திருட்டு விசிடியினை ஒழிக்காவிட்டால் மே 30முதல் திரையுலகினர் வேலைநிறுத்த்த போராட்டம் : விஷால் அறிவிப்பு
அந்த வேலையினை ஒரேடியாக நிறுத்தி தொலைந்தால் என்ன?, ஏன் போராட்டத்திற்கு மட்டும் வேலையினை நிறுத்தவேண்டும்
மிஸ்டர் விஷால், கமலஹாசன் இப்பொழுதெல்ல்லாம் உங்கள் அருகிலேதானே இருக்கின்றார், திருட்டு விசிடி சவாலை எதிர்கொள்ள அவரிடம் இல்லாத ஐடியாக்களா?
அந்த அனுபவத்தை கொஞ்சம் கேட்டால்தான் என்ன? நீங்கள் கேட்கவே மாட்டீர்கள், கேட்டால் உங்கள் கெத்து என்னாகும்?,
எப்படியும் போகட்டும்..
இந்த திருட்டுவிசிடி செய்யும் வேலையினைத்தான் ஜெராக்ஸ் மிஷினும் செய்கின்றது, இணைய பிடிஎப் பிரதிகளும் செய்கின்றன, புத்தக பதிப்பாளர்களோ, எழுத்தாள பெருமக்களோ ஏதாவது போராட்டம் செய்கின்றார்களா?
அறிவுஜீவிகளான அவர்கள் என்றாவது ஜெராக்ஸ் மெஷினை கண்டித்து, ஸ்கேனிங் மெஷினை கண்டித்து எழுதமாட்டோம் என கொடிபிடிக்கின்றார்களா?
இதுதான் என்றும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது..
நல்ல எழுத்தாளன் பணத்திற்காய் எழுதுவதில்லை,
சிம்புவின் AAA படம் இரண்டு பாகமாக வெளிவருகின்றது
ஒரு பாகமே பார்க்கமுடியாது, இதில் இரண்டாம் பாகமா?
பாகுபலி பார்த்துவிட்டு கொஞ்சநாளைக்கு தியேட்டர் பக்கமே சென்றுவிடகூடாது....
No comments:
Post a Comment