தமிழுக்கு தொண்டு செய்த வரிசையில் தமிழர்கள் மட்டும் அல்ல, பலநாட்டு அறிஞர்களும் பேருதவி புரிந்துள்ளனர், மறக்க முடியாதவர்கள் அவர்கள்.
அலெக்ஸாண்டர் காலத்திலே அவர்கள் அடைய துடித்த இந்தியா பின்னாளில் பிரிட்டிசார் காலத்திலே முழுக்க சாத்தியமாயிற்று, ஏராளமான ஐரோப்பியர் குவிந்து அவர்களுக்கு தேவையானதை தேடினர்
வியாபாரிகள், பேராசைக்காரர் ஒருபுறம், ஆன்மீகத்தை தேடியோர் இன்னொரு புறம், இங்கு தாழகிடந்தவர்களை உயர்த்த வந்தோர் ஒருபுறம் ஏராளமானோர் வந்தனர்.
இங்கிருக்கும் மொழிகளை கற்று அவற்றில் ஏதும் அறிவுசெல்வம் இருக்குமா என தேடி வந்தோரும் உண்டு, அவர்களில் ஒருவர்தான் கால்டுவெல்.
அவருக்கு அப்பொழுது இருபது வயது, அயர்லாந்துக்காரர் நிச்சயம் சமயபணிக்காகத்தான் வந்தார், கப்பலில் வரும்பொழுதே தெலுங்கு தெரிந்த ஒருவருடன் பழகினார். அப்பொழுதே தென்னக மொழிகளின் மீது அவருக்கு ஈர்ப்பு வந்தது
சென்னைக்கு வர 4 மாதம் ஆகும் நிலையில் கப்பலிலே தெலுங்கும், சமஸ்கிருதமும் ஓரளவு கற்றுகொண்டார், சென்னையில் இறங்கும்பொழுதே அவர் தெலுங்கு பேச படித்திருந்தார்.
சென்னையில் இறங்கிய பின்பு தமிழ் மொழி
சென்னையில் இறங்கினார், அங்கே துருவர் என்ப அறிஞரிடம் தமிழ்கற்றார், தமிழை அவர் கசடற கற்றது அங்குதான்
ஓருவருடம் மொழி படித்துவிட்டு, தமிழகத்தை படிக்க கிளம்பினார். தமிழகத்தை நடந்தே சுற்றினார் கால்டுவெல் சென்னையிலிருந்து திருச்சி , தஞ்சை என நடந்தார். சிதம்பரம் தஞ்சை கோயில்களை தரிசித்தார், பின் கோவைக்கு நடந்தார். அதன் பின்பே பாளையங்கோட்டை வந்தார்
தமிழகத்தை நடந்தே சுற்றியதால் அவருக்கு தமிழ்நாடும் புரிந்தது, தமிழும் புரிந்தது.
அக்கால போதகர்கள் எல்லாம் பால் தினகரன் போல கோட் சூட் போட்டு ஏசி அறையில் போதிப்பவர்கள் அல்ல, வேகாத வெயிலில் அலைந்து வறிய கிராமங்களில் குடிசையில் வாழ்ந்தவர்கள்
அப்படி கால்டுவெல்லும் இடையன்குடி எனும் தேரிகாட்டு கிராமத்தில் பனைமரங்கள் புடைசூழ்ந்த பகுதியில் குடியேறினார், அங்கிருந்தே கல்விபணி, சமயபணி எல்லாம் செய்தார். ஒரு ஆலயம் அமைத்தார் மிக அழகான ஆலயம் அது, அதனைவிட மகா முக்கியமானது அவர் ஆரம்பித்தபள்ளி.
அங்கிருந்துதான் தமிழின் அனைத்து பண்டைய நூல்களையும் கற்றார், அன்று அவை அச்சுக்கு கூட வரவில்லை சகலமும் ஓலை சுவடியே
அதனிலிருந்து கவனம் கவனமாக படித்து தன் முடிவுகளை அவர் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தார், அது பின் நூலாகவும் வந்தது
அவர் சொன்னது இதுதான் , தமிழ் உலகின் ஆதிமொழி தனித்துவமான மொழி. முதல் 6 பண்டைய மொழிகளில் ஒன்று
தெலுங்கு, கன்னடம், மலையாளம் , துளு எல்லாம் இந்த தமிழினின்றும் பிற மொழிகளின் கலவையிலும் உருவானவையே
இப்படி அவர் தன் ஆய்வு முடிவுகளை எழுதிய நூல்தான் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணக்கணம்" தமிழின் சிறப்பினை கூறும் மிக சிறந்த புத்தகம் அது, பின்னாளைய தேவநேயபாவணார் அதனைத்தான் தன் மேற்கோளாக கொண்டார்.
கடற்கரையெங்கும் சுற்றியிருக்கின்றார், இடையன்குடியின் அருகிலிருக்கும் உவரியின் பழமையினை பற்றி ஆய்வு செய்திருக்கின்றார், ஈழ தமிழருக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்புகளை பதிவு செய்திருக்கின்றார்
ஈழதமிழர்கள் தமிழகத்தின் நெல்லைபகுதியில் இருந்து சென்றவர்கள் என்பது அவரின் முடிவு. பல விஷயங்களில் நெல்லையருக்கும் யாழ்பாணத்தாருக்கும் ஒற்றுமை அதிகம்
அங்கு காணபடும் திருநெல்வேலி, தாமிரபரணி போன்ற பெயர்களாகட்டும், சனிகிழமை பழக்கமாகட்டும், சொதி போன்ற உணவுகளாகட்டும் நெல்லைக்கும், யாழ்பாணத்திற்கும் தொடர்புகள் மிக அதிகம்
அதனை முதன் முதலில் ஆய்வில் சொன்னவர் கால்டுவெல்தான்
தமிழ் ஆராய்ச்சிகள் ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அன்றைய நெல்லை மாவட்டத்து அரசியலை அப்படியே டைரி போல எழுதி வைத்திருந்தார் அந்நூல்தான் "திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு"
தமிழுக்காக வாழ்ந்த கால்டுவெல் நாகர்கோவிலை சேர்ந்த தமிழ்பெண்ணைத்தான் திருமணம் செய்தார், அவர் பெயர் எலிசா. இத்தம்பதிகள் இடையன்குடியில் சுமார் 50 ஆண்டுகாலம் சேவையாற்றி இருக்கின்றன.
அந்த பள்ளி மகா முக்கியமானது, இன்று இடையன் குடி மட்டுமல்ல அப்பகுதி மக்களே ஓரளவு நல்ல கல்வி பெற்றிருப்பதற்கு அப்பள்ளியே அடிப்படை. ஏவிடி நிறுவணர் ஏவி தாம்சன் போன்றோர் உருவாக அப்பள்ளிகொடுத்த கல்வி மகா அடிப்படை.
கால்டுவெல் தமிழுக்கும், தென் பகுதி மக்களுக்கும் செய்திருக்கும் உதவி கொஞ்சமல்ல.
கொஞ்சநாளைக்கு முன்பு நாடார்களை அவர் ஏதோ எழுதிவிட்டார், அதனை பாடமாக்கிவிட்டார்கள் என சசிகலா புஷ்பா வரை குதித்தது நினைவிருக்கலாம்
அக்காலத்தில் புறக்கணிக்கபட்ட தேரிகாட்டிற்கு நாடார்கள் விரட்டபட்டிருந்தனர். நாயக்கர்கள் வளமான பகுதிகளில் ஆட்சி செலுத்த நாடார்கள் ஒதுக்கபட்டிருந்தனர். அவர்கள் விவசாயத்தை விட்டு பனைஏறுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்ட காலம் அது.
அப்பொழுது கண்ட நாடார்களை பற்றி சில குறிப்புகளை எழுதியிருந்தார், அது சிலரால் கொடூரமாக திரிக்கபட்டு பின் விவகாரமாயிற்று.
நாடார் மக்களோடு வாழ்ந்துகொண்டு அப்படி ஒரு வரியினை அவர் எழுதியிருக்க முடியாது, எழுதியிருந்தால் 50 ஆண்டுகாலம் அவரால் அக்கிராமத்தில் வசித்திருக்க முடியாது.
தமிழின் பெருமையினை ஆங்கிலத்தில் நூலாக எழுதி ஐரோப்பாவிற்கு அனுப்பினார், கிளாஸ்கோ பல்கலை கழகம் அவரை கொண்டாடியது, அந்நாளைய சென்னை கவர்னர் நேப்பியர் நேரில் இடையன் குடி சென்று அவரை வாழ்த்தினார்
கிறிஸ்தவம் சம்பந்தமாக பல நூல்களை எழுதினார், அது அவரின் தொழில்முறை எனினும், தமிழுக்காக அவர் தனித்து எழுதிய புத்தகங்களில் அவரின் தமிழ்பற்று தெரிகின்றது
மாந்தரின் தோற்றம் குமரிகண்டத்தில் தொடங்கி வடக்கு நோக்கி சென்றது, சிந்துவெளி மெசபடோமியா என அது வரவிற்று, தமிழர் என்பதே திராவிடர் என திரிந்தது என்றேல்லாம் முதன் முதலில் பதிந்தது கால்டுவெல்தான்
அந்த பாதையில்தான் தமிழரின் தொன்மை பற்றி புதுவேகம் தமிழகத்தில் பிறந்தது, பல தமிழறிஞர்கள் அவர் கருத்தை ஆதரித்தார்கள், "கல்தோன்றி மண்தோன்றா.." போன்ற வசனங்கள் அதன் பின்புதான் தொடங்கின.
அதாவது நாயக்கர் காலத்தில் தமிழ் தன் அடையாளங்களை இழக்க தொடங்கியிருந்தது, கல்வெட்டு தமிழை படிப்பவர் மிக குறைவு, பேச்சு தமிழ் மட்டும் வழக்கில் இருந்தது. பிராமணார் ஆதிக்கத்தில் அவர்கள் சொற்களும் கலந்திருந்தன.
தமிழகம் தன் அடையாளத்தை அறியாமல் தடுமாறியது, நாயக்கர்களும் நல்லாட்சிதான் நடத்தினர், குறை சொல்லமுடியாது, அவர்களின் சமயபணிகளும் நன்றிகுறியது
ஆனால் தமிழின் தொன்மை, அதன் அடையாளங்கள் எல்லாம் மறைந்துகொண்டிருந்தன, அதனை காக்கத்தான் யாருமில்லை
உதாரணம் சொல்லவேண்டுமென்றால் தஞ்சை கோவிலை கட்டியதுயார் என்றே தெரியாது, பின்னாளில் ஒரு ஜெர்மானியன் தான் கல்வெட்டு படித்து அதனை கட்டியது ராஜராஜ சோழன் என சொன்னான்
அப்படி கால்டுவெல்லும் பின்னால் வந்து உலகிற்கே மூத்தமொழி தமிழ் என சொல்லி அதற்கு புத்தகமும் எழுதினான்
மார்க்ஸின் புத்தகம் ஐரோப்பாவினை புரட்டியது போல, ஹிட்லரின் மெயின் கேம்ப் ஜெர்மனியினை அதிர செய்தது போல கால்டுவெல்லின் புத்தகமும் ஐரோப்பாவினை அதிர செய்தது
குறிப்பாக அந்த ஒரு வரி, எந்த வரி?
பைபிளை கசடற கற்றவன் கால்டுவெல், அதில் ஆதியாகம் அழகாக சொல்கின்றது, கடவுள் மண்ணில் மனிதனை படைத்து "நீ மண்ணில் இருந்து வந்ததால் மனிதன் எனப்படுவாய்" என்கின்றார்
இன்றும் ஆங்கிலத்தின் மனிதனின் பெயர் மண் என்பதுதான், மன் (men) அல்லது மேன் (Man) என சொல்லிகொள்வார்கள், உச்சரிப்புதான் வேறே தவிர. மணிதன் என்றால் அவர்கள் மொழியில் மண் தான்.
இதனை அழுத்தி சொன்னான் கால்டுவெல், ஆங்கிலத்தில் சாண்ட் என்றால் தமிழில் மண். கடவுள் மனிதனுக்கு மண் என பெயரிட்டார் என்றால் ஆதிகால மொழி தமிழாகவே இருந்திருக்க வேண்டும், அதுவேதான்
சமஸ்கிருதத்தில் அது மனு என்றாகின்றது, மண்ணு என்பதன் திரிபு அது.
ஆக கடவுள் ஆதியாகமத்தில் சொன்னது உண்மையென்றால், ஆதிமனிதனின் மொழி தமிழே, கடவுளே மனிதனை மண் என் அழைத்ததைத்தான், ஆங்கிலத்தில் மன் என அழைக்கின்றோம் என குறிப்பிட்டிருந்தான்
ஆடிபோனது ஐரோப்பா, அதனை அங்கீகரிக்க படித்த அறிஞர்களுக்கு வியர்த்து கொட்டிற்று, இந்த வரிகள் உலகில் பல அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை வெட்டிவிட்டார்கள்
இது கால்டுவெல் சம்பதத்தோடு நடந்ததா, இல்லையா என்பது தெரியவில்லை, இதுவும் பெரும் மூடி மறைக்கபட்ட வரலாற்று மோசடி. வெள்ளையர்கள் அங்கீகரித்த வரலாறு அப்படித்தான்
எப்படி இருந்தாலும் கால்டுவெல் என்பவர் மறக்க கூடியவர் அல்ல, தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு பல தமிழர்கள் ஆற்றிய தொண்டிற்கு சற்றும் குறைந்தது அல்ல.
உவரி கோவிலுக்கு செல்லும் பொழுது அந்த இடையன் குடி ஊரினை கடந்துதான் செல்லவேண்டும், அப்பொழுதெல்லாம் இறங்கி அந்த ஆலயத்தில் அவர் புதைக்கபட்ட அந்த இடத்தில் கொஞ்சநேரம் அமர்ந்துவிட்டு வருவது வழக்கம்
அது கிறிஸ்தவ ஆலயம் என ஒதுக்கிவிட முடியாது, ஒரு மாபெரும் தமிழ்காதலன் உலாவி திரிந்த இடம் அது, அந்த பீடத்தினை கைகளால் தொட்டாலே ஒரு சிலிர்ப்பு ஒட்டிகொள்ளும்
அங்கிருப்பது எல்லாம் 18ம் நூற்றாண்டு பொருட்கள், அழகும் உறுதியும் வாய்ந்த பொக்கிஷங்கள் அவை
அந்த ஆலயத்தை அடுத்துதான் அவன் வாழ்ந்த வீடும் உண்டு, முன்பு குடிசையில்தான் இருந்தாராம் பின் வோட்டு வீடாக மாறிற்றாம்.
அயர்லாந்தின் குளுகுளுவான பகுதியில் வாழ்ந்தவன், இங்கு வந்து இந்த வேகாத வெயிலில் என்னபாடு பட்டிருப்பான்? எப்படி அவனால் முடிந்தது?
அவனின் மனம் அவ்வளவு விசாலமாக இருந்திருக்கின்றது, எந்த சூழலையும் தாங்கும் பக்குவத்தை அது கொடுத்திருக்கின்றது, வெயிலையும் குளிரையும் ஒன்றாகவே கருதியிருக்கின்றான் அந்த உயர்ந்தவன்.
அந்த வீட்டினை அவரின் நினைவு இல்லமாக மாற்றியிருக்கின்றார்கள், அங்கிருந்துதான் அவன் தமிழை ஆராய்ந்திருக்கின்றான், அந்த ஒப்பற்ற நூலை எழுதியிருக்கின்றான் எனும்பொழுது தமிழனாக நன்றி கண்ணீர் கொட்டியது.
இன்று அவருக்கு நினைவு நாள்
கிறிஸ்தவம் என்பது மைக் கட்டிகொண்டு இந்து தெய்வங்களை பழிப்பதோ இல்லை காளகேயர் போல தஸ்தா புஸ்தா என பரலோக பாஷை பேசுவதோ அல்லது டிவியில் கோட் சூட் போட்டு பாட்டுபடிப்பது அல்ல
எங்கோ பிறந்து இன்னொரு நாட்டுக்கு வந்து அம்மக்களில் ஒருவனாகமாறி, அம்மக்களின் கலாச்சரத்தில் கலந்து அவர்களோடு வாழ்ந்து மரிப்பது
நல்ல கிறிஸ்தவனான கால்டுவெல் அதனை செய்தார்.
இங்கு அல்லேலூயா என கத்தும் ஒரு கிறிஸ்தவனை ஆப்ரிக்க பின் தங்கிய கிராமத்தில் சென்று, அவர்கள் மொழியினை கற்று, அவர்களுக்கு பள்ளி நடத்தி, அவர்கள் பெண்களில் ஒருவரை மணந்து அவர்களில் ஒருவராக வாழ்கின்றாயா? என கேளுங்கள்
"அப்பாலே போ சாத்தானே, என்னை சோதிக்காதே .." என்பார்கள்.
இவர்களுக்கு தெரிந்த கிறிஸ்துவம் என்ன? யாரையாவது சதா திட்டவேண்டும், யாருக்காவது சாபம் கொடுத்து கொண்டே இருக்கவேண்டும், அதன் பெயர் ஜெபம்
இப்பொழுது வசமாக சிக்கியிருப்பவர் மோடி.
ஏதோ மோடி அவர்கள் ஆலயத்தில் புகுந்து அவர்களி பைபிளை கிழித்து போட்டு, இவர்களை இழுத்து போட்டு சிலுவையால் அடிப்பது போல பலர் பேசிகொண்டிருக்கின்றான்
அவன் மோடியினை பார்க்கவேண்டாம், இந்த கால்டுவெல்லை பார்த்தால் போதும்
தமிழ் , தமிழ் என கத்தி அரசியல் செய்பவர்களும் கால்டுவெல்லை பார்த்தால் பல விஷயங்கள் தோன்றும்
எங்கிருந்தோ வந்து தமிழுக்கு எவ்வளவு காரியங்களை சத்தமின்றி செய்திருக்கின்றான் அவன், இதில் 10ல் ஒரு பங்கேனும் இங்கு இருக்கும் தமிழுணர்வாளர்கள் செய்திருப்பார்களா என்றால் இல்லை.
அந்த மாமனிதனுக்கு இடையன்குடியின் வசித்த தமிழ் இடையனுக்கு ஆழ்ந்த தமிழ் அஞ்சலி.