடங்கியர்களில் ஒருவர்தான் தியாராய செட்டி அல்லது பிட்டி தியாகராயர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர்.


நடேச முதலியார், டி.எம் நாயர் ஆகியோருடன் சேர்ந்து 1916ல் நீதிகட்சியினை தொடங்கினார்




மற்ற சாதி மக்களின் உரிமைகளுக்காக முதலில் குரல் கொடுத்தது நீதிகட்சிதான், அது 1920ல் சென்னை மாகாண ஆட்சியினையும் பிடித்து அசத்தியது, அதாவது அன்றைய கேரளா, ஆந்திரம் என பிரிக்கபடாத சென்னை மாகாணம்..


அக்கட்சியின் பன்னீர்செல்வம் போன்றவர்கள் பெரும் வரலாற்றளர்கள், அக்காலத்திலே லண்டனில் பிரிட்டிசாரிடம் பிராமணர் அல்லோதார் சார்பாக மநாட்டில் பேசியவர்கள்..


அது பெரும் நல்லதிட்டங்களை கொண்ட கட்சியாக இருந்தாலும் படித்தவர்கள் நிரம்பியிருந்தனர், கடவுள் நம்பிக்கை இருந்த அதே நேரம் பிராமணர்களின் அடாவடியினை எதிர்த்த கட்சி அது


பெரியாரும் இதில்தான் இருந்தார், ஆனால் அவரால் நீடிக்க முடியவில்லை சுயமரியாதை, திராவிடர் கட்சி என பின்பு தனியாக அதிரடி காட்டினார், வரலாற்றை மாற்றினார்


எப்படி ஆயினும் நீதிகட்சிதான் இன்றைய திராவிட கொள்கைக்கும், கட்சிகளுக்கும் முன்னோடி, அதன் தலைவர்தான் பிட்டி தியாகராஜர்


திராவிட கொள்கைக்கும், பெரும் மாற்றத்திற்கும் அடித்தளமிட்ட அவரின் பிறந்த நாள் இன்று


இவரது நினைவால்தான் அன்று புதிதாக உருவாக்கபட்ட சென்னை புறநகர் ஒன்றிற்கு தியாகராய நகர் என அக்கட்சியின் ஆட்சியில் பெயர் சூட்டபட்டது, அவர் பெயரில் அரங்கம் ஒன்றும் கட்டபட்டது


அது இன்று தி.நகர் ஆயிற்று, சென்னையின் மிக முக்கிய பகுதி ஆயிற்று


அதாவது பெரியார் காலத்திற்கு முன்பே திராவிட குரல் எழும்பியது, பலர் எழுப்பினார்கள், பெரியார் அதனை ஆணிதரமாக பிடித்துகொண்டு போராடினார்


அப்படி பெரியாருக்கு வழிகாட்டியவர்களில் ஒருவர்தான் பிட்டி தியாகராஜர்.


திராவிட வரலாற்றில் மறக்க முடியாத பிதாமகனான அவருக்கு நன்றி கலந்த‌ வணக்கத்தை தெரிவித்துகொள்ளலாம்....















தமிழிசை பலரின் தூக்கத்தை கெடுக்க துவங்கிவிட்டார்....




Image may contain: 1 person, standing


தமிழக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இன்னபிற சீசனல் கட்சிகளின் பெரும் கவலை இப்பொழுது என்னவென்றால், அதிமுக விவகாரத்தில் பிஜேபி தலையிடுவது பற்றியது. சங்கு சக்கர சாமி வந்து குதிக்கின்றார்கள்


அப்படி அந்த அதிமுக இவர்களை மதித்த கட்சியும் அல்ல, கூட்டணியாக 4 சீட் கொடுத்ததும் அல்ல, ஆட்சியில் அமர்த்திய கட்சியும் அல்ல‌


கூட்டணி என அழைத்து ஒரு டீ கூட கொடுத்தகட்சி அல்ல, டீ என்ன? இவர்களை மதித்து அமர கூட வைத்ததில்லை





சுருக்கமாக சொன்னால் இப்படி சில கட்சிகள் இருப்பதே அதிமுகவிற்கு தெரியாத காலம் இருந்தது...

ஆக அந்த அதிமுகவில் என்ன நடந்தால் இவர்களுக்கென்ன? பிஜேபி என்ன செய்தால் இவர்களுக்கென்ன?

அந்த அதிமுக இருந்தால் இவர்களுக்கென்ன லாபம், அழிந்தால் இவர்களுக்கென்ன நஷ்டம்? ஒன்றுமில்லை

பின்னர் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம், கண்டனம்?

வேறு ஒன்றுமில்லை, நாடெங்கும் காங்கிரசுக்கு பின்னடைவு, அது பின்னடைவு என சொல்வதை விட அன்றே காங்கிரசை பிடிக்காத கூட்டம் இருந்தது, நேரு அரசியலுக்கு லாயக்கில்லை என்றது, அது நேதாஜியினை விரும்பியது, சாஸ்திரியினை கொஞ்சம் ஓகே சொன்னது, இந்திராவின் கட்டுபாடுகளை தீரத்துடன் எதிர்த்தது

காங்கிரசுக்கு மாற்றாக ஏதும் செய்தே தீரவேண்டும் என்ற வெறி அதனிடம் வளர்ந்துகொண்டே இருந்தது

அந்த கூட்டம் காங்கிரசின் ஆட்சியின் சலிப்பில் வளர்ந்து, பெரும் கூட்டமாகி இப்பொழுது பிஜேபி பக்கம் சரிந்துவிட்டது

இந்த திருப்பம் தமிழகத்திலும் நேர்ந்துவிடுமோ?, இதுவரை நம்மை போல திண்ணையில் அமர்ந்திருந்த தமிழக பாஜக ஏதும் கோபுரத்தில் ஏறிவிடுமோ எனும் ஒருவகை அச்சம்

அப்படி ஏறிவிட்டால் தமிழிசை எல்லாம் பரபரப்பான அரசியல்வாதி ஆகிவிடுவாரே, அதனை காண்பதற்கு பதில் தஞ்சாவூர் கோவில் கோபுரத்தில் ஏறி குதித்துவிடலாமே எனும் ஒரு வகை பயம்

காலம் எப்படி எல்லாம் மாறுகின்றது

தமிழிசை பலரின் தூக்கத்தை கெடுக்க துவங்கிவிட்டார் என்பது மட்டும் புரிகின்றது...












வைகோவுக்கு மீண்டும் சிறை - ஜூன் 2வரை நீதிமன்றக்காவல்


தமிழகத்தில் ஆட்சி மாறியபின்பு வெளிவரும் ஐடியா வைகோவிற்கு வந்திருக்கலாம்


முன்பு காங்கிரஸ் ஆட்சி முடிந்தபின் வெளிவாருங்கள் என பிரபாகரனுக்கு இவர்தான் ஐடியா கொடுத்திருந்தார், ஆனால் மோடி வந்தபின்னும் வெளிவராமல் பிரபாகரன் தான் அடம் பிடிக்கின்றார்.












 


 

தமிழக அரசு மின்சாரம் வாங்கியதற்காக செலுத்தவேண்டிய தொகை பாக்கி....

திருவள்ளுர் மாவட்டம், வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு தமிழக அரசு செலுத்தவேண்டிய தொகை பாக்கி உள்ளதாகவும், தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1,156 கோடி செலுத்தவேண்டி உள்ளதால், வல்லூர் அனல்மின்நிலைய நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிவிட்டு மின்சாரத்தை நிறுத்தியதாகவும் ஒரு செய்தி


ஜெயா சொத்துமதிப்பு எத்தனாயிரம் கோடி?, கணக்கில் வராத சொத்துக்கள் எத்தனை ஆயிரம் கோடி?, கூவத்தூரில் செலவழிக்கபட்டது எத்தனை ஆயிரம் கோடி......


அதிமுக அமைச்சர்கள் வீட்டில் நடந்த சோதனையில் ஏராளமான நூறு கோடிகள் கைபற்றபட்டது, ஆர்கே நகரில் அதிமுக பல ஆயிரம் கோடிகளை இறக்கியதால் தேர்தல் நிறுத்திவைப்பு,




சிறையில் ஏசி வைக்க சசிகலா பல கோடி பேரம் பேசினார், இரட்டை இலையினை மீட்க பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது...


இப்படியும் சில செய்திகள்


இரண்டும் தமிழக செய்திகள் என்பது குறிப்பிடதக்கது, இதுதான் தமிழகம்


இந்த செய்திகளை எல்லாம் கேட்டபின்னும் சோறு தின்றுவிட்டு காற்று வீசிகொண்டிருக்கின்றான் அல்லவா?


அவன் தான் தமிழன்..



தமிழகமெங்கும் கடுமையான மின்வெட்டு : செய்தி





மின் உற்பத்தி பாதிப்பு, தமிழகமெங்கும் கடுமையான மின்வெட்டு : செய்தி


இப்பொழுதிருக்கும் அமைச்சர்கள் வித்தியாசமானவர்கள் அல்லவா? வீடு வீடாக பேட்டரி வழங்குதல் போன்ற திட்டங்களில் இறங்கலாம்.


அதற்கும் மேலாக மின் உற்பத்தி டர்பன்களை கையால் சுழற்றும் திட்டமும் இருக்கலாம்





சென்னையில் எந்த மின்வெட்டானும் ராமசந்திரன் சமாதி ஏரியா மட்டும் இருளில் மூழ்காது, ஏனென்றால் அவரும், ஜெயாவும் விழித்திருந்து அண்ணாயிச கொள்கைகளை படிக்கின்றார்கள் அல்லவா?

கல்லறைகளுக்கு இருக்கும் மின்வசதி அங்கு மக்களுக்கு இல்லை.

கூடன்குளம், கல்பாக்கம் என பல ஆயிரம் மெகாவாட் உற்பத்தி என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், ஆனால் எங்கு செல்கின்றதோ தெரியவில்லை

எதற்கும் இந்த அமைச்சர்களிடம் மின்சாரம் ஆவியாகின்றது தடுங்கள் என சொல்லி வைத்தால் நல்லது

அப்படியா? இதோ பார்க்கின்றோம் என யோசிக்காமலே தெர்மாக்கோலோடு அணுவுலைக்குள் குதிப்பார்கள்

அப்படி குதித்தால் இன்னும் தமிழகத்திற்கு நல்லது..




 

 



அருணாசல பிரதேசத்தின் ஊர்களுக்கு சீனமொழியில் பெயர்....





சீனா அருணாசல பிரதேசத்தின் ஊர்களுக்கு சீனமொழியில் பெயர் வைத்துவிட்டதாம், தமிழகத்தில் பலர் பொங்கிகொண்டிருக்கின்றார்கள்


அவர்களின் நாட்டுபற்று வாழ்த்துகுரியது எனினும் அவர்களின் சொந்த ஊர் பெயர்களை வெள்ளையன் குதறிவைத்துவிட்டு போனதை அப்படியே வைத்திருக்கின்றார்கள்


டிரிச்சி, தஞ்சூர், டுடுகுரின், ஊட்டி, என பல ஏராளமான ஊர்கள் வெள்ளையன் அழைக்க தொடங்கிய ஊர்பெயர்கள் அப்படியே நீடிக்கின்றன,





அவன் சுருக்கியும், இன்சியல் வைத்தும், வெட்டியும், நறுக்கியும் அழைத்த பெயர்களில்தான் இன்றும் தமிழக நகரங்களும் ஊர்களும் அழைக்கபட்டு கொண்டிருக்கின்றன..

அவன் வாயில் அவ்வளவுதான் நுழையும், நமக்கு ஏன் நுழையாது?

சொந்த ஊரின் பெயரை முதலில் வெள்ளையனின் பெயர்மாற்றத்திலிருந்து தமிழ்படுத்துங்கள், அதன் முழு பெயரோடு அழகாக அழையுங்கள்

முதலில் அந்த பழம்பெயரை மீட்டெடுங்கள், எங்கோ இருக்கும் அருணாசல பிரதேசத்தை பின்னர் பார்த்துகொள்ளலாம்...









தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் கூடாது: இலங்கை பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்

இதிலெல்லாம் இந்தியா கவனமாக இருக்கும், விட்டே கொடுக்காது. கடுமையாக வலியுறுத்தும்

இன்னொரு முறை தாக்குதல் நடத்தினால் உடனே அப்பொழுதும் வலியுறுத்தும், வலியுறுத்திகொண்டே இருக்கும்...




 

 



 

திரையுலகினர் வேலைநிறுத்த்த‌ போராட்டம் : விஷால் அறிவிப்பு

திருட்டு விசிடியினை ஒழிக்காவிட்டால் மே 30முதல் திரையுலகினர் வேலைநிறுத்த்த‌ போராட்டம் : விஷால் அறிவிப்பு


அந்த வேலையினை ஒரேடியாக நிறுத்தி தொலைந்தால் என்ன?, ஏன் போராட்டத்திற்கு மட்டும் வேலையினை நிறுத்தவேண்டும்


மிஸ்டர் விஷால், கமலஹாசன் இப்பொழுதெல்ல்லாம் உங்கள் அருகிலேதானே இருக்கின்றார், திருட்டு விசிடி சவாலை எதிர்கொள்ள அவரிடம் இல்லாத ஐடியாக்களா?




அந்த அனுபவத்தை கொஞ்சம் கேட்டால்தான் என்ன? நீங்கள் கேட்கவே மாட்டீர்கள், கேட்டால் உங்கள் கெத்து என்னாகும்?,


எப்படியும் போகட்டும்..


இந்த திருட்டுவிசிடி செய்யும் வேலையினைத்தான் ஜெராக்ஸ் மிஷினும் செய்கின்றது, இணைய பிடிஎப் பிரதிகளும் செய்கின்றன, புத்தக பதிப்பாளர்களோ, எழுத்தாள பெருமக்களோ ஏதாவது போராட்டம் செய்கின்றார்களா?


அறிவுஜீவிகளான அவர்கள் என்றாவது ஜெராக்ஸ் மெஷினை கண்டித்து, ஸ்கேனிங் மெஷினை கண்டித்து எழுதமாட்டோம் என கொடிபிடிக்கின்றார்களா?


இதுதான் என்றும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது..


நல்ல எழுத்தாளன் பணத்திற்காய் எழுதுவதில்லை,






சிம்புவின் AAA படம் இரண்டு பாகமாக வெளிவருகின்றது


ஒரு பாகமே பார்க்கமுடியாது, இதில் இரண்டாம் பாகமா?


பாகுபலி பார்த்துவிட்டு கொஞ்சநாளைக்கு தியேட்டர் பக்கமே சென்றுவிடகூடாது....








Wednesday, April 26, 2017

ஹாஜி மஸ்தான் பாத்திரத்தில் ரஜினி நடிக்கின்றார் : செய்தி

மும்பை தாதா ஹாஜி மஸ்தான் பாத்திரத்தில் ரஜினி நடிக்கின்றார் : செய்தி


ரஜினியினை அந்த மஸ்தான் வேடத்தில் நடிக்க சிவசேனா + பாஜக கும்பல்கள் விடுமா? அதனை மீறி நடிக்கும் அளவிற்கு ரஜினிகாந்த் அவ்வளவு தைரியசாலியா?


முன்பே திப்புசுல்தான் வேட சர்ச்சையில் ரஜினி தப்பிஓடிய வரலாறு உண்டு..




இப்பொழுது யாரேனும் ஒரு காவி உறுமினாலே ரஜினி ஓடிவிடமாட்டாரா?



ஏப்ரல் 26, கதிரியக்க அழிவு சரித்திரம்.


ஏப்ரல் 26, கதிரியக்க அழிவு சரித்திரம்.


Image may contain: sky and outdoor


இன்று ஜென்மவிரோதிகளாக‌ அடித்துகொள்ளும் ரஷ்யாவும் உக்ரைனும், அன்று சோவியத் யூனியன் , பழைய ரங்கராவின் படங்களின் குடும்பம் போல‌ மகா ஒற்றுமை, பொதுவுடமை அல்லது பண்ணைமுறை ஏதோ ஒன்றில் இணைந்திருந்தது.
அன்று அவர்கள் பெரும் வல்லரசு, வல்லரசு என்றால் நிச்சயம் அணுகுண்டு வேண்டும். அணுகுண்டு வேண்டுமென்றால் அணுவுலை வேண்டும்.


1955 களிலே ஏகபட்ட அணுவுலைகளை அமைத்திருந்தது ரஷ்யா, 1958ல் அவர்களின் முதல் அணுவுலை விபத்து நிகழ்ந்தது, 1974ல் ஷென்ஸ்கோவ், 1983ல் ஆட்டோமோஷ் என அவ்வப்போது அவர்களின் நுட்பம் விபத்தினை தந்து கொண்டே இருந்தது.


அவர்கள் இரும்புதிரை நாடு, ஊரே செத்தாலும் உலகிற்கு ஒன்றும் தெரியாமல் பார்த்துகொள்வார்கள், அவ்வளவு கட்டுபாடு. ஆனால் அதனை எல்லாம் மீறி அவர்களே ஆடிப்போனவிபத்து செர்னோபில், அவர்கள் என்ன? உலகமே அலறிற்று.


1986, ஏப்ரல் 26ல் செர்னோபில் அணுவுலை, கூடங்குள எதிர்காலத்தினை போல 4 உலைகளோடு இயங்கிகொண்டிருந்தது, வழக்கமான சோதனை, எல்லாம் ஓகே எனும் நிலையில், திடீரென நீராவிகுழாயில் ஏற்பட்ட விபத்து பெரும் விபத்தாக மாறி அணுவுலை வெடித்தது.


ஏதோ தீ விபத்தை அணைப்பது போல தீயணைப்பு சம்பிரதாயங்கள் நடந்துகொண்டிருந்தன, நரகாசுரன் என்றால் கொன்றுவிடலாம், ரத்தபீஜன் என்றால்?


Image may contain: 4 peopleரத்த பீஜனின் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இன்னொரு அரக்கனாக மாறும் என்பது புராணகதை, அணுவும் அப்படித்தான், பிளக்க பிளக்க போய்கொண்டிருக்குமே தவிர முடிவே இல்லை.


அந்த உலையில் ஊற்றபட்ட தண்ணீர் வழிந்தோடி ஆற்றில் விழுந்து ஆறு செல்லும் இடமெல்லாம், கதிரியக்கம் பரவியது, வானத்திலிருந்து ஹெலிகாப்டரில் நீருற்றிய பணியாளரரில் 5 பேர் உடனடி கதிரியகத்திற்கு பலியாயினர். அடுத்த உலைகளில் பணியாற்றிய 30 பேர் மூச்சுவிட நேரமில்லாமல் செத்தார்கள்.


கம்யூனிச ரஷ்ய அரசு அதிர்ந்தது, ஆனால் மக்களை உடனடியாக வெளியேற்றியது, கிட்டதட்ட 5 லட்சம் மக்கள் உடனடியாக 100 கி.மீ தள்ளி கொண்டுசெல்லபட்டார்கள்.


கதிரியக்கம் என்பது மெல்லகொல்வது, கிழக்கு ஐரோப்பா முழுவதும் அது பரவிற்று. 2 லட்சம் புற்றுநொயாளிகளை ஒரு மாதத்தில் உருவாக்கிற்று.


மேற்கு ஜெர்மனியில் மட்டும் கிட்டதட்ட 40000 குழந்தைகள் ஐ பட விக்ரம் போல அலங்கோலமாக உருமாறி பிறந்தன, அச்சபட்ட அரசுகள் அதிரடியாக கருக்கலைப்புகளை தமிழக கள்ளவோட்டுபோல கணக்கற்று செய்தன.


அந்த அணுவுலையை மிக சிரத்தைஎடுத்து 5 அடி தடிமன் கொண்ட காங்ரீட்டால் மூடியபொழுதும் அது 3 ஆண்டுகளில் சிதைந்தது. மறுபடி செலவு, மக்கள் இடமாற்றம், அணுவுலை பராமரிப்பு என ரஷ்ய பட்ஜெட் எகிற, ஒரு கட்டத்தில் அந்த அமைப்பே சிதறிற்று.
ரஷ்ய உக்ரைன் மோதலின் தொடக்கபுள்ளி இது.


அழிவென்றால் மகா அழிவு, இன்னும் அவ்வுலையை சுற்றி 200 கி.மீ அளவு வாழ தகுதியற்ற இடம், அப்படி விட்டால் கூட பரவாயில்லை 400 கி,மீ தள்ளி புற்களில் கூட கதிரியக்கம் இருந்ததாம், அங்கு வளர்ந்த மான்களும், கால்நடைகளுக்கும் கதிரியக்கம் ஏற்பட்டு அவைகளை உண்ண கூடாத நிலை வந்தது.
அவ்வளவு ஏன் குடிநீரில் கூட கதிரியக்கம் இருந்ததால், அச்சபட்டு வேறுநாட்டிலிருந்து குடிநீரும் கொண்டுவரபட்டது.


சொந்த நாட்டு விவசாய பொருட்களை கூட 3 ஆண்டுகள் உண்ணாமல் வேறு நாடுகளிலிருந்து வாங்கி சாப்பிடும் அளவிற்கு நிலை மோசம், இதனை கண்டு மனம் வெறுத்து மிகசரியாக அடுத்த 2 ஆண்டுகளில் ஏப்ரல் 26ம் தேதி தற்கொலை செய்துகொண்டார் அந்த அதிகாரி.


அவர்பெயர் "வாலெரி லெகசோவ்" சோவியத் ரஷ்ய தலமை அணுசக்தி விஞ்ஞானி, இதற்குமேல் சொல்வதற்கு என்ன இருக்கின்றது.


அணுவுலை எவ்வளவு ஆபத்தானது? அது உறங்கும் எரிமலை விட மகா மோசமானது என்பதை உலகம் அறிந்துகொண்ட நாள் ஏப்ரல் 26.


இந்த மாயை வியாபார உலகில் உள்ளாடைகளுக்கு கூட ஒரு நாள் உண்டு, மிக தந்திரமாக அணுகுண்டு வீசபட்ட நாள் அணு எதிர்ப்புநாள், ஆனால் அணுவுலை வெடித்தநாளில் ஒரு மண்ணாங்கட்டி நினைவஞ்சலியும், ஊர்வலமும் கிடையாது.
காரணம் அதனை நினைவுபடுத்தி மக்களை சிந்திக்கவிட்டால் உலகெங்கும் ஒரு அணுவுலை கூட அமைக்கமுடியாது, அந்த அளவிற்கு அதனைபற்றிய கடும்கட்டுபாடுகளை அரசுகள் மேற்கொள்கின்றன.


உக்ரைனில் வெடித்ததும் நீராவிகுழாய் வால்வுதான், புக்குஷிமாவில் பெரும் அழிவினை உண்டாக்கி இன்று ஜப்பான் வலுஇழப்பதற்கும் காரணம் அதே நீராவிகுழாய் அழுத்தம்தான், இரண்டுமே ரஷ்ய டிசைன்கள்.


கொஞ்சநாளைக்கு முன்பாக கூடன்குளத்து உலையில் நடந்ததும் வெறும் நீராவிகுழாய் வெடிப்புதான் என செய்திகள் வந்ததும் நினைவிருக்கலாம்.


அப்பகுதி மக்கள் ஒரு பெரும் போராட்டத்தை அதுவும் உலகமே திரும்பி "Where is Koodangulam? why Indian Goverment never respect them?" என கேட்கவைத்த போராட்டத்தை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது,இன்னும் போராடுவார்கள்.


ஆனால் அது சாதிரீதியாக விமர்சிக்கபட்டு, பின்னர் போராட்டகுழு தலைவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டபொழுது மத ரீதியாக விமர்சிக்கபட்டு தோற்றும்போனார் பெரும்பான்மைபெற்றவர் டெல்லிசென்றார்.


அங்கு அவர் என்ன செய்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும், தலையணை மட்டும் இல்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றால் எவ்வளவு பெரும் வாய்ப்பு? அதுவும் சொந்தமாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சினை. ம்ஹூம் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் வேறு.


ஆனால் அணு அப்படிபட்டது அல்ல. அதற்கு ஜாதி,மதம்,இனம் தெரியாது. வெளியே வந்துவிட்டால் ஓரறிவுமுதல் ஆறறிவுவரை அனைத்து உயிர்களையும் அழித்துவிட்டு, அடுத்த 1000 ஆண்டுகளுக்காவது அதனை சுடுகாடாக மாற்றும்.


பாதுகாப்பான அணுவுலை கதிரியக்கத்தை கட்டுபடுத்தலாம் எனும் விஞ்ஞானிகள், அந்த கழிவினை என்ன செய்வீர்கள் என்றால் அப்படியே எலிபொந்துக்குள் ஒழிந்துகொள்கின்றார்கள். அவர்களும் என்ன செய்வார்கள், அவர்களுக்கும் தெரியாது என்பதுதான் உண்மை, ஆனால் அது மகா ஆபத்தானது.


அணுகுண்டு துகள்போக மீதியை இரும்புபெட்டியில் போட்டு நிலத்தில் புதைக்கவேண்டும், அல்லது நடுகடலில் போடவேண்டும். கன்னடர் போல கோலாரில் எதிர்ப்பு தெரிவிக்க (ஆனால் மின்சாரம் வேண்டும்) கடலில் நெத்திலிமீன்கூட சண்டைக்கு வராது.


கல்பாக்கத்தில் அபாயகரமான ஈணுலை அமைக்கின்றார்களாம், கூடங்குளத்தில் 3,4 என விரல்கள் உயர்கின்றன. இதில் அமெரிக்காவோடும் ஒப்பந்தமாம். அமெரிக்க 3 மைல் அணுவுலை விபத்து கொஞ்சமும் குறைந்தது அல்ல.


மிக கொடூரமாக 20 தொழிலாளர் கொல்லபட்டதோ, அல்லது ராஜஸ்தான் விவசாயி டெல்லி சென்று உயிர்விட்டதையோ கண்டுகொள்ளாத அரசு நிச்சயம் ஏப்ரல் 26 போன்ற ரணங்களையும் கண்டுகொள்ளாது.


மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும், அது சாத்தியமே இல்லை. நிச்சயம் அணுவுலைக்கு எதிராக பொங்கவேண்டிய தென் தமிழகம், சாதிக்கும் இன்னபிற கொடுமைகளிலும் மூழ்கி கிடப்பதை பார்க்கும்பொழுது அதெல்லாம் சாத்தியமில்லை,
திரு.உதயகுமார் அவர்களும், இடிந்தகரை மூதாட்டிகளும் மட்டுமே அதற்கு போராட பிறந்தவர்கள் என்பது இவர்களின் கொள்கை, இவர்கள் என்பதில் நானும் உண்டு என்பதையும் சேர்த்துகொள்ளலாம்.


மதத்தின் பெயரால் அப்போராட்டத்தை கொச்சைபடுத்தினால், அந்த புராணத்தின் ரத்தபீஜனை நினைத்துகொள்ளுங்கள், அவன் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இன்னொரு அரக்கனை உருவாக்கி உலகமே அவனால் நிறைந்ததாம், பின் அன்னை காளி அவன் ரத்தம் கீழே விழாமல் குடித்துதான் அவனை கொன்றாளாம்.


அவனது ரத்ததுளிக்கும் அணுவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை, ஆனால் அதனை விழுங்குவதற்கு யாரும் இல்லாமல்தான் செர்னோபில்லும், புக்குசிமாவும் இன்னும் ஏராளமான அணுவிபத்துக்களும் நமது கண்முன்னே நடந்து ஏராளமான உயிர்களை கொன்றுகொண்டிருக்கின்றது.


ஆயினும் நாமெல்லாம் பாரத தாயின் மக்கள், இன்றைய அணுவிஞ்ஞானம் ஐரோப்பியர் அல்லது யூதருடையது. ஆனால் மகா பாரதத்திலே அஸ்வத்தாமன் ஒரு புல்லை பிரம்மாஸ்திரமாக மாற்றினான், அதற்கு அர்ச்சுணனிடம் பதில் கனையும் இருந்தது.


அர்ச்சுணனுக்கு அதை கட்டுபடுத்தும் வித்தை தெரிந்தது, ஆனால் அஸ்வத்தாமனுக்கு தெரியவில்லை என்று சொல்லபட்டிருக்கின்றது.
அதாவது சாதாரணபொருளை அழிவு ஆயுதமாக செய்யலாம், அப்படிதான் வெறும் கல்லான யுரேனியம் அணுகுண்டாக மாறுகின்றது, அது அழிவுசக்தி ஆனால் கட்டுபடுத்தும் வித்தை நிச்சயம் உண்டு, என பாரதம் நம்பிக்கை அளிக்கின்றது.


ஒருவேளை அந்த நுட்பம் தெரியாதவர் வரும் முன், யாராவது அஸ்வத்தாமன் போல வீசிவிட்டால்? , அப்பொழும் காக்க பகவான் தான் வரவேண்டும்.


அப்படித்தான் இடிந்தகரை கடற்கரை அருகில் ஒரு கூட்டம் கடலைகளயும் தாண்டி வருடகணக்கில் கதறிகொண்டிருந்தது.
அந்த கதறல் நிச்சயம் அவர்களுக்கானது மட்டுமல்ல, மொத்த தென் தமிழ்,வட இலங்கை மற்றும் கேரள மக்களுக்கானது, அவர்களின் சந்ததிகளுக்கானது.


அதனைத்தான் ஏப்ரல் 26, செர்னோபில் கொடூரம் நினைவுபடுத்திகொண்டே இருக்கின்றது.


நேரடியாக பாதிக்கபட்ட 2 லட்சம் மக்கள், மறைமுகமாக பாதிக்கபட்ட 8 லட்சம் மக்கள், கால்நடைகள், அலங்கோரமான மனிதபிறப்புக்கள் என அதனை ஒருமுறை எண்ணினால் போதும். (1986ல் செர்னோபில் மக்கள் நெருக்கம் மிக குறைவு, நமது பகுதிகளை நினைத்தாலே "திக்")


அவனை அடக்கும் வரம் நமக்கு வரும்வரை அந்த அரக்கனை எழுப்பாதீர்கள், அவன் அப்படியே உறங்கட்டும் என உரக்க கத்த தோன்றும்,


ஆயினும் எழுப்பியே தீருவேன் என்று ஆட்சியர் அடம்பிடித்தால்?


"அர்ச்சுணனுக்கு தெரிந்த அந்த கட்டுபடுத்தும் வித்தையை, எமக்கு சொல்லமாட்டாயா பரந்தாமா?" என்று அவரிடம்தான் கேட்க வேண்டும்.


அவர் புல்லாங்குழலோடு மாய சிரிப்பு சிரிக்கின்றார், அதன் அர்த்தம் நமக்கு புரியாது,


அந்த கண்ணனுக்கு மட்டும்தான் புரியும்.













ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும், நான்கு ஹீரோக்கள் எதற்கு??" : ஜோதிகா கேள்வி

"சினிமாவில் இயக்குநர்கள் ஒரு ஹீரோவுக்கு நான்கு ஹீரோயின்கள் வைத்தால் நான்கு காதலிகள் வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று இளைஞர்கள் நினைப்பார்கள்.


ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும், நான்கு ஹீரோக்கள் எதற்கு??" : ஜோதிகா கேள்வி


அம்மணி ஏதோ ஒரு சில சூர்யா படங்களால் பாதிக்கபட்டிருப்பது தெரிகின்றது, சிங்கம் வரிசை படமாக இருக்கலாமோ?




நேரடியாக கணவனிடம் கேட்க முடியாத விஷயங்களை, இயக்குனர்களிடம் கேட்டு கோபத்தை குறைத்திருக்கலாம் :)


என்ன இருந்தாலும் தமிழகத்து மருமகள் அல்லவா? பொங்கிவிட்டார்.



தினகரன் இன்று இயேசுநாதரைப் போல புனிதராகியுள்ளார் - நாஞ்சில் சம்பத்


நேற்று நள்ளிரவில் பன்னீர் அணியும், எடப்பாடி அணியும் பேச்சுவார்த்தை நடத்தின, இன்றிரவும் பேச்சுவார்த்தை நடக்கும் : செய்தி


பாஷா படத்து கடத்தல் கேங் போல நள்ளிரவில் மீட் செய்திருக்கின்றார்கள், பொதுவாக மாபியா குழுக்கள் அப்படித்தான் சந்தித்துகொள்ளும்


இவர்களும் அப்படியே சந்திக்கின்றார்கள், ஒருவேளை நள்ளிரவு 12 மணிக்குத்தான் அம்மா ஆன்மா பஞ்சாயத்து பேச வருமோ?




ஏதும் சுடுகாட்டு அருகில் சந்திப்பார்கள் போல..




  






கலிங்க போரிலே அசோகர் வென்றார், மனம் மாறினார் என்றுதான் வரலாறு சொல்லும்


ஆனால் அந்த கலிங்க மன்னன் யார்? அவன் என்ன குற்றம் செய்தான்? அவன் பெயர் என்ன? என ஒரு வரலாறும் பேசாது


அப்படி தினகரன் லஞ்சம் கொடுக்கமுயன்றார் என வரலாற்றில் பதிந்துவிடவேண்டும், யாரிடம் கொடுக்கமுயன்றார் என்பதெல்லாம் இந்திய மக்களுக்கு அறவே தேவையில்லாத கேள்விகள் என்கின்றனர் எக்ஸ்பர்ட்டுளான லோட்டஸ்கள்.





நடந்து முடிந்த நாடகத்திற்கு வசனம் எழுதுவது இந்தியாவில் புதிதா? அப்படி விரைவில் செய்தி வரும், வராமல் போகாது.

அதற்காக தேர்தல் கமிஷன் வாசலில் பெட்டியினை வைத்துவிட்டு தினகரனும், சுகாசும் காத்திருந்தார்கள் எனும் அளவிற்கு அபத்தமாக இருக்காது என நம்புவோம்..


 






எவ்வளவு அழிச்சாட்டியம் நடந்தது? காலை எழுந்ததும் அங்கு சென்று வணங்கிவிட்டுத்தான் குளித்தார்கள், பின் வணங்கிவிட்டுத்தான் உண்டார்கள், பின் வந்து உருண்டார்கள், கழிவறைக்கு போகும்பொழுதும் சமாதிக்கு வந்து வணங்கிவிட்டுத்தான் சென்றார்கள்


ஆளாளுக்கு அங்கு 24 மணிநேரமும் வழிபட்டுகொண்டே இருந்தார்கள், தமிழக பட்ஜெட் வரை அங்குதான் உருட்டபட்டது,


இப்பொழுது சத்தமே இல்லை, மகா அமைதி




எப்படியோ அம்மா சமாதி, ஆள் செல்லாமல் கைவிடபட்ட பகுதியானதில் மகிழ்ச்சி, விரைவில் அது புதர்மண்டி போகலாம்


அங்கு சென்று வணங்கிய யாரும் நிம்மதியாக இல்லை, சிலர் வெளியே கூட இல்லை..


இனி பத்மநாபாசாமி கோயில் போல புதையல் இருக்கின்றது எனசொன்னாலும் ஒரு பயலும் போகமாட்டான்


ஜெயாவிற்கு மட்டுமல்ல, அவர் சமாதிக்கும் ஜெயில் சென்டிமெண்ட் அதிகம் போல...







தினகரன் இன்று இயேசுநாதரைப் போல புனிதராகியுள்ளார் - நாஞ்சில் சம்பத்


இயேசு கைது செய்யபட்டவுடன் அவரோடு கூட இருந்த யூதாஸ் உடனே தூக்குபோட்டு செத்துட்டான் மிஸ்டர் சம்பத்...


அவன் மானஸ்தன்





அந்த இயேசுநாதருக்கு அப்படிபட்ட மானமுள்ள, விசுவாசமுள்ள சீடர்கள் கிடைத்திருக்கின்றார்கள், அவர் கைது செய்யபட்டதும் செத்திருக்கின்றார்கள்





‛தினகரனால் தமிழகத்திற்கு அவமானம்': தமிழிசை


காந்தியினை சுடுதல், மசூதி இடித்தல், மாட்டுக்காக மனிதனை கொல்லுதல், இன்னும் பல அட்டாகசங்களை செய்தல் போன்ற சம்பவங்களால் இந்தியாவிற்கு உலகளவில் எவ்வளவு "பெருமை" என இவரிடம் யாரும் கேட்டுவிட கூடாது


 






Image may contain: 1 person


இவர்கள் தொடங்கிவிட்டார்கள்,
வைகோ ஏன் சிறையில் இருந்துகொண்டார் என்பது புரியலாம் :)


அடுத்து போராடுவது யாராக இருக்கலாம்?