பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: காங்கிரஸ்
மசூதி இடிக்கபடும்பொழுது மத்தியில் இவர்கள் தான் ஆட்சி செய்தார்கள், அந்த சலசலப்பு வரும்பொழுதே ராணுபடைகளை இறக்கி 4 பேரை சுட்டிருந்தால் மசூதி இருந்திருக்கும்
அப்பொழுது அமைதி காத்துவிட்டு இன்று நியாயம் கேட்கின்றார்கள், முதல் குற்றவாளி இவர்கள்தான், அதன் பின்னால்தான் அத்வாணி வகையறா..
அது இருக்கட்டும்
தமிழகத்தில் தா.கிருட்டினன் தன்னை தானே வெட்டி செத்தது போல, பாபர் மசூதியும் தானாகவே இடிந்துவிட்டது என நம்புவோம்
அந்த பாபர் உறுதியாக மசூதியினை கட்டவில்லை, அதுதான் பிரச்சினை. அதனால்தான் கரசேவகர்கள் மசூதியின் டூம் மீது ஏறியவுடன் அது இடிந்தது
கரசேவகர்கள் மசூதியினை இடிக்க அதன் மேல் ஏறவில்லை, மாறாக அதன் மீது நின்று பார்த்தால் ராமர் பிறந்த இடம் எங்காவது பக்கத்தில் இருந்தால் தெரியும் என்பதற்காக ஏறினார்கள்
மகேந்திர கிரியில் அனுமான் நின்று இலங்கையினை கண்ட காட்சி போன்றது அது, அவர்கள் மேல் பிழை இல்லை
அங்கு கூடுகட்டியிருந்த புறாக்கள் பயந்துவிட கூடாது என்பதற்காக காவி கொடியோடு ஏறினார்கள், அவ்வளவு நல்லவர்கள் அவர்கள்.
ஆக மசூதி இடிப்பில் குற்றவாளி அந்த பாபரே, மசூதியினை உறுதியாக கட்டாத அவர்தான் காரணம்..
No comments:
Post a Comment