Thursday, August 24, 2017

பாண்டியராஜன் சபதம்...




Image may contain: 1 personஉலக அளவில் தமிழ்மொழியினை முதல் 10 இடத்தில் 3 ஆண்டுக்குள் கொண்டுவருவேன் : அமைச்சர் பாண்டியராஜன்


அதாவது அன்னார் தமிழுக்கு அமைச்சராகிவிட்டாராம், தமிழுக்காக உழைக்கபோகின்றாராம்.


தமிழகத்தில் தமிழ் வழி கல்வி, ஆங்கில பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம். கடைகளுக்கு தமிழ்பெயர், தமிழ் தெரியாதவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் போன்ற முழக்கங்கள் எல்லாம் அன்னாரிடம் இல்லை





மாறாக எப்படி முதல் 10 இடத்திற்கு கொண்டுவரபோகின்றாராம்?

அன்னாரின் கருத்துபடி சீனாவின் மாண்டரினை 111 கோடி பேர் பேசி முதலிடத்திலும் , ஆங்கிலத்தை 105 கோடி பேரும் பேசி இரண்டாம் இடத்திலும் இருக்கின்றார்களாம். தமிழ் பேசுவோர் எண்ணிக்கை 16ம் இடத்தில் இருக்கின்றதாம்

இந்த 16 இடத்தில் இருக்கும் தமிழ்பேசுவோர் எண்ணிக்கையில் நமீதா, ஓவியா தமிழும் உண்டு

இப்பொழுது அன்னார் தமிழை முதல் 10 இடத்திற்கு கொண்டுவரபோகின்றாராம்

எப்படி என தெரியவில்லை

சிங்கள படையெடுப்பு, சிங்கப்பூர் படையெடுப்பு, பாகிஸ்தான் படையெடுப்பு எல்லாம் எடுத்து அங்கெல்லாம் மொத்தமாக தமிழை பேசவைப்பது முடியாத காரியம்

அதனால் அன்னாரின் திட்டம் என்னவாக இருக்கலாம்,

தமிழக மக்கள் தொகையினை மூன்றுமடங்காக ஆக்கும் விபரீத திட்டம் இருக்கலாம், அது ஒன்றுதான் இவர் இலக்கிற்கு சாத்தியம்

இந்தி திணிக்கபடுகின்றது, அதனை எதிர்த்து கேட்காமல் மோடி காலில் விழுந்து கிடக்கும் கும்பலில் ஒருவர் தமிழை உலகெல்லாம் வாழவைக்க போகின்றாராம், நம்பிகொள்ள நாம் என்ன கவர்ணர் வித்யாசாகரா?


















 


No comments:

Post a Comment