Thursday, September 28, 2017

மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முரசொலிமாறனுக்கு சிகிச்சை என்றால் அமெரிக்காவிலும், தனக்கு சிகிச்சை என்றால் லண்டனிலும்,
தன் தந்தைக்கு சிகிச்சை என்றால் காவேரியிலும் என சென்று கொண்டிருந்த ஸ்டாலின், டெங்கு புண்ணியத்தில் அரசு மருத்துவ மனைக்கு வந்துவிட்டார்
டெங்கு விவகாரம் தொடர்பாக அரசின் சிகிச்சை நடவடிக்கைகளை கண்டறிய தானே நேரில் ஆய்வு செய்துவிட்டார் மு.க ஸ்டாலின்
இது இனி ஒவ்வொரு துறையாக நடக்கலாம். ரேஷன் கடைகள் முதல் பல இடங்களின் இனி ஸ்டாலின் ஆய்வு நடத்துவார்
இதற்கு பெயர் "நமக்கு நாமே ஆராயும் திட்டம்"
அப்படியே பள்ளிகளில் புகுந்து தமிழை ஒழுங்காக தமிழக்ப கல்வி கூடங்கள் யிற்றுவிக்கின்றார்களா? என அவர் சோதிப்பாரா என கேட்டுவிட கூடாது.
காரணம் அவர் அரசு பள்ளியில் புகுந்தால், அவர் பள்ளியில் அரசு புகுந்துவிடாதா?

புதிய தலைமுறை டிவி..

ஜெயா சாவு தொடர்பாக விசாரணை நடக்கின்றது.
ஒரு விசாரணை நடக்கும்பொழுது தகவல்கள் கண்டிப்பாக அந்த கமிஷனிடம் மட்டுமே கொடுக்கபட வேண்டும், அப்படி செய்யாமல் தனியாக தகவல்களை வெளியிடுவது தண்டனைகுரிய குற்றம்.
விசாரணையோ வழக்கோ நடக்கும்பொழுது அதுபற்றி கருத்து கூற கூடாது என்பதுதான் பொதுசட்டம். அதிலும் உறுதிபடுத்தபடாத தகவல்களை அள்ளிவிடுவது கண்டிக்கதக்கது.
அந்த மிக பெரும் குழப்பத்திற்குரிய , கண்டிக்க கூடிய காரியத்தினை புதிய தலைமுறை டிவி செய்கின்றது.
இது நிச்சயம் கண்டிக்கதக்கது. தன்னிடம் இருக்கும் தகவலை கமிஷன் முன் சொல்லலாம், அல்லது நீதிபதிகள் முன் சொல்லலாம்
மாறாக மகா முக்கிய விசாரணையில் இப்படி செய்தி வாசிப்பது திசை திருப்பும் விவகாரம்.
இந்த செய்தியினை புதிய தலைமுறைக்கு கொடுத்தது யார்? அவர்களை ஒளிபரப்ப சொன்ன சக்தி எது?
இவ்வளவு நாளும் இது ஏன் மர்மமாக வைக்கபட்டது?
இப்பொழுது கமிஷனினிடம் சொல்லாமல் இவர்களாக சொல்வது ஏன்?
புதிய தலைமுறை என்பது அரசாங்க ஊடகமா? இப்பொழுது அந்த செய்தி எப்படி கிடைத்தது? விசாரணை அதிகாரிகள் செய்தியினை கடத்தினார்களா?
ஜெயா மரண விவகாரத்தை வெளியிட புதிய தலைமுறை போதுமென்றால் ஆறுமுகசாமி தலமையினாலான கமிஷன் எதற்கு?
தமிழச்சி என்பவர் முகநூல் பதிவிற்கும், புதிய தலைமுறைக்கும் என்ன வித்தியாசம்? தமிழச்சி மீது 70 வழக்குகள் என்றால், புதிய தலைமுறை மீது நடவடிக்கையே இல்லையா?
முகநூலில் கூட ஆதாரம் இல்லாமல் பதிந்தால் நடவடிக்கை என்றார்கள், புதிய தலைமுறைக்கு ஒன்றுமே இல்லையா?
முகநூலுக்கு ஒரு நியாயம், டிவிக்களுக்கு ஒரு நியாயமா?
இது நீதிதுறைக்கு பெரும் அவமானம். அந்த விசாரணை கமிஷன் முகத்தில் கரி பூசும் செயல்.
இவர்களாக சொல்லிகொண்டிருந்தால் கமிஷன் எதற்கு? விசாரணை அமைப்புகள் எதற்கு? இந்த உரிமையினை அவர்களுக்கு யார் கொடுத்தது?
விசாரணை நீதிபதி தலமையில் நடக்கின்றது, அவர்கள் விசாரித்து அறிக்கை தரும்வரை அமைதிகாப்பதே நல்லது அல்லது காத்தே தீரவேண்டும்.
பொறுப்பானாவர்கள் அதிகார பூர்வமாக அறிவித்த பின்பே ஊடகங்கள் வாய் திறக்க வேண்டும்.
இதற்கு தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மிக மிக தவறான முன்னுதாரணமாக சென்றுவிடும். பின் எதிலுமே உண்மை வராது, குழப்பமே மிஞ்சும்.
பெரும் குழப்பம் பல மோசமான விளைவுகளை கொண்டு வரும்.
இது மிக மிக அதிர்ச்சிகரமான, பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம்.

Wednesday, September 27, 2017

ஜெ. சிகிச்சை முந்தைய

ஜெ. சிகிச்சை முந்தைய தினம்வரை நலமுடன் இருந்தார் - தமிழிசை சவுந்தரராஜன்

இவர் ஏன் இப்பொழுது வாண்டடாக வண்டியில் ஏறுகின்றார்.

ஏதாவது சொல்லிகொண்டே இருப்பது தமிழிசைக்கு விதிக்கபட்டது, இனி அடுத்து அம்மணி இப்படி சொன்னாலும் சொல்வார்,

"ஜெயா சாகும் வரை உயிரோடுதான் இருந்தார்".

"மன்மத" அஞ்சலி

பிரபல கவர்ச்சி இதழான 'பிளேபாய்' நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார்
அன்னார் இந்த உலகிற்கு ஆற்றிய பணி கொஞ்சமல்ல, மர்லின் மன்றோ முதல் நமது நாட்டு ஷெர்லின் சோப்ரா வரை அவர்தான் உலகிற்க்கு உணர்த்தினார்.
அந்த வரிசை சொல்லி மாளாது, உலகின் கவர்ச்சி கன்னிகளை எல்லாம் தேடி பிடித்து படமெடுத்து, தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் உயர்ந்த சிந்தனையுடன் வாழ்ந்தவர்.
வீர அஞ்சலி, கண்ணீர் அஞ்சலி எல்லாம் அவருக்கு சரிவராது, "மன்மத" அஞ்சலிதான் செலுத்த முடியும்

வுளை திட்டினதால் தான் மூத்திரப்பை

பெரியாரும் கலைஞரும் கடவுளை திட்டினதால் தான் மூத்திரப்பையோட இருக்கிறார்கள் , அண்ணாவிற்கு புற்றுநோய் வந்தது என பல ஆன்மீகவாதிகள் வாய்வலிக்க சொல்லி திருப்தியடைகின்றார்கள்
ஆன்மீகம் பேசிய ரமணருக்கு கூடத்தான் புற்றுநோய் வந்தது, இன்னும் ஏராளமான சந்நியாசிகள் இளவயது நோயிலே இறந்தார்கள்.
விவேகானந்தர் சாகும்பொழுது என்ன வயது? அவர் ஆத்தீகம் பேசி செத்தாரா?
சங்கரரும், திருஞான சம்பந்தரும் கூடத்தான் சிறுவயதிலே மரித்தார்கள்.
முத்துராமலிங்க தேவரை விட பெரும் முருக பக்தனை காட்டிவிட முடியுமா? அவர் என்ன நூறாண்டு வாழ்ந்தாரா?
ஒவ்வொருவனும் ஒரு நோக்கத்திற்காக இறைவனால் படைக்கபடுகின்றான், அந்த நோக்கம் நிறைவேறியதும் அவன் வாழ்வு முடிகின்றது.
அந்த தத்துவத்தில்தான் உலகம் இயங்கி கொண்டிருக்கின்றது
இதில் ஆன்மீகம் பேசியதால் வாழ்ந்தான் என்றோ, நாத்திகம் பேசியதால் செத்தான் என்றோ சொல்வதற்கொன்றுமில்லை
விருப்பு, வெறுப்புக்களை கடந்தவர் கடவுள், அவரை புரிந்துகொள்ள மிகசிறிய மானிட மூளைக்கு ஒருநாளும் சக்தி வராது.

உயர்ந்தது உன் பாதங்கள்

வேதங்கள் அறைகின்ற உலகங்கள்
யாவிலும் உயர்ந்தது உன்
பாதங்கள் இவை என்னின்,
படிவங்கள் எப்படியோ "
என்பது கம்பனின் வரிகள். அதாவது மந்திரங்கள் முழங்கும் மூவுலகிலும் மிக உயர்ந்தது இந்த கால்களே. கால்களே இப்படி என்றால் முழு வடிவம் எப்படி இருக்கும் என பாடலை தொடங்குகின்றான் கம்பன்.
நாம் திரையில் குஷ்பூவினை காணும்பொழுது அவன் வரிகளே நினைவுக்கு வருகின்றது.
தலைவி காலை மறைத்து, விரல் மட்டுமே தெரியும் படம் இது, அட அட என்ன அழகு?
கம்பன் இருந்திருந்தால் "உலகங்கள் யாவிலும் உயர்ந்தது இந்த பாத விரல்களே" என தொடங்கியிருப்பான். அவன் இல்லாததால் நாம் தொடங்கலாம்
இந்த அழகிய பாதங்கள் பூமியினை தொட்டு 47 வருடங்கள் ஆகின்றன‌.
ஆம் தங்க தலைவிக்கு, தங்க கோபுரத்திற்கு, குங்குமபூ குவியலுக்கு நாளை பிறந்த நாள்..
அந்த கொண்டாட்டம் உலகெல்லாம் இந்த வரிகளுடன் உற்சாகமாக தொடங்கிவிட்டது,
"வேதங்கள் அறைகின்ற உலகங்கள்
யாவிலும் உயர்ந்தது இந்த பாதங்களே"

குறவர்களை பற்றி அங்கிள் சைமன்

குறவர்களை பற்றி ஏதோ அங்கிள் சைமன் சொல்லியிருக்கின்றார் என சர்ச்சைகள் வருகின்றன.
தமிழை கேவலம் குறவர் தமிழாக மாற்றிவிட்டார்கள் என அங்கிள் குறைபட்டுகொண்டாராம்.
குறவர்கள் என்பவர்கள் யார்? குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள் குறவர்கள் என அழைக்கபட்டனர். அவர்கள் பேசியதும் தமிழே.
இன்று அவர்கள் பேசுவதும் தமிழின் திரிபே, ஆதிகால தமிழ் அந்த சாயலில்தான் இருந்தது..
அவர்களும் நிச்சயமாக தமிழர்களே.
குற்றால குறவஞ்சி எனும் காவியமே தமிழில் உண்டு.
அவ்வளவு ஏன் முப்பாட்டன் முருகனே வள்ளி எனும் குறத்தி தமிழச்சியினைத்தான் மணந்தார்.
வேல் எடுத்து ஆடும் அங்கிள் சைமன், முப்பாட்டனை வணங்கும் பொழுது முருகனின் அருகில் இருந்து அருள்பாலிப்பது ஒரு குறத்தி.
இவ்வளவு இருந்தும் அங்கிள் சைமன் குறவர்களை ஏளனம் செய்கின்றாராம்.
தமிழும் சரியாக தெரியாது, தமிழர் வரலாறும் தெரியாது. சும்மா கிடந்து கத்தவேண்டியது. கேட்டால் அவருக்கு மட்டும் தமிழுணர்வு இருக்கின்றதாம்.
முப்பாட்டி வள்ளியே தமிழ் குறத்தியாக இருக்கும்பொழுது குறவர்களை சீண்ட என்ன தைரியம்?
அந்த முப்பாட்டன் வேல் எடுத்து சீமான் கண்களில் குத்தட்டும்.