ஆச்சரியமாக மோடி ஆட்சியில் இந்த திராவிட சிகாமணிகளுக்கு இந்து தெய்வத்தை பற்றிய திடீர் அக்கறை வந்திருக்கின்றது
அதாகபட்டது பல பெண்கள் இந்து கடவுள் படத்தினை டாட்டூ குத்தியிருக்கின்றார்களாம், அது பெரும் தவறாம்
முன்பு குஷ்பூ அணிந்த சேலையில் இந்துகடவுள் படம் இருந்து அதற்கு இந்துத்வ காலர்கள் சூலம் ஏந்தி கிளம்பியதை சுட்டி காட்டுகின்றார்களாம்.
ஆனால் இதே பகுத்தறிவு சுடர்கள், குஷ்பூ கற்பு சர்ச்சையில் சிக்கியபொழுது பெரியார் அன்றே சொன்ன கற்பு பற்றிய செய்திகளை சொல்லி குஷ்பூவிற்கு துணை நிற்கவில்லை என்பது வேறுவிஷயம்.
இன்று குஷ்பூவிற்கு துணை நிற்பவர்கள், "கற்பு என ஒன்றுமே இல்லை அது மோசடி.. " என பெரியார் சொன்னதை அன்றே சொல்லியிருக்கவேண்டாமா?
ஆனால் சொல்லவே இல்லை.
காரணம் சொன்னால் தமிழக பெண்கள் செருப்பு பிய்ய பிய்ய அடித்திருப்பார்கள் எனும் அச்சம், அதனால் ஒளிந்துகொண்டார்கள்.
இன்று குஷ்பூவிற்கு நியாயம் என கிளம்பிவிட்டார்கள் பிளாக் ஷீப்ஸ்..
இன்று மோடி ஆட்சி என்பதால் குஷ்பூவிற்கு நியாயம் கேட்பதாக சொல்லி கிளம்புகின்றார்களாம்.
எப்படியோ சுயமரியாதை நாத்திகர்களுக்கும் பக்திவந்து கடவுள் மரியாதையினை காக்க கிளம்பிருப்பதுதான் வேடிக்கை.
கடவுள் படங்கள் மீது எவ்வளவு அக்கறை வந்திருக்கின்றது? நல்ல திராவிட பகுத்தறிவு என்றால் அந்தபெண்கள் பெரியார் படம் வரைந்திருந்தால் அல்லவா சீறவேண்டும்?
கடவுள் படத்தை வரைந்ததை வரவேற்க வேண்டாமா?
ஆக நாத்திகர்களுக்கும் கடவுள் பக்தி வர காரணமான அந்த பச்சைகுத்திய பெண்களும், மோடியின் ஆட்சியும் வாழ்க
No comments:
Post a Comment