Friday, August 18, 2017

ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்...


https://youtu.be/AisoEzRAb4Y

இந்த ஓவியா பிக்பாஸில் இருக்கும்வரை நல்ல சுதந்திரம் இருந்தது, என்ன செய்தாலும் பாகம்பிரியாள் கண்டுகொள்வதே இல்லை.


எதிர்த்த வீட்டு சீனப்பெண்ணுடன் பேசினாலும் கண்டுகொள்ளாத அளவு பெரும் சுதந்திரம் இருந்தது.


வீட்டை எப்படி அலங்கோலமாக்கி வைத்திருந்தாலும் கண்டு கொள்ளவே இல்லை.




இப்பொழுது ஓவியா களத்தில் இல்லை என்பதால் மறுபடியும் நம் மீதான கண்காணிப்பு அதிகரித்துவிட்டது, "அங்கே என்ன பார்வை? , இப்பொழுது ஏன் வாட்சப்?, அந்த புத்தகத்தை எவ்வளவு நாளாக படிப்பீர்கள்? " என பழைய பார்மிற்கு வந்துவிட்டார் பாகம்பிரியாள்


"ஏய் ஆரவ் , என் சாபம் உன்னை சும்மாவே விடாது, நீ சீக்கிரம் இந்தியாவிட்டே ஓடிவிட சபிக்கின்றேன்.."


யாராவது அந்த ஓவியாவினை மறுபடியும் உள்ளே பிடித்து போட்டால் மிக நன்றாகத்தான் இருக்கும்,


என்ன செலவானாலும் சரி, ஓவியாவினை மறுபடி கொண்டுவர நிதி திரட்டினால் முதல் பங்கு என்னுடையது.




 

No comments:

Post a Comment