அகழ்வாராய்ச்சியில் ஏதும் செய்யவேண்டுமென்றால் நெல்லை மாவட்ட ஆதிச்சநல்லூரில் செய்யுங்கள்
பெரும் நாகரீகம் அங்குதான் உறங்கிகொண்டிருக்கின்றது, தமிழனின் ஆதி அங்குதான் புதைந்திருக்கின்றது, அதனை தோண்டுங்கள்
சிந்துவெளி, எகிப்து, மெசடோபியாவினை மிஞ்சும் தொன்மையான விஷயம் வெளிவரும், அதனை செய்யுங்கள்
கீழடி தேவைதான், ஆனால் ஆதிச்சநல்லூர் அவசியம் தேவை
அம்மா தமிழிசை, அதனை செய்வீர்களா? செய்து காட்டுவீர்களா?
திராவிட, காங்கிரஸ் ஆட்சிகள் செய்யாததை நீங்கள் செய்வீர்களா? நிச்சயம் உங்கள் பிஜேபி செய்யுமா?
அப்படி மட்டும் செய்துவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிஜேபி ஆட்சி தமிழகத்தில் நடக்கட்டும், தமிழறிந்த, தமிழர் நாகரீகமறிந்த யாரும் அந்த நன்றியினை மறக்கமட்டார்கள்
கீழிசையில் சண்டையிடும் தமிழிசையே, கொஞ்சம் தேற்கே வந்து ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் இறங்குங்கள்
அப்படி இறங்கிவிட்டால் நிச்சயம் தமிழர் ஆதரவு உங்களுக்குத்தான், உங்களுக்கு மட்டும்தான்..
No comments:
Post a Comment