Wednesday, August 16, 2017

தினகரனை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கின்றது





முதலில் ராஜாஜி சொன்னார், அதன் பின் நேரு, அதன் பின் இந்திரா, கொஞ்சநாளில் கோடாரி காம்பு ராமசந்திரன், இடையில் குமாரமங்கலம், அடுத்து ராஜிவ், ராஜிவின் தமிழக அடிப்பொடிகள், அதற்கடுத்து வைகோ , பெரும்பலத்துடன் இருந்த ஜெயலலிதா என எத்தனையோ பேர் சொன்னதுதான்


"திமுகவினை அழிப்பேன்.."


இப்படி சொன்ன பெரும் ஜாம்பவான்கள் எல்லாம் மண்ணை கவ்வி மண்ணாகிவிட்டபின் இப்பொழுது தினகரனும் சொல்கின்றாராம்.





திமுகவினை அழிக்க கிளம்பியவர்கள்தான் அழிந்தார்களே தவிர திமுக அப்படியே இருக்கின்றது

பெரும் புயலும், பெரும் படையும், நிலநடுக்கமும் , அபாய வெள்ளமும் சாய்க்கமுடியா ஆலமரத்தை இவர் ஊதி சாய்ப்பாராம்.

அதிமுகவினை காக்கும் வல்லமை எப்பொழுதும் திமுகவிற்குத்தான் உண்டு, "நாம் பிரிந்தால் திமுகவிற்கு பலம்" என்ற தாரக மந்திரம்தான் அதிமுகவின் கொள்கை, கோட்பாடு என சகலமும்.

இப்பொழுது திமுக தீவிர அரசியல் செய்தால்தான் அதனை காட்டி அதிமுகவினை ஒன்றாக்க முடியும் மாறாக‌ திமுக அமைதி காத்தால் அதிமுக அதற்குள்ளாகவே அடித்துகொண்டு அழிந்துவிடும்.

அதுதான் நடக்கின்றது.

திமுக அமைதிகாப்பதிலும் அர்த்தம் உண்டு, இன்று அவர்கள் விஸ்வரூபமெடுத்தால் இந்த பன்னீர், பழனி, தினகரன் கோஷ்டி எல்லாம் ஒன்றாகிவிடும்.

அதற்கு வாய்ப்புகொடுக்காமல் அமைதியாயிருக்கின்றது திமுக , அந்த வயிற்றெரிச்சலில் இந்த தினகரன் உளறிகொண்டிருக்கின்றார்.

தினகரனை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கின்றது.

இதற்கு பதில் "ஏ திமுகவே அமைதியாய் இராதே, ஏதாவது செய்து அதிமுகவினை காப்பாற்று" என நேரடியாகவே தினகரன் கேட்கலாம்.




 

 



 

No comments:

Post a Comment