Monday, August 21, 2017

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைகின்றன

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைகின்றன, ஆளுநர் அவசரமாக சென்னை வருகை


இவர்கள் இணைவது ஆளுநருக்கு எப்படி தெரிந்தது, யார் அழைத்தார்கள்?


சரி இனி இருவரும் இணைந்து என்ன செய்யபோகின்றார்கள்? ஒன்றுமில்லை இதுதான் நடக்கும்.




யாருக்கெல்லாம் மந்திரிபதவி வாக்கு கொடுக்கபட்டதோ அவர்கள் எல்லாம் இனி மந்திரி ஆகலாம், அது போல ஒவ்வொரு எம்.எல்.ஏவிற்கு எதெல்லாம் உறுதியளிக்கபட்டதோ அதெல்லாம் இனி கிடைக்கும்


ஆக இவர்கள் எல்லோரும் மொத்தமாக‌ பயன்பெறபோகும் நிகழ்வின் பெயர் கட்சி இணைப்பு விழா.


விசித்திரம் என்னவென்றால் பன்னீர், பழனி என தன் அல்லக்கைகளை போல இன்னொருவரை அமர்த்தி தன் விரலை சுட்டுகொள்ள மன்னார்குடி குடும்பம் தயாராக இல்லை.


அதற்காக அவர்கள் குடும்பத்தார் வந்து அமர நாஞ்சில் சம்பத்தை தவிர வேறு யாரும் அனுமதிப்பதாக இல்லை.


நடிகர்களை கொண்டாடும் தமிழகத்தில் என்றுமே பின்னணி இயக்குநர்கள் கொண்டாடபடுவதில்லை. எம்ஜிஆருக்கு இருந்த மவுசு அவரை இயக்கிய ஆர்.எம் வீரப்பனுக்கு இல்லை


ஜெயலலிதாவிற்கு இருந்த வரவேற்பு அவரை இயக்கிய சசிகலா குடும்பத்திற்கு வரபோவதில்லை


யாரை அடுத்து மன்னார்குடி குடும்பம் இயக்கபோகின்றது என்பதும் தெரியவில்லை, அவர்கள் ஆலோசனை கேட்க கலைஞருக்கும் உடல்நலமில்லை.


ஆனாலும் சசிகலா புஷ்பா, வளர்மதி, சி.ஆர் சரஸ்வதி, குண்டு கல்யாணம், பாத்திமா பாபு ஒப்புதலின்றி நடக்கும் இந்த இணைப்பு எவ்வளவு நாள் நீடிக்கும் என தெரியவில்லை.??



No comments:

Post a Comment