மணிரத்னம் மகனிடம் இத்தாலி வெனிஸ் நகரில் திருட்டு. டிவிட்டரில் சுகாசினி உதவி கோரியதால், இத்தாலியில் பலர் உதவினர் : செய்தி
"திருடா திருடா" போன்ற மணிரத்தினத்தின் படங்களை மிக நன்றாக ரசித்த எவனோ, அவர் மகனிடமே கைவரிசையினை காட்டிவிட்டான். மணிரத்னம் மகன் காஷ்மீருக்கு போகாமல் இருப்பது இன்னும் நல்லது.
இத்தாலி, பிரான்ஸ் எல்லாம் இப்பொழுது கொள்ளைக்கு பெயர் பெற்றுவிட்டன, மிக சாதரணமாக கொள்ளைகள் நடக்கின்றன, பிரான்சில் பெரும் பாதுகாப்பு மிக்க்க ஹோட்டல்களில் பெரும் புள்ளிகளிடமே மிக அசால்டாக கொள்ளையடிகின்றனர். இதில் மணிரத்னம் மகன் ஜூஜூபி.
இதே வெனிசில் கொஞ்சநாளைக்கு முன்பு குஷ்பூவும் சென்றிருந்தார், அவர் கால் செருப்பை திருடி ஏலம் விட்டிருந்தால் கூட பல மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போயிருக்கும்,
ஆனால் ஒரு கொள்ளையனும் அவர் பக்கம் வரவில்லை, காரணம் தலைவியின் தங்கமுகத்தை பார்த்தால் கொல்லவரும் பாம்பும் புலியுமே மனம் மாறி பணிந்துவிடும் பொழுது இந்த அற்பமானிட கொள்ளையர்கள் மனம் மாறாதா?
சசிகலா மீது துணிந்து குற்றம் சாட்டிய ரூபாவின் கதை சினிமா படமாகிறது, நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு.
சசிகலா வேடத்தில் நடிக்க வேண்டியவரை, அந்த இளவரசி வேடத்திற்கு கூட பொருந்தா நயனை, இந்த ரூபா வேடத்தில் நடிக்க வைத்தால் படம் உருப்படுமா?
அது கம்பீரமான காவல்துறை வேடம், குஷ்பூவினை தவிர யாருக்கு பொருந்தும்?
ஆனாலும் இந்த செய்தி இந்த Babu Rao, Chandran Kannan ஆகியோர் கண்ணில் படாமலே போகட்டும், பார்த்துவிட்டால் அவ்வளவுதான், இம்சை தாளாது.
No comments:
Post a Comment