உயிர் துறப்பதற்கு வேலூர் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன்
முருகன் ராஜிவ் கொலைசதி கும்பலின் தலைவனான சிவராசனோடு இங்கு வந்தவன், வந்த இடத்தில் நளினியோடு காதலாயிற்று.
இது அரசல் புரசலாக தெரிந்தால் அவனை யாழ்பாணம் திரும்ப உத்தரவிட்டான் சிவராசன், ஆனால் முருகன் இல்லாத சிவராசன் கும்பலை சந்திக்க மறுத்தாள் நளினி. இதனால் அவளின் உதவிக்காக மறுபடி முருகனை சென்னைக்கு வரவழைத்தான் சிவராசன்.
காரியம் முடிந்ததும் நளினியும் சிவராசனும் இலங்கைக்கு தப்பவே திட்டமிட்டிருந்தனர், அதற்கு முன்பே திருப்பதியில் திருமணமும் செய்தனர்
ஆனால் எதிர்பாராவிதமாக இவர்கள் படம் சிக்க, சிபிஐ தீவிரமாக தேட இவர்கள் இலங்கைக்கு தப்பமுடியாயல் போயிற்று, சிபிஐயிடம் அகபட்டும் கொண்டனர்.
ராஜிவின் சொலைசதி இவர்கள் மூலமாகவே விசாரணையில் வெளிவந்தது.
அதவாது இனி தப்பமுடியாது என்றநிலை வந்தபொழுது முருகன் செத்திருக்கத்தான் வேண்டும். சிவராசனும் புலிதலமையும் அதனைத்தான் எதிர்பார்த்தது
ஆனால் நளினியுடனான காதல் அவனை சாகவிடவில்லை, நளியினுடன் அவன் வாழ ஆரம்பித்திருந்தான், அந்த நளினியின் கருவும், காதலும் அவனை வாழ சொன்னது. அதுதான் பின்பு புலிகள் இயக்கத்திற்கே எமனானது.
முருகனும் நளினியும் அன்றே செத்திருந்தால் பல உண்மைகள் மறைந்திருக்கும், ராஜிவ் கொலை இன்னும் முடிவு கண்டிருக்காது.
அப்படி காதலுக்காக உயிர்பிழைத்த முருகன் தான், இனி வெளிவரமுடியாது என தெரிந்தபின் , சாமியாராகி சிறையிலே பட்டினிசாவு சாக போகின்றாராம்.
இதற்கு அன்றே செத்திருந்தால் ஒரு சிக்கலும் இருந்திருக்காது.
பெண்ணால் கெட்ட பத்ருஹரி மகராஜா கதை உண்டு, அவரும் சாமியாராகி செத்தார்,
முருகனும் அப்படி பெண்ணால் கெட்டு சாமியாராகி சாக போகின்றார்.
No comments:
Post a Comment