பாலியல் வழக்கில் சாமியாருக்கு தண்டனை, அதனை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் வன்முறை பலர் பலி, பெரும் பதற்றம்
பக்தி முற்றிபோனால் இப்படித்தான் பகுத்தறிவு வெளியேறும். சிந்தனை வெளியேரிய மனம் கண்மூடித்தனமான ஆதரவிற்கு வழிவகுக்கும். சமூகம் இப்படி சாமியார் பிடிக்குள் செல்லும்.100 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகமும் இப்படித்தான் இருந்தது.
இன்று வடக்கே நிலை இப்படி, தமிழக நிலை எப்படி?
இங்கும் சில சாமியார்கள் கொலை வழக்கில் சங்கராச்சாரி உட்பட கைதானார்கள், சிலர் கற்பழிப்பு வழக்கில் பிரேமானந்தா போல சிக்கினார்கள். சிலர் மோசடி வழக்கில் சிக்கினார்கள்
ஏதேனும் ஒரு கலவரம் வெடித்திருக்கும்? ஒரு ஓலைபட்டாசு சத்தம் கேட்டிருக்கும்? ஒரு தீக்குச்சியாவது அந்த சாமியார்களுக்காக கொழுத்தபட்டிருக்கும்?
பெரியார் எனும் பகுத்தறிவுவாதி இந்த சமூகத்திற்கு செய்திருக்கும் தொண்டு அப்படி. அவர் போராட்டத்தால் விளைந்த பெரும் நன்மைகள் இவை.
அந்த சிங்கம் முழங்கிய முழக்கத்தில்தான் சாமியார்கள் பிடியிலிருந்து தமிழகம் விடுபட்டுற்று, இன்றுவரை எந்த சாமியாரும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை
அதனால்தான் போலி சாமியாரை இங்கு கட்டி வைத்து சாத்தினாலும் தமிழகம் அமைதியாக இருக்கின்றது.
அயோக்கிய சாமியார்கள் அட்டகாசம் தெரியும்பொழுதெல்லாம் அம்மனிதனை இச்சமூகம் நன்றியோடு நினைத்து கொள்கின்றது.
(ஆனால் அதே சமூகம் ஜெயா போன்ற அரசியல்வாதிகளுக்காக கலவரம் செய்ததுதான் பெரும் அவமானம் என்பது வேறு விஷயம், அது சுத்த அரசியல் மோசடி, )
இந்த போலிசாமியார்கள் அழிச்சாட்டியம் வரும்பொழுதெல்லாம் பெரியாரும் தேவைபட்டுகொண்டே இருப்பார்.
அந்த கருப்புசட்டைதான் தமிழ் சமூகத்தை காத்து நின்ற காவல் சீருடை.
No comments:
Post a Comment