Monday, August 21, 2017

தலைவி குஷ்பூ விரைவில் நலம் பெற்று திரும்பட்டும்.



Image may contain: one or more peopleநமது தலைவி குஷ்பூ பாதத்தில் காயம் ஏற்பட்டிருக்கின்றது, இது தமிழக அமைதியினை குலைக்கும் தீவிரவாத செயலா? சிலரின் திட்டமிட்ட சதியா? என்பது குறித்து விசாரணை நடக்கின்றது.


சிறிய காயம் என்பதால் மாநில சட்டம் ஒழுங்கிற்கு சிக்கல் இல்லை எனினும் சம்பவம் நடந்த இடம் மெல்போர்ன் என்பதால் பழனிச்சாமி அரசு தப்பியது,


மாறாக‌ ஆஸ்திரேலிய அரசினை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.





கோடான கோடி தொண்டர்கள் இதனால் தாங்கமுடியாத துயர் அடைந்துள்ளனர்,

நம் தலைவி மீண்டுவர எல்லா ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைக்கும், வழிபாட்டிற்கும் சங்கம் அழைப்பு விடுக்கின்றது

Venkatesh Mothilal அமெரிக்காவில் தீமிதிக்கவும், திருச்சி பக்கம் Periya Samyஅலகு குத்தி மண்சோறு சாப்பிடவும் தயார்.

தலைவி நலம்பெறும் வரை Sadhu Sadhath உண்ணாநோன்பு இருக்கின்றார்

இன்னும் பெரும் திரளான தொண்டர்கள் பல வழிகளில் வேண்டிகொண்டிருக்கின்றார்கள்.

தலைவி குஷ்பூ விரைவில் நலம் பெற்று திரும்பட்டும்.












No comments:

Post a Comment