இயேசுநாதர் சொன்ன , சொல்பேச்சு கேளாத ஊதாரி மைந்தனின் கதை நினைவுக்கு வருகின்றது.
பா.ஜ.க. என்னும் பெரிய மீன், அ.தி.மு.க என்ற சின்ன மீனை விழுங்கும்: சீமான்
பின் இலை எப்படி மலரும்? இலை மலராமல் ஈழம் எப்படி மலரும்? உங்கள் புரட்சிபடையுடன் சென்று, எளிய தமிழ் பிள்ளைகளின் யுத்தம் நடத்தி அந்த சின்ன மீனை மீட்க கூடாதா?
இந்த சின்ன மீனை பெரிய மீன் விழுங்கிவிட்டால், திமுக எனும் சுறா, அதாவது உங்கள் பாணியில் தமிழர் விரோத திமுக அல்லவா ஆட்சிக்கு வரும்? அதனை அனுமதிக்கின்றீரா?
உடனே சென்று அந்த பெரிய மீனை காலிசெய்து சின்ன மீனை காப்பாற்றுங்கள் சைமன்.
கச்சதீவினை மீட்க பெரும் மீணவபடை திரட்டுவதாக சொன்னீர்கள் அல்லவா? அந்த படையுடன் கடலாடுங்கள், இல்லை களமாடுங்கள்.
அல்லாவிட்டால் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் அய்யா..
ஓஓஓ..... திமுக ஆட்சியில்தான் இஷ்டபடி திட்டலாம், பல்டி அடித்து அரசியல் செய்யலாம் எனும் திட்டம் இருக்கின்றதோ? ஆக நீரும் அதிமுக அழிவதை அனுமதிக்கின்றீர், அப்படித்தானே அங்கிள் சைமன்?
தமிழகத்திற்கு நீட் விலக்கு இல்லை, தமிழக கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை
மேகதாதுவில் அணைகட்டுகின்றது கர்நாடகா
இலங்கை கடற்படை தமிழக மீணவர்களை பிடித்து சென்றது, இலங்கை சட்டபடி விசாரணை நடத்த இந்தியா சம்மதம்.
இப்பொழுது முதல்வரும் தமிழன், துணை முதல்வரும் தமிழன்
தமிழகத்தை தமிழன் ஆளாததால்தான் சிக்கல், தமிழன் முதலமைச்சர் ஆனால் எல்லா சிக்கலும் ஒரே நாளில் தீரும் என சொல்லிகொண்டிருந்த பாரதிராஜாவினையும் , சீமானையும் காணவில்லை.
பிய்ந்த செருப்பு ஒன்று எம் கையில் இருக்கின்றது, இருவரையும் தேடிகொண்டிருக்கின்றேன்.
No comments:
Post a Comment