ஏம்பா இந்த விஜய் மட்டும்தான் தமிழனா? வேறு யாருமே தமிழன் இல்லையா?
ஜெயா காலத்தில் எழுதிய பாட்டு போல , "ஆளபோறான் தமிழன்..", ஆனால் தலைவா போன்ற படங்கள் பட்டபாட்டில் அப்பாடலை அமுக்கியிருக்கலாம்.
அன்று தலைவா படத்திற்காகவே நிஜமாகவே இந்த விஜய் கும்பல் "மெர்சல்" ஆகியிருக்கும் போல, அது இப்பொழுதுதான் தெரிகின்றது.
இப்பொழுது ஜெயா இல்லாததால் , கலைஞரும் ஓய்ந்துவிட்டதால் "ஆளபோறான் தமிழன்.." என கிளம்பிவிட்டார்கள்.
அட பதர்களா?
ஜெயாவிற்கு பின் பன்னீர் பச்சை தமிழன், இப்பொழுது ஆளும் எடப்பாடி பசையான பச்சை தமிழன். இவர்களை எதிர்க்கும் தினகரனும் தமிழன்.
இத்தனை தமிழர்கள் ஆண்டு, ஆட்சியிலிருந்து, இன்னும் ஆள துடிக்கும்பொழுது, தமிழன் இனி எதனை ஆளவேண்டும்?
இந்திய பெருங்கடலையா?
என்றைக்கோ வெளியிட வேண்டிய பாடலை, இன்று வெளியிட்டுவிட்டு அதில் ஒரு அழிச்சாட்டியம் வேறு.
பச்சை தமிழன் ஆண்டுகொண்டிருக்க, அது என்னய்யா "ஆளப்போறான் தமிழன்.." என அர்த்தமில்லாமல் ஒரு பாட்டு?
எடப்பாடியினை, பன்னீரை, தினகரனை, தமிழிசையினை, சசிகலாவினை எல்லாம் பார்த்தால் உங்களுக்கு எல்லாம் இளக்காரமாக தெரிகின்றதா?
No comments:
Post a Comment