Thursday, August 31, 2017

உண்மைபேசும் ஒரே ஊடகம் ஜெயா டிவி !





அகில உலகிலே இந்த நொடியில் உண்மைபேசும் ஒரே ஊடகம் இந்த ஜெயாடிவிதான்.


யார் என்ன சொன்னாலும் இதனை என்னால் உறுதியாக சொல்லமுடியும், இப்பொழுது அதுதான் மகா உண்மையினை சொல்கின்றது


அதாவது இந்தியாவில் மத்திய அரசும் சரியில்லையாம் , மாநில அரசு மகா மோசமாம். தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழலாம். மாநில முதல்வருக்கு பொறுப்பே இல்லையாம், சுயநலத்தில் மாநில நலனை விட்டுவிட்டாராம். தமிழநலன் இந்த அரசால் மிக கடுமையாக பாதிக்கபட்டிருக்கின்றதாம்.





இப்படி மிக துணிவாக சொல்கின்றது ஜெயாடிவி

தமிழகம் மகா மோசமான நிலையில் இருக்கின்றது என்பதை ஒப்புகொள்ளும் டிவி இன்று அதுதான்.

மக்களும் வந்து இது உருப்படாத ஆட்சி, உழல் ஆட்சி என ஒப்பாரி வைக்கின்றார்கள்.

இனி காட்சிகள் மாறினால் நிச்சயம் ஜெயா டிவி மாறும். ஆனால் இந்நொடியில் மகா உண்மையினை சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

அதனால் பழனிச்சாமி முதல்வராக நீடிக்கும்வரை ஜெயா டிவி உண்மையினை சொல்லும் என்பதால் , ஆளுநர் வாழ்க என சொல்லிவிட்டு ஜெயா டிவி செய்திகளை கொஞ்ச நேரம் பார்க்கலாம்.

பழனிச்சாமி அகற்றபட்டால் அதன் பின் ஜெயா டிவி தன் பழைய பொய்களுக்கு திரும்பிவிடும்.









ஜெயா செய்தியினால் சாலையோரத்தில் தூங்கிகொண்டிருப்பர்களுக்கு எல்லாம் டிவியில் வரும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

ஆளாளுக்கு வந்து சின்னம்மா என சொன்னாலும், கேமரா முன்னால் வந்த அந்த பூரிப்பே அவர்கள் முகத்தில் தெரிகின்றது.

அதில் சிலர் சின்னமா , தினகரன் என சொல்லிவிட்டு ஒரு மாதிரி சிரிப்பதுதான் ஜெயா செய்திக்கு சோதனை. ஒரு ரிகர்சல் பார்த்துவிட்டு கேமரா முன் கொண்டுவந்தால் பரவாயில்லாமல் இருக்கும்.


கேமரா முன் நின்று சிலர் சின்னமா வாழ்க என சொல்லும்பொழுது அக்கூட்டத்தின் பின்னால் நின்று சிலர் ஒரு மாதிரி வாயினை பொத்தி சிரிப்பதையும் காண முடிகின்றது.

ஏன் சிரிக்கின்றார்கள்?

ஒருவேளை கேமராமேனும், கேள்வி கேட்பவருமே நம்மைபோல சிரித்து கொன்டிருப்பார்களோ?





 

 



 

No comments:

Post a Comment