Monday, August 21, 2017

தெலுங்கில் பிரபாகரன் கதை ....




Image may contain: one or more people, people standing, text and outdoorஈழப்போராட்டத்தின் பிரபாகரன் கதை "நான் திரும்ப வருவேன்" எனும் தலைப்பில் தெலுங்கில் எடுக்கபடுகின்றது, கதை பற்றிய முழு தகவல் இல்லை


இது வசூலுக்கான படமா? இல்லை இந்தியாவோடு புலிகள் நடத்திய யுத்தம், அமைதிபடை காலம், ராஜிவ் கொலை எல்லாம் வருமா? என தெரியவில்லை


படம் வரட்டும், அதன் பின் சில சர்ச்சைகள் நிச்சயம் வெடிக்கும், தேசபக்தர்களால் இம்மாதிரி படங்களை ஏற்றுகொள்ள முடியாது.





விரைவில் படம் வரும்போல தெரிகின்றது, உண்மைகளை மறைத்து புலிகள் தியாகிகள் போல எடுக்கபட்டிருந்தால் படம் பெரும் கண்டனத்திற்குள்ளாகும்

Image may contain: 2 people, people smiling, people standingஅப்படி புலிகளை தியாகியாக்கினால் அங்கிள் சைமனுக்குத்தான் மகா சிக்கல்

1) தமிழகத்தில் எடுக்கமுடியாத படத்தை தெலுங்கில் எடுப்பது

2) புலிதியாக கதை என்றால் அங்கிள் சைமன் பாராட்டி தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பது, இல்லையென்றால் அங்கிளின் அண்ணன் பக்தி கேள்விகுறியாகும்

3) தெலுங்கனை பாராட்டுவதை விட சைமன் தூக்கில் தொங்குவார் என்பது அவரின் மானத்தை பற்றி அறிந்த எல்லோருக்கும் தெரிந்த விஷயம்,

யாரோ மிக சரியாக அங்கிள் சைமனுக்கு செக் வைத்திருக்கின்றார்கள், சைமனோ இன்னும் பதிலளிக்கவில்லை

மீறி கேட்டால் மாவோ போல பெரும் புரட்சி செய்கின்றேன், என்னை படம் பார்க்க சொல்கின்றாயா, அதற்கெல்லாம் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் நேரமில்லை என சொல்லிவிட்டு அவர் போக்கில் இருப்பார்.














 


 

No comments:

Post a Comment