ஜெ. மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் எந்த விசாரணை ஆணயம் தன் முடிவினை அறிவித்தது? ஒன்றுமேயில்லை. இதில் ஜெயலலிதா மரணத்தில் மட்டும் உண்மை வந்துவிடுமா?
எல்லாம் நாடகம். அந்த அப்பல்லோ நாடகம் நடக்கும் பொழுது பார்த்துகொண்டிருந்தவர்கள் இன்று அடுத்த நாடகத்தில் இறங்கிவிட்டார்கள்.
அன்புமணி போன்ற சிலர் சொல்வது போல சிபிஐ விசாரணைதான் சிறந்தது, அதனைத்தான் செய்யவேண்டும்
ஆனால் மோடியில் கால், வால் என அதிமுக இருக்கும்பொழுது அதெல்லாம் சாத்தியமில்லை.
சரி இந்த விசாரணை கமிஷன் முதலில் விசாரிக்க வேண்டியது யாரை தெரியுமா?
அன்றைய முதல்வர் பன்னீர் செல்வம், ஆளுநர் இன்னபிற அன்றைய அதிகாரங்கள்.
இதெல்லாம் நடக்கவா போகின்றது??? மாறாக அப்பல்லோ ஆஸ்பத்திரி வாட்ச்மேன், அங்கு துப்புரவு பணிசெய்தவர்கள் என பிடித்து வைத்து, உண்மையாக நேர்மையாக விசாரிப்பார்கள்.
No comments:
Post a Comment