Wednesday, August 16, 2017

தமிழக முதல்வரை யாரும் ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? : கமலஹாசன்

இவ்வளவு நடந்தும் தமிழக முதல்வரை யாரும் ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? : கமலஹாசன் கேள்வி


மனிதர் கொஞ்சம் அறிவாளி என நினைத்தால், இப்படி கொஞ்சம் கூட விவரமில்லாமல் கேள்வி கேட்கின்றார்?.


தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் இருந்தால்தான், எவனும் தடுக்கிவிழுந்து செத்தால் கூட, பறவைக்கு காய்ச்சல் வந்தால் கூட ஏன் அண்டை நாட்டில் எது நடந்தால் கூட, அண்டார்டிக்காவில் பென்குயின் செத்தால் கூட, கருணாநிதியே ராஜினாமா செய் என கூச்சலிடுவார்கள்




அவரை தவிர யார் இருந்தாலும், அவர்கள் என்னதான் அழிச்சாட்டியம் செய்தாலும் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.


அவர்களை நீதிமன்றமே சிறையில் அடைத்தாலும் ஒரு சத்தமும் வராது. ஏன்? அவர்கள் மேல் ஆண்டவனே குற்றம் சொன்னாலும் கம்மென்று இருப்பார்கள், அவர்கள் சுரண்டலாம், அவர்கள் சுற்றத்தார் கொள்ளையடிக்கலாம், சுருட்டலாம், திருச்செந்தூர் முருகனின் வேல் வரை காணாமல் போக செய்யலாம்


ஒரு சத்தமும் இருக்காது, மாறாக வெண்சாமரம் வீசி குனிந்து நிற்பார்கள்.


ஆனால் கலைஞர் அரசு என்றால் கண்கள் சிவக்க போர்கோலம் பூண்டுவருவார்கள்.


இதுதான் தமிழக யதார்த்தம், தமிழக அரசியல் இதுதான்.


இது கூட புரியாமல் என்ன அரசியல் பேசுகின்றார் இவர்?



No comments:

Post a Comment