இப்படி எதிர்ப்பு கிளம்புவது எங்கு தெரியுமா? ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் அல்ல, மாறாக யாழ்ப்பாணத்தில்
வழக்கமாக அங்கிருந்து இந்திய எதிர்ப்பு குரல்கள் வரும், இந்திய மீணவர் எதிர்ப்பு வரும்
இப்பொழுது தனுஷ் சிகரெட் பிடிப்பதுதான் அவர்கள் பிரச்சினையாம்
ஆசியாவின் மிக மோசமான பாதுகாப்பற்ற நகரமாக யாழ்பாணம் மாறிகொண்டிருக்கின்றது என்கின்றன செய்திகள்
போதைபொருள் தட்டுபாடின்றி கிடைக்கின்றது, வெத்து குத்து கொலை கொள்ளை வாடிக்கையாக நடக்கின்றது, போரினால் சீரழிந்த பகுதிகளில் நடக்கும் எல்லா அட்டூழியமும் அங்கு நடக்கின்றது
சமீபத்தில் நீதிபதி சுடபட்ட செய்தி கூட வந்தது
தமிழக மீணவன் இலங்கை சிறையில் இருக்கின்றான், அவன் படகு பிடித்துவைக்கபட்டிருக்கின்றது
இன்னும் ஏராளமான இலங்கை மக்கள் தமிழக முகாம்களில் அகதிவாழ்க்கை வாழ்கின்றார்கள், ஆனால் இவர்கள் கவலை தனுஷின் புகைமேல் இருக்கின்றது.
ஒரு காலத்தில் எப்படி இருந்த யாழ்பாணம்?
இந்த சீமான், வைகோ கால்பட்டபின் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்.
"சே.. இந்த மனிதனை எவ்வளவு நம்பியிருந்தோம், கலைஞர் ஜெயா செய்யாததை இவரா செய்துவிடுவார் என நம்பியிருந்தது எவ்வளவு முட்டாள்தனம்.
தமிழன் முதல்வரானதில் தமிழனுக்கு விடுதலை என்றால் என் கட்சிக்கு வந்துவிடு என பழனிச்சாமி அழைத்துவிடுவாரே?
இனி என்ன பேசி அரசியல் செய்ய?
பழனிச்சாமி என் சாபம் உன்னை சும்மா விடாது"
No comments:
Post a Comment