Wednesday, August 23, 2017

வெல்ல பிறந்தவன் : முடிவுரை








அலெக்ஸாண்டரை பற்றி சொல்லும்பொழுது பல விஷயம் முரண்படுகின்றது என்கின்றார்கள சிலர், அவர்களுக்கு சில விஷயங்களை சொல்லவேண்டும்.


இந்திய வரலாற்றை நமக்கு கொடுத்தது யார் என நினைக்கின்றீர்கள்? வெள்ளையர்கள்


அவர்கள் தொகுத்ததுதான் வரலாறு, பல இடங்களில் தங்களுக்கு சாதகாகமாக வளைத்தார்கள்.





இன்று நாம்படிக்கும் வரலாறு பல மர்ம பக்கங்களை உள்ளடக்கியது, நிறைய விஷயங்களை மறைத்திருப்பார்கள் ஐரோப்பியர்கள்.

அவர்களின் பெருமை அப்படி. ஐரோப்பியர்தான் பெரியவர்கள் என்பது அவர்கள் நினைப்பு, வரலாற்றில் அலெக்ஸாண்டர், சீசர், நெப்போலியன் என்றுதான் வகைபடுத்துவார்கள்

இவர்களை விட பெரும் வீரனான செங்கிஸ்கான் பற்றி எல்லாம் பேசமாட்டார்கள், ஆட்டோமன் துருக்கியரை பற்றி மூச்சே இருக்காது

அப்படிபட்டவர்கள் தொகுத்த இந்திய வரலாறு எப்படி இருக்கும்? புருஷோத்தமனை அலெக்ஸாண்டர் வென்று மறுபடி நாட்டை அவனிடம் கொடுத்தான் என்றுதான் இருக்கும்

அலெக்ஸாண்டர் அப்படிபட்டவன் எல்லாம் அல்ல, அடிபணிய மறுத்தால் தலையினை எடுப்பதே அவன் முடிவு

அலெக்ஸாண்டர் காலத்திலே சந்திரகுப்தனுக்கும் அலெக்ஸாண்டருக்கும் உரசல் இருந்திருக்கின்றது, திரும்பி சென்ற அலெக்ஸாண்டர் இரு வருடங்களில் மரணமடைகின்றான், அதன்பின் அலெக்ஸாண்டரின் நண்பனான செலுகஸ் ஆப்கன் பகுதிக்கு மன்னராகின்றான்

அவன் அலெஸாண்டர் விட்ட போரை தொடங்குகின்றான், சந்திர‌ குப்தர் அவனை விரட்டுகின்றார், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி செலுகஸின் தூதர் மெகஸ்தனிஸ் இந்தியா வருகின்றார்.

அவர் எழுதியதுதான் இண்டிகா, அதில் சந்ரோகோட்டஸ் என குப்தனை குறிப்பிடுகின்றார்

அந்த நூல் முழுமையாக வெளிவந்தது என்றா நினைக்கின்றீர்கள்? சில பகுதிகளை மட்டும் வெளியிட்டார்கள்

காரணம் முழு புத்தகமும் வெளிவந்தால் அலெக்ஸாண்டரின் சில விஷயங்கள் வெளிவரும், அப்புத்தகம் மறைக்கபட்டவிதம் அப்படித்தான்.

ஒரு ஐரோப்பிய வீரன் ஆசியாவில் தோற்றான் என்று இருக்கவே கூடாது என்பது அவர்களின் குணம், வரலாற்றை மாற்றிவிட்டார்கள்

மற்றபடி வெள்ளையன் சொன்ன வரலாறை நீங்கள் நம்புகின்றீர்கள் என்றால் நம்பிக்கொள்ளுங்கள்

ஆனால் செங்கிஸ்கான், தைமூர், ஆட்டோமன் துருக்கியர் எல்லாம் ஏன் வரலாற்றில் வரவேயில்லை என்பதையும் போட்டு குழப்பினால் உங்களுக்கு பல விஷயம் கிடைக்கும்.

அட அவ்வளவு ஏன்? சிந்துவெளியினை தோண்டிய வெள்ளையனுக்கு ஆதிச்சநல்லூரை தோண்ட மனமில்லாமல் போனது ஏன்?

இன்றுவரை ஐரோப்பாவினை வென்ற ஒரே ஆசியன் செங்கிஸ்கான் தான், அவனை தவிர எந்த ஆசியனும் ஐரோப்பியரை வென்றதில்லை

மங்கோலியாவில் அவன் கல்லறை இருந்தது, பின் ரஷ்யா பலம் பெற்ற காலத்தில் அந்த இடத்தையே அழித்து, அதை சுற்றி 20 ஏக்கரை அழித்து இன்று தடம் இல்லாமல் செய்துவிட்டார்கள்

காரணம் அக்கல்லறை இருந்தால் ஐரோப்பாவில் செங்கிஸ்கான் அடித்த அடி நினைவுக்கு வரும் எனும் கோபம்.

அவர்களா வரலாற்றை உள்ளபடி எழுதுவார்கள்?

இறுதியாக ஒன்று, நமக்கு தஞ்சை கோவில் வரலாறே தெரியாது, ஒரு ஜெர்மானியன் வந்து கல்வெட்டு படித்துதான் இது ராஜராஜன் கட்டியது என்றே சொல்லிகொடுத்தான், நமது வரலாறு இப்படித்தான்

இதில் வட இந்திய வரலாறு பற்றி என்ன பெரிய அறிவு இருந்துவிட போகின்றது?

ஆனால் அலெக்ஸாண்டரின் வாழ்வினை பாருங்கள், இவ்வளவு தூரம் வந்தவன், போரசிடம் நாட்டை கொடுக்கவும், கங்கை பக்கம் வராமலும் போயிருக்க என்ன காரணம்? நிச்சயம் அச்சமன்றி வேறல்ல.




 







No comments:

Post a Comment