Sunday, August 27, 2017

இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா




No automatic alt text available.இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடித்தவன் வாஸ்கோடகாமா . கேரள கள்ளிகோட்டையில் வந்திறங்கினான். கோவா போன்ற பகுதிகளை பிடித்தபின் அவனை வைஸ்ராய் ஆக்கினார் போர்த்துகீசு மன்னர்.


வாஸ்கோடகாமா கள்ளிகோட்டை பகுதியில் பல பகுதிகளை ஆண்டிருக்கின்றான். இலட்சதீவுகள் எல்லாம் அவன் கட்டுபாட்டில் இருந்திருக்கின்றன , கப்பம் வசூலித்திருக்கின்றான்.


பல யுத்தங்கள் நடந்திருக்கின்றன, அதில் ஒரு யுத்தத்தில் இந்தியாவிலே கொல்லபட்டிருக்கின்றான், அது 1524ம் வருடம், அவன் கல்லறை இன்றுவரை கேரளாவில் உண்டு.





Image may contain: sky, cloud, tree, outdoor and natureஅவன் கொல்லபட்டபின்னரே போர்த்துகீசியர் அடக்கி வாசித்திருக்கின்றனர், அதன் பின் பெரும் யுத்தம் எல்லாம் அவர்கள் இந்தியாவில் நடத்தவில்லை, மாறாக இலங்கை , மலாக்கா என சென்றுவிட்டனர்.

அதன் பின் வந்த வெள்ளையர் மொத்த இந்தியாவினையும் கொஞ்சம் கொஞ்சமாக கைபற்றியிருக்கின்றனர். போர்த்துகிசீயரோ வாஸ்கோடகாமா அன்று கைபற்றி வைத்த பகுதிகளை விட ஒரு சென்ட் கூட பிடிக்கவில்லை.

அவன் யுத்ததில் கொல்லபட்டிருக்கின்றான் என்பதே உண்மை, ஆயினும் அதன் பின் போர்த்துகீசியர் அதிகாரம் ஆங்காங்கே இருந்திருக்கின்றது, பின் வெள்ளையர்கள் வந்து மொத்த இந்தியா

ஆக முதல் முதல் சுதந்திர போராட்டம் அன்றே தொடங்கியிருக்கின்றது, கொச்சியில் அவன் கல்லறை அதனைத்தான் சொல்கின்றது.

ஆனால் வரலாறு எப்படி எழுதபட்டிருக்கின்றது?

வாஸ்கோடகாமா மலேரியாவில் செத்தான் என்று வெள்ளையன் எழுதிவைத்து வரலாற்றை மாற்றியிருக்கின்றான்

சரி இந்தியர் எப்படி எழுதியிருக்கின்றனர்?

1857ல் மீரட்டில் நடந்ததே முதல் இந்திய விடுதலைப்போர், அதாவது வெள்ளையனை எதிர்த்து நடந்த வட இந்திய கலவரமே முதல் இந்திய விடுதலைப்போராம்

தமிழகத்து பூலித்தேவன் அல்லது வங்கத்து போர்களை கூட மறைத்துவிட்டார்கள், வடக்கத்தியர்கள் செய்ததுதான் முதல் விடுதலைபோராம்

உண்மையில் முதல் விடுதலைப்போர் வாஸ்கோடகாமா கால் வைத்த 1500களிலே தொடங்கியிருக்கின்றது.

வாஸ்கோடகாமா காலத்திலிருந்து காந்தி காலம் வரை 450 ஆண்டுகாலம் இத்தேசம் தன் எதிர்ப்பினை தெரிவித்துகொண்டேதான் இருந்திருக்கின்றது, ஒரு காலமும் முழுமையாக அது வெள்ளயரிடம் சரணடையவில்லை.

வெள்ளையர் ஒரு பக்கம் வரலாற்றை மாற்றி வைக்க, இந்தியர்களும் ஒரு பக்கம் மாற்றி வைத்திருக்கின்றார்கள். வாஸ்கோடகாமா கொல்லபட்டதை மறைப்பதில் அவ்வளவு அக்கறை

இந்த வரலாறுகளை மறைத்து குழப்பிய வரலாறுகளே பெரும் சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்கின்றது.

இதனையே வெளிசொல்லாதவர்களா கீழடி, ஆதிச்சநல்லூற், பூம்புகார் என முடிவுகளை சொல்வார்கள்???

வரலாற்றை இடையில் வருபவர்கள் மாற்றிவிடலாம் போலிருக்கின்றது,

எல்லாம் சரியாக நடந்திருந்தால் அதிமுகவினை தொடங்கி நடத்தி ஆட்சியினை பிடித்து எம்ஜிஆரை முதல்வராக்கியது சசிகலா எனும் அளவிற்கு மாற்றியிருப்பார்களோ என்னமோ?














 




 


No comments:

Post a Comment