மாவீரன் நெப்போலியனை எழுத சொல்லி பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள்.
வரலாற்றில் மிக மிக அசாத்திய மனிதன் அவன். அலெக்ஸாண்டர் மன்னனாக பிறந்தான் பேரரசனாக மரித்தான்,ஜூலியஸ் சீசரும் அவ்வகை.
சமுத்திர குப்தனுக்கோ சாணக்கியன் எனும் ஆசான் இருந்தான்.
ஆனால் தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியினையும் தானே செதுக்கியவன் நெப்போலியன். கிடைத்த வாய்ப்பினில் எல்லாம் தன்னை தூக்கி நிறுத்தி எழும்பியவன்.
அபூர்வ சகோதரர்களில் நாகேஷ் அப்பு கமலை பார்த்து கேட்பார் அல்லவா, "பாதி இங்க இருக்கு மீதி எங்கே?"
அப்படிபட்ட குள்ள மனிதன் அவன், ஆனால் 6 அடி குதிரையில் அனாசயமாக தாவி ஏறும் வித்தைக்காரன். தன் அறிவாலும் தைரியத்தாலும் ஐரோப்பாவினை அலறவிட்ட அசாத்திய ஆற்றல்காரன்
அவன் தோல்வி நிச்சயம் மனிதனால் அல்ல, நேருக்கு நேர் அவனை தோற்கடிக்க யாருமில்லை, இயற்கையிடம் தான் தோற்றான்.
எப்படிபட்டவன் நெப்போலியன்?
படிக்கும் காலத்தில் அவன் அம்பி, ஜோஸப்பினை கண்டபின் அவன் ரெமோ, களத்தில் அவன் அந்நியன். அதுதான் நெப்போலியன். அந்நியன் சினிமாவின் மூன்று பாத்திரங்களுமே அவன் தான்.
மிக மிக சிலிர்க்க வைக்கும் ரசிக்க வைக்கும் வரலாறு அவனுடையது. விதி ஒத்துழைத்திருக்கமானால் உலக வரலாற்றையே மாற்றியிருப்பான்.
இந்திய அரசனாக கூட அவன் முடி சூட்டியிருக்க முடியும்
தானே எழும்பி, ஐரோப்பாவினை அலற வைத்து, போப் ஆண்டவரையே கதற வைத்து , பிரான்சிற்கு பெரும் உச்சம் அளித்துவிட்டுத்தான் அவன் விடைபெற்றான்
அவன் வரலாற்றை பார்க்கலாம்தான்
ஆனால் குஷ்பூ தொடருக்கு நீங்கள் ஆதரவளிக்காத காரணத்தால் நெப்போலியனை பற்றி சொல்ல மாட்டேன் என கோபத்தில் சொல்லிவிட்டு , இனி கொஞ்சநாள் அஞ்ஞான வாசம் செல்ல போகின்றேன்.
குஷ்பூ தொடரினை எல்லோரும் படித்து ஆதரவளித்தால்தான் இனி உங்களோடு சகவாசம், இல்லாவிட்டால் சந்நியாசம் தான்.
No comments:
Post a Comment