தமிழகம் முழுக்க கோடை வெயில் சுட்டெரிக்கின்றது என்கின்றார்கள், அப்படி ஒரு வெயிலை இத்தலைமுறை பார்த்திருக்கமுடியாதாம்.
ஆயிரம் அணுகுண்டு வெடித்தது போன்ற வெப்பம் என்கின்றன தகவல்கள், பள்ளி விடுமுறையினை கூட முன் கூட்டியே விட்டாயிற்று
வெயில் அழகுதான் ஆனால் நீர்நிலைகளின் அருகில் இருந்து அனுபவவிக்கும் வெயில்தான் அழகே தவிர, வற்றிவிட்ட குளத்தருகே தாகத்தோடு தவிக்கவிடும் வெயில் ஒரு தண்டனை
விரைவில் நல்ல மழை வந்து மக்களை காப்பற்றட்டும்
சென்னை, வேலூர் வெப்பநிலை அளவுகளை கண்டால் உள்ளம் பதறத்தான் செய்கின்றது..
நல்ல வேளையாக குஷ்பூ சென்னையில் இல்லை என்பதை தவிர ஒரு ஆறுதலும் தேடிகொள்ளமுடியாது என்பது அவரது ரசிக கண்மணிகளின் நிம்மதி
அது ஒன்றுதான் இப்போதைக்கு நிம்மதி
No comments:
Post a Comment