அஜித்தை கலாய்த்தால் பல தமிழக பஸ் நிலையங்களுக்கு வா என அழைப்பு வருகின்றது
ஒரு பயலாவது கனடா ஏர்போர்ட் வா, நியூயார்க் வா என்றோ, டோக்யோ வா என்றோ, ஆக்லாந்து வா என்றோ, லண்டன் வா என்றோ அழைக்கவே இல்லை
ஆக எல்லா அஜித் ரசிகர்களும் கள்ளிகாட்டிலும், பொட்ட காட்டிலும் தான் இருக்கின்றான்.
அழைக்கின்றதுதான் அழைக்கின்றீர்கள், பாரீஸ், லக்சம்பெர்க் , வெனிஸ் போன்ற நல்ல பெரு நகரமாக பார்த்து அழையுங்கள்
சுவிட்சர்லாந்திற்கு அழைத்தால் ஓடி வரலாம்
ஆனால் ஓணான் கூட வர தயங்கும் பொட்ட காட்டில் இருந்து கொண்டு வா என அழைத்தால் எப்படி வருவேன், வரவே மாட்டேன் போங்கடா..
இந்த அஜித் ரசிகர்கள் இம்சை தாங்கவில்லை. ஒழுங்காக வாய் திறந்து பேசதெரியாத அவருக்கே இப்படி என்றால், அவர் ஒழுங்காக பேசிவிட்டால் பூரா பயலும் கடலில் குதித்து செத்துவிடுவானோ?
இப்பொழுது நம்மிடம் வம்புக்கு வருகின்றார்கள், அஜித் இட்லியாம்
ஏதாவது குத்துகல், கடப்பாரை அல்லது அடி தொண்டையில் ஆப்பரேஷன் செய்த கழுதைக்கு "தல குத்துகல்", "தல கடப்பாரை", "தல கழுதை" என பெயர் வைங்கடா
இட்லிக்கெல்லாம் தல இட்லி என்றால் நன்றாகவா இருக்கும்?
தென்றலுக்கு பொதிகை மலை போல, சந்தணத்திற்கு குடகு மலை போல இட்லிக்கு குஷ்பூ பெயர் வரலாற்றில் பதிந்த கல்வெட்டு
அதனை அஜித் என்ன ஆண்டவானாலும் மாற்றமுடியாது, ஆம் காஞ்சிபுரம் இட்லியினை விட குஷ்பூ இட்லியே உலக பிரசித்தி
போங்கடா ஏதும் "பழம்" இருந்தால் இருந்தால் அதற்கு "தல சக்கை பழம்", "தல பப்பாளி பழம்" என என பெயரிடுங்கள்
அல்லது தல தயிசாதம், தல வடை, தல எச்சிதட்டு என எதனையாவது சொல்லுங்கள்
சின்ன பயலுக என்பது சரியாகத்தான் இருக்கின்றது.
ஏம்பா சிவா, நீ சொந்தமா படம் எடுக்கமாட்டாய் என்பது தெரியும்? இட்லிக்கு பெயர் வைப்பதை கூடவா கடன் வாங்குவாய்?
குஷ்பூ சங்கம் சார்பாக இந்த சிவா என்பவரை வன்மையாக கண்டிக்கின்றோம்
இவர் மன்னிப்பு கேட்டு காட்சியினை நீக்காவிட்டால் அவரை கடத்திவந்து அவர் இயக்கிய கொடூரபடங்களை போட்டு காட்டி அவரை சித்திரவதை செய்ய சங்கம் தீர்மானித்திருக்கின்றது.
அந்த சிட்டிசன் படத்து கோர்ட்டு சீனும் காட்டபடும், அதனை தாங்கும் மன தைரியம் இந்த சிவாவிற்கு உண்டா?
இவர் இட்லி என்றால் விஜய் என்ன சாம்பாரா? இல்லை சட்னியா?
டேய் , தல இட்லிக்கு பதிலாக தல இடியாப்பம், தல சேமியா என வைங்கடா தறுதலைகளா....
பொருத்தமாக இருக்கும்,
அவர் மண்டையினை பாருங்கள், நீங்களே ஆமாம் என ஒப்புகொள்வீர்கள்
தமிழரின் பலவீனம் அறிந்து, பிராமணரில் ஒருவன் எப்படி திட்டமிட்டு உருவாக்கபடுவான் என்பதற்கு சிலரை தொடர்ந்து இப்போதைக்கு அஜித்குமாரே சாட்சி.
ஒரு தகுதியுமே இல்லாத, தமிழே பேசவராத அவரெல்லாம் ஏதோ பெரும் பிம்பமாக உருவாக்கபடும் விதம் இதுதான்.
ராமசந்திரனுக்கு பின் ரஜினி அப்படித்தான் உருவாக்கபட்டார், ஆனால் ஜெயா இருந்தவரை அவர் தேவை இல்லாமல் இருந்தது.
அஞ்சியதால் ரஜினி ஓடிவிட்டார், இன்னும் காமெடிக்கு மட்டும் குறைவில்லை. மற்றபடி இனி அவர் அரசியலுக்கு வரபோவதில்லை
அதன் பின் அவர்கள் குறி அஜித்பக்கம் சென்றிருக்கின்றது.
இது புரிந்தால் நீங்கள் தமிழர்கள்.
பொறுத்து பாருங்கள், நிச்சயம் ஒருநாள் அவர் மீது அரசியல் திணிக்கபடும்.
ஹாலிவுட் சண்டை இயக்குனரை அசர வைத்த அஜித்
இவர் ஹாலிவுட் சண்டை இயக்குநரை அசரவைத்தார் என்றால் இந்த புருஸ்லி, ஜாக்கிச்சான், ஜெட்லி எல்லாம் யாரடா?
அவர்களை எல்லாம் பார்க்காமல் அஜித்தை பார்த்து வியந்தால் அவர் ஹாலிவுட் சண்டைக்காரரா? இல்லை மதுரை பக்கம் கம்பு சுற்றிகொண்டிருந்தவரா?
இதை எல்லாம் செய்திகள் என சிரிக்காமல் சொல்லிகொண்டிருக்கின்றது ஊடகங்கள்.
No comments:
Post a Comment